Popular Posts

Thursday, December 31, 2009

தமிழ்பாலா/காதல்/கவிதை/அனுபவம்/கவிதையே பேசும் ஓவியமே !ஓவியமே !பேசாத காவியமே! காவியமே! என்னுயிரிலே கலந்துவிட்ட பேரின்பமே! பேரின்பமே என்னாளும் திருநாளாய்

கவிதையே பேசும் ஓவியமே !ஓவியமே !பேசாத காவியமே!
காவியமே! என்னுயிரிலே கலந்துவிட்ட பேரின்பமே!
பேரின்பமே என்னாளும் திருநாளாய் ஆக்கிவிட்ட ஆரணங்கே!
ஆரணங்கே பகுத்தறிவால் அறிகின்ற மெய்ஞானமே!

[கவிதை]?இதுதான் காதலா?-என்னுயிர்க் காதலியே இதுதான் காதலா?இதுதான் காதலா?

[கவிதை]
இதுதான் காதலா?காதல் செய்த மாயமா?
காதலா?இதுதான் காதலா?--என்னுயிர்க் காதலியே இதுதான்
காதலா? காதல் செய்தஇதுதான் காதலா?
நானுன்னையே பாராத பொழுதெல்லாம் நீயென்னை பார்ப்பதாக எண்ணியே-மவுனத்திலே
நீயென்னுடன் பேசாத மொழியெல்லாம் பேசுகின்றாயே காதலியே !
நாளெல்லாம் பார்க்குமிடமெல்லாம் நீயின்றி வேறொன்று காணவில்லையே என் தோழியே!
இதுதான்
காதலா?இதுதான் காதலா?-என்னுயிர்க் காதலியே இதுதான்
காதலா?இதுதான் காதலா?

[கவிதை]எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்றவொரு உயரிய பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்திடவேண்டாமா?

[கவிதை]
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனவே நாளெல்லாம்,
கொண்டதே கோலம் தனியுடைமை கொள்கையே அதிகாரமென ஆள்கின்றதே அரசெல்லாம்,
வாக்குதனை காசுக்கே விற்றுவிட்டு ஏமாற்றும் மனிதரிடம் ஏமாந்து போனோமே!
இனியொரு விதிசெய்வோம் மக்கள்ஜன நாயகம் புரட்சிசெய்குவோம்!
யாவரும் மகிழ்ந்தும் யாவரும்வாழ்ந்தும் யாவரும் உறவாயும்,
யாதும் ஊரே யாவரும் சுற்றத்தாரே எல்லா மக்களும் நம்மக்களே!இம்மண்ணில்
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
என்றவொரு உயரிய பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்திடவேண்டாமா?

புத்தாண்டு சூளுரை!

[கவிதை]
ஒன்று செய்வோம் -அதுவும் நன்று செய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும் மக்களுக்கு
நன்றுசெய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும்
நன்றுசெய்வோம் பணிநாளை
சென்று செய்வோம் என்ற சோர்வின்றி துடிப்புடன்- நல்லனவே
சென்று செய்வோம் நல்லோரின் துணை
நின்று என்றும் நன்று செய்வோம்-
ஒரு நாளும் உறங்காது உண்மை உணர்வுகொண்டு
வாய்மை தவறாது வளமான உள்ளங்கொண்டு
ஒன்று செய்வோம் -அதுவும் நன்று செய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும் மக்களுக்கு
நன்றுசெய்வோம்

காதலன் எந்தனுக்கே! காதல் கடல்கடந்து கரையேறிப் போவதற்கு- கண்ணான துணயாகவே காதலி துடுப்பிருந்தால் போதுமடா!தனிமைதனை வெல்லும் இனிமை ஆகுமடா!

காதலன் எந்தனுக்கே!
காதல் கடல்கடந்து கரையேறிப் போவதற்கு- கண்ணான துணயாகவே
காதலி துடுப்பிருந்தால் போதுமடா!தனிமைதனை வெல்லும் இனிமை ஆகுமடா!
காலமெல்லாம் இல்லற பந்தத்திலே நானும் உறவாகி சிறந்திருப்பேனே!
காற்றுக்கு துணையிருக்கா? கடலுக்கு துணையிருக்கா?வானுக்கு துணையிருக்கா?-இல்லையே
ஆனாலும் காதலன் எந்தனுக்கு துணையிருக்கு காதலி கரமிருக்கு கனிவாம் வாழ்விருக்கு!
அதுஒரு பெரியவரப் பிரசாதம் இல்லையா?

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த நுண்பொருளே!!அம்மா நீ கண்ணுறங்கு! முத்திக்கு வித்தையே ! வாழ்வுக்கு ஆதாரமே!!அம்மா நீ கண்ணுறங்கு! தெம்மாங்கு தேனாறே!

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த நுண்பொருளே!!அம்மா நீ கண்ணுறங்கு!
முத்திக்கு வித்தையே ! வாழ்வுக்கு ஆதாரமே!!அம்மா நீ கண்ணுறங்கு!
தெம்மாங்கு தேனாறே! தெவிட்டாத தேனமுதே!!அம்மா நீ கண்ணுறங்கு!
ஆயிரங்காலத்து பயிரே! ஆனந்த பேரூற்றே!அம்மா நீ கண்ணுறங்கு!

முத்திதரும் வேத மொழியோ? நீயென்ன?மெஞ் ஞானஞ்சொல்லவந்த தேவதையோ? மந்திரமாம் காதலுக்குள் தந்திரமானதொரு தாரகையோ? தமிழன்போ? சுந்தரியோ? இந்திரையோ?

முத்திதரும் வேத மொழியோ? நீயென்ன?மெஞ் ஞானஞ்சொல்லவந்த தேவதையோ?
மந்திரமாம் காதலுக்குள் தந்திரமானதொரு தாரகையோ? தமிழன்போ? சுந்தரியோ?
இந்திரையோ? இளமைக்குள் வளமைசேர்க்கும் என்றும்பதினாறு அந்தரியோ?
அந்திமலரோ? ஆகாச பால்வெளிவீதியோ? இந்த பிரபஞ்ச இன்பமெல்லாம் ஒருசேர்ந்த இன்பமேனகையோ?

Wednesday, December 30, 2009

மனிதமே மெய்யென நாமே உணர்ந்திடும் , எல்லோரும் வாழும், வளரும் விஞ்ஞான வழியாம் ,மக்கள்ஜன நாயக வழியாம்,பொதுவுடைமை வழியாம்,மார்க்சீய வழியினில் நடப்பது

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென மனிதமே மெய்யென
நாமே உணர்ந்திடும் , எல்லோரும் வாழும், வளரும் விஞ்ஞான வழியாம் ,மக்கள்ஜன நாயக வழியாம்,பொதுவுடைமை வழியாம்,மார்க்சீய வழியினில் நடப்பது நல்லுலகமாக்கிடும்

எவ்வழி மெய்வழி யென்னும் வேதாகமம் அவ்வழி இவ்வுலகினில் நம்சித்தாந்தமாக்கி முன்னேற்றம் கொள்வது நல்வாழ்வாக்கும்

எவ்வழி மெய்வழி யென்னும் வேதாகமம்
அவ்வழி இவ்வுலகினில் நம்சித்தாந்தமாக்கி
முன்னேற்றம் கொள்வது நல்வாழ்வாக்கும்

Tuesday, December 29, 2009

சாதியு மதமுஞ் சமயமுங் காணாத பொதுவுடைமை உலகெல்லாமே! காணும் காலமே வெகுதூரமே இல்லையடா!

சாதியு மதமுஞ் சமயமுங் காணாத பொதுவுடைமை உலகெல்லாமே!
காணும் காலமே வெகுதூரமே இல்லையடா!மனிதனையே அரைப்
பாதியாக்கும் தனியுடைமை தத்துவத்தின்பால் நடக்கும் கொள்கை’
முடிவுக்கு வருகின்ற நற்காலமே வசந்தத்தின் வாசல் திறக்கும்
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனின் வழியினிலே! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடும்
பகுத்தறிவினில் இவ்வுலகினில் வானுயரும் பொற்காலம் கண்ணில் தெரியுதடா!

அவள் அழகினில்,அறிவினில், மயங்கியே! நின்றேன் பறிகொடுத்தேன் என்னெஞ்சினையே!பிரபஞ்ச அருவியாகவே! பாய்ந்துவரும் ஆனந்தத்தின் வசமா னேனனே!

சேயிழையாள் ஆடுகின்றாள் அவள் அழகினில்,அறிவினில், மயங்கியே!
நின்றேன் பறிகொடுத்தேன் என்னெஞ்சினையே!பிரபஞ்ச அருவியாகவே!
பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேனனே!
ஓடையின் ஓரமே! உயர்மாமலர்ச் சோலைக்குள் நிழல்தேடியே என்னைக்
கோடையும் துரத்திடுதே!-ஆனாலும் வான ஊர்தி ஏறி இந்த வான்மீதில் பறந்திடவே
வளரும் அறிவியல் உண்டே!காதலி அவளின்
சின்ன இடுப்பு நெளிவ தென்ன
சித்திரப் புழுப் போலவே
அவள்
கண்ணில் கண்ட இந்த அத்தானுக்குக்
கலங்கியதோ அவளின் சிந்தை தானே! அவளின்
இதழில் மொய்த்ததுவே எண்ணிலா வண்டுகளே!

Sunday, December 27, 2009

எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோரே! அப்பொருளினையே நம்வாழ்க்கை மெய்ப்பொருள் ஆக்கிடுவோமே!

எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோரே!
அப்பொருளினையே நம்வாழ்க்கை மெய்ப்பொருள் ஆக்கிடுவோமே!

நீரினில் நீரே கலந்தது போலவே ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி இருவ ரெனும்தோற்ற மின்றி தென்றலில் தென்றலே தழுவியது போலவே!

நீரினில் நீரே கலந்தது போலவே
ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றி
தென்றலில் தென்றலே தழுவியது போலவே!
தலைவன் அவனும் தலைவி நானும்
தழுவிக் கொண்டது காதல் பேரின்பமே!

காதலன் வருகையின்றி காதல் பிரிவினாலே!காதலி நானும் தின்னும் இரையோ இரவுக்கு நான்?

காதலன் வருகையின்றி
காதல் பிரிவினாலே!காதலி நானும்
தின்னும்
இரையோ இரவுக்கு நான்?
ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே இன்றையப் பொழுது.
- பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் நானே மற்றவரைக் காணநின்று
ஊசலாடுகின்ற உளமாகி வாடி நின்றேனே!

முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே பொன்மாலை யந்திப் பொழுதே!

தேன்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்துமே !
தென்மதுரைத் தென்றல் தழுவவரும் இளமாலைப் பொழுதே!
முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே பொன்மாலை யந்திப் பொழுதே!

Saturday, December 26, 2009

காதல் மலராம் அன்பின் வாசம் அறியாத மனிதரே மனிதவடிவில் திரியும் விலங்குகளே!

மலரினும் மெல்லியது காதல் சிலர்அதன்
இதழினையே கசக்கிடவே முனைவார் -காதல் மலராம்
அன்பின் வாசம் அறியாத மனிதரே மனிதவடிவில் திரியும் விலங்குகளே!
காதலினை வாழ்த்தாமல் இருந்தாலும் பரவாயில்லை -அந்த
காதலினை வீழ்த்தாமல் இருந்தாலே போதுமடா!இவ்வுலகினிலே!

காலமெல்லாம் உவகை கொள்ளுதலும் துணையில் கொண்டாடுவதும் -இவ்வுலகினில் எதுவுமில்லை காதல் ஒன்றினைத் தவிர வேறொன்றுமில்லையே!

உள்ளம் களித்தலும் கண்ணால் காண மகிழ்தலும்!
மதுவிற்கில்லை காதலுக்கு உண்டு என் தோழி!காலமெல்லாம்
உவகை கொள்ளுதலும் துணையில் கொண்டாடுவதும் -இவ்வுலகினில்
எதுவுமில்லை காதல் ஒன்றினைத் தவிர வேறொன்றுமில்லையே!

நினைத்தொன்று சொல்லாயோநெஞ்சே ! நீயும் என்னெஞ்சில் நீயிருக்கும் காரணத்தை நினைத்தோறும் இனிக்கின்ற காதலென்று சொல்லாயோ? நெஞ்சே!

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே ! நீயும் என்னெஞ்சில் நீயிருக்கும் காரணத்தை
நினைத்தோறும் இனிக்கின்ற காதலென்று சொல்லாயோ? நெஞ்சே!

மாலைசெய்யும் மாயமென்ன காதலனின் பிரிவினிலே காதலி நான் வாடுகையில் மாலையென்னை மயங்கவிட்டு என்னை கொல்வதென்ன? நியாயமா? என் தோழி?

காலைக்கு நான் என்ன? நல்லது செய்தேன் தோழி
மாலைக்கு நான் என்ன? கெட்டது செய்தேன் தோழி?
தென்றலை தழுவவிட்டு காதல்தீயை மூட்டிவிட்டு
தேனிலவை உலவவிட்டு விரகதாபம் சீண்டிவிட்டு
மாலைசெய்யும் மாயமென்ன காதலனின் பிரிவினிலே காதலி நான் வாடுகையில்
மாலையென்னை மயங்கவிட்டு என்னை கொல்வதென்ன? நியாயமா? என் தோழி?

காதலனின் தூதொடு வந்த கனவினுக்கே!-காதலி நானென்ன?விருந்து கொடுத்திடுவேனோ? கனவெல்லாம் நனவாகும் காதலிலே கன்னிமனதினையே பரிசாக தந்திடுவேனோ?

காதலனின் தூதொடு வந்த கனவினுக்கே!-காதலி
நானென்ன?விருந்து கொடுத்திடுவேனோ?
கனவெல்லாம் நனவாகும் காதலிலே
கன்னிமனதினையே பரிசாக தந்திடுவேனோ?

காதல்நோய் செய்தஎன் கண்ணே எந்தனுக்கு பகையாகுமோ?-காதலி எந்தன் காதல் நோய்க்கு மருந்தாகும் காதலனின் கண்சேரும் காலம் வெகுதூரமில்லையே!

காதல்நோய் செய்தஎன் கண்ணே எந்தனுக்கு பகையாகுமோ?-காதலி எந்தன்
காதல் நோய்க்கு மருந்தாகும் காதலனின் கண்சேரும் காலம் வெகுதூரமில்லையே!

காதல் பெருங்கடல் நீந்திக் கரைகாணேன் காதலனே! ஊரும் உறங்கும் வேளையிலே உனக்காக நான்மட்டும் தூங்காமல் யாமத்தும் விழித்துள்ளேன் தெரியவில்லையா?

காதல் பெருங்கடல் நீந்திக் கரைகாணேன் காதலனே!
ஊரும் உறங்கும் வேளையிலே உனக்காக நான்மட்டும் தூங்காமல்
யாமத்தும் விழித்துள்ளேன் தெரியவில்லையா?-இல்லை நீயும்
காதலினை அறிந்தும் அறியாது நீயின்னும் வாராது என்னோடு சேராது -பிரிவாம்
மோதலிலே காலத்தை கழிப்பதென்ன நியாயமா? கூறிடுவாய் என் தோழனே!

பாலொடு தேன்கலந்ததோ! மணிமொழியே என்காதலியே நீ என்னில் கலந்து முத்தமழை தந்தது தானடியே!-அதுவும் தேனடியோ?

பாலொடு தேன்கலந்ததோ! மணிமொழியே என்காதலியே
நீ என்னில் கலந்து முத்தமழை தந்தது தானடியே!-அதுவும் தேனடியோ?

காதலியே !இன்னுயிரே !பெண்ணிலவே !பேரழகே! அனிச்சம்பூவும் அன்னத்தின் சிறகும் கூட உந்தன் பாதத்திற்கே நெருஞ்சிப் பழமாகுமே!

காதலியே !இன்னுயிரே !பெண்ணிலவே !பேரழகே!
அனிச்சம்பூவும் அன்னத்தின் சிறகும் கூட உந்தன் பாதத்திற்கே
நெருஞ்சிப் பழமாகுமே! என் துணையே !விண்மீனே !மண்வாசமே! மனித நேசமே!

இவள்கண் பலர்காணும் பூவாகும் என்று- அந்திமாலையில் அந்த மலர்ச்சோலையில் யாரோ ஒரு கவிஞரே சொன்னார் நெஞ்சே!

இவள்கண்
பலர்காணும் பூவாகும் என்று-
அந்திமாலையில்
அந்த
மலர்ச்சோலையில் யாரோ ஒரு கவிஞரே சொன்னார் நெஞ்சே!
இவள்கண்
பலர்காணும் பூவாகும் என்று-அந்திமாலையில்
அந்த
மலர்ச்சோலையில்
யாரோ ஒரு கவிஞரே சொன்னார் நெஞ்சே!

தன்நோய்க்குத் தானே மருந்தாகும காதல் அன்பே-காதலியே ஊடினாள் உணர்ந்தாள் புணர்ந்தாள் இதனால் காதலையே கூட்டினாள் காதலியே !

தன்நோய்க்குத் தானே மருந்தாகும காதல் அன்பே-காதலியே
ஊடினாள் உணர்ந்தாள் புணர்ந்தாள் இதனால் காதலையே
கூட்டினாள் காதலியே !

அழகுதேவதையே! உன்னிலே!தோழமைப் பெண்ணிலே! கண்ணாலே கண்டுகேட்டேன் நெஞ்சாலே உண்டுயிர்த்தேன் உலகெல்லாமே என்காதலியே! உந்தன் கண்ணதிலே உள்ளதே!

என் ஆருயுரே!
அன்பானவளே !அழகானவளே !அறிவானவளே! பேரின்பமே !அழகுதேவதையே! உன்னிலே!தோழமைப் பெண்ணிலே!
கண்ணாலே
கண்டுகேட்டேன்
நெஞ்சாலே உண்டுயிர்த்தேன் உலகெல்லாமே என்காதலியே! உந்தன்
கண்ணதிலே உள்ளதே!

காதலரின் மவுனத்தின் முன்னே மாபிரபஞ்சமும் கூட மண்டியிடுமே!

காதலாலே தன்வயப்பட்ட காதலரின் காதலன்புக்குள்ளே!
கண்ணொடு கண்களே !நோக்கியபின்னே!வாய்ச்சொற்கள்
என்னடா? ஒரு பயனும் இல்லையடா?-காதலரின்
மவுனத்தின் முன்னே மாபிரபஞ்சமும் கூட மண்டியிடுமே!

காலத்திலே சொல்லாத காதலே கைக்கு வாராது கானல் நீராகுமே

அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!-என்றுமே
காலத்திலே சொல்லாத காதலே
கைக்கு வாராது கானல் நீராகுமே!-அதனாலே
அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!

அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!

அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு
அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!
அன்பிற்கும் இல்லையடி அடைக்குந்தாழே !
அன்பில்லாதவரோ எல்லாம் தமதென்று கூறிடுவாரே! அன்புடையாரோ
தமதெல்லாம் பிறர்க்கென்று கொடுத்திடுவாரே!
தம்முயிரையும் கூட பிறர்க்கு ஈந்திடுவாரே!மனித நேயமே
தம்வாழ்வென்று வாழ் நாளெல்லாமே வாழ்ந்திடுவாரே!
அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு
அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!

Friday, December 25, 2009

மழலைச்சொல்லே இனிமை சொல்லே இளமைச் சொல்லே -அந்த தேனினிமை அளாவிய சொற்கேட்டல் -எதனினும் இன்பம் செவிக்கு

இனிய சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.-தத்திப்பேசும் தவழ்ந்து பேசும்

மழலைச்சொல்லே இனிமை சொல்லே இளமைச் சொல்லே -அந்த
தேனினிமை அளாவிய சொற்கேட்டல் -எதனினும்
இன்பம் செவிக்கு

நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே! தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே

வான்நின்று உலகம் வழங்கி வருதலினாலே!
தான்அமிழ்தம் ஆனதடி தேன்மொழியே!
நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே!
தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே!

Tuesday, December 15, 2009

நின் அறிவின் அறிதலினாலே பகுத்தறிந்தேன்-உன்னிலே! புரிந்தேன் வாழும் மனித நேய வாச மனிதத்தையே!

அறிந்தேன், எவரும் அறியாத காதலையே !,உன்னையே அறிந்துகொண்டு!
சேர்ந்தேன், நினது நெஞ்சினிலே ,அன்பே மனப்புரிதலாலே!
தெரிந்தேன், நின் அறிவின் அறிதலினாலே பகுத்தறிந்தேன்-உன்னிலே!
புரிந்தேன் வாழும் மனித நேய வாச மனிதத்தையே!

மனித நேய உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமே , மாதுளம்மொட்டே பொன்மாலைப்பொழுதே!, புலர் இளந்தென்றலே! புன்னகைகொஞ்சிடும் பொதுவுடைமைதேசமே !

எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
உதிக்கின்ற செங்கதிரே,உயிரே உயிரின் உள்ளுணர்வே
உச்சித் திலகமே மெச்சும் எந்தன் இன்னிசைத் தமிழே,
மனித நேய உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கமே , மாதுளம்மொட்டே பொன்மாலைப்பொழுதே!,
புலர் இளந்தென்றலே! புன்னகைகொஞ்சிடும் பொதுவுடைமைதேசமே !

Saturday, November 28, 2009

'உனது இதயத்தாலே குழந்தைகளைப் போலாகிவிடு! உன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் உனக்குப் வேறொன்றுமில்லையே!.

'உனது இதயத்தாலே குழந்தைகளைப் போலாகிவிடு!
உன்னைக் காட்டிலும் உயர்ந்த நட்பும் உனக்குப் வேறொன்றுமில்லையே!.
உன்னைக் காட்டிலும் உனக்கு வேறோரு பகையும் கிடையாதே!. உனக்கு நீயே நட்பாகியபோது,
உலக முழுதும் உனக்கே நட்பாகி விடுமே! உனக்குத் நீயேதான் பகையாக ஆனபோது இவ்வுலகமெல்லாமே உனக்கே பகையாகிடுமே!உனது
. உள்ளப் பகையே பகையாகிடுமே!, வெளிப்பகை பகையல்லவே!.உனது உள்ளப் பகையின் மாயத் தோற்றமே வெளிப் பகையானதே.உனது உள்ளப் பகையை களைந்து விட்டால்,
வெளிப்பகையே தானே நழுவிப் போய்விடுமே!.

பத்தும் பசிவந்திடப் பறந்து போகுமே! பசிக்கு ருசியும் தெரிவதில்லையே!

பத்தும்
பசிவந்திடப் பறந்து போகுமே!
பசிக்கு ருசியும் தெரிவதில்லையே!
பசித்த வாய்க்கு புசிக்கத் தராதவன் மனிதனே இல்லையே!
பசித்தவன் வயிற்றுக்கு ஓடாத இடமும் இவ்வுலகினில் இல்லையில்லையே!
பசியுள்ள உலகினில் இன்பம் வாழ்விற்கு வெகுதூரமே என் தோழனே!
வசதியும் தராதபோது பசியும் அதைவிடாது துரத்துமே!பூகோள எல்லைவரையினிலே!
பசியினில் ஒருவன் வாடுவதே !அவன் உணவை ஒருவன் திருடியதே!
பசியினை வளர்த்து திருடும் தனியுடைமையே ஒரு நாளில் ஓடும் அப்போது பசியும் ஓடுமே!
பசியினை போக்கும் பொதுவுடைமை எல்லோரும் புசிக்கத் தத்துவத்தை நடைமுறை ஆக்கிடுமே!

நல்லாரைக் கண்டுகொண்டேன் இன்றே நன்றே

நல்லாரைக் கண்டுகொண்டேன் இன்றே நன்றே நலமிக்க
நல்லார்சொல் கேட்கின்றேன் அன்பில் நன்றே - நல்லாரின்
குணங்கள் உரைக்கின்றேன் பண்பில் நன்றே; அவரோடு
இணங்கி இருக்கின்றேன் நலமே என்றும்!

Thursday, November 26, 2009

நவீன காலனி ஆதிக்க அதிகாரத்தின் காலடியிலே உலகமடா!இவ்வுலகினிலே-தேசபக்த கட்டபொம்மர்களே எப்படி இல்லாமல் போனார்களோ?-எங்கிருந்து? இத்தனை எட்டப்பர்களே ?

கண்ணுக்கெதிரே எத்தனையெத்தனையோ?களேபரங்களே!-தோழனே அதைக்
கண்டும் நீயும் உணர்வின்றி வாளாதிருப்பதனோ?
காலம் நழுவும் = நவீன காலனி
ஆதிக்க அதிகாரத்தின் காலடியிலே உலகமடா!இவ்வுலகினிலே-தேசபக்த
கட்டபொம்மர்களே எப்படி இல்லாமல் போனார்களோ?-எங்கிருந்து? இத்தனை
எட்டப்பர்களே எப்படித்தான் முளைத்தார்களோ?
இதயத்தின் இரத்தக் கண்ணீராலே- மண்ணின்
உடம்பெல்லாமே கரிக்கின்றதே!
சூது கவ்விய தர்மத்தின் வாழ்வுதன்னிலே திரும்பவும் தர்மமே!
மீண்டும் வென்றிட துணிவானதொரு பாதைதான் இருக்கிறதா? நல்லோரின் துணை
நீயும்தான் கொண்டாயா?கேளிக்கையும் களியாட்டங்களிலும் மூழ்கிக்கிடக்கும் உங்களாலே-வ்ழி
மாறித் தடுமாறிக் கொண்டிருக்கும் உங்களாலே! உங்களுக்கு நீங்களே திசை
மாறிப் போவதையாவது உணரமுடிகிறதா?ஏகாதிபத்தியமே!
உங்களின் உணர்வுகளைப் பிழிந்து சக்கையாக்கியே!
உங்களின் அறிவுதனை உறிஞ்சி எந்திரமாக்கியே!- நவீன ஏகாதிபத்திய வாதிகளே!
உயிருடன் உணர்வின்றி உங்களையே உலவவிட்டிருப்பது தெரியவில்லையா?-அதுவும்
உங்களின் உழைப்பினையே சுரண்டிக் கொள்ளையடிக்கத்தான் என்ற உண்மையாவது
உங்களுக்குப் புரிகின்றதா? நீயும் மூளைச்சலவைதான் செய்யப்பட்டே! முடமாகியே
உன்னுரிமை இழந்து மூலமிழந்து நிற்கின்ற கையாகாலாத தனத்திலே
உங்களையே பார்த்திடும் போதெல்லாமே நல்லோரின் ஆவிதுடிக்கின்றதே
இந்த தேசத்தின் அங்கமெல்லாமே பதறித்தான் துடிக்கின்றதே!
உங்களது தகவல் தொழிலின் நுட்பம்தான் கண்டு நீயும் பூரிக்கின்றாயே!
உலகினைச் சுருக்கும் போக்குவரத்து என்று வியக்கின்றாயே?
அன்றைய ஆங்கிலேய அஞ்சல் சேவையும் இருப்புப்பாதையும் எதற்குப் பயன்பட்டதே
என்பதுதான் என்ற வரலாற்றினையே நீயும் தான் மறந்துதான் போனீரா?
நமது பரந்துபட்ட உலகினையே சுருக்குவது என்பதே உலகமக்களினையே
நாளெல்லாமே சுருட்டத்தான் ,சுரண்டிக் கொள்ளையடிக்கத்தான் என்பது தெரிந்தும்
நீயும் சுருண்டு கொடுக்கின்றாயே உங்களுக்கு மானமில்லையா? ஈனமில்லையா?
உங்களுக்கே ரோசமில்லையா? உணர்வில்லையா? திராணியில்லையா?
உங்களின் உடலினிலே குருதிதான் ஓடவில்லையா? நீங்கள் என்ன சுவாசமற்ற பிண்டமோ?தனியுடைமை மாற்றி,
அல்லது எதிர்த்து போராடமனமின்றி முடங்கிக் கிடக்காதே வீறுகொள்ளடா!விழித்தெழடா?

என் மனத்து இருளை ஒளியாய் மாற்றுவார் யார்தான் உளரோ?இந்த உலகினிலே! எவரும் இல்லையே!இது உண்மையின் எல்லையே!

எனதினிய காதலியே இவ்வுலக தேவதையே!
உனைப்போல் என்காதலாய் என் உளத்துள் அன்பாகத்தான்
வந்து உனையன்றி!
என் மனத்து இருளை ஒளியாய் மாற்றுவார் யார்தான் உளரோ?இந்த உலகினிலே!
எவரும் இல்லையே!இது உண்மையின் எல்லையே!

இம்மனமும் அந்த மாயனின் முன்னே போகாமலே இருப்பதுதான் - எந்தவிதமோ? எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?

அன்னம்தனை தூதுவிடுத்தேனே அன்னந்தான் அங்கு என்காதலன் அவனையே
இன்னம்தான் கண்டு அறியாது வந்ததே தோழியே

அப்பால் ஓர் வண்டை அனுப்பினேனே அவனிடத்து என்காதலை சொல்லாதே
அப்பால் நின்று திகைத்ததே! - தவறாது

மானைப் போய்த் தூது சொல்லி வா என்றேனே அதுதன் இணையைத்தேடி ஓடித்
தானெங்கோ காட்டுவழி போனதே-என் தோழி

ஆரணங்கை நான் தூது அனுப்பினேனே அப்பாவையும் தன்காதலன் வசம்
ஆகி காதலிலிலே மூழ்கிப்போனாளே - ஆகையினால்-
எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?
என்னிதய சாம்ராஜயத்தின் காதல் தலைவனிடமே!
இந்த மனத்தைத் தூதாய் போய்வா நீஎன்றேனே! இம்மனமும்
அந்த மாயனின் முன்னே போகாமலே இருப்பதுதான் - எந்தவிதமோ?
எந்தவிதமோ? -இது எந்தவிதமோ? அதுதான் எந்தவித மாயமோ?

புத்திக்குள் உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?

உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு
விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?
அரியாசனம் உனக்கே ஆனால் உனக்குச்
சரியாரும் உண்டோ தமிழே!
தித்திக்கும் தென்அமுதே தெள்ளமுதின் மேலான தெம்மாங்கே!
முத்திக் கனியே என் முத்தமிழே -செந்தமிழே செந்தேனே ! புத்திக்குள்

உணர்கின்ற பேரின்பமே !என்னோடு அறிந்து உரைக்கும் பகுத்தறிவே!அன்பாலே நானுனக்கு
விண்ணப்பம் ஒன்று சொல்லுவேன் நீயும் கேளாயோ?

மனமே நீயும் மறவாதே தூதுசொல்லி வா! மனமே நீயும் மறவாதே தினமே உறங்காதே காதலனவன் விழிக்குள்ளே காதல் மொழிசொல்லவே மனமே நீயும் மறவாதே தூதுசொல்லி வா!

மனமே நீயும்
மறவாதே தூதுசொல்லி வா!
மனமே நீயும் மறவாதே தினமே உறங்காதே காதலனவன் விழிக்குள்ளே காதல் மொழிசொல்லவே மனமே நீயும்
மறவாதே தூதுசொல்லி வா!
சிந்தை மகிழ்ந்து அன்புனே தேடியநாள் ஓடிஎதிர்
வந்த காதலாம் விளையாட்டு இனிமேல் வாராதோ!
தென்பொதிகைச் சந்தனத்தோடு தென்றல் உறவாய் வந்தாய்!கனவு மெய்ப்பட காதல்
அன்புற என்னோடு உறவும் ஆக்காயோ?அன்பாலே
தேடும் நிழல் சிந்தனை ஆகினேன் வெம்பனியால்
வாடிய செந்தாமரை மலரானேன்!

வாழ்க்கையை கற்றுக் கொண்டேன் சமூகத்திடமே! ஊடலாம் பிரிவை கற்றுக் கொண்டேன் .காதலிடமே பொதுவுடைமை கற்றுக் கொண்டேன் மார்க்சீயத்திடமே!

மெய்யறிவினையே கற்றுக்கொண்டேன் பகுத்தறிவிடமே!
அன்பை கற்றுக் கொண்டேன் அம்மாவிடமே!
அறிவை கற்றுக் கொண்டேன் அப்பாவிடமே!
பாசத்தை கற்றுக் கொண்டேன் தங்கையிடமே!
நட்பை கற்றுக் கொண்டேன் நண்பர்களிடமே!
உறவுகளை கற்றுக் கொண்டேன் சொந்தபந்தங்களிடமே!
வாழ்க்கையை கற்றுக் கொண்டேன் சமூகத்திடமே!
ஊடலாம் பிரிவை கற்றுக் கொண்டேன் .காதலிடமே
பொதுவுடைமை கற்றுக் கொண்டேன் மார்க்சீயத்திடமே!

Tuesday, November 24, 2009

புறத்தே தவக்கோலம் பூணுவாரே! அகத்தே வஞ்சக எண்ணம் கொள்ளுவாரே!

உடலெல்லாம் சிவப்பாகவே! மூக்குமட்டும் கறுப்பாகவே இருக்கும் குன்றிமணிபோலவே
புறத்தே தவக்கோலம் பூணுவாரே!
அகத்தே வஞ்சக எண்ணம் கொள்ளுவாரே!

பண்பில்லாத மனிதரிடமே ! உண்மை அன்பினையே வேண்டுவது என்பதே! மணமில்லாத மலரிடமே வாசத்தையே வேண்டுவது போலாகுமே!

பண்பில்லாத மனிதரிடமே !
உண்மை அன்பினையே வேண்டுவது என்பதே!
மணமில்லாத மலரிடமே வாசத்தையே வேண்டுவது போலாகுமே!

வஞ்சகரின் பொய்யுரையை மெய்யென்று எத்தனைபேர் கூறினாலுமே மெய்யறிவார் பகுத்தறிவாளரே!அதைஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே!

நஞ்சினையே அமுதென்று கோடிப்பேர் கூறினாலும் உண்மை உணர்ந்தவரே அதைஒரு நாளும்
ஒப்புக்கொள்ள மாட்டாரே!-
அதுபோலவே!வஞ்சகரின் பொய்யுரையை மெய்யென்று எத்தனைபேர் கூறினாலுமே மெய்யறிவார் பகுத்தறிவாளரே!அதைஒரு நாளும் ஏற்றுக் கொள்ள மாட்டாரே!

Monday, November 23, 2009

மண்ணொன்று தானே பலமண்பாண்டமாய் ஆகிடுமே!பகுத்தறிவு ஒன்றுதான் என்ற போதிலுமே! உயிர்கள் அனைத்திலுமே உறைந்துதான் கிடக்கின்றதே!

மண்ணொன்று தானே பலமண்பாண்டமாய் ஆகிடுமே!பகுத்தறிவு ஒன்றுதான்
என்ற போதிலுமே!
உயிர்கள் அனைத்திலுமே உறைந்துதான் கிடக்கின்றதே!
உண்மை உலகினில் மறைந்திருப்பது போலவே! உள்ளெங்குமே,வெளியேங்குமே -பகுத்து
அறியும் ஆழமும் ஆழ்ந்துதான் இருக்கின்றதே!

மவுனவித்தை யாதென்றால் காதல் என்ற மூன்றெழுத்தே! காதலாம் மோனவித்தை அறிந்தாலே-வாழும் காலமெல்லாம் போராட்டம் போராட்டமே!

மவுனவித்தை யாதென்றால்
காதல் என்ற மூன்றெழுத்தே!
காதலாம் மோனவித்தை அறிந்தாலே-வாழும்
காலமெல்லாம் போராட்டம் போராட்டமே!

கண்ணின் விழியேது? விழிக்குள்ளே விழியங்கேது? அன்பு வெளியேது? அன்புவெளிக்குள்ளே அன்பு வெளியேது? காதல் மொழியேது? காதல் மொழிக்குள்ளே காதல் மொழியங்கேது?

கண்ணின் விழியேது? விழிக்குள்ளே விழியங்கேது?
அன்பு வெளியேது? அன்புவெளிக்குள்ளே அன்பு வெளியேது?
காதல் மொழியேது? காதல் மொழிக்குள்ளே காதல் மொழியங்கேது?
பார்வை வழியேது? பார்வை வழிக்குள்ளே பார்க்கும் வழியேது?

எந்தக் காலம் எந்தக் காலமே -அன்பு சித்தி கொண்டு கூடுவது எந்தக் காலமே! அந்தக் காலம் அந்தக் காலமே!காதல் பேரின்ப முத்தி கொண்டு கூடுவது அந்தக் காலமே!

எந்தக் காலம் எந்தக் காலமே -அன்பு
சித்தி கொண்டு கூடுவது எந்தக் காலமே!
அந்தக் காலம் அந்தக் காலமே!காதல் பேரின்ப
முத்தி கொண்டு கூடுவது அந்தக் காலமே!

Friday, November 20, 2009

வான்நின்று அழைக்கும் மழைபோல் தலைவனும் தானினறு அழைக்கும்அன்பிலே தலைவியே மயங்குவாள்-பார்வையாலே நெஞ்சிலே தாமென்று அழைப்பது காதல் கருதியே!.

வான்நின்று அழைக்கும் மழைபோல் தலைவனும்
தானினறு அழைக்கும்அன்பிலே தலைவியே மயங்குவாள்-பார்வையாலே நெஞ்சிலே

தாமென்று அழைப்பது காதல் கருதியே!.

Thursday, November 19, 2009

அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே ! மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே! சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே! மணமாகி ரசித்ததுவே!

அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே !
மதுவானதே ! இனித்ததுவே! வண்டாகி சுவைத்ததுவே!
சுவையாகியே சுகித்ததுவே! மலராகி மணத்ததுவே!
மணமாகி ரசித்ததுவே!
அண்டமெல்லாமே தாங்கி நிற்கும் மெய்யுணர்வே!

இம்மண்ணிலே வீடேது இங்கு உறவேது? உயிரேது ? தவமேது? யோகமேது? நாடேது? நகரமேது ? தானேது? தனதேது? எல்லாமே நமதென்றால் தவறேது?

வீண்பேச்சினாலே ! நற்கொள்கை இல்லாமலே! நல்லோர் துணையில்லாமலே!
கோடான கோடிப்பேர் உலகினிலே!
மாண்டு போனாரே! மறைந்து போனாரே! !இம்மண்ணிலே
வீடேது இங்கு உறவேது? உயிரேது ? தவமேது? யோகமேது?
நாடேது? நகரமேது ? தானேது? தனதேது? எல்லாமே நமதென்றால் தவறேது?

மானங்கெட்ட செயலாகுமடா! நீயும் குருட்டுத் தனமாகவே ஒரு தனிமனிதனையோ? ஒரு மதத்தையோ ? பின்பற்றுவது என்பதே! மானங்கெட்ட செயலாகுமடா!

மானங்கெட்ட செயலாகுமடா! நீயும் குருட்டுத் தனமாகவே ஒரு தனிமனிதனையோ?
ஒரு மதத்தையோ ? பின்பற்றுவது என்பதே!
மானங்கெட்ட செயலாகுமடா!- நீயும் பகுத்தறிவுப் படியே நடப்பது என்பதே வாழ்வின்
கண்ணியமாகுமடா!

எதையும் தாங்கும் இதயம் கொள்ளடா! உன்மனதினிலே உண்மை உறுதிகொண்ட வலிமை வேண்டுமடா! உனது துணிவே உனக்குத் துணை நின்று உனக்கு வெற்றிக் கனிதனையே பறித்துத் தரும்

எதையும் தாங்கும் இதயம் கொள்ளடா!
உன்மனதினிலே உண்மை உறுதிகொண்ட வலிமை வேண்டுமடா!
உனது துணிவே உனக்குத் துணை நின்று உனக்கு வெற்றிக் கனிதனையே பறித்துத் தருமடா!

குறுக்கு வழிகளே ஒருபோதும் நமதுவாழ்வினில் உண்மைவெற்றியை தருவதில்லையே! நேர்வழியில் நாமே நடப்பதற்கே எந்த தடைகள் வந்தபோதிலுமே உடைத்து முன்னேறடா!

குறுக்கு வழிகளே ஒருபோதும் நமதுவாழ்வினில் உண்மைவெற்றியை தருவதில்லையே!
நேர்வழியில் நாமே நடப்பதற்கே எந்த தடைகள் வந்தபோதிலுமே உடைத்து முன்னேறடா! நாம்
வாழும் வாழ்வினிலே சந்தோச தியாகமே வெற்றிக்கு என்றென்றும் வழிகாட்டுமே! நீ நல்லவனாய்வாழும் வாழ் நாளிலே நீயெதைச் செய்தாலுமே சந்தோசமாய் செய்திட கற்றுக்கொள்ளடா!

நாமே பிரபஞ்சப் பயணிகளடா! நமக்கே நமதுழைப்பே நமக்கு சிறந்த மதமாகுமடா!-அட நாமெல்லாம் மானுடமே எதிலும் நீயும் உற்சாகத்துடனே ஓடோடி வாடா!

நாமே பிரபஞ்சப் பயணிகளடா! நமக்கே நமதுழைப்பே நமக்கு சிறந்த மதமாகுமடா!-அட
நாமெல்லாம் மானுடமே எதிலும் நீயும் உற்சாகத்துடனே ஓடோடி வாடா!
நாமே நமதுவாழ்வினிலே எதையும் எப்போதுமே சந்திக்க தயாராகவே இருடா!
நமது மனித நேயமே நம்வாழ்வினிலே பொன்னான பண்பான அன்பாகுமே!

நமக்கு நாமே ஆசாணடா! நல்ல உறவுகள் வெற்றிதனைத் தந்திடுமே! நாள்தோறும் நாம்வாழ்வில் கற்றுக்கொள்ளும் அனுபவங்களே வெற்றிக்கு வித்தாகுமே!

நமக்கு நாமே ஆசாணடா! நல்ல உறவுகள் வெற்றிதனைத் தந்திடுமே!
நாள்தோறும் நாம்வாழ்வில் கற்றுக்கொள்ளும் அனுபவங்களே வெற்றிக்கு வித்தாகுமே!

முயற்சி நீயும் செய்து நம்பிக்கை கொண்டு செல்லும் பாதைதனிலே !உனக்கு என்றும் உனது வாழ்வினில் நிச்சயம் வெற்றியின் வாசல் கதவு திறந்திடுமே!

எதையும் நாளைக்கு என்று நீயும்
தள்ளிப் போடாதே!முயற்சி நீயும் செய்து நம்பிக்கை கொண்டு செல்லும் பாதைதனிலே !உனக்கு
என்றும் உனது வாழ்வினில் நிச்சயம் வெற்றியின் வாசல் கதவு திறந்திடுமே!

தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா!

தகுதி உள்ளதே தப்பிப் பிழைக்குமடா! அதனாலே நீயும் உனது
தகுதி தன்னையே வளர்த்துக் கொள்ளடா!
தகுதி இல்லாத வாழ்வுதனையே வாழ்வதிலே உனக்கு-வாழும்
தகுதி என்பது உலகினிலே இல்லையென்றாலே சவத்திற்குச் சமமாகுமே !

உன்னை நீயும் வெல்லப் பழகிவிட்டாலே உலகமே உன்கைக்குள் வந்திடுமே! உலகினில் சகலமும் அறிந்துகொள்ளவே உனது அறிவினையே நீயும் விசாலப்படுத்துவாயே!

உன்னை நீயும் வெல்லப் பழகிவிட்டாலே உலகமே உன்கைக்குள் வந்திடுமே!
உலகினில் சகலமும் அறிந்துகொள்ளவே உனது அறிவினையே நீயும் விசாலப்படுத்துவாயே!

தோல்வியே உனக்கு ஒரு சிறந்த ஞானகுருவாகுமே!என்றும் உனது தன்னம்பிக்கையே உன் வாழ்வுதனிலே சிறந்த நாணய மந்திரமாகுமே!

தோல்வியே உனக்கு ஒரு சிறந்த ஞானகுருவாகுமே!என்றும் உனது தன்னம்பிக்கையே உன்
வாழ்வுதனிலே சிறந்த நாணய மந்திரமாகுமே!
கசப்புணர்வினை விட்டுவிட்டு விருப்புணர்வினில் நீயும் எந்த செயலிலுமே நடைபோடுவாயே!

எல்லாப் பிரச்னைக்கும் தீர்வுண்டு!- நீயும் எப்போதுமே விழித்திருப்பாயே!உனது நம்பிக்கை எப்போதுமே தடைகளை உடைக்கும் சாவியாகும்!

எல்லாப் பிரச்னைக்கும் தீர்வுண்டு!- நீயும்
எப்போதுமே விழித்திருப்பாயே!உனது நம்பிக்கை
எப்போதுமே தடைகளை உடைக்கும் சாவியாகும்!சந்தேகக் கண்ணாலே நீயும்
எப்போதுமே விடைதேடி விடைதேடி குழம்பித் திரியாதே!
எப்போதுமே உன்முயற்சிதனைத் நீயும் தூண்டினால் போதுமே!

தேவை தேவை வெற்றிக்கு உண்மையும் நேர்மையும் தேவையாகுமே!

தேவை தேவை வெற்றிக்குத் தேவை மனத்தெளிவாகுமே!
தேவை தேவை லட்சியத்தில் கவனம் தேவை தேவையே!
தேவை தேவை வெற்றிக்கு உண்மையும் நேர்மையும் தேவையாகுமே!

Friday, November 13, 2009

நாமேஎல்லாம்! , நாமன்றி எல்லாம் வேறில்லை! , நம் ஒற்றுமையன்றி வேறில்லை! , நமையன்றி நன்மைதீ மைகளும் இல்லை!

நாமேபிரமம் நமைஅன்றி ஆம்பிரமம் வேறில்லை!, நாமே கடவுள் , நாமே கடவுளன்றி வேறில்லை! ,நாமே ஆத்மா நாமன்றி ஆத்மாவும்! , வேறில்லை, நாமே பரமாத்மா, நமையன்றி பரமாத்மாவும் வேறில்லை! , நாமே மனிதம்! , நாமே மனிதமன்றி வேறில்லை! நாமே புனிதம்! , நமையன்றி புனிதம் வேறில்லை! , நாமே மதம், நமையன்றி ஆம் மதமும் வேறில்லை! நாமேஎல்லாம்! , நாமன்றி எல்லாம் வேறில்லை! , நம் ஒற்றுமையன்றி வேறில்லை! , நமையன்றி நன்மைதீ மைகளும் இல்லை!

மரத்தின் வேரே வலிய நிலத்தையும் பிளந்துகொண்டு ஊன்றி நிலைபெறுமே!-அதுபோலவே நல்லோர்கள் நட்பும் உறுதிப்பிடியுடன் அமைந்திடுமே!

மரத்தின் வேரே வலிய நிலத்தையும் பிளந்துகொண்டு ஊன்றி நிலைபெறுமே!-அதுபோலவே
நல்லோர்கள் நட்பும் உறுதிப்பிடியுடன் அமைந்திடுமே!

பயிலும்தோறும் புதிது புதிதாய் தோன்றும் நூல் நயம் போலே! பழகுந்தோறும் பண்புடையவரின் நட்பு வளர்ந்துதான் சிறக்குமே!

பயிலும்தோறும் புதிது புதிதாய் தோன்றும் நூல் நயம் போலே!
பழகுந்தோறும் பண்புடையவரின் நட்பு வளர்ந்துதான் சிறக்குமே!
குளத்தில் நீரற்றுப் போனபோதும் வேரற்றுப்போகாதே நெய்தல்,கொட்டி ,அல்லிக்கொடிகளே- அது போலவே ஒருவர் தாழ்வுற்றபோதும் அவரைவிட்டுப்
போகாதவரே உண்மையான நட்பினர் ஆவாரே!

Thursday, November 12, 2009

திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்குமே!

திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்குமே!
இலையில் சிதறும் மழைத்துளியானாய்- நானும்
இமைகொட்டும் விண்மீன் சிதறலானேன்!

தூரிகை தூவும் வர்ணச்சிதறலே!நானும்
தூவானம் தூவும் எல்லையிலா வானமானேன்!

பால்கொட்டி உலாவரும் வெள்ளி நிலாவேநானும்
பனிதூவி தேவார துயிலெழுப்பும் மார்கழி காலையானேன்

இமைபிரித்து உலகறியும் மழலையின் மந்தகாசமமேநானும்
இதயம் வருடி இதம்கூட்டும் குழலோசையானேன்

இறையின் திருமுன் அமர்ந்து தவமியற்றும் ஒற்றைப்பூவேநானும்
இன்னிசை பாடிடும் புல்லினக்கூட்டமானேன்

ஜதிகூட்டும் காட்டாற்று புதுவெள்ளமமேநானும்
ஜாலம் காட்டும் காட்டு மின்மினியானேன்

மகரந்தம் தூவும் மலர்ச்சரமே நானும்
மண்மீது துளிர்க்கும் ஒற்றைத்தாவரம்

தேன்குடித்து மயங்கி கிடந்த ராணி பட்டாம்பூச்சியே! நானும்
தின்று தித்தித்து இன்னும் கேட்ட திணை மாவுமானேன்!

பால் தேடி ஓடும் பாப்பா கன்றுக்குட்டியே!
கால் தொட்டு வளைந்து ஓடும் ஆட்டுகுட்டியானேன்!

கதைகேட்க நீவந்தாய்! கதை சொல்ல நானுமிருந்தேன்!அடியே சகியே நமக்கு
பகல்களும், இரவுகளும் போதவில்லையே!
நினைத்து சிரிக்கவும் காலமில்லை! , கனவில் மிதக்கவும் நேரமில்லையே! "
திருமலை அவர்களே உங்கள் படைப்பு இப்படி இருந்தால் நன்றாய் இருக்க்குமே!


!

.

விதை சிறிதென்றாலுமே ஆலமரம் ஆயிரம்பேருக்கு நிழல்கொடுத்திடுமே! விதை பெரிதென்றாலுமே பனைமர நிழலிலே யார்தான் தங்கிடமுடியுமோ?

பெரியவர் எல்லாமே பெரியவர் இல்லையே!
சிறியவர் எல்லாமே சிறியவர் இல்லையே!
விதை சிறிதென்றாலுமே ஆலமரம் ஆயிரம்பேருக்கு நிழல்கொடுத்திடுமே!
விதை பெரிதென்றாலுமே பனைமர நிழலிலே யார்தான் தங்கிடமுடியுமோ?

ஆலைப் பலாவாக்க முடியாதே! நாயின் வாலை நிமிர்த்தமுடியாதே! காக்கையைப் பேசவைக்க முடியாதே!-அது போலவே! மூர்க்கரின் குணத்தையும் சீராக்கிடவே முடியாதே!

ஆலைப் பலாவாக்க முடியாதே!
நாயின் வாலை நிமிர்த்தமுடியாதே!
காக்கையைப் பேசவைக்க முடியாதே!-அது போலவே!
மூர்க்கரின் குணத்தையும் சீராக்கிடவே முடியாதே!

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம் அவர்களுக்கு! நண்பரே ! தங்களின் கோலங்கள் சின்னத்திரையினில் ஒரு சகாப்தம்!

கோலங்கள் இயக்குநர் திருசெல்வம் அவர்களுக்கு!
நண்பரே ! தங்களின் கோலங்கள் சின்னத்திரையினில் ஒரு சகாப்தம்!
திருப்பங்கள் பல திடீரென்று வந்து ஆவலை ஏற்படுத்தும்; மக்களுக்கு தினந்தோறும் ஒரு
க்ளைமாக்ஸ் வருமாறு இயக்கும் தங்களின் திரைக்கதைக்கு எனது வாழ்த்துக்கள்!
ஏராளமான ரசிகர்களின் உள்ளத்தில் இடம்பிடித்த தங்களின் இயக்கம் மென்மேலும் மிளிர எனது
மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள்!

Wednesday, November 11, 2009

பெண்ணிலும் ஆண்கள் உயர்ந்தவர் என்று சொல்வது மடமையடா!-இரண்டுக் கண்களிலும் எந்தக்கண் தான் உயர்ந்தது என்று நீயும் கூறடா? எத்தனை நாளைக்குத்தான் பெண்ணடிமை ?

பெண்ணிலும் ஆண்கள் உயர்ந்தவர் என்று சொல்வது மடமையடா!-இரண்டுக்
கண்களிலும் எந்தக்கண் தான் உயர்ந்தது என்று நீயும் கூறடா?
எத்தனை நாளைக்குத்தான் பெண்ணை அடிமையாக்கி ஆணாதிக்கம் செய்வாய் கூறடா?
அத்தனை பெண்களும் விழித்துவிட்டார் பெண்ணடிமை வீழ்த்த எழுந்துவிட்டார் பாரடா?

அந்தக் காதலின் நுட்பத்தை அறிந்தவர் உலகினிலே !சிலர்தானே காதலின் நுட்பத்தை எல்லோரும் அறிந்தாலே இங்கு எந்த சண்டைகளும் மோதலு இல்லையே இந்த உலகினிலே!

மெல்லியது மெல்லியது மலராகும்! அதனிலும்
மெல்லியது காதலாகும் அந்தக் காதலின் நுட்பத்தை அறிந்தவர் உலகினிலே !சிலர்தானே
காதலின் நுட்பத்தை எல்லோரும் அறிந்தாலே இங்கு எந்த சண்டைகளும்
மோதலு இல்லையே இந்த உலகினிலே!

பத நீரிலே மூழ்கிக்கிடந்து வயிறு நிறைந்தது தெரியாது உண்டு சாகும் பதனீர் புழுபோலவே!

பத நீரிலே மூழ்கிக்கிடந்து வயிறு நிறைந்தது தெரியாது உண்டு சாகும்
பதனீர் புழுபோலவே!
காதல் பேரின்பம் அறியாமலே அன்பிலே உயராமலே -சிலரே
உடல் சிற்றின்பத்தில் அதிகமாகவே
ஓடி உறவாடி அவ்வின்பத்தில் மூழ்கிக் கிடந்தே அழிவாரே!

உள்ளதை உணராமலே வெறும் மயக்கத்தில் திருமணம் செய்தோர் மணவாழ்க்கையே ஓடி வெளிச்சத்தைக் கண்டு வீழ்ந்து மடியும் விட்டில்பூச்சிகள் போன்றதே!

உள்ளதை உணராமலே வெறும் மயக்கத்தில் திருமணம் செய்தோர் மணவாழ்க்கையே
ஓடி வெளிச்சத்தைக் கண்டு வீழ்ந்து மடியும் விட்டில்பூச்சிகள் போன்றதே!

கணவன் மனைவியின் கருத்துவேறு பாட்டினையே !அன்பாலே திருத்திக்கொள்ள வேண்டுமே!

கணவன் மனைவியின் கருத்துவேறு பாட்டினையே !அன்பாலே திருத்திக்கொள்ள வேண்டுமே!
காணும் உலகினிலே அன்புஒன்று தானே எந்தக் கொடிய விலங்கினைக் கூட மனிதனாக்கும்
வாழ்வியல் மந்திரமாகுமே!

குடும்பம் என்றவண்டியிலே! இல்லறம் என்ற சரக்கை ஏற்றிக்கொண்டு போகும் கணவன் மனைவியாம் குதிரைகளே!- நீங்கள் ஒன்றுபட்டு செல்லாவிட்டாலே !

குடும்பம் என்றவண்டியிலே!
இல்லறம் என்ற சரக்கை ஏற்றிக்கொண்டு போகும்
கணவன் மனைவியாம் குதிரைகளே!-
நீங்கள் ஒன்றுபட்டு செல்லாவிட்டாலே !-வாழ்க்கையிலே குடும்ப
வண்டியும் ஒடிந்து இல்லறசரக்கும் அழிந்து வாழ்வே சின்னாபின்னா மாகிப்போகும் தெரியுமா?

நீரைவிட்டு பிரிந்தபோது தாமரை செழிக்குமோ?-கொழு கொம்பைவிட்டு பிரிந்தபோது கொடிதான் பிழைக்குமோ? காதலியே நீயும் காதலன் என் நெஞ்சைவிட்டு பிரிந்தபோது !

நீரைவிட்டு பிரிந்தபோது தாமரை செழிக்குமோ?-கொழு
கொம்பைவிட்டு பிரிந்தபோது கொடிதான் பிழைக்குமோ? காதலியே நீயும் காதலன் என்
நெஞ்சைவிட்டு பிரிந்தபோது வாழ்வுதான் சுகமாகுமோ?

இனியபாட்டுடன் இசையும் இணைந்து தேனாய் இனிப்பது போலவே!- இளமாலையில் தென்றலும் இசைந்து இதமாய் சுகந்தருவது போலவே!

இனியபாட்டுடன் இசையும் இணைந்து தேனாய் இனிப்பது போலவே!-
இளமாலையில் தென்றலும் இசைந்து இதமாய் சுகந்தருவது போலவே!
காதல் கணவனும் மனைவியும் !
காலமெல்லாம் ஒன்றுபட்டு பேரின்ப வாழ்வினையே கனிவுடன் அடைந்திடவே வேண்டுமே!

காதல் கணவனும் மனைவியுமே ! ஓர் ஒத்தக் கருத்தினிலே ஒருமித்து வாழ்வினிலே உயர்ந்திடவேண்டுமே! ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நல்வாழ்வினிலே வளம்பெறவேண்டுமே!

கண்ணிரண்டும் ஓர்காட்சிதனைக் காண்பது போலவே!
காதல் கணவனும் மனைவியுமே !
ஓர் ஒத்தக் கருத்தினிலே ஒருமித்து வாழ்வினிலே உயர்ந்திடவேண்டுமே!
ஒருவரையொருவர் புரிந்துகொண்டு நல்வாழ்வினிலே வளம்பெறவேண்டுமே!

பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து கணவன் அணைக்கும் பண்பாகும்!

பருவம் அறிந்து மழையைப் பெய்யும் வான்போலவே -மனைவியின் அன்பு அறிந்து
கணவன் அணைக்கும் பண்பாகும்!
மரமறிந்து வேர்விடவே மண்செய்யும் உரம்போலவே!
மனதறிந்து பார்வைதந்து காதலியிடத்து அன்பால் பழகிடும் காதலனின் காதலாகும்!

கணவனும் மனைவியுமே ! ஒன்றுபட்டு ஓர் நிலையினிலே உடலும் உயிரும் போலவே நில்லாமலே! வாழ்வினிலே! மாறுபட்டு உடலும் உயிரும் போராடுவது போலவே! இல்லறமே! என்றால் !

கணவனும் மனைவியுமே !
ஒன்றுபட்டு ஓர் நிலையினிலே உடலும் உயிரும் போலவே நில்லாமலே! வாழ்வினிலே!
மாறுபட்டு உடலும் உயிரும் போராடுவது போலவே! இல்லறமே! என்றால் அது என்ன நல்லறமா?

அறிவு நூலாம் ஆசாண் இல்லாமலே பகுத்தறிந்து மெய்யுணர்வினை அடைந்திட முடியாதே! ஒன்றுபட்டுப் போராடாமலே பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திவிட முடியாதே?

கண்களில்லாமலே ஒளியின் பயனையே அடைந்திட முடியாதே!சாவி
இல்லாமலே பூட்டினையே திறந்திட முடியாதே!அதுபோலவே
அறிவு நூலாம் ஆசாண் இல்லாமலே பகுத்தறிந்து மெய்யுணர்வினை அடைந்திட முடியாதே!
ஒன்றுபட்டுப் போராடாமலே பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திவிட முடியாதே?

பூ மலர்வதையே வண்டினமும் எதிர்பார்த்திருக்குமே!அதுபோலவே மக்கள்ஜன நாயகப் புரட்சிப் போராளியையே மக்களே எதிர் நோக்கிக் காத்திருப்பாரே!

கதிரவன் வருகையை தாமரை எதிர்பார்த்திருக்குமே! நிலவின்
கதிரையே,வரவையே அல்லியும் எதிர்பார்த்திருக்குமே!பூ
மலர்வதையே வண்டினமும் எதிர்பார்த்திருக்குமே!அதுபோலவே
மக்கள்ஜன நாயகப் புரட்சிப் போராளியையே மக்களே எதிர் நோக்கிக் காத்திருப்பாரே!

?வாய்மட்டும் தானே இதழ்குவித்துப் பேசும்!காதுமட்டும் தானே தேனிசையை ரசிக்கும்! அதுபோலவே பகுத்தறிவுதானே !அறிவுக்கண் திறந்து உண்மைதனையே காணும்!

இதழும்,செவியும்,கண்ணும் மணத்தை அறிந்திடுமோ?
எந்த மணத்தையும் அறிவது மூக்கல்லவா?வாய்மட்டும் தானே
இதழ்குவித்துப் பேசும்!காதுமட்டும் தானே தேனிசையை ரசிக்கும்!
அதுபோலவே பகுத்தறிவுதானே !அறிவுக்கண் திறந்து உண்மைதனையே காணும்!

மக்கள் நலனை விரும்பும் மக்கள் ஜன நாயகபுரட்சிப் போராளியே ! இமைபொழுதும் துஞ்சாது எப்போதுமே மக்களின் நினைவாகவே இருப்பானே!

காதலாலே ஒருபெண்ணை விரும்பும் காதலனே அந்தப் பெண்ணையே !
கால நேரமின்றி எண்ணிகொண்டே எப்போதுமே அவளின் நினைவாகவே! இருப்பானே!அதுபோலவே!
மக்கள் நலனை விரும்பும் மக்கள் ஜன நாயகபுரட்சிப் போராளியே !
இமைபொழுதும் துஞ்சாது எப்போதுமே மக்களின் நினைவாகவே இருப்பானே!

உள்ளத்துள் நீயே இருப்பதை அறியாமலே வேறு எங்கெங்கோ உனது உள்ளத்தையே - நீயும் தேடி அலைவதேனோ? தேன்குயிலே! இளந்தென்றலே!

கடலுக்குள் ஒருபொருளைத் தொலைத்துவிட்டே குளத்துக்குள் அதைத்தேடுதல் போலவே!உனது
உள்ளத்துள் நீயே இருப்பதை அறியாமலே வேறு
எங்கெங்கோ உனது உள்ளத்தையே - நீயும்
தேடி அலைவதேனோ? தேன்குயிலே! இளந்தென்றலே!

உயிரைத்தான் கண்டவருண்டா? அன்புருவே மெய்ப்பொருளே! உள்ளத்தைத்தான் பார்த்தவருண்டா? பூவிதழே பொன்மானே! என்றாலும் உண்டென்று நாமெல்லாம் உணர்கின்றோமே!

வானத்தைத்தான் கண்டவருண்டா? தேன்மொழியே தெம்மாங்கே!
காற்றைத்தான் பார்த்தவருண்டா? செந்தேனே தென் தமிழே!
உயிரைத்தான் கண்டவருண்டா? அன்புருவே மெய்ப்பொருளே!
உள்ளத்தைத்தான் பார்த்தவருண்டா? பூவிதழே பொன்மானே!
என்றாலும் உண்டென்று நாமெல்லாம் உணர்கின்றோமே!
அதுபோல பகுத்தறிவும் உண்டென்று உணர்தல் வேண்டுமே!

காணுமுலகில் மெய்யுணர்வு இல்லாதவ்ன் பகுத்தறிவு இல்லையென்று பிதற்றி திரிவானே!

கண்ணொளி இல்லாதவன் கதிரொளி இல்லை என்பது போலவே!
காதுகேளாதவன் கடலுக்கு ஓசையில்லை என்பது போலவே!
காணுமுலகில் மெய்யுணர்வு இல்லாதவ்ன் பகுத்தறிவு இல்லையென்று பிதற்றி திரிவானே!

நீரும் பாலும் இரண்டறக் கலந்தது போலவே-காதலியே உந்தனுக்கு நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?

நீரும் பாலும் இரண்டறக் கலந்தது போலவே-காதலியே உந்தனுக்கு
நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?
வானும் நிலவாய் மண்ணும் மரமாய்
தேனும் சுவையாய் தென்றலும் இதமாய்
நீயும் நானும் இரண்டறக் கலந்தது தெரியவில்லையா?

மூங்கிலின் உள்ளே மூண்டிடும் தீயாய் ! மேனியின் உள்ளே தீண்டிடும் நெருப்பாய்-என் காதலியே! காதலும் கனலாய் நம்மை எரிக்குதடி!-அந்த கதகதப்பும் ஓர்சுகமாய்!

மூங்கிலின் உள்ளே மூண்டிடும் தீயாய் !
மேனியின் உள்ளே தீண்டிடும் நெருப்பாய்-என் காதலியே!
காதலும் கனலாய் நம்மை எரிக்குதடி!-அந்த
கதகதப்பும் ஓர்சுகமாய் அணைத்ததடி!

நெஞ்சக் கோட்டைக்குள் இருக்கும் காதல் என்ன இனபம் என்று யாருக்கும் தெரியாது! ஆனாலும் காதலின்பம் பேரின்பமாகவே எல்லோரும் உணரமுடியுமே!

தேனின்பம் உண்ரும் இன்பமல்லவா?
தேனுக்குள் இருக்கும் இன்பம் கருப்பா? சிவப்பா? யாருக்கும் தெரியாது- நெஞ்சக்
கோட்டைக்குள் இருக்கும் காதல் என்ன இனபம் என்று யாருக்கும் தெரியாது!
ஆனாலும் காதலின்பம் பேரின்பமாகவே எல்லோரும் உணரமுடியுமே!

காற்றின் உயிர்ப்பே! கரும்பின் இனிப்பே !கண் திறவாயே பாலின் நெய்யே ! பழத்தின் சுவையே! பார்வைக்குள் வாராயே!

காற்றின் உயிர்ப்பே! கரும்பின் இனிப்பே !கண் திறவாயே
பாலின் நெய்யே ! பழத்தின் சுவையே! பார்வைக்குள் வாராயே!
பூவின் மணமே ! புன்னகை மனமே! நெஞ்சினில் நிற்பாயே!
தேனின் இனிமையே ! தென்றலின் குளுமையே! வாழ்வுக்குள் துணையாவாயே!

கவிஞன் இன்றி காவியம் இல்லை ஓவியன் இன்றி ஓவியமில்லை இசைப்பவன் இன்றி இசையுமில்லை உண்மை இன்றி வாழ்க்கையில்லை உழைப்பவன் இன்றி உலகமே இல்லை !~

கவிஞன் இன்றி காவியம் இல்லை !
ஓவியன் இன்றி ஓவியமில்லை !
இசைப்பவன் இன்றி இசையுமில்லை !
உண்மை இன்றி வாழ்க்கையில்லை !
உழைப்பவன் இன்றி உலகமே இல்லை !
காதலின்றி நாமே இல்லை இல்லையே !

காற்றின்றி உலகில்லை இல்லையே தோழி காதலின்றி நாமேஇல்லை இல்லையே தோழி

வானின்றி மழையில்லை இல்லையே என்தோழி
வயலின்றி விளைச்சலுமில்லை இல்லையெ என்தோழி
கண்ணின்றி பார்வையில்லை இல்லையே என்தோழி
கதிரின்றி ஒளியில்லை இல்லையே என்தோழி
காற்றின்றி உலகில்லை இல்லையே என்தோழி
காதலின்றி நாமேஇல்லை இல்லையே என்தோழி

Monday, November 9, 2009

அவளின் சமத்துவ தத்துவத்தோடும் ஆணாதிக்க எதிர்ப்போடும்-துணை நிற்கின்றது என் நெஞ்சமே

அவளின்
தாமரைக் கண்களோடும்,
செங்கனிவா யொன்றி னொடும்
செல்கின்ற தென்நெஞ்சமே
அவளின்
அன்பின் சிந்தையோடும்
அறிவிலொன்றி காதலோடும்
பறக்கின்றது என் நெஞ்சமே
அவளின்
சமத்துவ தத்துவத்தோடும்
ஆணாதிக்க எதிர்ப்போடும்-துணை
நிற்கின்றது என் நெஞ்சமே

காண்கின்ற மனிதரெல்லாம் அழகே காண்கின்ற அன்பெல்லாம் அழகே காண்கின்ற இயற்கையெல்லாம் அழகே காண்கின்ற மனித நேயமெல்லாம் அழகே

காண்கின்ற காதலெல்லாம் அழகே
காண்கின்ற கண்ணெல்லாம் அழகே
காண்கின்ற உலகெல்லாம் அழகே
காண்கின்ற பிரபஞ்சமெல்லாம் அழகே
காண்கின்ற காற்றெல்லாம் அழகே
காண்கின்ற மூச்செல்லாம் அழகே!
காண்கின்ற இசையெல்லாம் அழகே ,
காண்கின்ற கடலெல்லாம் அழகே
காண்கின்ற மனிதரெல்லாம் அழகே
காண்கின்ற அன்பெல்லாம் அழகே
காண்கின்ற இயற்கையெல்லாம் அழகே
காண்கின்ற மனித நேயமெல்லாம் அழகே

காண்கின்ற மக்கள் ஜன நாயகம் அழகே
காண்கின்ற பொதுவுடைமை அழகே
காண்கின்ற சுதந்திர மூச்சே அழகே
காண்கின்ற மத நல்லிணக்கமே அழகே

மனித நேயத்தில் அரவணைத்து புரிகின்ற பேரின்பமே!

உள்ளமுள் குடைந்தென் உயிரை யுருக்கி யுண்ணுகின்ற காதலுயிரினிலே உயிரானவளே!
வெள்ளமென கரைபுரளும் ஆசையினை அன்புருவாக்கும் சூட்சுமத்தின் அழகானவளே!
அள்ளுகின்ற சுகமெல்லாம் சுகமில்லை என்று அறிவினாலே அறிகின்ற பகுத்தறிவானவளே!
கொள்ளுகின்ற இன்பமெல்லாம் மனித நேயத்தில் அரவணைத்து புரிகின்ற பேரின்பமே!

Sunday, November 8, 2009

"காதலிக்கும் பெண்ணையே கல்யாணம் செய்திட முடியுமென்று சொல்ல முடியுமா?.. கல்யாணம் செய்தவன் எல்லாமே மனைவியைத்தான் காதலிப்பான்னு சொல்ல முடியுமா?

"காதலிப்பவனுக்கு காதலிதான் அழகாவாளே!..
காதலிக்காதவனுக்கு அழகானவள் எல்லாம் காதலியாவாளே!

"காதலிக்கற பொண்ணையே கல்யாணம் செய்திடமுடியுமா?
..கல்யாணம் செய்தவனெல்லாமே
மனைவியைத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியுமா?


"எல்லா பொண்ணும் அழகா தெரிஞ்சா
அது காமமாகும்.
ஒரு பொண்ணு மட்டும் அழகா தெரிஞ்சா
அது காதலாகும்

மனைவியை மட்டும் காதலிக்க
நினைப்பது நல்லபுத்தியாகும்
காதலிப்பவரையெல்லாமே மனைவியாக
நினைப்பது என்பது வக்கிரபுத்தியாகும்


"காதலித்த பொண்ணையே கல்யாணம் செய்கின்றவன் தைரியசாலி
கல்யாணம் செயத பொண்ணையே காதலிக்கிறவன் புத்திசாலி


காதலி அவள் அழகென்று சொல்கின்றவனின் காதல் பொய்க்காதலாகும்
காதலி அவள் அன்பானவளென்று சொல்கின்றவனின் காதல் மெய்க்காதலாகும்


"காதலியை மனைவியாக ஆக்கமுடியாதவனே அவனின் மனைவியையே
காதலியாக ஆக்கிவிடுவான்!


"கல்யாணத்தில் காதல் முடியலாம்.. ஆனாலும்
காதல் கல்யாணத்தில் முடிந்தாலும் முடியும்! முடியாமல் போனாலும் போகும்!

"காதலிக்கும் பெண்ணையே
கல்யாணம் செய்திட
முடியுமென்று சொல்ல முடியுமா?..
கல்யாணம் செய்தவன் எல்லாமே
மனைவியைத்தான் காதலிப்பான்னு
சொல்ல முடியுமா?


!

கல்வி என்பது யாரும் பிச்சை போட்டு பெறுவது அல்ல!. கல்வி என்பது நமது அடிப்படை உரிமை அல்லவா?

கல்வி என்பது யாரும் பிச்சை போட்டு பெறுவது அல்ல!.
கல்வி என்பது நமது அடிப்படை உரிமை அல்லவா?

கல்வியை வியாபார நோக்கினில் பார்க்கின்ற கொடுமையை அழிக்காமலே!
கட்டணக் கொள்ளையை தடுக்காமலே !

எவருக்கோ வந்தது என்று நாமும் தூங்கி விட்டால்…
இங்கு தொடரும் தற்கொலை மனநிலை ,தாழ்வுமனப்பான்மை எல்லாமே
எவர்தான் வந்து மாற்றுவாரோ?
போராடாமலே நமக்கு விடிவுவரும் என்பது பழைய பஞ்சாங்கம் அல்லவா?
தனியார்மய கல்விக் கொள்ளையை வீழ்த்தாமல் நமக்கு இந்த சமூகத்தில்
தன்மானத்தோடு கல்வியும் இல்லை, வாழ்க்கையும் இல்லை! வசந்தமும் இல்லை இல்லையே

அனைத்து தரப்பு மக்களையும் அணி திரட்டாமலே! - நாம் அனைவரும்
வீதியில் இறங்கி போராடாமலே !
இலவச கல்வி உரிமையை மீட்டெடுப்போம் என்பது கானல் நீர் கனவாகுமே!

Saturday, November 7, 2009

நம்பிக்கையாலே உயரப் பறக்கும் சிறகினை அசைத்தேனே! வானமே அருகினில் தானே!

வைர நகை கனவினிலே கவரிங் நகையும் களவுபோனதே!
வானினைவினிலே மண்ணின் மணமும் மறைந்து போனதே! - நம்பிக்கையாலே
உயரப் பறக்கும் சிறகினை அசைத்தேனே! வானமே அருகினில் தானே!
உண்மை உழைப்பினில் ஒற்றுமை உணர்வுடன் ஓங்கி உயர்ந்தேனே!

பயனில்லை!பயனில்லையே! மக்கள்ஜன நாயகம் அறியாத மக்களும் பயனில்லையே! பயனில்லை!பயனில்லையே!, அடிமைவிலங்கினை உடைக்காத பாட்டாளியும் பயனில்லையே!

பயனில்லை!பயனில்லையே!
ஆபத்துக்கு உதவாத தோழமையும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
உழைப்போரைத் திரட்டாத போராளியும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
மக்கள்ஜன நாயகம் அறியாத மக்களும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!,
அடிமைவிலங்கினை உடைக்காத பாட்டாளியும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
பகிர்ந்துண்டு வாழாத சமூக அமைப்பும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
தனியுடைமை மாற்றக் கொள்கையில்லாத அரசியலும் பயனில்லையே!
பயனில்லை!பயனில்லையே!
மனிதத்தை செழுமைப் படுத்தாத தத்துவங்கள் பயனில்லையே!

காலம்போகும் வேகத்திற்கு காதலும் ஓடுதே! கலந்துப் பழகத்தான் துடித்துத் தான்போகுதே!

-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத!
காதலும் காதலாக இருப்பதில்லையே
கண்ணனென்று காதலாலே கொஞ்சுவதும் !
கருத்தில்வைத்து அன்பாலே மிஞ்சுவதும்!- நேரம்பார்த்து
காத்திருந்து நாணத்தாலே அஞ்சுவதும் !-கனவினிலே!
காதலிலே காலம் அறியாது துஞ்சுவதும்!
காதலியரின் இலக்கணமென்று அறிந்தாலும்!-இந்த
காலத்திலே விஞ்ஞானக் காதலாகவே,விரைந்துதான் பறக்குதே!
காலம்போகும் வேகத்திற்கு காதலும் ஓடுதே!
கலந்துப் பழகத்தான் துடித்துத் தான்போகுதே!
கலந்து பழகாத காதலும் காதலில்லையே
-ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாத!
காதலும் காதலாக இருப்பதில்லையே

எந்தன் சிந்தைக்குள் நீயும் சிந்தனையாகவே இருப்பதாலேயே! உன்னொரு நிலையான மனமும் துயரந்தான் கொண்டதோ?

கண்களுக்குள் நீயும் இருப்பதாலே காரிகையே-என்கண்ணில் ஆனந்த
கண்ணீரும் வரவில்லையே!எந்தன்
மனதிற்குள் நீயும் குடியிருப்பதாலே !மனதின் சத்தமும் உனக்கு தொல்லை தருகின்றதோ?எந்தன்
சிந்தைக்குள் நீயும் சிந்தனையாகவே இருப்பதாலேயே! உன்னொரு நிலையான மனமும் துயரந்தான் கொண்டதோ?

உன்னாலே சின்னவளே சிரித்தவளே ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவுகளடி!உன்பார்வையாலே சித்திரமே சிவந்தவளே என்றும் மனதில் தோன்றும் நனவுகளடி!

என்னவளே இனியவளே உன்புருவவில்லை நீயும் வளைத்ததாலே!காதலாம் பேரின்பம்
என்னெஞ்சினிலே தோன்றுதடி நினைவுகளைத் தோணியாக்கியே காமப் பெருங்கடலலையையும் எதிர்த்து நின்றாயே!அன்பாலே இதழசைவினாலே மவுனத்தில் அழைத்தவளே-உன்னாலே
சின்னவளே சிரித்தவளே ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவுகளடி!உன்பார்வையாலே
சித்திரமே சிவந்தவளே என்றும் மனதில் தோன்றும் நனவுகளடி!

Friday, November 6, 2009

இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் பெய்துவரும் பருவமழையாலே!

இலங்கையில்
வடக்கு கிழக்கு பகுதிகளில்
பெய்துவரும் பருவமழையாலே! இடம்பெயர்ந்த நாங்கள்
பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.
எங்களுக்கு பாடசாலைகள், விளையாட்டரங்குகள், பொதுமண்டபங்கள்தான் வீடுகளாயின
நாங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாயித் தவிக்கின்றோம்!கூடாரங்களில்
தங்கவைக்கப்பட்டுள்ள நாங்கள் மழையினால் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளோம்!.
பெய்துவரும் தொடர் மழையின் காரணமாக நாங்கள் பாதித்துள்ளோம்!. சிங்களக் காட்டேறிகளின் தாக்குதல் காரணமாக வீடுகளை இழந்தோம்!
நாங்கள் இப்பிரதேசங்களில் கூடாரங்களில் முடங்கிக் கிடக்கின்றோம்!
எங்களது கூடாரங்கள் காற்றினால் அடித்துசெல்லப்பட்டுள்ளது!
இதனைவிட தாழ்வான பிரதேசங்களில் வாழும் எங்கள் தமிழின மக்கள் வெள்ள அபாயத்தினையும் எதிர்கொண்டு சோகத்திலே!.

வானைப்போல வளைந்து கொண்டு ஆனந்தத் தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்த மெய்ஞ்ஞானக் காதல் தேவதையே!

நான்சொல்லும் விண்ணப்பங்கேட்பாயே!
எனக்குள்ளே உயிராக இருக்கும் நீயே -அன்பென்னும் அற்புதத்தை எனக்களிப்பாயே
நினைக்கவோ அறியாது என்றது நெஞ்சமே!ஆயினும்
நினைவுக்குள் நினைவாக நிற்கும் காதல் அன்பே!
வானைப்போல வளைந்து கொண்டு ஆனந்தத்
தேனைத் தந்தெனைச் சேர்ந்து கலந்த மெய்ஞ்ஞானக் காதல் தேவதையே!உன்னில் உறவாகி கலந்து நானும் காலமெல்லாம் உன் துணையே சிறந்ததென்று உறுதிபூண்டு தொடர்ந்தே!
தஞ்சமென்று உன்னை நானும் சரணடைந்தேனே!
!

கரும்பினைக் கண்டு கொண்டென் உன் இதழினிலே காதலியே ! கண்ணிணை களிக்கு மாறே கண்பாவை அசைப்பதுதான் ஏனோ? அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமானவளே!

கரும்பினைக் கண்டு கொண்டென் உன் இதழினிலே காதலியே !
கண்ணிணை களிக்கு மாறே கண்பாவை அசைப்பதுதான் ஏனோ?
அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமானவளே!
ஆனந்தபூர்த்தியான தேவதையே!உனது இயற்கையாம்!
அழகோடு நிறைந்ததெது? தன்னன்பு வெளிக்குளே நேயமாய்!
எழிலாக மறைந்ததெது? வாழ்வினிலே பேரின்பமாய் !
உயிர்க்குயிராய் நம் உள்ளத்தில் தழைத்ததெது? காதல் பேரின்பமல்லவா?அதுவே

நம் கருத்திற்கிசைந்ததுவே!அத்தோடு
நாட்டோர் போற்றுகின்ற பகிர்ந்துண்ணும் தத்துவத்தை
கண்டுஇணைத்து நாமும் எல்லோரும் வாழுகின்ற பொன்னாளை உருவாக்கும்
வழிசெய்குவாம்!.

உள்ளமோ ஒன்றில் நில்லாது அலைபாய்வது ஏனோ? காதலியே கனிமொழியே !

உள்ளமோ ஒன்றில் நில்லாது அலைபாய்வது ஏனோ? காதலியே கனிமொழியே !
கொள்ளிமே லெறும்பு போலக் பதைத்து நிற்பதுவும் ஏனோ?உன்னெழிலைக் கண்டு
குழையுமா லென்ற னுள்ளம்அழைத்தாலும் ஆதரவாய் விழித்தாலும் பேசிடுமோ விழிகளே! காதல் மொழிகளே!
உன்னையன்றி ஒருபோதும் காதலினால் ஆரிடத்தும் உருகிடவில்லையே என்தோழியே!

அடியென்னோடும் நின்னோடும் காதலன்பாம் பேரின்பம் துணையோடு.!

அடியென்னோடும் நின்னோடும் காதலன்பாம் பேரின்பம் துணையோடு.!
உறவோடு உயிரோடு பிரிவின்றி வாழ்ந்திருப்போம் ஆயிரம்பல்லாண்டு !
எந்நாளோ?எம்பெருமாட்டி உயிரோடு உயிராகி எழுதப்பட்ட வாழ்க்கைத் தத்துவத்தை!
அந்நாளே ஆயிரமாம் காலத்துப் பயிரினிலே பந்தமாகும் சொந்தமும் சுற்றமாகிடுமே!
இந்நாள் தொட்டு வாழும் நாளெல்லாம் இன்பமே இனிதுன்பமிலை என்று வாழும் பூரணமே !
பொன்னாள் இதுவென்று போற்றி உன்னையே பல்லாண்டு கூறுதுமே!

Thursday, November 5, 2009

இருவரின் துணையாலே காமனை மட்டும் அல்ல இவ்வுலக அடிமைவிலங்கினையும் நொறுக்கிடுவோம் வாயென் புரட்சிகர அக்கினிக்குஞ்சே!

இதமாகச் சொல்லவோ? எப்படித்தான் சொல்லவோ?
இன்னமுஞ் சொல்லவோ இன்னமுதே தேன்சுவையே
எப்படித்தான் சொன்னாலும் எத்தனைமுறை சொன்னாலுமே
உன்மனமென்ன கல்லோ ?
நல்லதையே சொன்னாலும் பகுத்தறிவினிலே பலமுறை உரைத்தாலுமே
செந்தமிழே தெம்மாங்கே உன் நெஞ்சமென்ன?
இரும்போ பெரும்பாறையோ, சுதந்திர சுவாசத்தைபற்றி
ஏதேது சொன்னாலும் என்னென்ன பாடினாலும் கேளாது உன்
இருசெவியு மந்தமோ பழகாத பந்தமோ கண்ணே உந்தனுக்கு அடிமைவாழ்வு
அழகுதானோ?,அடிமைசுகமும் சுகமோ? தாழ்வுற்றுக் கிடப்பதிலே
என்ன மோகமோ? இதுவென்ன சாபமோ?தெரிந்துசெய்கிறாயா? தெரிந்தே செய்யும்
இதுவேவுன் செய்கைதானோ?,
விரக தாபமோ யார்மீது ஊடலாலே உன்னில் பொய்மைக் கோபமோ
ஆனாலும் நான் விடுவனோ,அணைத்துமுத்தம் தராமலே போவேனோ?
உன்னைவிட் டெங்கு சென்றாலும் வாழ்வெனக்கு சுவர்க்கம் ஆகிடுமோ?
நான் உனையே விடுத்து வாழ்வினையே வாழ்ந்திடுவேனோ?
ஓகோவிதுன் குற்றமென் குற்ற மொன்றுமிலை புறக்குற்றமன்றோ?
யுற்றுப்பார் உன்கண்ணில் என்கண்கள் தெரிவது தெரியலையா?
என்குற்ற மாயினும் உன்குற்ற மாயினும் நம்குற்றமாகி அதை திருத்திடல் நம்கடைமையன்றோ? நாம்
இருவரின் துணையாலே காமனை மட்டும் அல்ல இவ்வுலக அடிமைவிலங்கினையும் நொறுக்கிடுவோம் வாயென் புரட்சிகர அக்கினிக்குஞ்சே!

மக்கள்ஜன நாயக புரட்சியின்றி தனியுடைமை கொடுமையிலே கருகிக் கிடக்கின்றோம்

கடலென்ற உலகமீதில் அலையாகி அலைகின்றோம்!
கனவென்று வாழ்வைநம்பிக்,காலமெல்லாம் கழித்துவிட்டோம்
காற்றென்ற மூவாசை மந்திரச் சுழலிலே சிக்குண்டு தவித்து நின்றோம்
காதலாலே கட்டுண்டு நித்த நித்தம்,காத்திருந்து நொந்துபோனோம்
உடலென்ற பற்வைக்கு உணவென்ற இரைதேடி பிரபஞ்சத்தில் சுற்றித்திரிந்தோம்
ஓயாமலிரவு பகலும், ஓராயிரம் கனவுகளோடு ஓடோடி வாழ்வினில் இன்பந்தேடி அலைந்தோம்
உண்டுண் டுறங்குவதைக் கண்டதேயல்லாது வேறென்ன பகிர்ந்துண்டு வாழும் தத்துவம்தனை அறிந்தோமா?
ஒருபயனடைந்திடவே பலதவறுகள் செய்தே பேராசையிலே பொய்மையிலே திரிந்தோம்
தனதென்ற தானெனற பந்தபாசங்களெனும் வலையினிலே சிக்குண்ட பறவைகளானோம்

தாயென்ற தாய்மையை வீதியிலே எறிந்து வேடிக்கைப் பார்த்தோம்
சேயென்று பாராது தம்கருத்தை திணித்து செயலற்று போகவே காரணமானோம்
நீயென்று விலக்கி உயர்வென்று சொல்லி பிறரை தாழ்வுக்குள் தள்ளினோம்
நானென்று சுய நலத்தில் அதிகாரம் செய்து அடுத்த்வரை கொச்சைப் படுத்தினோம்
இடையென்று எதையெதையோ எண்ணி ஏமாந்துபோய் விட்டோம்
கடைநின்று விழிப்பின்றி எழுந்திடாமல் வீழ்ச்சியுற்று வீதியினிலே கிடந்தோம்
ஏனென்று கேளாது போராட்ட குணமின்றி தாழ்வுற்று தரித்திரமானோம்
மக்கள்ஜன நாயக புரட்சியின்றி தனியுடைமை கொடுமையிலே கருகிக் கிடக்கின்றோம்

Monday, November 2, 2009

உனது நினைவினிலே காலமெல்லாம்! லயித்து இருந்தேன் பல நாள் -உனதுகாதலின் ஆழத்தைக் காண்கிலனே!

காதலிலே உனையே!
நம்பியிருந்தேன் பலநாள்! - உனதன்பு
ரகசியங் காண்கிலனே!
கனவினிலே தினமும்!
மிதந்திருந்தேன் சில நாள் -உனதழகின்
அதிசயங் காண்கிலனே!-உனது
நினைவினிலே காலமெல்லாம்!
லயித்து இருந்தேன் பல நாள் -உனதுகாதலின்
ஆழத்தைக் காண்கிலனே!

உலகத்தின் அழகே உழைப்பவனின் கைவண்ணத்தில் உயர்ந்து நிற்கும் இமயமல்லவா?

என்ன? என்ன ?
என்ன? அதிசயங் காணிவ்வுலகி லேயமைந்த
உன்னதமெல்லாம் அமைத்தோன் உழைப்பாளன் தான் என்ற உண்மைதனை அறிவீரா?
இயற்கையை எதிர்த்து மனிதன் உருவாக்கிய படைப்பிலெல்லாமே உழைப்பவனின்
உழைப்பு ஒளிவீசி ஜொலிக்கின்ற அழகினையே உலகோர்கள் ரசித்திடவில்லையா?
உலகத்தின் அழகே உழைப்பவனின் கைவண்ணத்தில் உயர்ந்து நிற்கும் இமயமல்லவா?

கண்கள் காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்!-இயற்கை காணரிய பொருளாகுங் காணும் போதே!

கண்கள்
காண்பதுதான் பேரொளியின் காட்சி யாகும்!-இயற்கை
காணரிய பொருளாகுங் காணும் போதே!
கண்கள் தானே காதலுக்கு சாட்சியாகும்-அதை
கருத்தினிலே இருத்தாவிட்டால் பூஜ்யமாகும்!-திட்டமான
எண்ணங்கள் இல்லாமல் அதுவும் செயல் வடிவில் செல்லாமல்
எந்த அடியும் எடுத்துவைத்து வென்றதாக சரித்திரமில்லையே!

கூடுவிட்டு கூடு பாய்ந்தவளே! எனதன்புத் துணையே! தோழியே! உன்னெஞ்சக் கூடுவிட்டுக் என்னெஞ்சக்கூடு வந்தவளே!

கூடுவிட்டு கூடு பாய்ந்தவளே! எனதன்புத் துணையே! தோழியே!
உன்னெஞ்சக் கூடுவிட்டுக் என்னெஞ்சக்கூடு வந்தவளே! !-என் காதலியே!
என்னெஞ்சக் கூட்டினிலே குடியிருப்பவளே!
உன்னெஞ்சக் கூட்டினிலே நானிருப்பது -காதலி
உன்னெஞ்சினிலே புலப்படவே இல்லையா?

உளமெல்லாம் நீயாக போனாயே தனிமையில்லை -இனி நாமே இரண்டில்லை ஒன்றெனவே அறுதியிட்டாயே

உளமெல்லாம் நீயாக போனாயே தனிமையில்லை -இனி நாமே
இரண்டில்லை ஒன்றெனவே அறுதியிட்டாயே!ஒருபோது
நானென்று அறிந்த என்னை-உன்னில்
நானறியாத காலமெல்லாம்-மறுபோது
என்னெஞ்சினில் நெஞ்சாக
தானென்று நீயிருந்தாய் என்னுயிரினில் உயிராகியே
தனைமறந்து எனை நினைந்தாய் என்னில்கலந்தாய் விண்ணில் பறந்தாய் சகியே !

இன்னதென்று சொல்லவொண்ணா வெல்லையற்ற பேரின்பத்தை தந்தவன் யாரடி? வாழ்தத்துவத்தை சொன்னவனை நானறிந்து சொல்வதினி என்ன உண்டு இந்த பிரபஞ்சந்தன்னிலே!

கண்ணினொளி பாய்ந்ததடி காதல்மணம் புரிந்ததடி கன்னிமனம்
கருத்தறிந்து கொண்டதடி அன்புசுமை கொண்டதடி விடியவிடிய தனிமையிலே
விண்ணொளி கண்டதடி இன்பவேதனை தந்ததடி
கனவுகண்டது போலெனக்குக் காட்டிமறைந் தேபோனவன்தான் யாரடி?!
நினைவை நெஞ்சினில் வைத்து நினைத்தவன் யாரடி?
ஆரென்று கேட்டவனே அருகில்வந்து கண்டவனே யாரடி?- இளமாலைப்
பாரென்று சொன்னதுவும் பகுத்தறிந்து பாவைமனதுள் நுழைந்தவனே யாரடி

நினைக்குந் தினந்தோறும் நிறைந்த காதலின்பத்தை
அணைக்குள்ளே கண்டுகொண்டு புன்னகை முத்துதிர்த்த கள்வன் யாரடி?
இன்னதென்று சொல்லவொண்ணா வெல்லையற்ற பேரின்பத்தை தந்தவன் யாரடி? வாழ்தத்துவத்தை
சொன்னவனை நானறிந்து சொல்வதினி என்ன உண்டு இந்த பிரபஞ்சந்தன்னிலே!

தனியுடைமைக் கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்தே-பொதுவுடைமை உள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம் ?

தனியுடைமைக்
கள்ளக் கருத்தையெல்லாங் கட்டோடு வேரறுத்தே-பொதுவுடைமை
உள்ளக் கருத்தை யுணர்ந்திருப்ப தெக்காலம் ?
மக்கள் ஜன நாயகம் தானுணர்ந்து நமை தெளிந்து, எழுந்து,போராடி
மக்கள் எல்லாம் நலம்பெற்று வசந்தமாய் வாழ்வதுதான் எக்காலம்?

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த உள்பொருளே!காதலின்ப முத்திக்கு வித்தையே! கோடிக்காலப் பயிருக்கே நீரான என்சகியே!

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த உள்பொருளே!காதலின்ப
முத்திக்கு வித்தையே! கோடிக்காலப் பயிருக்கே நீரான என்சகியே!
எத்திக்கும் இனிமையான இல்லறமாம் நல்லறத்தில் எனை இணைத்தாயே!
என்னாளும் துணையாக வாழ் நாளெல்லாம் என்கூட வந்திடுவாயே!

கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருந்தது அந்தக்காலம்.!-உண்மையிலே! மண்ணில்மாதர் தலை நிமிர்ந்து எதையும் எதிர்கொள்வது இந்தக் காலம் !

என்னுயிர்க் காதலியே! எனதினிய தோழமையே!அவளே
அன்பு மனதினாலே!
முத்திதரும் வேத மொழியானாள்!காதலாம் பகுத்தறிவு!
மெய்ஞானஞ் சொல்ல வந்தாள்! -பெண்மை
கண்ணிரண்டு மூடிக் கவிழ்ந்திருந்தது அந்தக்காலம்.!-உண்மையிலே!
மண்ணில்மாதர் தலை நிமிர்ந்து எதையும் எதிர்கொள்வது இந்தக் காலம் !

கெட்டதே சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே- நரிக்குண வஞ்சகர் சொல்கேட்டு நாசங்கள் புரியாதே

கெட்டதே சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே- நரிக்குண வஞ்சகரின் சொல்கேட்டு நாசங்கள் புரியாதே!
!கயவரோடு உறவாடி மக்களுக்கு பயனில்லாதததை செய்யாதே!
காசுதனை வாங்கிக் கிட்டு வாக்குரிமை விற்காதே!உனது சுதந்திரத்தை அடகுவைத்து
அடிமைவாழ்வு வாழாதே!

இன்னுயிர் சகியே! எனதினிமைத் தோழியே! நீயும் உன்காதலாம் அரிய தவமும் உந்தனது கோபத்தால் அழிந்து போகாதோ?

இன்னுயிர் சகியே!
எனதினிமைத் தோழியே! அன்பே!
உன்காதலாம்
அரிய தவமும் உந்தனது கோபத்தால் அழிந்து போகாதோ?!-அன்புக் காதலியே
பண்புத் துணைவியே!- அறிவே!
உனதன்பாம்
பெரிய வரமும் எந்தனது இதயமே குளிரத் தருவாயோ?!

Sunday, November 1, 2009

காதலிதன் - கலங்காத வுள்ளத்தை உந்தன் கண்ணிலே வைத்து. நெஞ்சினில் இருத்திக் காதல்தான் பேரின்பமென்றுக் காட்டுநீயே

கண்ணே காதலினைத் தந்த கண்கண்ட தெய்வமே!
பிரியாத பேரன்பின் பெருக்கெடுத்த அன்புள்ளத்தைக்
காதலர்க்கு கொண்டுபோய்க் காதலிதன்!-
கலங்காத வுள்ளத்தை உந்தன்!
கண்ணிலே வைத்து. நெஞ்சினில் இருத்திக்
காதல்தான் பேரின்பமென்றுக் காட்டுநீயே!

வண்ணமலராளே! வான் நிலவாளே ! மண்மணத்தால் சிந்தைகுளிர்வாளே!காதலன்பு எண்ணசிறகாளே! நெஞ்சில் பறந்தாளே! இன்முகத்தால் கலந்திடுவாளே

சிற்றிடையாளே! பேரின்பத் தேன்மொழியாளே! மென்முறுவல்
பொற்கொடியாளே! -அசைந்திடும்
அன்ன நடையாளே! ஆர்த்தெழும் புன்னகையாளே! தென்பாங்கு
முத்தமழையாளே!.மணத்திடும்
வண்ணமலராளே! வான் நிலவாளே ! மண்மணத்தால்
சிந்தைகுளிர்வாளே!காதலன்பு
எண்ணசிறகாளே! நெஞ்சில் பறந்தாளே! இன்முகத்தால்
கலந்திடுவாளே!

தினம்தினமும் நாமே திகட்டாமலே தேன்கவிதையாகவே!- நாமே இல்லறத்தை நல்லறமாய்ப் படிப்போமா?

தினம்தினமும் நாமே திகட்டாமலே!
தேன்கவிதையாகவே இல்லறத்தை - நாமே
நல்லறமாய்ப் படிப்போமா?
ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றியே !
உயிரில் உயிராய் இருவரும் ஆகியே!
ஓராயிரம் இலக்கியங்கள் தந்த புத்தகமாய் -காதலன்பினையே!
ஒருவருள் ஒருவராகி பகுத்து அறிவான கருத்துக்களையே!
தினம்தினமும் நாமே திகட்டாமலே
தேன்கவிதையாகவே!- நாமே
இல்லறத்தை நல்லறமாய்ப் படிப்போமா?

காதல் முட்டாள் தனத்தினில் ஆரம்பித்து அறிவாளித்தனத்தில் முடிந்தால் சுவையாகுமே! காதல் அறிவாளிக்குணத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிந்தால் அபத்தமே!

காதல் முட்டாள் தனத்தினில் ஆரம்பித்து அறிவாளித்தனத்தில் முடிந்தால் சுவையாகுமே!
காதல் அறிவாளிக்குணத்தில் ஆரம்பித்து முட்டாள்தனத்தில் முடிந்தால் அபத்தமாகுமே!

மன்னவனைத் தன்மனத்தே கொண்டு சின்னவளே நினைத்த தென்ன? சொல்லு? என்னதினம் தினம் கனவிலென்ன கூறு? வண்ண நினைவினில் வந்ததென்ன தோழி?

மன்னவனைத் தன்மனத்தே கொண்டு
சின்னவளே நினைத்த தென்ன? சொல்லு?
என்னதினம் தினம் கனவிலென்ன கூறு?
வண்ண நினைவினில் வந்ததென்ன தோழி?
சொன்ன கதையினில் திருப்பமென்ன தோழி?முத்தமழையினில்
இன்று நனைந்த காட்சியினைக் கூறு?

பூவரைந்த மாசிலாப் பூங்குழலாளே! புன்னகையில் கோடிக்கவிதை சொல்லவந்தாளே!

பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாளே!
புன்னகையில் கோடிக்கவிதை சொல்லவந்தாளே!காதல் தலைவராம்
உற்றவரைக் காணநின்று
ஊசலாடி விட்டாள் உள்ளமே!
உவகையிலே ஒன்றிவிட்ட காதலன்பு பார்வையினாலே!
இறுமாந்து புளங்காகிதம் கொண்டு விட்டாளே!

இன்பக் கடை விரித்திடும் புன்னகை புடைசூழ்ந்திட அசைந்து நின்றிடும் அன்பு ஞானியே

நடை குலுக்கியும் முகம்மினுக்கியும் நகை நகைத்திடும் மன்மத ராணியே!- கண்ணில்
விடை கொடுத்திடும் நெஞ்சில் மடை திறந்திடும் காதல் அற்புத வேணியே!-வண்ண
உடை மின்னிடும் ஒருகுடையினில் இதயத்தை கொண்டு வந்திடும் வாணியே!இன்பக்
கடை விரித்திடும் புன்னகை புடைசூழ்ந்திட அசைந்து நின்றிடும் அன்பு ஞானியே!

பூத்தது புதுமலரே புன்னகை தரும் நிலவே! பார்த்தது கண்குளிர படித்தது காதல் பாடமே!

விண்ணிழந்த!
மின்போலும் தனிமையிலே இனிமையின்றி தவித்தாள் தலைவியே!
அன்னமே நீயுரைத்த அன்னத்தை நான்கண்டேன் தனியாகவே!
முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே!
பொன்மாலை யந்திப் பொழுதே!.
பூத்தது புதுமலரே புன்னகை தரும் நிலவே!
பார்த்தது கண்குளிர படித்தது காதல் பாடமே!

Saturday, October 31, 2009

ற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே பொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா?

பொருள் இல்லார்க்கு இன்பம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு புண்ணியம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லையா?
பொருள் இல்லார்க்கு வாழ்வே தொல்லையா?
பொருள் எல்லாமே ஓரிடத்தில் குவிந்து போனதாலே
பொருள் இல்லாரே தாழ்வுற்று தரித்திரமானாரே!
ஏற்றதாழ்வில்லாத சமதர்ம சமுதாயம் தன்னிலே
பொருள் இல்லாருமில்லை பொருள் இருப்பாருமில்லையடா?

மதன லீலையிலே காதலியர் கடுஞ்சொல்லும் கூட காதலர்க்கு இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே!

இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே!
இளங்காதலி கொஞ்சிடும் தத்தைசொல்லுமே!
காதல் பேரின்ப அன்பில் அன்பு பரிமாறும் போதினிலே!
மதன லீலையிலே காதலியர் கடுஞ்சொல்லும் கூட காதலர்க்கு
இதமுறச் செவிக்கு இன்பம் விளையுமே!

கெட்டமனம்வைத்து சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா!

வஞ்சகமாய்
சொல்லுவார் வார்த்தை கேட்டுத் தோழமை இகழாதே !
உலுத்தர்களின் சொல்கேட்டு ஊருக்குள்ளே மாண்டுதான் போகாதே!= ந்ல்லோர் துணைகொண்டு
அழுது அழுது சொல்கிறவன் உன்வாழ்வினில் அக்கறை கொண்டே- கெட்டமனம்வைத்து
சிரிக்க சிரிக்க பேசுகிறவன் நம்வாழ்வுதனை சீரழிக்கத் தானடா!

வாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா! ஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது உலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா!

வாழ்வது வந்த போது மனம் தனில் மகிழாதே!
தாழ்வது வந்ததானால் சோர்ந்தும் போகாதே! முயற்சியினாலே
வாழ்வினை ஓர் நிலையினில் வைத்து நீயும் வாழ்ந்திடடா!
ஊழ்வினை என்று ஒன்று இல்லையடா பூமியிலே-அது
உலுத்தர்கள் சொல்லிவைத்த புளுத்த புளுகாகுமடா!
விதிதனை எண்ணி வீழ்ந்துபோகாத பகுத்தறிவுகொண்டு தனியுடைமை வெல்லடா!

உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப் பொழுதோர் நாளும் விடியாதோ?!

உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே
பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப்
பொழுதோர் நாளும் விடியாதோ?!
என் கண்ணிரண்டும் உறங்காதே!துன்ப
இரவே என்றும் தொடர்ந்திடுமோ?
தனிமைத் துயரம் தாங்காதே!
இனிமை என்று ஆகிடுமோ?
தலைவனின் வருகையும் தாமதமாகிடும் போதினிலே!
தென்றலும் இதமாய் உசுப்பேற்றும் நிலவும்
தெரிந்தே குளுமையில் கேலிசெய்திடுதே!!
உன்னை நினைத்த போதெல்லாம்!அன்பே
பொங்கும் கடலானேன் ! காதல் அலையெழுந்து என்னெஞ்சம் உறங்காது!- தோழியே!!இன்பப்
பொழுதோர் நாளும் விடியாதோ?!

நினைவினில்! காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் !- நனவாக்க! கடுமுழைப்புக் கொண்டிட நீயும் மறக்காதே!

கானலை நீரென்று !எண்ணிக்
கடுவெளி திரியும் மானாகாதே!-கனவினில்!!!
காதலை இன்பமென்று எண்ணி- நெஞ்சில்
காலமெல்லாம் எரிந்து சாகாதே! - நினைவினில்!
காதலை நெஞ்சினில் இருத்தி நீயும் !- நனவாக்க!
கடுமுழைப்புக் கொண்டிட நீயும் மறக்காதே!

ஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்! நட்பினிலே! உண்மைக் காதல் தோழமையாலே !செழித்திடவைப்போமே!

விண்ணிலே மின்னைப் போலவே!
என்னிலே உன்னைக் காண்பாய்!
உன்னிலே என்னை காண்பேன்!
உன்னையோர் உண்மை கேட்பேன்!- காதலி நீயும் கண்ணிலே கலந்து
நெஞ்சினை உணர்ந்து நினைவினில் இருந்து காதல் பேரின்பமாம்!
அன்பில் நீயும் இணைந்து வாழ்வின் தத்துவத்தின்!
உரை தெளிந்து உரைத்தல் வேண்டும்! ஆணும் பெண்ணும் சமமென்ற கொள்கையிலே நாமும்!
நட்பினிலே!
உண்மைக் காதல் தோழமையாலே !செழித்திடவைப்போமே!

மக்கள் ஜன நாயக புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே!

பசிப்பவருக்கு இட்டு உண்ணாத பாவியாகாதே!-என்றும்
பகிர்ந்துண்ணும் தத்துவத்தை நீயும் மறக்காதே!
கசடனாகவே கணக்கறிந்து பேசாதிருக்காதே
வெட்டிபயதனமாய் ஒரு தொழிலும் இன்றி நீயும் இருக்காதே
சோம்பேறி ஆகவே ஒன்றுக்கும் உதவாது உலகினிலே வாழாதே!
முட்டாளாகவே மரத்தைப் போலவே பெரியோர்கள் சபை நின்று
பேசாமல் இருக்காதே!
பசப்பிக்கொண்டே பரிவு சொல்லித் தழுவிக்கொண்டு திரியாதே!- மக்கள் ஜன நாயக
புரட்சியின்றி மக்கள் நலனில் அக்கறையின்றி இருக்காதே!

கனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்! கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே காலையில் பாடிடும் பூபாளமே! பொன் எழிலே!

மதன காமவல்லியே! மன்மதனின் அழகு தேவதையே! =அடியுந்தன்
வண்டு மொய்த்த அழகுக்கூந்தலடி! =-உந்தன்
வார்குழலினில் ரீங்காரமிடும் வண்டுகளடி
மதன காமவல்லி இன்பத்தின் பேரூற்றே! -ஆற்றின்
கெண்டைபோன்ற கண்ணாளே! கிளிமொழியாளே! உன்செவ்விதழ்
வாயில் ஊறிடும் அன்பு நீரே! அதுவென்ன?=கற்
கண்டு சர்க்கரையோ? தேனோ ?கனியோடு கலந்த தேன்பாகோ?
கனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்!
கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே
காலையில் பாடிடும் பூபாளமே! பொன் எழிலே! பூரணமே! பொன்மாலையே!

நீயும் முகம் கடுத்து இடுவாய் ஆயின் முப்பழ மொடு பால் அன்னம் என்றாலுமே! எப்பசியும் இவ்வுலகினில் தீராதடா!

உலகினிலே உவகையிலே!- நீயும்
முகம் மலர்ந்தே உபசரித்து உண்மை பேசி
உப்பிலாக் கூழ் இட்டாலும்
உண்பதே அமுதமாகுமே! - நீயும்
முகம் கடுத்து இடுவாய் ஆயின்
முப்பழ மொடு பால்ச்சோறு என்றாலுமே!
எப்பசியும் இவ்வுலகினில் தீராதடா!

Friday, October 30, 2009

தேசப் பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா?பயனில்லையடா! .

ஆபத்துக்கு உதவாத பிள்ளை இருந்து என்னடா? பயனில்லையடா!
அரும்பசிக்கு உதவாத அன்னமிருந்து என்னடா?பயனில்லையடா!
தாகத்தைத் தீர்க்காத தண்ணீர்இருந்து என்னடா?பயனில்லையடா!வறுமைத்
தரித்திரம் தீர்க்காத அரசிருந்து என்னடா?பயனில்லையடா!
தனியுடைமை எதிர்க்காத போராளி இருந்து என்னடா?பயனில்லையடா!மக்களே
பொதுவுடைமை தத்துவத்தைப் புரியாதிருந்து என்னடா?பயனில்லையடா!தேசப்
பொதுவாகவே தண்ணீரை மாற்றாத அரசிருந்து என்னடா?பயனில்லையடா!
.

மார்க்சிய போராளியாகிய மோகனின் மார்க்சிய தத்துவத்தின் அடிச்சுவட்டில் நாம் அணிவகுப்போம் !

தமிழ்பாலாவாகிய - நானும், தோழர்.மோகனும் 78,79 களில் மார்க்சீய அனைத்து இயக்கங்களிலும்,சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்று அமைப்பு இருந்தபோது ’வேலை கொடு இல்லை நிவாரணம் கொடு என்று மறியல் செய்து மதுரை ம்த்திய சிறையினில் சுமார் ஒருமாத காலம் அரசியல் கைதியாக இருந்தபோது இருந்த அந்த அரசியல் போராட்டத்தின் மலரும் நினைவுகள் என்கண்ணில் ஒளியாகிறது,அவரது கம்பீரமான பேச்சு,சுறுசுறுப்பு ,திறமை, நேர்மை, எளிமை அர்சியல் தெளிவு,திட்டமிட்ட அரசியல் இலக்கு,மார்க்சீயத்தின் மீது மாறாத காதல் இவையெல்லாம் வரும் தலைமுறை கற்றுத் தேர்ந்து மார்க்சீயத்தை இந்திய மண்ணிற்கேற்றவாறு நிர்மாணிக்க கவனமாக அடியெடுத்து வெல்ல வேண்டிய போராட்ட காலமிது! அவர் விட்டுசெனற பணியை நாமெல்லாம் முன்னெடுத்துசெல்வோம்! இங்குலாப் ஜிந்தா பாத்!

இப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்! சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!

சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!
அத்தியின் மலரினைக் கண்டாலும் வெள்ளை காக்கையை அறிந்தாலும்மன நிலை பாதித்த
பித்தர்தம் மனத்தை நாம் கண்டறிந்து கொண்டாலும் நீரில் பிறந்த மீனின் காலை தானும் தெரிந்து கொண்டாலும்
இப்பிரபஞ்சத்தின் திசைகளை நாம் அறிந்துகொண்டாலும்!
சித்திர விழியார் நெஞ்சம் தெரிந்தவர் இல்லையடா இப்பூமியிலே!

சுதந்திரமில்லாத உலகம் உலகமில்லை இல்லை தந்திகள் இல்லா வீணை வீணையில்லை இல்லை மனித நேயமில்லாத மனிதன் மனிதனில்லை இல்லை அன்பில்லாத பிரபஞ்சம் பிரபஞ்சமில்ல

நிலவில்லாத வானம் வானமில்லை இல்லை
தாமரை இல்லாத பொய்கை பொய்கையில்லை இல்லை
மக்கள் ஜன நாயகம் இல்லாத தேசம் தேசமில்லை இல்லை
சுதந்திரமில்லாத உலகம் உலகமில்லை இல்லை
தந்திகள் இல்லா வீணை வீணையில்லை இல்லை
மனித நேயமில்லாத மனிதன் மனிதனில்லை இல்லை
அன்பில்லாத பிரபஞ்சம் பிரபஞ்சமில்லை இல்லை

மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள் என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!

மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!
அன்னம் பழித்தநடை நடைபயின்று வந்தாள் செங்கமலம் மின்னலை ,கயலை பழித்த விழி விழிப்பார்வை விழித்தொளி தந்தாள் ,அமுதம் பழித்த மொழிகள் தித்திக்க மொழிந்தாள்
இலவம் பஞ்சாய் பெருத்த நெஞ்சில் என்னைச் சாய்த்து அணைத்தாள் கன்னங் கறுத்த குழலாளே என்னை வளைத்துப் போட்டாள் சின்னஞ் சிறுத்த இடைப் பெண்ணே அவள் சிற்றிடையாலே என்னை சுருட்டிவிட்டாள் !
மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்!
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!
சின்னஞ் சிறுக்கியவள் சிங்கார சித்திரையாளே வில்லங்கம் என்ன செய்தாளோ?
வண்ணமலர் பொய்கையிலே பூத்த தாமரை இதழ்விரித்து புன்னகைமுத்தம் தந்தாளோ?
மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!

உலகினில் தேடக்கிடைக்காத பகுத்தறிவு அழகு தேவதையோ? தெருவில் இவள் நின்ற நிலை பேரெழில் எனலாமே!

அருகில் இவளருகில் இவளருகில்
அருகில் வரவர உருகும் என்மனமே தினம்தினமே
கரிய குழல் மேனியவள்
கானமயில் சாயல் அவள்
காணக்கிடைக்காத பொக்கிஷம் அவள் என்னமாய்!
பெரிய நெஞ்சம் இடை சிறிது பேதை இவள் ஐயோ
என்ன அழகோ?
என்ன இனிமையோ?
என்ன இளமையோ?
என்ன அறிவோ?
உலகினில்
தேடக்கிடைக்காத பகுத்தறிவு அழகு தேவதையோ?
தெருவில் இவள் நின்ற நிலை பேரெழில் எனலாமே!

காதலினாலே! இந்த உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே!

.கலகமே செய்யும் காதலியின்
கண் இதுவே எனக்காதலனே!
மலர் அம்பு ஐந்தையும் வைத்து மன்மதனையே
வணங்கினானே!காதலினாலே! இந்த
உலகமே செய்யும் மாமாயமென்னடி தோழியே!

Thursday, October 29, 2009

காதலி உன்னை நினைத்த போதெல்லாம் அலை பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி

காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!=மின்மினி
விளக்கும் நம்மில் சாட்சியாய் ஆனதடி!
நிலவும் உறங்கும்
நீள்வானும் உறங்கும்
தென்றல் உறங்கும்
தெருவும் ஊரும் உறங்கும்
உலகும் உறங்கும் ஏன் இந்த பிரபஞ்சமும் உறங்கும்-
இரவும்கூட இங்கும் அங்கும்
எங்கும் உறங்கும் உன்கண்ணிரண்டும்
என் கண்ணிரண்டும் உறங்காதே.
நம் நெஞ்சிரண்டும் என்றும் உறங்காதே!காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் -அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!
காதலி
உன்னை நினைத்த போதெல்லாம் அலை
பொங்கும் கடலும் உறங்காது இரவே என்னாளும் தொடருதடி
பொழுதோர் நாளும் விடியாது தனிமையாம் இருட்டில் என்னை வாட்டுதடி
விடியலும் நமக்கு தூரமாய் போனதடி!

வண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ! அன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே!

பொன்னின் மணி கிண்கிணி சத்தத்தில் அலறுதடி!
சிலம்பொலி புலம்புதடி சிரிப்பும் சில்லறைச் சிதறலாகவே!
மின்னு மணி மேகலைகள் இளந்தென்றல் காற்றினூடே!
மெல்லென ஒலிக்குதடி மின்னிடை இசைத்ததடி!
வண்ணமலர் கொண்டு சின்னஞ்சிறு தோழியர்கள் புடை சூழ!
அன்னமவள் வண்ணமயில் போல ஆடிவந்தாள் இளமாலையே!

நாய்வாலை தீட்டினாலும் நற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ?

நாய்வாலை தீட்டினாலும்
நற்றமிழை எழுதும் எழுத் தாணி ஆகுமோ?
நல்லதமிழ் உணர்வில்லாத கடையனை தமிழ் இன உணர்வு கொள்ளென்று சொன்னாலும் தாய்மொழிப்
பற்று என்பது அவனுக்கு வந்திடுமோ?தமிழினம் அழிவதைத் தடுத்து அவனும் நிறுத்திடுவானோ?

'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப் படர்ந்ததே கூறும் காதல் முகம்'.

கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்
படர்ந்ததே கூறும் காதல் முகம்'
பனியால் குளம்நிறைதல் இல்லையடி'.=வெற்றுப் பார்வையாலே
பழகிடும் நெஞ்சினில் காதலும் தோன்றாதடி!
'கணையினுந் கூரிய ஆயுதமாகிடும் கண்ணடி'.உள்ளம் முழுவதும் தொட்டுப்
படர்ந்ததே கூறும் காதல் முகம்'.
நெஞ்சின் உள்ளக் கருத்தினை
நித்தம் உரைத்து நேரத்தை நினையாது கனவினில் நினைவினைக் கலந்ததே!

விண்ணெங்கும் கல்வி ஞாயிற்றைக் கைம்மறைப்பார் இல்லையடா!'. கல்தேயும் தேயாது கற்றசொல்லடா!'

'கற்றலின் கேட்டலே நன்று'.-செவிகாணும்
கோடிக்கோடி அறிவாம் கல்வியின் பயனே
விண்ணெங்கும் கல்வி
ஞாயிற்றைக் கையாலே மறைப்பார் இல்லையடா!'.
கல்தேயும் தேயாது கற்றசொல்லடா!'.

கைம்மாறு வேண்டாது நன்மை செய்கின்ற மழையே மாரியே

கைம்மாறு வேண்டாது நன்மை செய்கின்ற மழையே மாரியே-உனக்கே திரும்ப
இந்த உலகமும்,மக்களும் என்னதான் நன்மையே செய்திடத்தான் போகின்றோமோ?

செவியிற் சுவையுணராமலே வாயுணர்விலே மனித உருவிலே நடமாடும் பிணங்களே!

செவியிற் சுவையுணராமலே வாயுணர்விலே மனித உருவிலே
நடமாடும் பிணங்களே! நீங்கள்
வாழ்ந்தும் என்ன? வழக்கொழிந்து போனாலும் என்ன?
இருந்தும் என்ன? இல்லாமல் போனால் என்ன?
பிறந்தும் என்ன? இறந்துதான் போனாலும் என்ன?

எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!

எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு
கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!
விழியின்பேனோ?தமிழ்மொழியென்பேனோ? அறிவென்பேனோ?
அழகென்பேனோ? இன்பமென்பேனோ? உயிரென்பேனோ?= மனித நேய
அன்பென்பேனோ? பண்பென்பேனோ?.
எண்ணென்பனோ? ஏனை எழுத்தென்பனோ?உன்னிரண்டு
கண்ணென்பனோ?வாழும் உயிர் நாளெல்லாமே கல்விக்கே முதலிடம் தருவேனே!

இறப்பே உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே உறங்கி விழிப்பது போலாகுமடா

இறப்பே
உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே
உறங்கி
விழிப்பது போலாகுமடா
நில்லாத வற்றை நிலையானது என்றுணரும்
நிலையில்லாத நெஞ்சம் நமக்கு வேண்டாமே! மனிதனே
ஒருபொழுதும் வாழ்வது அறியாமலே எண்ணுவது கோடி
கோடியும் அல்ல பலவாகுமடா! இறப்பே
உறங்கு வதுபோலாகுமடா -பிறப்பே
உறங்கி
விழிப்பது போலாகுமடா

நான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு உண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே!

வாய்மை என்பது இதுதானடா!
யாதொன்றும்
தீமை இல்லாதது சொல்லிடவே வேண்டுமடா!-
வாய்மை என்பது இதுதானடா!
பொய்மையும் வாய்மைதனிலே கலந்துவிட்டால் தன்குறைதீர்ந்து
நன்மை பயக்கும் உலகிலடா! நான்கண்ட உண்மையிலெல்லாமே வாய்மையைப் போலவொரு
உண்மைதனை எங்கும் நான் கண்டதில்லையே!

செய்திடுவாய் செய்திடுவாய் செய்வதனைத்தும் நல்லவையாகவே செய்திடுவாய் செய்திடுவாய்

சொல்லாதே சொல்லாதே!
பெரும்பயன் இல்லாத சொல்லினையே
சொல்லாதே சொல்லாதே!
செய்யாதே செய்யாதே!
ஒருபயனும் இல்லாத செயலினையே !
செய்யாதே செய்யாதே!
சொல்லிடுவாய் சொல்லிடுவாய் சொல்லனைத்தும் பயனுடையதாகவே
சொல்லிடுவாய் சொல்லிடுவாய்
செய்திடுவாய் செய்திடுவாய் செய்வதனைத்தும் நல்லவையாகவே
செய்திடுவாய் செய்திடுவாய்
சொல்லாதே சொல்லாதே பயனில்லாத சொல்லினையே.!
சொல்லாதே சொல்லாதே !

உதவிசெய்யும் மனப்பான்மை உயர்வாக்கும் உலகமடா!-பொது நல உதவி என்றும் மக்களுக்கு நன்மை தரும் மகத்தானது அல்லவா?

நல்லோரின் நன்மை கடலினும் பெரிதாகுமடா. நல்லோர்கள்
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும் ஆற்றல் அரிதாகுமடா!.
உதவிசெய்யும் மனப்பான்மை உயர்வாக்கும் உலகமடா!-பொது நல
உதவி என்றும் மக்களுக்கு நன்மை தரும் மகத்தானது அல்லவா?

இனிப்பாக பேசிடும் வல்லமை கொள்ளடா! இனிமையாக பழகிடும் தோழமை பாரடா!

நல்லவை
நாடி இனியது சொல்லடா!இன்.
முகத்தாலே அமர்ந்துஇனிது நோக்கடா! அகத்தாலே
இன்சொல்லினிதே அறமே ஆகுமடா!
இனிப்பாக பேசிடும் வல்லமை கொள்ளடா!
இனிமையாக பழகிடும் தோழமை பாரடா!

அன்பின் வழியது உயிர்நிலையாகும்! அதுவே உலகின் உயர் நிலையாகும்! அன்பு அகத்தில்லாத உயிர்வாழ்க்கை! இருந்தும் இல்லாத பொய்வாழ்க்கை!

அன்பின் வழியது உயிர்நிலையாகும்!
அதுவே உலகின் உயர் நிலையாகும்!
அன்பு அகத்தில்லாத உயிர்வாழ்க்கை!
இருந்தும் இல்லாத பொய்வாழ்க்கை!
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழே!
அன்பின்றி எந்த உயிரும் உயிரல்ல!
அன்பின்றி எந்த மனிதனும் மனிதனல்ல!
அன்பில்லாத உலகமும் உலகல்ல!
அன்பின் வழியது உயிர்நிலையாகும்!
அதுவே உலகின் உயர் நிலையாகும்!

வாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே

அவளே!
ஒழுக்க
நெறிநின்றாள் நீடுவாழ்வாள்!. நாமும்
அவ்வழியே பண்போடு பழகிடவே வேண்டுமே!
கற்பு நெறி என்றால் இருவருக்கும் பொதுவென்றுரைப்போமே!
தோழமை உணர்வினிலே உறவாடும் பக்குவத்தினிலே!
அவளின்
சொற்கேட்டேன் இன்பம் செவிக்கு வீணை இசையும் இனிதில்லையே!
குழலும் இனிதில்லையே யாழும் இனிதில்லையே!
குமரியவள் சொல்லினிதே -புன்னகையவளின்
குவளைமலர் சிரிப்பினிதே!
வாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே!

பொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடி!பேரெழிலே! எங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்!

விண்இன்று பொய்த்தாலே மண்கூட பொய்க்காதோ நெஞ்சினிலே இருந்து
கண் நின்று நீயும் பொய்த்தாலே காதலும் பொய்யாகாதோ?
எண்ணாத எண்ணமெல்லாமே எண்ணிவிட வைத்தாயே- நினைத்தோறும்
இல்லாத கற்பனையையே ஏன் நீயும் வளர்த்துவிட்டாயோ?
பொல்லாத மனசுமட்டும் எங்கெங்கோ சுற்றிசுற்றி வருகுதடி!பேரெழிலே!மனதே
எங்கு நீ சுற்றிவந்த போதிலுமே இந்தமண்ணுக்குத் தானே வரவேணும்!

தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ? தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?

வான்நின்று உலகம் வளமான மழைதனையே வழங்கி வருகுதே!
தான்அமிழ்தம் என்றுணர்ந்து மக்களுள்ளமும் பேரின்பம் கொண்டு பெருகுதே!மழைதனையே
தேன் என்பதோ? தெவிட்டாத அமுதென்பதோ?
தினந்தோறும் படியளக்கும் மாரியென்பதோ?

Sunday, October 25, 2009

இன்குழ லூதும் பொழுதே!. கார்வானம் மெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே!

இன்குழ லூதும் பொழுதே!.
கார்வானம்
மெல்லவுந் தோன்றும் இளமாலைப் பொழுதே! நறுமண மலரெல்லாம்
புவியெங்கும் பூத்தன தோன்றி சிலமொழி பேசி சின்னஞ்சிறு சாரலாக
தூதொடு வந்த மழையே!
எழில்வானம்
நின்று மிரங்கிடும் இவளுக்கு தேன்மழைச் சுவையாகவே மண்ணெல்லாம் வளஞ்சேர்க்கும்
நல்விருந் தாக நமக்கே!

உள்ளம் ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே?-அன்பு உயிரும் கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே? கோடிக்கால பயிரான காதல் துணையுள்ள போதே!

சங்கு
சுட்டாலும் வெண்மை தருமே!
பொன்னை அடித்தாலும் ஒளியாகுமே!எந்த?
உலகே
பழித்தாலும் காதல் உயர்வாகுமே! பண்பு
உள்ளம்
ஒன்றுபட்டால் ஏது தடையிங்கே?-அன்பு
உயிரும்
கலந்துவிட்டால் எதுதான் எல்லையிங்கே?
கோடிக்கால
பயிரான காதல் துணையுள்ள போதே!

நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில் நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!

நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில்
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!
நீ பிரிந்து போனால் நான் எங்கு போவேனோ?
அலையில் மிதக்கும் துரும்பாய் நானும் ஆனேனே!-கண்
வலையில் என்னை சிக்கிடவைத்தாயே என் துணையே!
மலையில் இருந்து வீழும் அருவியாயே நானும் வீழ்கின்றேனே!
ஊடலென்றால் சரிதாண்டி கூடலுக்கு அதுவும் துணைதாண்டி-அன்புத்
தேடலிலே சுகந்தாண்டி தேடலிலே இன்பமும் சுவைதாண்டி
ஓடிவந்தேன் உனைத்தேடி ஒதுங்கி நீயும் போகாதேடி!-காதலினிமை
பாடிவந்தேன் நினை நாடி பதுங்கும் புலியாய் ஆகாதேடி
நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில்
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!

.

அந்தியில் மறைந்த இளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்!

காலையில் தொலைந்த
என் கனவை மீண்டும் இரவினில் தேடினேன்!
அந்தியில் மறைந்த
இளந்தென்றலை பின்னும் மாலையில் தேடினேன்!
இரவினில் தொலைத்த நனவினை நானும் திரும்ப பகலினில் நாடினேன்!
நனவினில் போன இன்பத்தை கனவினில் பெற்றேன்!
நனவினில் கண்ட துன்பத்தை கனவினில் துறந்தேன்!

இனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில் இன்பம் கண்டிடுவோம் என் சகியே!

இனி என் தனிமை தீர்ந்திடும் வரையினிலே உன்னோடு நானும்
பேசிக்கொண்டிருப்பேன் என்காதலியே!
இனி உன் இனிமை கலந்திடும் வரையினிலே என்னோடு நீயும்
உறவு கொண்டிடுவாய் என் தோழியே!
இனி நம் துன்பம் போயிடும் நிலைவரையினிலே நம்மோடு அன்பினில்
இன்பம் கண்டிடுவோம் என் சகியே!

நில்லாது ஒலித்திருக்கும் நீரருவியோ?- நறுமணம் நீடித்து நிற்கும் வண்ணமலரோ?

நினைவில் மயங்கியிருந்த நீரோடையோ?மவுனமாய்
நித்தமும் இசைமொழிந்த தேன்குயிலோ?
நில்லாது ஒலித்திருக்கும் நீரருவியோ?- நறுமணம்
நீடித்து நிற்கும் வண்ணமலரோ?

அந்த குயிலோசை உணவுக்கான தேடுதலோடு விடிகாலையில் பறந்துபோனது அந்த வறுமைப் புலம்பல்கள் காலை அவசரத்தில் கடமைச் சராசரியில் கழிந்துபோனது!

அந்த‌ப் ப‌னிம‌ழை.
வெப்பத்தைப் ப‌ருகிக் கொண்டே -- கண்ணீர் வற்றி
வேதனையில் க‌ரைந்து போன‌து!
அந்த இளமாலைப் பொழுது
இரவினைத் துணையாக்கியே--தன் நிறம் மங்கி
இருட்டினில் மறைந்து போனது!
அந்த வெண்ணிலவு
ஆதவனுடன் பேசிக்கொண்டே
பகலினில் ஒளிந்து கொண்டது!
அந்த இளந்தென்றல்
மழையோடு தோழமை கொண்டே
மழைததூரலிலே சங்கமித்துக் கொண்டது!
அந்த குயிலோசை
உணவுக்கான தேடுதலோடு
விடிகாலையில் பறந்துபோனது
அந்த வறுமைப் புலம்பல்கள்
காலை அவசரத்தில்
கடமைச் சராசரியில் கழிந்துபோனது!

Friday, October 23, 2009

!வர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்!

வானத்தில் உமிழ்ந்தால் உன்முகத்தினில் தானே அதுவீழும்= வீணர்களுடன்!
வமபளந்தால் உன்வாழ்வினில் துன்பம்தானே என்றுமே தொடர்கதையாகும்!-மூட
விதிதனை நீ நம்பும்வரையினில் இவ்வுலகினில் துயரம்தானே வாழ்வின்மிச்சமாகும்!
வர்க்கப்போரினில் நீயும் போராளியாய் ஆகிடும்வரையினில் விழலுக்கு இரைத்தநீராகிடுவாய்!

அன்பினைத் தேடும் மனிதர்களே! உண்மையான நண்பர்கள் உங்களுக்குள் நட்பிற்கு இலக்கணமாய் இருப்பார்களே!

அறிவைத் தேடும் மானுடமே !உங்களுக்கு
அதிஷ்டத்தின்
தேவதைகள் தங்களுடைய சிறகை வளைத்துக் கொடுப்பார்களே!
அன்பினைத் தேடும் மனிதர்களே! உண்மையான
நண்பர்கள் உங்களுக்குள் நட்பிற்கு இலக்கணமாய் இருப்பார்களே!

கார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது?

கார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது?
கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு ?
களமிறங்கிப் பெய்யும்?
என்று எவருக்குமே தெரியாது
!கருவுற்ற தாய்க்கு கரு எப்போது சூல்கொண்டு
கருவுற்று தாயின் மடியில் சேய் தவழும்?என்று எவருக்குமே தெரியாது
அடை மழையோ? அடைத்த கதவு திறக்காத மழையோ?
ஐப்பசி மாதத்து அடைமழையோ?
கார்த்திகை மாதத்து கனமழையோ?
கோடைகாலத்தின் அந்திமழையோ இரவுமுழுவதும் பெய்யும் மழையோ?
பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் கண்ணம்மா!
இறங்குன மழை இருந்து பெய்யும்
ஏறுனமழை ஓடிப்போகுமடி பொன்னம்மா!
இப்போ காலத்தில் ஏன் மழையில்லை சின்னம்மா?

Tuesday, October 20, 2009

நினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும் அனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன்

நினைத்தோறும் காண்தோறும் பேசுந்தோறும் எப்போதும்
அனைத்துகாலமும் உன்னையெண்ணி ஆனந்தத் தேன் சொரியும் காதலின்பமே!
தினையளவு கண்பார்வை காட்டி வானளவு கனவுகாணவைக்கும் காதலியே!
எனையாளும் அன்புதேவி என்னாளும் மறவாத மந்திரத்தை நீ தந்தாயோ?

வெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி வீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்!

கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் -பகுத்தறிவாலே
வாழ்கின்றாய் தாழாத நெஞ்சமே காதல் கடலினில்- நீயேன்
ஆழ்கின்றாய் தனியுடைமை வஞ்சகரின் துன்பத்தாலே துயரத்தில் -ஏன் தானோ?
சூழ்கின்றாய் வெற்றிக்கு அடியெடுத்து தோல்வியிலே தடுக்கி
வீழ்கின்றாய் இருந்தும் நீ எழுந்துதான் நடக்கின்றாய்!

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே!-பகுத்தறிவே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !

எண்ணுதற்கு எட்டாத எழிலும் ஆனவளே என்காதலியே!எனதினிய தோழியே துணையே இணையே !அணையே !மனையே! மாண்பான நல்லறத்தின் விடிவிளக்கே!
விண் பறந்தும் மண் நிறைந்தும் வாழும் மனிதம் போற்றும் அன்பாலே!,
எண் இறந்த எல்லை கடந்தும் கோடிக்கோடி ஆண்டுகள் வாழும் காதலின்பமே!
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே!-பகுத்தறிவே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !

Monday, October 19, 2009

காதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து காதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே காதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்!

பள்ளி அறையிற் பகலே இருளில்லை!
காலத் திசையிற் கலக்கின்ற சந்தியில்
மெய்ப்பொருள் சொல்லிய மெல்லிய லாளுடன்-அன்பில்லாமலே
போவதொன் றில்லை வருவது தானில்லை-அறிவில்லாமலே
ஆவதொன் றில்லை அழிவது தானில்லை
காதல் வழிசெய்த கண்ணுடன் கண்ணினை வைத்து
காதல் மொழிபேசி நெஞ்சுற நெஞ்சினைக் கலந்து
காதல் விழி நடந்து நங்கை உயிரினில் உயிராகி-அன்பாலே
காதல் சுழிசெய்து வாழ்வினில் உய்ந்திடும் தோழியாகினாள்!

பிறப்பும் இறப்பும் மெய்யாம்! மறுபிறப்பு என்பது பொய்யாம்! இம்மை என்பது உண்மை!மறுமை என்பது பொய்மை!

உள்ளது சொல்வேன் உணர்வுடை யோருக்கே!
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
இன்று இருப்பவருக்கென்ன நிரந்தரம்?
பின்னை வருபவர்க்கென்ன நிச்சயம்?
எண்ணறுங்கோடி வந்தனர் போயினர் !
என்ன மாயம் வந்தவரெல்லாம் எங்கே போயினர்?
பிறப்பும் இறப்பும் மெய்யாம்! மறுபிறப்பு என்பது பொய்யாம்!
இம்மை என்பது உண்மை!மறுமை என்பது பொய்மை!
இருந்தவர் பற்றிய நினைவுகளே! போனவர் பற்றிய கனவுகளே!
இறப்பவர் பற்றிய பீதிகளே! இனி இறப்பவர் பற்றிய யூகங்களே!
இருந்திடும் நாளில் எல்லோரும் ஒற்றுமையில் உயர்ந்திருப்போமே!
எல்லோரும் இன்புற்று வாழும் தத்துவத்தில் உய்ந்திருப்போமே!

வழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே! வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே! எல்லோரும் இன்புற்று பகிர்ந்துண்டு !

விழியல்லால் வேலில்லை கண்மலராம் மாதர்
மேனியல்லால் வில்லில்லை தென் தமிழாம்
மொழியல்லால் மொழியில்லை கனிமொழியாள்
அன்புவழி காதல் பேரின்பமல்லால்
கழியுலகில் கடலில்லை வாழ்வுலகினில்
காரியமே காரணமென்றுரைப்பார் மானுடரே!சுவர்க்கத்தை இம்மையிலே கொண்டுவர தனியுடைமைவீழ்த்திக்
காட்டும் பொதுவுடைமைநல்
வழியெல்லாம் விழிகொண்டு காண்போம் மற்றும் அறிவியலாலே!
வானேறும் வழிகாண்போம் முன்னேறி முன்னேறி மகிழ்ந்திருப்போமே!
எல்லோரும் இன்புற்று பகிர்ந்துண்டு மகிழ்ந்திருப்போமே!

!தான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்!ஆணாதிக்க எதிர்ப்புக் குரலாலே!

கடலமுதத்தைக் கடைந்து சேர்த்த ஆரணங்கே!
அலையற்ற ஆரமுதக்கடலே!, அக்கடலுண்டமுகிலே!
உனக்கு இதமென்று !என்னிதயத்தை கேட்டாயோ?
எனதென்பதும் உனதென்பதுமின்றி
தனதென்றுதன்னையுங்காணாது கண்பார்வையிலே நமதென்று கண்டாயோ?
உறவே நம்முயிர் கலக்கின்ற ஓருயிருண்மையை நீயின்று அறிந்து கொண்டாயோ?
யானென்பதொன்றில்லை! நாமென்று புரிந்து நடந்து வந்தாயோ?
பொய்யான பேர்களின் பொய்யுரையையே!.
நிலையென்று நாடி நிலைநின்ற பொய்ம்மதி நீக்கிவிட்டாயே!
!தான் தனக்கென்றறியாத தன்குணத்தை பொதுநலத்தின்,ஆண்பெண் சமத்துவத்தால்!ஆணாதிக்க எதிர்ப்புக் குரலாலே!தன்சமூக மாற்றத்திற்கான போராட்டத்
தன்நற் குணத்தால் தான்நிறைவாய் தானே கூட்டிவிட்டாயே!
நீதியறியாத, தன்னிலை அறியார்க்கெல்லாம் மக்கள் சக்தி நம்சக்தி,மக்கள் ஜன நாயகம்,
வாழ்நிலையிதுவேயென்று போராளியாகி நன்னிலைசொல்லி இணைத்து சென்றாயே!

யார் இடித்தாங்க? யார் மிதித்தாங்க? யார் மோதினாங்க?

யார் இடித்தாங்க?
யார் மிதித்தாங்க?
யார் மோதினாங்க?
கதவிலதான் தான்முட்டிவிட்டு
கதவிடித்தது என்பாங்க!
கருவேலமுள் மேலதான் மிதித்துவிட்டு
கருவேலமுள் தான் தைத்தது என்பாங்க!
வண்டியிலதான் மோதிவிட்டு
வண்டிதானே மோதியது என்பாங்க!
யார் இடித்தாங்க
?யார் மிதித்தாங்க?
யார் மோதினாங்க?

Sunday, October 18, 2009

அன்பாலே நீ விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது

காதலியே என் தோழியே - உன் கண்ணின் கடைப்பார்வையிலே!
நான்ஏதும்உன்மாயமொன்றறியேன் -அன்பாலே நீ
விழிக்கும்கண்ணிலே உன்கண்பார்வை அல்லாது
வேறொரு கண்பார்த்து என்மனம் தொடராது

நெய்க்குடத்தைப்பற்றி ஏறும்எறும்பினைப் போல் உன்னை
நானே சுற்றிசுற்றி வருகின்ற மந்திரம்தான் என்னடி சகியே!
தனிக்கடலேதனிச்சுடரே தனியுலகேஎன்றென்றும்-என்மனதினில்
உனக்கிடமாயிருக்க என்னைஉனக்கு உரித்தாக்கினையே!

எண்ணற்கரியவளே என்னவளே! வண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதே!காதலனாம் என்னையே! கண்ணுக்கினிமையாக காணவந்தாயோ?

மாலைமணம் கமழ்கின்ற மல்லிகைப்பூச்சூட்டிவந்தவளே!
செண்பகமல்லிகையோடு
வானத்தெழுந்த மழைமுகில்போல் எங்கும்
மின்னேர் நுண்ணிடைவஞ்சமகளே!
அன்பே! உன்னைஅறிந்துகொண்டேன்
எண்ணற்கரியவளே என்னவளே!
வண்ணக்கருங்குழல் மாதே இளமாலைப் பொழுதே!காதலனாம் என்னையே!
கண்ணுக்கினிமையாக காணவந்தாயோ?

உண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே! உன்முத்தமொன்று போதுமடி! மண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி-

கண்ணைக்குளிரக்கலந்துஎங்கும்நோக்கிக்-காதலனுக்காகவே
காத்திருக்கும் காதலியே- உன் காதல்பார்வை கொண்டு என்
எண்ணத்துள்என்றும்இருந்துதித்திக்கும்
தேவதையே இன்னமுதே!
உண்ணக்கனிகள் தந்தாலும் வேண்டாமே பேரழகே!
உன்முத்தமொன்று போதுமடி!
மண்ணைப் பொன்னாக்கும் விதைத்திட்ட விதைகளடி- நாமே
கோடிக்கால பயிரைச் சமைப்போமடி!

Saturday, October 17, 2009

-இவ்வுலகினில் இல்லாமை இல்லாத பொன்னுலகம் இன்னும் உருவாகவில்லையே! மண்ணும் மலையும் கடலும் ஏழுலகும் சுதந்திர சுவாசம் கொண்டிருக்கையிலே மனிதன் மட்டும் மக்கள

வண்ணமாடங்களே வானில் உயர்ந்து நிற்கின்றதே!வறுமையிலே
வாடுகின்ற ஏழ்மையும் மனிதம் தாழ இருக்கின்றதே
முத்துமணியும் வைரமும் நன்பொன்னும் இருந்தென்ன? -இவ்வுலகினில்
இல்லாமை இல்லாத பொன்னுலகம் இன்னும் உருவாகவில்லையே!
மண்ணும் மலையும் கடலும் ஏழுலகும் சுதந்திர சுவாசம் கொண்டிருக்கையிலே
மனிதன் மட்டும் மக்கள்ஜன நாயகம் இன்றி அடிமையாகவே இருக்கலாமா?
மாணிக்கம்கட்டி வயிரம்இடைகட்டி
ஆணிப்பொன்னால்செய்த வண்ணச்சிறுத்தொட்டில் பணக்காரன் வீட்டினிலே
பஞ்ச குடிசையில் பசித்தீயினில் தினம் செத்துமடியுது ஏழைகளின் குச்சினிலே!
செங்கமலப்பூவில் தேனுண்ணும் வண்டேபோல் இயற்கையிலேயே-சுதந்திரமாகவே
எல்லாரும் எல்லாமே பெற்று நலமாகவாழும் உலகத்தையே நாம் உருவாக்குவோம்!

கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே! கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?

கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே!
கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?-சோதி
மலர்ந்த மலர்ச்சுடரே!சுந்தர தமிழே மயக்கமென்பது ஏனடி?- நீராய்
உருக்கி என் ஆருயிராய் ஆனவளே தயக்கமென்பது ஏனடி?
இன்பமும் துன்பமும் இனிமேல் ஒன்றுதானடி!
காண்பதற்கு அரிய பேரொளியே!ஆற்றின்ப வெள்ளமே பேரின்பமே!
கலந்த அன்பு ஆகியே கசிந்து உள்உருகியே!
கனிந்த காதல் வாழ்விலே கலக்கமென்பது ஏனடி?

இமைப்பொழுதும் என்னெஞ்சினில் நீங்காதவளே! பொங்கும் புதுவெள்ளமே! ஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதலியே! மயக்கும் மாலைப் பொழுதே!

இமைப்பொழுதும் என்னெஞ்சினில் நீங்காதவளே!
பொங்கும் புதுவெள்ளமே!
ஆராத இன்பமே அன்பினில் தந்தவளே காதலியே!
மயக்கும் மாலைப் பொழுதே!
எண்ணுதற்கு எட்டாத எழிலே ஆனவளே பேரழகே!
மணக்கும் மல்லிகைப் மலரே!
உன்வாய்முத்தத்திலே கறந்தபாலும் கரும்புச் சாறும்
நெய்யும் கலந்து வாசமே!
என்றென்றும் உன் நேசமே!

Friday, October 16, 2009

தோழமையே நீயும் இல்லாமை இல்லாத உலகினை ஆக்கிட வேண்டும்!

உயிரே நீஅறியா நிலையிருந்து மீண்டிடவேண்டும்!
அறிவே நீயும் அறியாததையே அறிந்திட வேண்டும்!
அன்பே நீஅறிந்ததையே அறியார்க்கு அறிவூட்டிட வேண்டும்!
உள்ளமே உண்மைப் பொருள் உணர்ந்து உலகினில்
மெய்யே நீயும் மக்களுக்கு உணர்த்திட வேண்டும்!
தோழமையே நீயும் இல்லாமை இல்லாத உலகினை ஆக்கிட வேண்டும்!

கயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி- காத்திருந்த காதலனின் நெஞ்சினிலே இன்பமாலை சிரிக்கின்ற பொழுதினிலே கோடிகோடி கவிதைகளே சொல்லியதடி

காதலாம் பொய்கையில் பாய்ந்ததே-காதலியே உனது அன்பாம்
நேசத்தின் புதுப்புனலே!
கயல்வந்ததடி கண்ணியரின் கண்ணிலடி-
காத்திருந்த காதலனின் நெஞ்சினிலே
இன்பமாலை சிரிக்கின்ற பொழுதினிலே
கோடிகோடி கவிதைகளே சொல்லியதடி
மெய்கண்ட அன்பின் ஆரமுதே!என்பாசப் பேரிகையே
காரிகையே கண்முத்தமாலை கலந்தனவே!

பொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின் மெய்முகம் காட்டிடக் கூடாதா?

பொய்முகம் காட்டிப் போறவளே- என்காதலியே நீயெனக்கு உன்காதலின்பின்
மெய்முகம் காட்டிடக் கூடாதா?உன் சிவந்த பொன்மேனி சிலிர்ந்திடக் கண்டேனே!
உன் நுண்ணிடை அசைந்திடப் பார்த்தேனே!குவளைகள் பூத்திருக்கும் குளத்தினிலே
குவியாது விரிந்திருக்கும் செந்தாமரைச் செல்வியே!ஏதோ நேயத்திலே
உன் செவ்வாய் இதழ்கள் துடிப்பதென்ன?அந்தி மாலையின் மயக்கத்தை
என் இதயத்தில் கலந்து படிப்பதென்ன?

Saturday, October 10, 2009

தனிமையிலே இனிமையின்று வாடிய ! தலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே!

அழகியமயில்கள் மகிழவே!
கடல் நீரைக் குடித்து மின்னல் இடியுடன்கூடி கார்மேக!
மழையும் வந்ததே! தலைவனைப் பிரிந்து!
தனிமையிலே இனிமையின்று வாடிய !
தலைவிக்குத் துணையாக கார்மேகமும் வ்ந்ததே!

Friday, October 9, 2009

!என் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்! அரும்பிய மலர்களாலே! கண்களில் தீட்டிய மையாகவே ! காடுகள் சொல்லும் கவிதைகளடி-!அது காதலின் பேரின்ப எல்லையடி!

சென்றதலைவன் இன்று மீண்டும் வந்தான் !
அது பொய்யல்ல மெய்யாகும் தோழி!-
என் காதல் தலைவன் வருகையையே காயாஞ்செடிகளின்!
அரும்பிய மலர்களாலே!
கண்களில் தீட்டிய மையாகவே !
காடுகள் சொல்லும் கவிதைகளடி-!அது
காதலின் பேரின்ப எல்லையடி!

தலைவி நான் ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் ! ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!

தலைவி நான்!
ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் -
தலைவன் அவன் பிரிவாலே
ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!
எழில்வானம் மின்னுதே அவனின் தூது உரைத்தே!
வரி நிறப்பாதிரியும் வாடுதடி இளமணல் குளிர்ந்த காட்டினிலே
ஆலங்கட்டிகள் புரள வானமும் இடி இடித்ததே-தலைவி நான்
ஒருத்திமட்டும் தனிமையிலே வாடுகையில் !
ஓராயிரம் துயர்வந்து சேர்ந்ததே என் தோழியே!

நேற்று என்பது முடிந்த ஒன்றாகும்! நாளை என்பது நமது இலக்காகும்! இன்று என்பது நமது போராட்டமாகும்! தோழமை என்பது நமது உண்மை உறவாகும்!

மோனமென்பது ஞான வரம்பாகும்1
காதலென்பது அன்பின் சிகரமாகும்1
கானமென்பது மகிழ்வின் எல்லையாகும்1
காற்று என்பது உயிரின் மூச்சாகும்!
நேற்று என்பது முடிந்த ஒன்றாகும்!
நாளை என்பது நமது இலக்காகும்!
இன்று என்பது நமது போராட்டமாகும்!
தோழமை என்பது நமது உண்மை உறவாகும்!

நெஞ்சினை ஒளிக்காதே -ஒரு வஞ்சகமே செய்யாதே-அறிவுக் கண்ணினை மறைக்காதே -காதல் பெண்மையில் அமுக்காதே

நெஞ்சினை ஒளிக்காதே -ஒரு
வஞ்சகமே செய்யாதே-அறிவுக்
கண்ணினை மறைக்காதே -காதல்
பெண்மையில் அமுக்காதே-இதழ்முத்த
அமுதினை மூடாதே-உன்னாசை
அழகினுக்கு திரைபோடாதே!-உனது
உள்ளத்தில் உள்ளதை உதட்டிலே கொண்டுவா!
உதடுவரை வராதகாதலே சிதறுண்டு போகுமே!

மனைவி மனையினில் இருக்க மாற்று ஒன்று இல்லையடா-துணையான மனையாளே மனையில்லை என்றாலே வான்கூரை வீழ்ந்தது போலாகுமே!

மனைவி மனையினில் இருக்க மாற்று ஒன்று இல்லையடா-துணையான
மனையாளே மனையில்லை என்றாலே வான்கூரை வீழ்ந்தது போலாகுமே!- ந்ல்ல
மனைவி அமைவதெல்லாம் நல்லறமான இல்லறமாகுமடா!-கணவனும்,ஆண்பெண் சமத்துவத்திலே!
மனைவிக்கு நல்லகணவனாய் அமைந்துவிட்டாலே பேரின்பமாகுமடா!

பொருள் இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே இல்லானை இல்லானை இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா? செல்லாதா ? என்வாயிற்சொல்லே

இல்லானை இல்லானை
இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா?
செல்லாதா ? என்வாயிற்சொல்லே!~
இல்லாளும் வேண்டாளா? பெற்றெடுத்த தாயும் வேண்டாளா?-
பொருள்
இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே
இல்லானை இல்லானை
இல்லானை-பொருள் இல்லானை எல்லோரும் வேண்டாரா?
செல்லாதா ? என்வாயிற்சொல்லே!-பொருள்
இல்லாத உலகத்தை, பொதுவுடைமை வசந்தத்தை படைக்கின்ற வரையினிலே!

மனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போல! மண்ணில் வாழும் வரையில் சமத்துவமாய் -இருந்து இனிதாக வாழும்கலை அறிந்திட வேணுமே-எல்லோரும் இன்புற்று இருப்ப்து அல்லாமலே

மனிதகுல வாழ்க்கை மண்ணின் கலம்போல!
மண்ணில் வாழும் வரையில் சமத்துவமாய் -இருந்து
இனிதாக வாழும்கலை அறிந்திட வேணுமே-எல்லோரும்
இன்புற்று இருப்ப்து அல்லாமலே நாமே
வேறொன்றும் அறியாதே வாழ்ந்திடவேணுமே

ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் - அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!

ஒன்று நினைக்க ஒன்று நடக்கும் உலகினிலே-
ஒன்றை நினையாத போதினில் ஒன்று நடக்கும் இந்த மண்ணிலே
ஒன்றை நினைத்து நிலையாய் சிந்தித்தால் -
அதையும் செயலாய் கொண்டால் அந்த ஒன்றே
ஒன்று நமக்கே உரித்தாய் கிட்டும் உண்மையிலே!

Tuesday, October 6, 2009

ஆரறிவார் ஆரறிவார் நீதிவழி ஆரறிவாரோ? ஆரறிவார் ஆரறிவார் நேர்மைவிழி ஆரறிவாரோ? ஆரறிவார் ஆரறிவார் சத்தியஒளி ஆரறிவாரோ? ஆரறிவார் ஆரறிவார் நியாயமொழி ஆர

ஆரறிவார் ஆரறிவார் நீதிவழி ஆரறிவாரோ?
ஆரறிவார் ஆரறிவார் நேர்மைவிழி ஆரறிவாரோ?
ஆரறிவார் ஆரறிவார் சத்தியஒளி ஆரறிவாரோ?
ஆரறிவார் ஆரறிவார் நியாயமொழி ஆரறிவாரோ?- நல்லோராம்
ஆரோ அவர்வழி நடந்தால் -இம்மையிலேயே
இவ்வுலகெல்லாம் பேரின்பமே!

என்னுயிர்க் காதலியே என்னுலக தேவதையே எனக்குள் உனைக்கலந்து உன்னையே என்னாளுமே நினைத்திடவே வரமெனக்குத்தா நானும் எத்தனையுகம் தான் உனை எண்ணியே தினந்தோறும்

என்னுயிர்க் காதலியே என்னுலக தேவதையே
எனக்குள் உனைக்கலந்து உன்னையே என்னாளுமே
நினைத்திடவே வரமெனக்குத்தா நானும்
எத்தனையுகம் தான் உனை எண்ணியே
தினந்தோறும் இந்த இனபக் காதல் தவமே!

நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே! என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே! நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே! எப்பாடல்

நின்பாடல் என்று நீயும் நினைப்பாடல் இல்லாமலே!
என்பாடல் என்று நானும் கனவொன்றும் கொள்ளாமலே!
நம்பாடல் என்று நாமும் நனவொன்றில் வாழ்ந்திருப்போமே!
எப்பாடல் என்று ஆனாலும் மனிதம் போற்றியுயர்ந்திடுவோமே!

Saturday, October 3, 2009

வாழ்க்கை ஒரு சின்னஞ்சிறு தீபமல்ல! வாழ்க்கை அது அதி அற்புதமானதொரு தீப்பந்தம்-!

வாழ்க்கை ஒரு சின்னஞ்சிறு தீபமல்ல!
வாழ்க்கை அது அதி அற்புதமானதொரு தீப்பந்தம்-! நம்வாழ்வினிலே
வளமாகவே வாழ்ந்து வரும்தலைமுறைக்கு பிரகாசமாகவே தானளிக்க
வேண்டுமென்பார் எம் அறிஞர் பெர்னாட்ஷாவே!
மனிதவாழ்க்கையே மதிப்புமிக்கதே நம்குறைதனையே!
மனிதவாழ்விலே ஒருகுறையாகவே எண்ணாமலே !- நம்
உள்ளத்திலே உறுதி இருந்தாலே நாமே எதையுமே சாதிக்கலாமே!

மூன்று நிமிடம் நீயும் சரியாக சிந்தித்துப்பார்த்து தெளிவுடன் நடந்தால் முப்பது ஆண்டுகள் மகிழ்வோடு வாழலாமே!

மூன்று நிமிடம் நீயும் சரியாக சிந்தித்துப்பார்த்து தெளிவுடன் நடந்தால்
முப்பது ஆண்டுகள் மகிழ்வோடு வாழலாமே! விரக்தியான தாழ்வு மன நிலையை நீயும்
மாற்றிக்கொள்வதின் மூலமாகவே வாழ்க்கைப் பாதையை செம்மையாகவே
மாற்றிகொண்டு வெற்றிக் கனிதனையே பறிக்கலாமே!
மன நிலையை ஒரு கட்டுப்பாட்டினில் நீயும் வைத்திருந்தாலே !
எந்த தாழ்வுமே எல்லாம் சரியாகிவிடுமே உலகத்திலே!

வாழும் கலையெழுத்தாய் ஆகிடுமன்றோ?

நிலையின்றி தவிக்கும் உள்ளங்களே!
நிம்மதியில்லாத மனிதர்களே!
அமைதியிழந்த மானுடமே!- நீயும்
தலையெழுத்து இது தானென்று தனக்குள்ளே முடிவெடுத்து
நிலை தடுமாறி வாழ்க்கை வாழ்ந்து
விரக்தியிலே வெந்துபோகாமலே -வாழ்வுதனை
வெறுத்து வழிதெரியாமல் வாடுகின்ற நிலைவிட்டு
தன்னம்பிக்கைகு மறுபெயர்தான் வாழும் தலையெழுத்தென்று
தனக்குத் தானே தானும் உணர்ந்துவிட்டாலே நீசொல்லும்
தலையெழுத்தே வாழும் கலையெழுத்தாய் ஆகிடுமன்றோ?

Thursday, October 1, 2009

காண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்! கண்ணில் உலகத்தை காணவந்தேன்!

காண உலகங்கள் போதாதென்று-காதலியே உன்!
கண்ணில் உலகத்தை காணவந்தேன்!
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே!
அன்பினில் விளைந்த ஆரமுதே-இம்மையே உன்னையே
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே
அத்தனே ஆனனே சித்தமே போனனே உன்னாலே!
பித்தனே ஆனனே எத்தனை காலமே -உன் நெஞ்சினில்!
சிக்கிடும் கோலமே நானுனைத் தொடர்ந்து
சிக்கெனபிடித்தேன் சிக்கெனப் பிடித்தேன் இடைவிடாது உன்னையே!

உள் உருகும் காதலன்பே! இன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே!

இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதவளே!-எனக்குள்
உனக்குள் கலந்த அன்பும் ஆகிக் கசிந்து உள் உருகும் காதலன்பே!
இன்பப் பெருக்கே இனிய உலகே இளமாலைப் பொழுதே!
உலாவரும் இளந்தென்றலே உண்மையான மெய்ஞானமே!

Wednesday, September 30, 2009

நித்தமும் போனால் முத்தமும் சலிக்கும்! அளவுக்கு அதிகம் அமுதமும் கசக்கும்!

நித்தமும் போனால் முத்தமும் சலிக்கும்!
அளவுக்கு அதிகம் அமுதமும் கசக்கும்!
சித்தத்தில் ஏற்றா தத்துவம் புளிக்கும் !
-தத்துவம் இல்லாத நடைமுறை முடக்கும்!
பந்தத்தில் இல்லாத பாசம் முறைக்கும்!
பருவத்தில் விதைக்காத விதையும் அழுகும்!
சொந்தம் என்று சுற்றம் வருத்தும்!
அறிவால் உணர்ந்திடின் எதுவும் இனிக்கும்!

சுகம் துக்கம் சுழல்சக்கரம் நாமெல்லாமே சூழ் நிலைக் கைதிகளேஆன்லைன் வர்த்தகமே மக்களைக் கொல்கின்றதே! ஆன்லைன் வர்த்தகமே பெருமுதலாளிகள் நடத்துகின்ற சூதாட்டம

சுகம் துக்கம் சுழல்சக்கரம் நாமெல்லாமே
சூழ் நிலைக் கைதிகளே
சொந்தம் பந்தம் சுற்றம் உறவுகளே எல்லாமே
காசாலே நிர்ணயிக்கும் சந்தைப் பொருளாதாரமல்லவா?
முன்பேர வர்த்தகமாய், யூக வர்த்தகமாய்,ஆன்லைன் வர்த்தகமாய்,
மூடுமந்திரமாய் பொருளாதாரமே போனதாலே-வசந்தமே
வாழும் மக்களுக்கே எட்டாத கனியாக ஆனதாலே!
ஏறுதுவிலைகள் எல்லாமே வானத்தில் பறக்குது தன்னாலே!
ஆன்லைன் வர்த்தகமே மக்களைக் கொல்கின்றதே!
ஆன்லைன் வர்த்தகமே பெருமுதலாளிகள் நடத்துகின்ற சூதாட்டமே!
இந்த சூதாட்டத்தில் வாழ்வாதாரம் இழத்தவர் இந்திய தேச மக்களே!

மக்கள் ஜன நாயகத்தை மதிக்காட்டி பண நாயக ரவுடிகளே உங்கள மக்கள் சக்தி தூக்கி எறிஞ்சுடுண்டா

கணக்கைக் கணக்கன் தின்னாட்டி !
கணக்கு கணக்கனை தின்னுடுண்டா!-மக்கள் ஜன நாயகத்தை
மதிக்காட்டி பண நாயக ரவுடிகளே உங்கள மக்கள் சக்தி தூக்கி எறிஞ்சுடுண்டா!
மனித நேய அன்பாலே மனிதரை மனிதர் மதிக்குற அரசாங்கம் இந்த
மா நிலத்தில் உருவாக எண்ணமின்றி நீங்களும் தூங்காதீங்க!
மக்கள்சக்தி மாபெரும் சக்தியுனு உணராமலே சும்மா இருக்காதீங்க!

’மன்றம் மணக்கும் இளந்தென்றலே! மனதை மயக்கும் அந்தி நிலவே!

’மன்றம் மணக்கும் இளந்தென்றலே!
மனதை மயக்கும் அந்தி நிலவே!
நினைத்தால் இனிக்கும் காதலன்பே!
நெஞ்சில் திளைக்கும் பேரின்பமே!

காசுக்குத்தான் ஓட்டையே விலைக்கு வாங்குறான்! கண்ணாடி அறையில இருந்து கயமைத்தனம் பண்ணுறான்!

கையில பிடிக்கிறான் துளசிமாலையே!-அவன்
கக்கத்தில இருக்குது கன்னக்கோலே!
உதட்டுல ஒண்ணு வைக்குறான் !
உள்ளத்துல ஒண்ணு நினைக்குறான்
காவியைத்தான் கட்டுறான் கன்னிப்பொண்ணுக !
கற்பத்தான் பறிக்குறான் நல்லவனப் போலவே பாசாங்கு பண்ணுறான்!
காசுக்குத்தான் ஓட்டையே விலைக்கு வாங்குறான்!
கண்ணாடி அறையில இருந்து கயமைத்தனம் பண்ணுறான்!

விடியும் காலம் மட்டும் காதலின்பம் கொண்டு நாமும் உறவாடலாமே!

கள்ளனே காதலனே நீயும் தோட்டக்காரி நானும் சேர்ந்ததினாலே-விடியும்
காலம் மட்டும் காதலின்பம் கொண்டு நாமும் உறவாடலாமே!
கள்ளியே காதலியே நீயும் தோட்டக்காரன் நானும் சேர்ந்ததினாலே-விடியும்
காலம் மட்டும் வாழ்வின்பம் கொண்டு நாமும் சிறகடிப்போமே!

தைரியத்தை கடைசிவரை விடாத மானுடமே தோல்வியினை சந்திப்பதில்லை!

கல்லடிச் சித்தன் போனவழி !
காடுமேடெல்லாம் தவிடுபொடி!
துணிந்து நடந்தவனுக்கு சமுத்திரமும் முழங்காலடா!-தன்னம்பிக்கை முகமூடி
அணிந்த மனிதனுக்கு எந்த எதிர்ப்பையும் தாங்கிடும் சக்தி வந்திடுமே!
தைரியத்தை கடைசிவரை விடாத மானுடமே தோல்வியினை சந்திப்பதில்லை!

ஒன்று பாசம் ஒன்று வேசமாகுமே!

ஓர் ஊர்பேச்சு ஒரு ஊரின் ஏச்சு!
ஒன்றுக்கு பொருந்தும் ஒன்றுக்கு பொருந்தாது!
ஒன்றைப் பிடிக்கும் ஒன்றுக்குப் பிடிக்காது!
ஒன்று நேசம் ஒன்றே பகையாகுமே!
ஒன்று பாசம் ஒன்று வேசமாகுமே!
ஒன்றை உலகம் ஏற்றும் ஒன்றை உலகம் இறக்கும்!

ஒற்றுமை போனால் உயர்வாகுமோ? உரிமை போனால் சுதந்திரமாகுமோ?

ஓதியமரமும் தூணாகுமோ?ஓட்டாங் கிளிஞ்சலும் காசாகுமோ?
உடைந்த பாண்டமும் குடமாகுமோ? நொறுங்கிய நெஞ்சமும் உறவாகுமோ?
மதியாத சுற்றமும் சுற்றமாகுமோ? தன்னலமும் உதவியாகிடுமோ?
உதட்டு அன்பும் நேசமாகுமோ? ஊரின் பகையும் வாழ்வாகுமோ?
ஒற்றுமை போனால் உயர்வாகுமோ? உரிமை போனால் சுதந்திரமாகுமோ?

எத்தனை தன்னலத்தை மாற்றினாலும் அதன் ஆணிவேரை மாற்றாமல் மாறிடுமோ?

எத்தனை புடம் நீயே போட்டபோதும் இரும்பு பசும்பொன் ஆகிடுமோ?
எத்தனை நல்லது சொன்னபோதும் கயவர்கள் நல்லவராய் ஆகிடுவாரோ?
எத்தனை தன்னலத்தை மாற்றினாலும் அதன் ஆணிவேரை மாற்றாமல் மாறிடுமோ?

Tuesday, September 29, 2009

வஞ்சகர் வஞ்சகரடா!-உன்வாழ்வினைக் கெடுப்பாரடா!

சுய நலக்கொடூரரடா !தன்னலக் கெட்டவரடா!மக்கள்வாழ்வினைக் கெடுக்கும்
வஞ்சகர் வஞ்சகரடா!-உன்வாழ்வினைக் கெடுப்பாரடா!-தனியுடைமைக்
கயவர் கயவரடா! ஏழ்மையை வளர்க்கும் கொடுமைக் காரரடா!-இல்லாமை
இல்லாத பொன்னாளை உருவாக்கிடவே தடைக்கல்லாக இருப்பாரடா!

விலைவாசி பித்தம் போகவே போராட்டப்பழம் தின்ன ஏன் மறந்தாரோ?

மானிடரே !மானிடரே!இந்த பூவுலகினிலே!
வில்வம்பழம் தின்பார் பித்தம் போகவே பனம்பழம் தின்பார் பசிபோகவே! --இந்தநாட்டினிலே
விலைவாசி பித்தம் போகவே போராட்டப்பழம் தின்ன ஏன் மறந்தாரோ?

Monday, September 28, 2009

பார்வை இல்லாமலே பருவம் சிரிக்குமா? நேசம் இல்லாமலே நெருக்கம் இருக்குமா?

காற்றில்லாமலே தூசி பறக்குமா?
காதலன்பு இல்லாமலே இன்பம் பிறக்குமா?
பார்வை இல்லாமலே பருவம் சிரிக்குமா?
நேசம் இல்லாமலே நெருக்கம் இருக்குமா?

நடைமுறை மாறுமடி தத்துவம் நிற்குமடி! அரசுமாறுமடி அதிகாரம் நிற்குமடி!

காலம் போகுமடி வார்த்தை நிற்குமடி!
கப்பல் போகுமடி துறையும் இருக்குமடி!
கோலம் மாறுமடி புள்ளி நிற்குமடி!
கோஷம் மாறுமடி கருத்து இருக்குமடி!
நடைமுறை மாறுமடி தத்துவம் நிற்குமடி!
அரசுமாறுமடி அதிகாரம் நிற்குமடி!

இன்பத்தைத் தேடி துன்பத்தில் நடந்தேனே! இனிமையினையே இன்னலிலே தேடினேனே!

காட்டுக்கு எரித்த நிலாவானேன் !- நானே
கானலுக்கு பெய்த மழையுமானேன்!
மழைபெய்த போதோ உப்பானேன் -காற்று
அடித்தபோதோ நானும் பஞ்சானேன்!
மேற்கினில் ஆதவனைத் தேடலானேன்!
அமாவசையில் பவுர்ணமியை காணப்போனேன்!
இன்பத்தைத் தேடி துன்பத்தில் நடந்தேனே!
இனிமையினையே இன்னலிலே தேடினேனே!

இங்க ஏழ்மையில்லாத உலகம் ஆக்கணும்! இல்லாமை இல்லாமல் போக்கணும்!

காசுக்கொரு குதிரையும் வேணும் -அதுவும்
காத்தப்போல பறந்திடவே வேணும்!
காசில்லாமலே சாப்பாடும் வேணும்-!இங்க
கஞ்சிக்கில்லாத நிலையே போகணும்-இங்க
ஏழ்மையில்லாத உலகம் ஆக்கணும்!
இல்லாமை இல்லாமல் போக்கணும்!

பொய்மையிலே வாழ்ந்துபுட்டு மெய்யினையே தேடினாலே கிடைக்குமாடா? கயமையிலே ஊறிப்போன வஞ்சகரின் மனமே நல்லதே நினைக்குமாடா?

எந்த நிலத்துல விதைத்தாலுமே காஞ்சரங்காய் தேங்காயாக ஆகுமாடா?
ஒண்ணவெதைச்சுப் புட்டு ஒண்ண அறுவடையே செய்திடவே முடியுமாடா?
பொய்மையிலே வாழ்ந்துபுட்டு மெய்யினையே தேடினாலே கிடைக்குமாடா?
கயமையிலே ஊறிப்போன வஞ்சகரின் மனமே நல்லதே நினைக்குமாடா?

Sunday, September 27, 2009

கெட்டது கெட்டது காதலும் சொல்லாமலேகெட்டது கெட்டது

கெட்டது கெட்டது உறவும் போகாமலே கெட்டது கெட்டது
கெட்டது கெட்டது கடனும் கேட்காமலே கெட்டது கெட்டது
கெட்டது கெட்டது காதலும் சொல்லாமலேகெட்டது கெட்டது
கெட்டது கெட்டது நட்பும் பழகாமலேகெட்டது கெட்டது

நல்லவங்க துணைகொண்டு நீதிய நீயும் நிலை நாட்டிட வேண்டுமடா!

உள்ளது சொல்ல ஊருமில்லையடா!
நல்லது செய்ய நாடும் இல்லையடா!-அதையே திருத்திடவே!
நாயத்தை பேச்சிலும் ,செயலிலும் காட்டும்!
நல்லவங்க துணைகொண்டு
நீதிய நீயும் நிலை நாட்டிட வேண்டுமடா!

Saturday, September 26, 2009

காதலி உன் பார்வையே!

அந்த உன் மனோகரமான தோற்றத்தின்
இனிமையையும் குதூகலத்தையும் -காதலி உன் பார்வையே!
அதிகப்படுத்தும் இன்பகாட்சியானதே!
இளமையும் கூடவே சாட்சியானதே!

Friday, September 25, 2009

இன்னாட்டில் வறுமையெல்லாம் போகப்போகுதே!

வடக்கே கருத்திருச்சு !வாடைக் காத்து வீசிருச்சு!-போனமழை திரும்ப
வரப்போகுதே வளமெல்லாம் தரப்போகுதே!-இங்க
வரப்பெல்லாம் உயரப் போகுதே!--இன்னாட்டில்
வறுமையெல்லாம் போகப்போகுதே!

வளரும் சமூகம் வாழ்த்துவோம்!மலரும் பொதுவுடைமை

வாழ்வும் தாழ்வும் சிலகாலம்!துணிவுடன் நம்பிக்கையுடன்!
வாழ்ந்து பார்ப்போம் பலகாலம்! போராடிச் ஜெயிப்போம்!
வளரும் சமூகம் வாழ்த்துவோம்!மலரும் பொதுவுடைமை!
வறுமை இல்லாத சமுதாயம் சமைப்போம்!இவ்வுலகினில்-அதை
பொய்மை ,தனியுடைமை இல்லாது உருவாக்குவோம்!

அறிவுபொய்த்தால் சமூகம்பொய்க்கும் என் துணையே!

விண்பொய்த்தால் மண்பொய்க்கும் -என் காதலியே உன்
கண்பொய்த்தால் காதல்பொய்க்கும் எனதோழியே!
அன்புபொய்த்தால் வாழ்க்கைபொய்க்கும் என் தேவதையே!
அறிவுபொய்த்தால் சமூகம்பொய்க்கும் என் துணையே!

Tuesday, September 22, 2009

வஞ்சகரின் முகத்திரை கிழிக்காமலே-மக்கள் கலை இலக்கியம் படைத்தார் தானுமுண்டோ?

ஆதியென்ற மணிவிளக்கை அறிந்தவர் யாரடா?- பேரன்பின்
அகண்ட பரிபூரணத்தை புரிந்தவர் யாரடா?
மனித நேயம் கொண்ட மாமனிதர் அவரல்லவா?-ம்னிதரை
மனிதர் சரி நிகர்சமமாய் மதிக்கின்றவர் அவரல்லவா?- மார்க்சீயத்
தத்துவத்தின் உண்மையினை அறியாமலே!
தகிடுதத்தம் பண்ணும் கயவரை புரியாமலே!
வாழும் வாழ்வுதனில் பயனுமுண்டோ?கூறடா?
வஞ்சகரின் முகத்திரை கிழிக்காமலே-மக்கள் கலை
இலக்கியம் படைத்தார் தானுமுண்டோ?

யுகம் யுகமாய் வழிவந்த காதலின்ப தேன்கவிதையொன்று பிறந்ததடி!

ஒரு மனதிலே
உன் நினைவிலே !
ஓராயிரம் கனவிலே!
உன்னிதயம் உணர்ச்சியை மொழிபெயர்க்கும் போதினிலே!
யுகம் யுகமாய் வழிவந்த காதலின்ப தேன்கவிதையொன்று பிறந்ததடி!

இமைச்சிறகினை விரித்து கண்பறவைகளே காதல் வானத்திலே! யுகம் யுகமாய் சிறகடித்துப் பறப்பது உந்தன் நெஞ்சிற்குத் தெரியவில்லையா?

உனது கண்களே !தொலைதூரத்திலே கண்சிமிட்டி கண்சிமிட்டியே!
அழைக்கும் நட்சத்திரங்களாய் மவுனமாகவே ஓசையின்றி!
இமைச்சிறகினை விரித்து கண்பறவைகளே காதல் வானத்திலே!
யுகம் யுகமாய் சிறகடித்துப் பறப்பது உந்தன் நெஞ்சிற்குத் தெரியவில்லையா?

உள்ளதையே பட்டெனச் சொல்லுங்கள்!

கவிதைகளே கவிதைகளே !நீங்கள் !
உண்மைகளையே முனைமழுங்காமலே!
உறுதியோடு துணிவோடு !
உள்ளதையே பட்டெனச் சொல்லுங்கள்!

மனிதரை மனிதரே மதிப்பதே பேரின்பமானதே!

மனிதனே மகத்தானவனே!
மனிதமே மகத்தானதே!
மனித நேயமே உயர்வானதே!
மக்கள் ஜன நாயகமே மகோன்னதமானதே!
மனிதரை மனிதரே மதிப்பதே பேரின்பமானதே!

மக்கள் இலக்கியமாய் மலர்ந்தால் போதாதா?

இலக்கிய என்விதையும் விளைவும்
என்சமூகத்தின் வளர்ச்சிக்கே!
இலக்கணம் மீறிய கவிதையாய் இருந்தால் என்ன ?மக்கள்
இலக்கியமாய் மலர்ந்தால் போதாதா?

காதல் நினைவுகளே

காதல் நினைவுகளே
வெட்டி வெட்டி போனாலும்- மீண்டும்
நினைக்க நினைக்க தழைக்கும் கொடைக்கானல் புற்கள் தானோ?
கண்ணின் உறவுகளே காணக் காண ஒவ்வொரு நாளும்
மண்ணில் ஒவ்வொரு அதிசய சேதி சொல்லும் அற்புத பேரின்பப் புதையல் தானோ?

நல்ல ஓவியன் வரைந்த வானவில்லின் வர்ணங்களோ?

நான்கு கண்களில் இழையோடுது காதல் பட்டல்லவோ?-அதிலே பட்டுத்தெரிப்பது
கைதேர்ந்த இயற்கையாம் அந்த
நல்ல ஓவியன் வரைந்த வானவில்லின் வர்ணங்களோ?

காலம் ஒரு பூஜ்யமென்றால்

காலம் ஒரு பூஜ்யமென்றால்
காலத்தைச் சுற்றும் மனிதமும் பூஜ்யம் தானா?-மனிதத்தைச் சுற்றும்
காதலும் பூஜ்யம் தானா?-காதலைச் சுற்றும்
காதலரும் பூஜ்யம்தானா?

மெல்லிய இளந்தென்றலே !

மெல்லிய இளந்தென்றலே !
உரசிப் போனதே ஓம் என்ற ரீங்காரத்தோடே!-தென்னை
சொல்லிய கவிதையிலே கலந்தது சங்கீதமாலையே!-அந்த
மொழியினில் தந்த ரசனையில் செவ்வானமே மயங்கிப்போனதோ!

எதையோ தேடித்தேடியே அலைமோதியதே!

ஒரு நாள் அந்திப்பொழுதினில் !
அவன் அருகினில் இருந்தபோது!-கண்ணாம்
மின்மினி விளக்குகள் என்னைப் பார்த்தது-அவை காதலன்பிலே !
எந்தன் நெஞ்சினிலே! நேசத்தாலே!
எதையோ தேடித்தேடியே அலைமோதியதே!

Monday, September 21, 2009

மார்க்சீய தத்துவத்தின் வழியினிலே நடந்திடவே!

நீயும்
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்!
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்
வறுமைக்குக் காரணத்தை அறியாமலே
வாழ்கின்ற மக்களின் அறியாமை தீர்த்திடவே!
மார்க்சீய தத்துவத்தின் வழியினிலே நடந்திடவே!
மக்களுக்கு உழைக்கின்ற நல்லோர்வழி சேராமலே- நீயும்
சுற்றாதே சுற்றாதே பூமியே-வறுமையாலே
சுழலும் பசி நெருப்பையே!
அணைக்க ஒருவழிசொல்லாமலே!- நீயும்

கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!

நான் கண்டகாதலே !
உன்மனதைப் போலவே வெள்ளையானதே!
நான் கண்ட கனவிலே!
உன் நினைவைப் போலவே செழுமையானதே!
கனவும் ,காதலும் தேவைதான் என்றாலுமே!
நாம் காணும் உலகிலே!
கனலும் மனதில் இலட்சியமும் கூடவேண்டுமே!

எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?

சிலுவையில் அறைந்த ஏசுவே! மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாராம்-அதை
விவிலியமும் சொல்கின்றதே! -வறுமைச்
சிலுவையில் அறையப்பட்ட எங்கள் ஏழைமக்கள் எப்போது உயிர்த்தெழுவாரோ?

மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-

மானுடமே ! வறுமை தனிமனித பிரச்னை அன்று-அது
மண்ணில் வாழும் மக்களின் சமூகப் பிரச்னை அல்லவா?
காணும் உலகில் உணவு,உடை,உறைவிடம் ,சுதந்திரம்
காணாத சமூக மனிதன் இருந்தென்ன?இல்லாமலே தான் போனால் தான் என்ன?

புதுக்கவிதையின் நதிமூலமே

புதுக்கவிதையின் நதிமூலமே !எம் ஆசாண் பாரதியின்
வசனகவிதையே அல்லவா?-
இலக்கணம் மீறவில்லை
இலக்கணத்தின் சிம்மாசனமேறி --புதிய
இலக்கியப் படைப்பல்லவா?-
அய்யா பிச்சமூர்த்தி சுவடுகளில்
மவுனியின் அடிதொற்றி
காமராசன் ,செல்லப்பா,மீரா,இன்னும் எத்தனையோ-மக்கள்
கலைஞர்களின் வழியினிலே
ஆலவிருட்சமாய் வேர்விட்ட
புதுயுகக் கவிதையே உன்னை நான் வணங்குகிறேன்!

ஒரு எல்லையைக் கடந்து போவதே!

காதலும் காலமும் மடிந்து போவதோ முடிந்து போவதோ அன்று!
காதலன்பே காலத்தைக் கடந்த அன்பே!
ஒரு எல்லையைக் கடந்து போவதே!

காலமற்ற காலவெளியில்!

காலமற்ற காலவெளியில்
காலத்துவக்கம் என்பதும் முடிவும் என்பதும்
காலத்தில் நகர்கின்ற புள்ளிகளாகுமே!-துவங்கும்
காலப்புள்ளி இருந்து மறுபுள்ளிபார்த்தாலே
காலத்தின் முடியும் புள்ளி முதலாகுமே!
கால முடிவின் புள்ளியிருந்து முதலைப் பார்த்தாலே
காலத்துவங்கும் புள்ளியே முடிவாகுமே!
காலமரணம் என்பது இன்னொரு பிறப்பான ஜனனம்!
காலமுடிவு என்பது இன்னொரு ஆரம்பதுவக்கமே!
காலசுத்த வெளியே
காலத்தில் ஒவ்வொன்றையும் அசைவிக்குமே ஆட்டுவிக்குமே!
காலத்தை மாற்றுவிக்குமே!
காலமது அழிப்பதில்லையே சிதைப்பதில்லையே!
காலசுத்தவெளி தன்னைத் தானே அழிப்பதில்லையே!
சிதைப்பதில்லையே!

காசுக்கு அடிமையாக்குமடா !வாக்குரிமை விலைபோகுதடா!

உருட்டும் புரட்டும் ஒடுக்குது சிறப்பினையடா!-இந்த
உருட்டும் புரட்டும் எத்தனை நாளைக்கடா!=அந்த
உலுத்தர்கள் திருட்டு தொடர்ந்திடக் கூடாதடா!
உன்மத்தர்கள் சுய நலம் கூடவே கூடாதடா!
காசுக்கு அடிமையாக்குமடா !வாக்குரிமை விலைபோகுதடா!
கண்ணீரில் ஏழைகளின் வாழ்க்கை கருகுதடா-வசந்தகாலம்
கண்டிடும் நாள்தான் என்னாளோ? அந்த நாள் தான் பொன்னாளே!

தன்னை உணராத மானுடமே!

இமைக் குற்றம் கண்ணுக்குத் தெரியாது!
தன் தவறு தனக்குத்தான் அறியாது!
தன்னைத் தான் திருந்தாதவனா!
இந்த ஊரைத் திருத்தப் போறானா!
தன்னை உணராத மானுடமே!
தன்னுலகை உணர்வது என்ன சாத்தியமோ?

இளந்தென்றல் அசைந்தசைந்து

வேப்பம்பூக்களைப் போன்றே மளமளவென்றே மலர்ந்து வீழும்!
உன்புன்னகை அல்லவா?-அதுவும்
பொன்னகை அல்லவா?
இளந்தென்றல் அசைந்தசைந்து நம்மேனியில் தொட்டுச்செல்லும் !
இளமாலை புதுவேனில் சுகவானில் நம்மைப் பறக்கச் செய்யும்!

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்!

அன்பு இருந்தால் ஆகாததும் ஆகும்!
அறிவு இருந்தால் கூடாதததும் கூடும்!
பண்பு இருந்தால் உலகம் உனதாகும்!
பணிவு இருந்தால் எல்லாம் உயர்வாகும்!
துணிவு இருந்தால் வாழ்வு உனக்காகும்!

ஏறுன விலைவாசி இறங்கல

அரக்கப் பரக்கப் பாடுபட்டாலும் படுக்ககூட பாயுமில்லையே!
உறங்க குச்சுமில்லையே உடைக்கு கந்தல்கூட இல்லையே!
கூலியும் கூட பத்தல இங்க கூழுக்குக் கூட போதவில்லை!
ஏறுன விலைவாசி இறங்கல வெறுஞ்சோத்துக்கு வந்ததே பஞ்சமே!
இலவசமுனு சொல்லுறாங்க பொதுமார்க்கெட்டுல வாங்க முடியல!
ரேசனுல சரியான முறையில வி நியோகமும் இங்க இல்லையே!

அச்சமின்றி நீயும் செல்லடா!

அணைகடந்த வெள்ளம் அழுதாலும் வாராதே!
தலைக்குமேலே சாண்போனால் என்ன? முழம்போனால் என்ன?
துணிந்திருக்கும் நெஞ்சத்தையே எதுவந்து எதிர் நிற்குமடா!-எதிர் நீச்சல் கொண்டு
வாழ்வினிலே போராட மறவாமல் அச்சமின்றி நீயும் செல்லடா!

Sunday, September 20, 2009

சந்திக்கும் விழிகளுக்குள் சாகசம் செய்வதேனோ?-

அந்திமழையே நீயும் அழுதாலும் விடுவதில்லையே!-என் மனதில்
அணையாத காதல்ஜோதியை ஏற்றாமலும் விடுவதில்லையே!
சந்திக்கும் விழிகளுக்குள் சாகசம் செய்வதேனோ?-அன்பாலே
சாதிக்கும் வரையினிலே ஊனுமில்லை உறக்கமில்லையே!

மனதை அறிந்து பழக அன்பாகும்

அகல இருந்தால் புகழ உறவாகும்-தேவையாலே
கிட்ட வந்தால் முட்டப் பகையாகும்-பாசம்
மனதை அறிந்து பழக அன்பாகும்- நேசம் சுய நலத்தாலே
மனதில் முறிந்தால் ஜென்மப் பகையாகும்

காதல் தென்றல் வந்து போனதற்கு சுவடுகள் ஏது?

காதல் தென்றல் வந்து போனதற்கு சுவடுகள் ஏது?
வாடைக் காற்றும் வந்தசுவடு தெரியாமலே போனது-மோகம் வந்து
மோதும் போதினிலே காமனின் அன்புத் தொல்லை ஆனதே!-இளமை இளமாலை
காணும் இன்பப் பொழுதினில் இனிமைகூட்டும் இலக்கியமானதே!

மனித நேயத்தோடு

கண்களை மூடிப்பார்த்தேன் சிந்தனைபூ மலர்ந்ததே!-என்
நெஞ்சினை உணர்ந்து பார்த்தேன் உண்மைஒளி பிறந்ததே!- நித்தம்
கடமையினை செய்து வந்தேன் கவலைகள் யாவும் பறந்ததே!- மனித நேயத்தோடு
நடந்து வாழ்வினில் அன்பாலே கலந்தேன் வாழ்க்கை புரிந்ததே!

எனதினிய ராகமே!

எனதினிய ராகமே!நீலாம்பரியே !என்னைத் தூங்கவைத்திடவே நீயும்வந்தாயோ?
எனதுயிரின் கீதமே!பூபாளமே !விழித்தெழ வைத்திட ஓடோடி நீயும் வந்தாயோ?
சோகத்திலும் முகாரியே!பாடிட நீயும் கானமழை பொழிந்திடவே நாடியே நீயும் வந்தாயோ?-மகுடியிலே ஊதும் ராகமே! புன்னாக வராளியே கேட்டிட நீயும் பறந்தோடி வந்தாயோ?
எந்த ராகம் ஆனால என்ன? வாழ்வினில் இரண்டறக் கலந்து இனிமை கூட்டும்
இசையின்பம் அல்லவா? அதை கேட்டு ரசிக்கும் உள்ளங்கள் நமதல்லவா?

Saturday, September 19, 2009

சந்திரனைப் பொதுவுடைமை ஆக்குவோம்!

சந்திரனில் குடியேறுவோம்!~-அந்த
சந்திரனில் காற்றமைப்போம்!
சந்திரனில் ;ஊற்று எடுப்போம்!
சந்திரனில் அருவி அமைப்போம்!
சந்திரனில் ஆறு உருவாக்குவோம்!
சந்திரனில் மழைசெய்குவோம்!
சந்திரனில் பயிர்செய்வோம்!
சந்திரனைக் கூறுசெய்யோம் !
சந்திரனை வளமாக்குவோம்!
சந்திரனைப் பொதுவுடைமை ஆக்குவோம்!

புதுக்கவிதை மட்டுமல்ல புதுயுகக் கவிதை நான்

கோடிஆண்டுகளின் கொண்ட
மூத்த அனுபவத்தின் தொடர்ச்சி நான்!
-என்னை
இலக்கணம் மீறியவன் என்று சொல்கிறார்கள்!
-அது சரியல்ல-பழைய
இலக்கணத்தை அடித்தளமாக்கி-புதிய
இலக்கணங்கொண்டு புத்திலக்கியமாய் -புதிய
இலக்கினை நோக்கி புறப்பட்ட புதுயுக
இலக்கிய சாம்ராட் நான்!- என்னை எல்லோரும்
புதுக்கவிதை என்று சொல்கிறார்கள்! - நான்
புதுக்கவிதை மட்டுமல்ல
புதுயுகக் கவிதை நான்
யுகயுகமாய் மக்கள் கலையாய் பரிணமிக்கும்
மக்களுக்காக படைத்து மகிழும்
யுகப்பயணி நான்!

சட்டப் புத்தகங்கள் கூட!

சட்டப் புத்தகங்கள் கூட -வார்த்தைச்
சங்கிலிகளிலே சிக்கி-அது நீதிக்கும்
நீதிபதிக்கும் எட்டாததூரத்திலே-அதுவே
நேர்மைக்கும் நியாயத்துக்கும் ஒட்டாத தாமரை இலைத் தண்ணீராகவே!
அதிலே
நின்று தத்தளிக்குது சத்தியங்களே!
நிழலாய் தவித்திடுது உண்மைகளே!-மக்களோ
நிலை தடுமாறி துடிப்பது எதார்த்தங்களே!

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாமே பேயாகுமே! மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாமே பிசாசாகுமே! அச்சமன்றி அச்சமின்றி வாழும் வகை தெரிந்துவிட்டாலே எதுவந்தபோது

அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயமெல்லாமே பேயாகுமே!
மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாமே பிசாசாகுமே!
அச்சமன்றி அச்சமின்றி வாழும் வகை தெரிந்துவிட்டாலே
எதுவந்தபோதும் துணிந்து நடந்தாலே நாடே நமக்காகுமே!

மனங்களே காதல் கோட்டைகட்டியதே கட்டியதே -காலம் அதனையே தகர்த்துவிட நகர்ந்ததே நகர்ந்ததே- தோழி யே என தினிய காதலியே!-காமனின் துணைகொண்டு காதலையே வென்றாக வே

மனங்களே காதல் கோட்டைகட்டியதே கட்டியதே -காலம்
அதனையே தகர்த்துவிட நகர்ந்ததே நகர்ந்ததே-
தோழி யே என தினிய காதலியே!-காமனின் துணைகொண்டு
காதலையே வென்றாக வேண்டுமடி!
கருத்தொருமித்தாக வேண்டுமடி!

காலத்துல நின்னுக்கிட்டு காலத்தையே கணிக்குறமே! கண்ணுக்குள்ள நுழைஞ்சுக்கிட்டு காதலிலே கனியுறமே! என் நிழலே ! எனதுயிர்காற்றே! என்னிதய சங்கீதமே! மெல்லிடைய

காலத்துல நின்னுக்கிட்டு காலத்தையே கணிக்குறமே!
கண்ணுக்குள்ள நுழைஞ்சுக்கிட்டு காதலிலே கனியுறமே!
என் நிழலே ! எனதுயிர்காற்றே! என்னிதய சங்கீதமே!
மெல்லிடையே !செவ்விதழே! செவ்வானமே!

அறுவடை காலம் வந்தாலே எலிக்கும் அஞ்சு பொஞ்சாதி! ஆங்காலம் ஆகுமடா! போங்காலம் போகுமடா!-மண்ணில் வருவதும் கண்ணுக்குத் தெரியவில்லையே-! மண்ணைவிட்டு போவதும் கண

அறுவடை காலம் வந்தாலே எலிக்கும் அஞ்சு பொஞ்சாதி!
ஆங்காலம் ஆகுமடா! போங்காலம் போகுமடா!-மண்ணில்
வருவதும் கண்ணுக்குத் தெரியவில்லையே-! மண்ணைவிட்டு
போவதும் கண்ணுக்குத் தெரிவதில்லையே!

ஆசை ஆசை அறுபது நாளுக்கடா! மோகம் மோகம் முப்பது நாளுக்கடா!-அந்த தொண்ணூறு நாளும் போனாலே-அட துடைப்பக் கட்டை ஆகுமடா! துடைச்சுப் போட்ட துணியாக போகுமடா!

ஆசை ஆசை அறுபது நாளுக்கடா!
மோகம் மோகம் முப்பது நாளுக்கடா!-அந்த
தொண்ணூறு நாளும் போனாலே-அட
துடைப்பக் கட்டை ஆகுமடா!
துடைச்சுப் போட்ட துணியாக போகுமடா!

தேவையில்லை தேவையில்லையடா! இடித்து ஒரு கூடை தேவையில்லையடா! தேவையடா தேவையடா! அன்புள்ளத்தோடு ஒருபிடிசோறு தேவையடா! விருந்தோமபல் செய்து உபசரியார் வீட்டினில

தேவையில்லை தேவையில்லையடா! இடித்து ஒரு
கூடை தேவையில்லையடா!
தேவையடா தேவையடா! அன்புள்ளத்தோடு
ஒருபிடிசோறு தேவையடா! விருந்தோமபல் செய்து
உபசரியார் வீட்டினிலே
உண்ணாதிருப்பதே நலமாகுமடா!

ஆசைக்கு அளவில்லையடா!-அந்த ஆசைக்கு பிரபஞ்சமே கூட எல்லை இல்லையடா! அளவோடு ஆசைபட்டால் வாழ்க்கையே இனித்திடுமே! அளவில்லாப் பேராசையே ஆளையே கொல்லுமடா!

ஆசைக்கு அளவில்லையடா!-அந்த
ஆசைக்கு பிரபஞ்சமே கூட எல்லை இல்லையடா!
அளவோடு ஆசைபட்டால் வாழ்க்கையே இனித்திடுமே!
அளவில்லாப் பேராசையே ஆளையே கொல்லுமடா!

Thursday, September 17, 2009

உறவு போலவே உறவாடியே குளவி போலவே கொட்டுகின்ற கயவர் வாழும் உலகமடா!-துரோகப் பாதையிலே நடக்கும் வஞ்சக நெஞ்சங்களடா!

உறவு போலவே உறவாடியே
குளவி போலவே கொட்டுகின்ற
கயவர் வாழும் உலகமடா!-துரோகப் பாதையிலே
நடக்கும் வஞ்சக நெஞ்சங்களடா!

காதல் அன்பு இல்லாது பிறப்பதில்லையே!-அதன் ஆயிரமாயிரம் காலங்காலமான உயிர்ப்பினையே என்னாளுமே! காத்திருந்து அள்ளினாலும் குறைவதில்லையே!-யுகயுகமாகவே! கனவிர

காதல் அன்பு இல்லாது பிறப்பதில்லையே!-அதன் ஆயிரமாயிரம்
காலங்காலமான உயிர்ப்பினையே என்னாளுமே!
காத்திருந்து அள்ளினாலும் குறைவதில்லையே!-யுகயுகமாகவே!
கனவிருந்து தவிப்பதிலும் சளிப்பதில்லையே!-அதுவும் தன்னை
நனவாக்கிடவே போராடும் குணமதையே மறப்பதில்லையே!

ஒன்று நினைத்தேன்! ஒன்று ஆனதே! ஒன்றில் உறவானேன் !ஒன்றில் பிரிவானேன்! ஒன்றைத் தேடினேன்! ஒன்று கிடைத்ததே! ஒன்றில் ஒன்றினேன் !ஒன்றைப் பற்றினேன்! ஒன்றும் அ

ஒன்று நினைத்தேன்! ஒன்று ஆனதே!
ஒன்றில் உறவானேன் !ஒன்றில் பிரிவானேன்!
ஒன்றைத் தேடினேன்! ஒன்று கிடைத்ததே!
ஒன்றில் ஒன்றினேன் !ஒன்றைப் பற்றினேன்!
ஒன்றும் அறியேன் !ஒன்றும் புரியேன்1
ஒன்றும் காணேன்! ஒன்றில் ஓடினேன்!
ஒன்றே மனிதம் என்று உணராதார் மத்தியிலே !-எந்த
ஒன்றில் ஒன்றி ஒன்றாய் ஆவாரோ?

Wednesday, September 16, 2009

கரைப்பார் கரைத்தாலே கல்லும் கரையுமடி! காதலுரைப்பார் உரைத்தாலே காதலின்பம் பெருகுமடி! கொடுப்பார் கொடுத்தாலே குலவும் இன்பமடி! விழித்தார் எழுந்தாலே வெற்

கரைப்பார் கரைத்தாலே கல்லும் கரையுமடி!
காதலுரைப்பார் உரைத்தாலே காதலின்பம் பெருகுமடி!
கொடுப்பார் கொடுத்தாலே குலவும் இன்பமடி!
விழித்தார் எழுந்தாலே வெற்றியும் நிச்சயமடி!

கரும்புள்ள போதே ஆட்டிக்கொள்ளடா! காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளடா! பருவத்துல நீயும் பயிர்செய்திட மறந்தாலே அறுவடையினில் போய் எப்படி கதிரறுப்பாய்? காதலுள்ள

கரும்புள்ள போதே ஆட்டிக்கொள்ளடா!
காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளடா!
பருவத்துல நீயும் பயிர்செய்திட மறந்தாலே
அறுவடையினில் போய் எப்படி கதிரறுப்பாய்?
காதலுள்ள போதே பேரின்பமாக்கிக் கொள்ளடா!-இளமைக்
காலத்திலேயே கல்விதனைக் கற்றுத் தேறடா!

காலைச் செவ்வானமே -எந்த காலத்திலு ம் மழையில்லையே-அந்தி மாலைச் செவ்வானமே! =அப்போதே மழைச் சாரலாகுமே! காதல் பொன்மாலையே ! கனியும் செவ்வாழையே!

காலைச் செவ்வானமே -எந்த
காலத்திலு ம் மழையில்லையே-அந்தி
மாலைச் செவ்வானமே! =அப்போதே
மழைச் சாரலாகுமே!
காதல் பொன்மாலையே !
கனியும் செவ்வாழையே!

காற்றில்லாமலே உயிர் இருக்குமா?-அறிமுக கண்ணில்லாமலே காதல் பிறக்குமா?- அன்பு நெஞ்சமில்லாமலே நேசம் கொள்ளுமா?-உள்ளார்ந்த நினைவில்லாமலே நெருக்கம் ஆகுமா?

காற்றில்லாமலே உயிர் இருக்குமா?-அறிமுக
கண்ணில்லாமலே காதல் பிறக்குமா?- அன்பு
நெஞ்சமில்லாமலே நேசம் கொள்ளுமா?-உள்ளார்ந்த
நினைவில்லாமலே நெருக்கம் ஆகுமா?

கோடிவித்தையும் கூழுக்குத்தானடா! ஆடிப்பாடுவது ஒருசாண் வயித்துக்குத் தாண்டா!! ஒருசாண் வயிறு என்பது இல்லாட்டா இங்கே குழப்பமென்பது ஏதடா? நல்ல மனிதரும், ஏம

கோடிவித்தையும் கூழுக்குத்தானடா!
ஆடிப்பாடுவது ஒருசாண் வயித்துக்குத் தாண்டா!!
ஒருசாண் வயிறு என்பது இல்லாட்டா இங்கே
குழப்பமென்பது ஏதடா? நல்ல மனிதரும்,
ஏமாற்றும் மனிதரும் ,ஏமாறும் மனிதரும் ,
கோமாளி மனிதரும் ,கொள்கையற்ற மனிதரும்!
ஏமாளி மனிதரும் துரோகிகளும் இன்னும் கயவர்களும்!
தன்னல மனிதரும் ,தாந்தோன்றி மனிதரும் !
எத்தனை மனிதரடா? எத்தனை போராட்டமடா?

Tuesday, September 15, 2009

அலைவாயில் துரும்பாகவே!-ஒரு நிலையினிலே நில்லாது ஏனலைந்தாய் மனமே!-அனுதினமும் பலவிதமாய் குணங்கள் கொள்ளாதே நெஞ்சே!-கடற் கரைஒதுங்கும் நுரையாகி சுற்றாதே தி

அலைவாயில் துரும்பாகவே!-ஒரு
நிலையினிலே நில்லாது ஏனலைந்தாய் மனமே!-அனுதினமும்
பலவிதமாய் குணங்கள் கொள்ளாதே நெஞ்சே!-கடற்
கரைஒதுங்கும் நுரையாகி சுற்றாதே தினமே!
எவனிருந்து நெஞ்சே எதிர்ப்பாருண்டோ?
உழைப்போரே ஒன்றாய் எழுந்து விட்டாலே!
ஓர் நாளில் அதிகாரம் தூள் தூள் ஆகிடுமே!

பகுத்தறிவாலே நீயும் ஞானம் கொண்டிடுவாய் நெஞ்சே-- மூட நம்பிக்கையிலே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவதைவிட்டு- மனித நேய அன்பினிலே தேடுவதும் பகுத்தறிவாலே கூடு

பகுத்தறிவாலே நீயும் ஞானம் கொண்டிடுவாய் நெஞ்சே-- மூட
நம்பிக்கையிலே எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணுவதைவிட்டு- மனித நேய
அன்பினிலே தேடுவதும் பகுத்தறிவாலே கூடுவதும் சிந்தையிலே -என்றும் ஒற்றுமையில்
ஆனந்தமாய் நாடுவதும் பேரறிவாலே பேரின்பம் கண்டிடவும் வேண்டுமே!

விண்ணேது ?வெளியேது ஒளியேது? உன்னை நீயே அறியாதபோது! எண்ணேது? எழுத்தேது? பகுத்தறிவேது? உலகை நீயே புரியாதபோது! வாழ்வேது ?சுகமேது? வசந்தமேது? மக்கள் ஜன நா

விண்ணேது ?வெளியேது ஒளியேது? உன்னை நீயே அறியாதபோது!
எண்ணேது? எழுத்தேது? பகுத்தறிவேது? உலகை நீயே புரியாதபோது!
வாழ்வேது ?சுகமேது? வசந்தமேது? மக்கள் ஜன நாயகம் இல்லாதபோது!
வளமேது? இன்பமேது? இனிமையேது? சுதந்திர சுவாசம் இல்லாதபோது!

சுதந்திரத் திற்கான உயிர்த்தியாகம் அடக்குமுறையின் நிழலினில் வாழ்ந்து இருப்பதைவிட மேலானதடா! சுதந்திரத்தின் சுவாசத்தை இழந்துவிட்டு காசுக்கு சோரம்போகும் ந

சுதந்திரத் திற்கான உயிர்த்தியாகம் அடக்குமுறையின் நிழலினில் வாழ்ந்து
இருப்பதைவிட மேலானதடா!
சுதந்திரத்தின் சுவாசத்தை இழந்துவிட்டு காசுக்கு சோரம்போகும் நாடென்ன நாடடா?--வாக்குச்
சுதந்திரத்தை அடகுவைத்துவிட்டு ஒரு நாள் கூத்துக்கு மீசைவைக்கும் கூலிப்படையாகாதேடா!
நிரந்தரமான மக்கள் ஜன நாயகம் ஓங்கிடவே நல்லோரின் துணைகொண்டே
நாடி ஓடடா!

எல்லைகளற்ற வானப்பெருவெளியாய்! கரைகளற்ற பெருங்கடலாய்--உன்னை நீயே எப்பொழுது உணரப் போகின்றாய்?--தனியுடைமைத் தொல்லைகளற்ற பொதுவுடைமையாய்! மக்கள் ஜன நாயகத்

எல்லைகளற்ற வானப்பெருவெளியாய்!
கரைகளற்ற பெருங்கடலாய்--உன்னை நீயே
எப்பொழுது உணரப் போகின்றாய்?--தனியுடைமைத்
தொல்லைகளற்ற பொதுவுடைமையாய்!
மக்கள் ஜன நாயகத்தின் வெற்றியாய்-உன் பிரபஞ்சத்தை நீயே!
எப்பொழுது ஆக்கப் போகின்றாய்?

இளைஞர்களே !வரும்தலைமுறையின் தலைமைப் பாதுகாவலர்களே! இளைஞர்கூட்டமே !இன்னாட்டின் முக்கியசொத்து நீங்கள்! எதிர்கால வளமும் நீங்கள் --இளஞர்களே !உங்களின் இளைய

இளைஞர்களே !வரும்தலைமுறையின் தலைமைப் பாதுகாவலர்களே!
இளைஞர்கூட்டமே !இன்னாட்டின் முக்கியசொத்து நீங்கள்!
எதிர்கால வளமும் நீங்கள் --இளஞர்களே !உங்களின்
இளையதலைமுறையின் சக்தியை முழுமையாக பயன்படுத்தும் அளவிற்கு!
ஓருவலுவானதொரு தேசீயக் கொள்கை இன்றைய அவசியத்தேவை அல்லவா?
அதுவும் பாட்டாளி தலைமை தாங்கும் மக்கள்ஜன நாயக வழிப்பாதை அல்லவா?

எழுத்தாளர்களே!- நீங்கள் மக்கள் நலனுக்கான போராட்டத்தில் பங்கெடுத்த அனுபவத்தை மக்களுக்கான இலக்கியமாகப் படைத்திட வாருங்கள்!

எழுத்தாளர்களே!- நீங்கள்
மக்கள் நலனுக்கான போராட்டத்தில் பங்கெடுத்த அனுபவத்தை
மக்களுக்கான இலக்கியமாகப் படைத்திட வாருங்கள்!

திரைப்பட இயக்கு நர்களே! ---- நல்ல இலக்கியங்களைப் படியுங்கள்! நல்ல இலக்கியவாதிகளை ஆதரியுங்கள்! நல்லகதைகளுக்கு நல்லதிரைக்கதை அமையுங்கள்! நல்ல சமூக

திரைப்பட இயக்கு நர்களே!
---- நல்ல இலக்கியங்களைப் படியுங்கள்!
நல்ல இலக்கியவாதிகளை ஆதரியுங்கள்!
நல்லகதைகளுக்கு நல்லதிரைக்கதை அமையுங்கள்!
நல்ல சமூகத்தை உருவாக்கிட முன்னோக்கி நடங்கள்!
காசுக்காக எதையும் செய்யாதீர்கள்!
கலையென்று மெதுவாக படமெடுக்காதீர்கள்!-மக்கள்
கலையினை முன்னோக்கி எடுத்து வென்றிடுங்கள்!

மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டுவது இலக்கியமாகும் !-சமூகத்திலே மாற்றம் ஏற்படுத்தாதவன் மக்கள்கலை இலக்கியவாதியாய் ஆகிடமுடியாது! மனிதரை மனிதர் சரி நிகர்

மனிதனை மனிதனுக்கு அடையாளம் காட்டுவது இலக்கியமாகும் !-சமூகத்திலே
மாற்றம் ஏற்படுத்தாதவன் மக்கள்கலை இலக்கியவாதியாய் ஆகிடமுடியாது!
மனிதரை மனிதர் சரி நிகர்சமமாய் நினையாததேசம் சுடுகாடாகுமடா!
மக்களை யார் நேசிக்கிறார்களோ ? அவர்களை மக்கள் நேசிக்கும்போதுதாண்டா!
மக்கள் ஜன நாயகம் இந்ததேசமல்ல இந்த பிரபஞ்சமுழுவதும் மலருமடா!

Monday, September 14, 2009

மேற்கைவிட கம்யூனிஸ்டுகள் நல்லமுறையினில் எப்ப்டி மனித உழைப்பை திறமையாக பயன்படுத்துகின்றனர்? டாஸ் கேப்பிட்டலை எல்லாத் தேசமும் கையிலெடுக்கும் நல்ல காலமி

மேற்கைவிட கம்யூனிஸ்டுகள் நல்லமுறையினில் எப்ப்டி மனித உழைப்பை
திறமையாக பயன்படுத்துகின்றனர்?
டாஸ் கேப்பிட்டலை எல்லாத் தேசமும் கையிலெடுக்கும் நல்ல காலமிது ! அரசியல்,அறிவியல் , பொருளாதார,தத்துவத்தை , நடைமுறையை ஆய்வுசெய்து
சோசலிச வழியினில் கம்யூனிசத்தை நோக்கி அனைத்து நாட்டுமக்களும்
அணிவகுக்கும் நல்ல தருணமிது! இதில் நான் பெரிது நீ பெரிது என்று போட்டி
போடாமல் ஏற்றதாழ்வில்லாத பொருளாதாரத்திற்கு நல்ல நடைமுறையில் சிறந்த் மார்க்சீய தத்துவத்தை இந்த காலத்திற்கு ஏற்றவாறு நல்ல முறையில் பொருத்தி
நவீன அறிவியல் வளர்ச்சியினை கணக்கிலெடுத்து முன்னோக்கி செல்லும் மகத்தான போராட்டக் காலமிது மக்கள் ஜன நாயகத்தை முன்னிறுத்தும்
உன்னதமான கடமையினில் ஒற்றுமையில் நடக்கும் புரட்சிகரமான மாற்றத்திற்கான சரியான கணமிது!

”ஏகாதிபத்திய,முதலாளித்துவம் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலம் மனித உழைப்பை வீணடிக்கின்றது”

”ஏகாதிபத்திய,முதலாளித்துவம் வேலையில்லாத் திண்டாட்டத்தை உருவாக்குவதன் மூலம் மனித உழைப்பை வீணடிக்கின்றது”

”பணக்காரர்களின் பணபெருக்கம் என்பது ஏழைகளுக்கு நன்மை தரும் என்பதை நம்புவது ஒரு பிரபஞ்ச ஏமாற்றமாகும்”

”பணக்காரர்களின் பணபெருக்கம் என்பது ஏழைகளுக்கு நன்மை தரும் என்பதை
நம்புவது ஒரு பிரபஞ்ச ஏமாற்றமாகும்”

பெண்களைப் பழிக்கும் ஊடகப்பார்வைகள்! முள்மீது சேலை சேலைமீது முள்” எதுவிழுந்தாலும் அந்த சேலைக்குத் தானே சேதாரம்! பெண்களை செய்தியால் சேதப்படுத்தும் கலாச

பெண்களைப் பழிக்கும் ஊடகப்பார்வைகள்!
முள்மீது சேலை சேலைமீது முள்” எதுவிழுந்தாலும்
அந்த சேலைக்குத் தானே சேதாரம்!
பெண்களை செய்தியால் சேதப்படுத்தும் கலாச்சார
சித்தரிப்பு சிதைவுகள்!
கள்ள்க்காதல் “ உறவில் கணவனைக் கொன்றவள்”
கள்ள்க்காதல் “ உறவில் குழந்தையைக் கொன்றவள்”
”மண நாளன்று காதலனோடு ஓடிபோனவள்”
”ஒரே பெண்ணிற்கு போட்டிபோட்டு வாலிபர்கள் கொலை”
இந்த சித்தரிப்புகள் எல்லாம் பெண்கள் எல்லாமே
எல்லைமீறிப் போவதாய் சித்தரிக்கும் இழிவுகள்!
------இதனால் தான்
பெண்களை வீட்டிற்குள் பூட்டிவைக்கச் சொன்னோம்
என்று புலம்பிடும் பழம்பஞ்சாங்கிகள்!
----------இவைகளுக்கு தூபம் போடும்
ஆபாசப் படமெடுத்துக் காட்டும் வக்கிர ஊடகங்கள்!
ஒட்டுமொத்த பெண்களில் ஒருசதவீதம் கூட இல்லாத
மாடல்களையும் நடிகைகளையும் வக்கிரமாய் படம்பிடித்துக் காட்டும்”
பணம்பண்ண நினைக்கும் ஆண்கள்!
டிவி நடிகைகள் கூட பாலியல் தொல்லைகளால் பலபெண்கள்
தற்கொலை செய்துகொண்ட சோகக் கதைகள்
ஆண்களின் அற்ப ஆசைகளால் பழிக்கப்படுவோர் எல்லாம் பெண்களாய்
இருப்பதுதான் அவலம்!
பெண்களை கீழ்த்தரமாய் ரசிக்க நினைக்கும் மைனர் குணாம்சத்தால் பெண்கள் பலர் இரையாக்கப்படும் எதார்த்தங்கள்!~
பெண்களை மானுடமாய் பார்க்காத அவலங்கள்!
மனதுக்குப் பிடிக்கவில்லை என்றாலும் வக்கிர கணவனோடு வாழ்ந்தே தான்
ஆடவேண்டும் என்ற கொத்தடிமை குணாம்சங்கள்!
வறட்டுக் கவுரவம் திணிக்கப்பட்ட அடிமட்ட விஷக் கலாச்சாரம்!
பெண்களை ஆணாதிக்கப் போகபொருளாய் நடத்தும் சீரழிவு
ஆணாதிக்க வெறி இன்னும்
அடக்கப்படாத திமிறுகள்!
இவைகளையெல்லாம் பற்றி விவாதிகாமல் பெண்களைப் பற்றிய
செய்திகளை மட்டும் கிளுகிளுப்பு ஊட்டி எழுதும் நச்சு ஊடகங்கள்!
பெண்களை மோசமானவர்களாய் ,அடங்காதவர்களாய் ,போகப்பொருளாய்
சித்தரிக்கும் ஊடகப் போக்குகள்!
பெண்ணுரிமை என்ற பெரும் கோட்பாட்டுப் போராட்டத்தை தடுக்கும் தடைக்கற்கள்!---இவற்றைத் தகருங்கள்!
பெண்கள் செய்யும் குற்றங்கள் ,பெண்கள் மீதான குற்றங்கள்,
----------------இவைகளை நுணுகி ஆராய்ந்து அவற்றின் உட்பொருளை அம்பலப்படுத்துங்கள்! அதுவே காலத்தின் கட்டாயமாகும்!

எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ? எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ? முதலாளித்துவ, ஏகாதிபத்திய கொடுமையிலே! வெந்துகொண்டிருக்கும் பாட்டாளி சாம்பலையே! எந்த கா

எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ?
எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ?
முதலாளித்துவ, ஏகாதிபத்திய கொடுமையிலே!-அனுதினமும்
வெந்துகொண்டிருக்கும் பாட்டாளி சாம்பலையே!
எந்த காசிக்குப்போய் சேர்க்கவோ?
எந்த கங்கையில் போய்க் கரைக்கவோ?

பூத்திருக்கும் மலர்களுக்கு ! புகழிடமே உன்கூந்தல்! காத்திருக்கும் கண்களுக்கு ! உறைவிடமே உன் நெஞ்சம்! பார்த்திருக்கும் விண்ணிலவுக்கு! உறவிடமே நம்காதலன்ப

பூத்திருக்கும் மலர்களுக்கு !
புகழிடமே உன்கூந்தல்!
காத்திருக்கும் கண்களுக்கு !
உறைவிடமே உன் நெஞ்சம்!
பார்த்திருக்கும் விண்ணிலவுக்கு!
உறவிடமே நம்காதலன்பே!
சேர்த்திருக்கும் இளமாலை!
கனிவிடமே நம் வாழ்க்கை!

என்காதலியே அடிகொடியிடை கொடியிடை என்று சொல்கிறார்களே! எனக்கொரு உண்மை தெரிந்தாகவேண்டுமே! உன்னிடை எந்தவகை கொடியென்று? கனியிதழ் கனியிதழ் என்று சொல்கிறார

என்காதலியே
அடிகொடியிடை கொடியிடை என்று சொல்கிறார்களே!
எனக்கொரு உண்மை தெரிந்தாகவேண்டுமே!
உன்னிடை எந்தவகை கொடியென்று?
கனியிதழ் கனியிதழ் என்று சொல்கிறார்களே- நீயே சொல்லு
உன்னிதழ் எந்தவகை கனியென்று?

Sunday, September 13, 2009

தோழனே நீயும் ! மனிதரை மனிதராக மதிக்கின்ற மனித நேய சமூக அமைப்பு உருவாக்கும் வரை சாதீயமும் வர்க்கபேதமும் இருக்கத் தானடா செய்யும்!

தோழனே நீயும் !
மனிதரை மனிதராக
மதிக்கின்ற மனித நேய சமூக அமைப்பு உருவாக்கும் வரை
சாதீயமும் வர்க்கபேதமும் இருக்கத் தானடா செய்யும்!

புத்தகமே புத்தகமே நீயும் அறியாமை எதிர்க்கின்ற நெருப்பல்லவா? அனைவரின் வணக்கத்துக்குரிய கோவிலல்லவா? அனுபவத்தை அள்ளித்தருகின்ற தங்கச்சுரங்கமல்லவா?-பகுத்

புத்தகமே புத்தகமே நீயும்
அறியாமை எதிர்க்கின்ற நெருப்பல்லவா?
அனைவரின் வணக்கத்துக்குரிய கோவிலல்லவா?
அனுபவத்தை அள்ளித்தருகின்ற தங்கச்சுரங்கமல்லவா?-பகுத்தறியும்
மெய்யறிவினில் இவ்வுலகம் முன்னேறவே வழிசொல்லும் அறிவியலல்லவா”

தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ! வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் ! காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே! ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்

தோழமை ஒன்றே தொண்டுள்ளம் அன்றோ!
வாழ்க்கையிலே உயர்ந்தது தாய்மை என்றும் !
காதலென்றும் பல உணர்வுகள் நாம் கண்டோமே!
ஆனாலும் அத்தனை மனித உணர்வுகளில் எல்லாம்-உலகெல்லாம்!
உயர்ந்து நிற்பது தோழமை உணர்வு தான் அன்றோ!

க்யூபாவில் ”அனைவருக்கும் வேலை அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் சமத்துவம்” என்ற முழக்கம் மட்டுமல்ல-- செயலிலும் எதிரொலிக்கிறதே! காஸ்ட்ரோவின் சோசலிச வழிகா

க்யூபாவில்
”அனைவருக்கும் வேலை
அனைவருக்கும் கல்வி
அனைவருக்கும் சமத்துவம்”
என்ற முழக்கம் மட்டுமல்ல--
செயலிலும் எதிரொலிக்கிறதே!
காஸ்ட்ரோவின் சோசலிச வழிகாட்டுதல்
வீரதீரச் செயல்களின் அடையாளமாகவே!
புயலையும் எந்த சுனாமியின் தாக்குதலையும்
கம்யூனிஸ்டுகள் சந்திப்பார்களே!
என்பதற்கு முன்னுதாரணமான மார்க்சீய படைத்தளபதிகள்
செகுவேரா” பெடரல் காஸ்ட்ரோ”
மகத்தான தோழமை உணர்வுக்கு உவமானத்தோழர்கள் உழைப்பிற்கு
உன்னதமான பலனாய் க்யூபாவின் முன்னோக்கிய பொதுவுடைமைப் பொன்னுலகப் பயணம் இன்னும் முன்னோக்கி முன்னோக்கிச் செல்லட்டும்!
பொருளாதாரத்தில் க்யூபா பின் தங்கியபோது
தோழமை உணர்வோடு தோளோடு தோள்கொடுத்தது!
சோவியத் யூனிய நண்பனே!

கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தாண்டி கண்ணெதிரே ”க்யூபாவின் “ சாதனை விண்ணை விஞ்சி உயர்கிறது!

கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தாண்டி
கண்ணெதிரே ”க்யூபாவின் “ சாதனை
விண்ணை விஞ்சி உயர்கிறது!

நூற்றுக்கணக்கான முறை காஸ்ட்ரோவை கொலைசெய்ய ஓடித் தோற்றுப்போன ஏகாதிபத்தியமே ! உன்னை எதிர்க்கும் சக்தி ! பெடரல் காஸ்ட்ரோ” மட்டுமல்ல! உலகத்தில் சர்வதேச

நூற்றுக்கணக்கான முறை காஸ்ட்ரோவை கொலைசெய்ய
ஓடித் தோற்றுப்போன ஏகாதிபத்தியமே !
உன்னை எதிர்க்கும் சக்தி !
பெடரல் காஸ்ட்ரோ” மட்டுமல்ல!
உலகத்தில் சர்வதேச பார்வை உள்ள
ஒவ்வொரு கம்யூனிஸ்டும் தான்”-உலகினில்
எத்தனை போராளிகள் வீழ்ந்தால் என்ன?
அவர்களின் அடிச்சுவட்டில் புதிய தலைமுறை வீறுகொண்டு எழும்!

பெடரல் காஸ்ட்ரோ”! இன்றைய புரட்சிகர உலகத்தின் மைய நாயகன்! மார்க்சீய த்த்துவத்தின் சிறப்பான செயல் வீரன்! அவரது வீரம்! வியட் நாம் போல நிமிர்ந்த நன்னடை!

பெடரல் காஸ்ட்ரோ”!
இன்றைய புரட்சிகர உலகத்தின் மைய நாயகன்!
மார்க்சீய த்த்துவத்தின் சிறப்பான செயல் வீரன்!
அவரது வீரம்!
வியட் நாம் போல நிமிர்ந்த நன்னடை!
அவரது சர்வதேசப்பார்வை
கம்யூனிசத்தின் இலக்கணமானதே-உலக
வரலாற்றை உருவாக்கிய
புரட்சிகர சக்திகளின் ஆதர்ச ஒற்றுமைசக்தியே!
போராட்ட தலைமைப் பாத்திரமே!-கம்யூனிச
சர்வதேச கடமையையும்
முன்னெடுத்துச் செல்கிறதே!
நீ ஒரு கம்யூனிஸ்டா?
”உன்னால் சர்வதேச பார்வையின்றி இருக்கமுடியாது-அந்த உலக கம்யூனிச ஒற்றுமையாம்
சர்வதேசப் பார்வை இல்லை என்றாலே நீ ஒரு
கம்யூனிஸ்டாக இருக்கவே முடியாது”!

யுகத்தின் மீது காலச் சுவடுகள் பதிக்கின்ற புரட்சிகர புதுமை வரிகளாம்! யுகயுகமாய் மானுடத்தை முன்னெடுக்கும் மக்கள் கலை சீர்தூக்கும்! புதுக்கவிதைகளாம் படைக

யுகத்தின் மீது காலச் சுவடுகள் பதிக்கின்ற புரட்சிகர புதுமை வரிகளாம்!
யுகயுகமாய் மானுடத்தை முன்னெடுக்கும் மக்கள் கலை சீர்தூக்கும்!
புதுக்கவிதைகளாம் படைக்கின்ற படைப்பாளிகளே !இனி நமக்குத் தேவை!
புதுயுகமே புதுயுகமே பிறக்கட்டும் அடிமைக் கட்டுகளை அறுத்திடுவோம்!

இரண்டு கண்கள் இரண்டு கண்களோடு ! மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கையடா!-வாழ்வினில் இயங்கி ஜெயிப்பதடா வாழ்க்கையடா! நான்கு கண்களும் ஒரே திசைவழிதனில் ! இல்லறத

இரண்டு கண்கள் இரண்டு கண்களோடு !
மயங்கிக் கிடப்பதல்ல வாழ்க்கையடா!-வாழ்வினில்
இயங்கி ஜெயிப்பதுதான் வாழ்க்கையடா!
நான்கு கண்களும் ஒரே திசைவழிதனில் !
இல்லறத்தில் நல்லறமாகவே!- என்னாளும்
நல்லோர் வழியினில் நோக்கி நடப்பதே!-வெற்றி பெறும்
நல்ல இலட்சியமே உண்மை வாழ்க்கையடா!

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே! மலர்களைப் பாடிய!படைப்பாளிகளையே! கவிஞர்களையே !- நீங்கள் மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே! சிற்றிதழ்களே சிற்றிதழ்க

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே!
மலர்களைப் பாடிய!படைப்பாளிகளையே!
கவிஞர்களையே !- நீங்கள்
மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே -நீங்கள்
சிதையவில்லை சிதையவில்லை!
சிறகுமுளைத்து பறந்தே சென்றீங்களோ?-மலர்களைப் பாடிய படைப்பாளிகளையே!
கவிஞர்களையே - நீங்கள்
மானுடம் பாடிடத் திசைதிருப்பிய வானம்பாடிகளே!

காதலரே! காதல் பயணத்தையே ! ஒரு சத்தமில்லாத மவுனத்திலேயே ! எத்தனை காலம் தான் பயணம் செயவாரோ? மவுன விழிகள் திறவாத போதினிலே மெய்யான காதலின்! கதவுகள் என்றும

காதலரே!
காதல் பயணத்தையே !
ஒரு சத்தமில்லாத மவுனத்திலேயே !
எத்தனை காலம் தான் பயணம் செயவாரோ?
மவுன விழிகள் திறவாத போதினிலே மெய்யான காதலின்!
கதவுகள் என்றும் திறப்பதுண்டோ? இவ்வுலகினிலே!
வாய்பேசாத மவுனிகளுக்கோ காதல் கனவுகள் நனவாவதில்லையே!

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே ! சிறுதுளிப் பெருவெள்ளங்களே! சின்னஞ்சிறு புள்ளிகள் கூடினால் கோலங்களாயிடுமே! சிற்றுளி சிறுகல்லை செதுக்கினாலே காலங்காலமாகவே! அ

சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!
சின்னஞ்சிறு புள்ளிகள் கூடினால் கோலங்களாயிடுமே!
சிற்றுளி சிறுகல்லை செதுக்கினாலே காலங்காலமாகவே!
அழியாத கலையாகி நின்று நிலைத்து நின்றிடுமே!
சிறு அணுவும் பிளந்தால் பெரும் பிரளயமே உருவாகிடுமே!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!-
நேற்று விழுந்த மழையினில் !
இன்று முளைத்த காளான்கள் அல்ல !
மண்ணின் வரலாறு பண்பாடு!
இணைத்த ஒரு நெடும் சங்கிலியின் கண்ணிதான்!
சிற்றிதழ்களே சிற்றிதழ்களே !
சிறுதுளிப் பெருவெள்ளங்களே!

உன்னதமான கலைஞனே! உனக்காகவே நீயும் எழுதவில்லையே உந்தன் காலத்தை பதிவு செய்கின்றாயே கவிதையே காலத்தின் தேவையாகுமே- கலைஞனே உந்தனுக்கே ! எதிர்காலத்திலே நம

உன்னதமான கலைஞனே!
உனக்காகவே நீயும் எழுதவில்லையே உந்தன் காலத்தை பதிவு செய்கின்றாயே
கவிதையே காலத்தின் தேவையாகுமே-
கலைஞனே உந்தனுக்கே !
எதிர்காலத்திலே நம்பிக்கை இல்லையேன்றாலே!
நிகழ்காலத்தையே உன்னாலே மதிப்பீடு செய்திடவே முடியுமா?
இன்று நீசிந்தும் எழுதுகோலின் மைத்துளி ஒவ்வொன்றும்!
நின்று யுகயுகமாய் மக்கள்கலையினையே நிர்மாணம் செய்திடுமே!

Saturday, September 12, 2009

ஏ! வானம்பாடியே! இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும் இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்! இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!-ஒரு மனித நேயமாகியே ! பழமைமண்ணி

ஏ! வானம்பாடியே!
இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும்
இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்!
இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!-ஒரு
மனித நேயமாகியே !
பழமைமண்ணில் கால்பதித்து!
புதுமை விண்ணில் நீயும் பறந்தாயே!
ஏ! வானம்பாடியே!
இலக்கியவானிலே ஒரு நல்ல முன்னோக்கும்!
இலக்கினை நோக்கியே-மக்கள் கலையின்!
இயக்கமாய் சிறகசைத்த வானம்பாடியே!புதுக்
கவிதையிலே நல்ல சிறுகதையிலே மிளிர்ந்தாயே!
மணிக்கொடி இதழான வானம்பாடியே நீயொரு இதழாய்!
மலர்ந்து இயக்கமாய் பரிணமித்தாயே!

ஏ !வானம்பாடிப் பறவையே-! ஏ! கானம் பாடும் பறவைய -உன்முதுகெல்லாம் கறுப்புதான் -உன்! வயிறெல்லாம் வெளுப்புதான்! நீயும் வயல்வெளியில் இனிமையாகவே! பாடிவரும்

ஏ !வானம்பாடிப் பறவையே-!
ஏ! கானம் பாடும் பறவையே-உன்
முதுகெல்லாம் கறுப்புதான் -உன்!
வயிறெல்லாம் வெளுப்புதான்!
நீயும் வயல்வெளியில் இனிமையாகவே!
பாடிவரும் தேவகானப் பறவையே!
சிற்றினப் பறவையே !
சிங்காரப் பறவையே!
புத்திசாலிப் பறவையே!
பொறுப்பான பறவையே!
சுறுசுறுப்புப் பறவையே!
சுதந்திரமான பறவையே!
ஆகாயத்திலே அந்தரத்திலே !
சுந்தரமானதொரு பாடல் பாடும் பறவையே!

பதிப்பகக் கனவுகளில் படைப்புகளின் இலக்குகளில்! பழைய நினைவுகளில் படைப்புகளைப் பதிவுசெய்ய! பலமுறைப் போராடி அலையாக எண்ணங்கள்! பதிவுகளை வாசிக்கும் வாசகரை ந

பதிப்பகக் கனவுகளில் படைப்புகளின் இலக்குகளில்!
பழைய நினைவுகளில் படைப்புகளைப் பதிவுசெய்ய!
பலமுறைப் போராடி அலையாக எண்ணங்கள்!
பதிவுகளை வாசிக்கும் வாசகரை நோக்கியே!
கற்பனைக் குதிரையினை பறக்கவிட்டு கலையாக்கி!
காலத்தை வெல்லும் படைப்பாக்க போராட்டமே!-மக்கள்
கலையாக்கும் மகத்தானோர் வரிசையிலே!
கலையாக்கும் நேர்த்தியிலே களமிறங்கட்டும் எழுதுகோலே!

பூவே பூவே பூத்திருக்கு பொண்ணு மிங்க காத்திருக்கு! காலத்துல கட்டச்சொல்லி கண்ண கண்ண சிமிட்டிருச்சு! பாவை பாவை அசைஞ்சிருச்சு பருவப்பொண்ணும் சிரிச்சிருச்ச

பூவே பூவே பூத்திருக்கு பொண்ணு மிங்க காத்திருக்கு!
காலத்துல கட்டச்சொல்லி கண்ண கண்ண சிமிட்டிருச்சு!
பாவை பாவை அசைஞ்சிருச்சு பருவப்பொண்ணும் சிரிச்சிருச்சு!
பார்வை ரெண்டும் சேர்ந்திருச்சு பரிசம் நெஞ்சில் போட்டிருச்சு!
பழக்கம் பேசும் இமைகளிலே புதிய கதையும் படிச்சாச்சு!

தெக்க நிலம் வாங்கி தென்னமரம் நானும் வச்சு! தென்னமரம் தென்றலடிக்க செல்லமகள் நீயுறங்கு! தெக்கவச்ச தென்னையில திங்களொரு பூபூக்குமே! தென்னைதந்த செவ்வெழனி

தெக்க நிலம் வாங்கி தென்னமரம் நானும் வச்சு!
தென்னமரம் தென்றலடிக்க செல்லமகள் நீயுறங்கு!
தெக்கவச்ச தென்னையில திங்களொரு பூபூக்குமே!
தென்னைதந்த செவ்வெழனி தேனாக இனித்திடுமே!
வடக்கு நிலம் தன்னில் சிறுதாழ வண்ண வண்ணபூபூக்கும்-தாழம்பூ!
வாடையது வீசிவந்தா வரிசமுகம் கண்ணுறங்கு!
வளமான இந்தியாவை உருவாக்கும் நல்வழியில்!
வாடி நீயும் நடந்துவாடி நடந்து பார்ப்போம் அறிவியலில் !- நாமும்!
வளர்ந்து மக்கள் நல பேரரசாய் ஆக்கிடவே கண்விழிப்பாய்!