Popular Posts

Thursday, December 31, 2009

தமிழ்பாலா/காதல்/கவிதை/அனுபவம்/கவிதையே பேசும் ஓவியமே !ஓவியமே !பேசாத காவியமே! காவியமே! என்னுயிரிலே கலந்துவிட்ட பேரின்பமே! பேரின்பமே என்னாளும் திருநாளாய்

கவிதையே பேசும் ஓவியமே !ஓவியமே !பேசாத காவியமே!
காவியமே! என்னுயிரிலே கலந்துவிட்ட பேரின்பமே!
பேரின்பமே என்னாளும் திருநாளாய் ஆக்கிவிட்ட ஆரணங்கே!
ஆரணங்கே பகுத்தறிவால் அறிகின்ற மெய்ஞானமே!

[கவிதை]?இதுதான் காதலா?-என்னுயிர்க் காதலியே இதுதான் காதலா?இதுதான் காதலா?

[கவிதை]
இதுதான் காதலா?காதல் செய்த மாயமா?
காதலா?இதுதான் காதலா?--என்னுயிர்க் காதலியே இதுதான்
காதலா? காதல் செய்தஇதுதான் காதலா?
நானுன்னையே பாராத பொழுதெல்லாம் நீயென்னை பார்ப்பதாக எண்ணியே-மவுனத்திலே
நீயென்னுடன் பேசாத மொழியெல்லாம் பேசுகின்றாயே காதலியே !
நாளெல்லாம் பார்க்குமிடமெல்லாம் நீயின்றி வேறொன்று காணவில்லையே என் தோழியே!
இதுதான்
காதலா?இதுதான் காதலா?-என்னுயிர்க் காதலியே இதுதான்
காதலா?இதுதான் காதலா?

[கவிதை]எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும் என்றவொரு உயரிய பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்திடவேண்டாமா?

[கவிதை]
கண்டதேகண்டுங் கேட்டதேகேட்டுங் கழிந்தனவே நாளெல்லாம்,
கொண்டதே கோலம் தனியுடைமை கொள்கையே அதிகாரமென ஆள்கின்றதே அரசெல்லாம்,
வாக்குதனை காசுக்கே விற்றுவிட்டு ஏமாற்றும் மனிதரிடம் ஏமாந்து போனோமே!
இனியொரு விதிசெய்வோம் மக்கள்ஜன நாயகம் புரட்சிசெய்குவோம்!
யாவரும் மகிழ்ந்தும் யாவரும்வாழ்ந்தும் யாவரும் உறவாயும்,
யாதும் ஊரே யாவரும் சுற்றத்தாரே எல்லா மக்களும் நம்மக்களே!இம்மண்ணில்
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்
என்றவொரு உயரிய பொதுவுடைமைத் தத்துவத்தை உயர்த்திப் பிடித்திடவேண்டாமா?

புத்தாண்டு சூளுரை!

[கவிதை]
ஒன்று செய்வோம் -அதுவும் நன்று செய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும் மக்களுக்கு
நன்றுசெய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும்
நன்றுசெய்வோம் பணிநாளை
சென்று செய்வோம் என்ற சோர்வின்றி துடிப்புடன்- நல்லனவே
சென்று செய்வோம் நல்லோரின் துணை
நின்று என்றும் நன்று செய்வோம்-
ஒரு நாளும் உறங்காது உண்மை உணர்வுகொண்டு
வாய்மை தவறாது வளமான உள்ளங்கொண்டு
ஒன்று செய்வோம் -அதுவும் நன்று செய்வோம்
இன்றுசெய்வோம் அத்தனையும் மக்களுக்கு
நன்றுசெய்வோம்

காதலன் எந்தனுக்கே! காதல் கடல்கடந்து கரையேறிப் போவதற்கு- கண்ணான துணயாகவே காதலி துடுப்பிருந்தால் போதுமடா!தனிமைதனை வெல்லும் இனிமை ஆகுமடா!

காதலன் எந்தனுக்கே!
காதல் கடல்கடந்து கரையேறிப் போவதற்கு- கண்ணான துணயாகவே
காதலி துடுப்பிருந்தால் போதுமடா!தனிமைதனை வெல்லும் இனிமை ஆகுமடா!
காலமெல்லாம் இல்லற பந்தத்திலே நானும் உறவாகி சிறந்திருப்பேனே!
காற்றுக்கு துணையிருக்கா? கடலுக்கு துணையிருக்கா?வானுக்கு துணையிருக்கா?-இல்லையே
ஆனாலும் காதலன் எந்தனுக்கு துணையிருக்கு காதலி கரமிருக்கு கனிவாம் வாழ்விருக்கு!
அதுஒரு பெரியவரப் பிரசாதம் இல்லையா?

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த நுண்பொருளே!!அம்மா நீ கண்ணுறங்கு! முத்திக்கு வித்தையே ! வாழ்வுக்கு ஆதாரமே!!அம்மா நீ கண்ணுறங்கு! தெம்மாங்கு தேனாறே!

தித்திக்குந் தெள்ளமுதே! சித்தாந்த நுண்பொருளே!!அம்மா நீ கண்ணுறங்கு!
முத்திக்கு வித்தையே ! வாழ்வுக்கு ஆதாரமே!!அம்மா நீ கண்ணுறங்கு!
தெம்மாங்கு தேனாறே! தெவிட்டாத தேனமுதே!!அம்மா நீ கண்ணுறங்கு!
ஆயிரங்காலத்து பயிரே! ஆனந்த பேரூற்றே!அம்மா நீ கண்ணுறங்கு!

முத்திதரும் வேத மொழியோ? நீயென்ன?மெஞ் ஞானஞ்சொல்லவந்த தேவதையோ? மந்திரமாம் காதலுக்குள் தந்திரமானதொரு தாரகையோ? தமிழன்போ? சுந்தரியோ? இந்திரையோ?

முத்திதரும் வேத மொழியோ? நீயென்ன?மெஞ் ஞானஞ்சொல்லவந்த தேவதையோ?
மந்திரமாம் காதலுக்குள் தந்திரமானதொரு தாரகையோ? தமிழன்போ? சுந்தரியோ?
இந்திரையோ? இளமைக்குள் வளமைசேர்க்கும் என்றும்பதினாறு அந்தரியோ?
அந்திமலரோ? ஆகாச பால்வெளிவீதியோ? இந்த பிரபஞ்ச இன்பமெல்லாம் ஒருசேர்ந்த இன்பமேனகையோ?

Wednesday, December 30, 2009

மனிதமே மெய்யென நாமே உணர்ந்திடும் , எல்லோரும் வாழும், வளரும் விஞ்ஞான வழியாம் ,மக்கள்ஜன நாயக வழியாம்,பொதுவுடைமை வழியாம்,மார்க்சீய வழியினில் நடப்பது

சாதியு மதமுஞ் சமயமும் பொய்யென மனிதமே மெய்யென
நாமே உணர்ந்திடும் , எல்லோரும் வாழும், வளரும் விஞ்ஞான வழியாம் ,மக்கள்ஜன நாயக வழியாம்,பொதுவுடைமை வழியாம்,மார்க்சீய வழியினில் நடப்பது நல்லுலகமாக்கிடும்

எவ்வழி மெய்வழி யென்னும் வேதாகமம் அவ்வழி இவ்வுலகினில் நம்சித்தாந்தமாக்கி முன்னேற்றம் கொள்வது நல்வாழ்வாக்கும்

எவ்வழி மெய்வழி யென்னும் வேதாகமம்
அவ்வழி இவ்வுலகினில் நம்சித்தாந்தமாக்கி
முன்னேற்றம் கொள்வது நல்வாழ்வாக்கும்

Tuesday, December 29, 2009

சாதியு மதமுஞ் சமயமுங் காணாத பொதுவுடைமை உலகெல்லாமே! காணும் காலமே வெகுதூரமே இல்லையடா!

சாதியு மதமுஞ் சமயமுங் காணாத பொதுவுடைமை உலகெல்லாமே!
காணும் காலமே வெகுதூரமே இல்லையடா!மனிதனையே அரைப்
பாதியாக்கும் தனியுடைமை தத்துவத்தின்பால் நடக்கும் கொள்கை’
முடிவுக்கு வருகின்ற நற்காலமே வசந்தத்தின் வாசல் திறக்கும்
”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற கணியன் பூங்குன்றனின் வழியினிலே! பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பிடும்
பகுத்தறிவினில் இவ்வுலகினில் வானுயரும் பொற்காலம் கண்ணில் தெரியுதடா!

அவள் அழகினில்,அறிவினில், மயங்கியே! நின்றேன் பறிகொடுத்தேன் என்னெஞ்சினையே!பிரபஞ்ச அருவியாகவே! பாய்ந்துவரும் ஆனந்தத்தின் வசமா னேனனே!

சேயிழையாள் ஆடுகின்றாள் அவள் அழகினில்,அறிவினில், மயங்கியே!
நின்றேன் பறிகொடுத்தேன் என்னெஞ்சினையே!பிரபஞ்ச அருவியாகவே!
பாய்ந்துவரும்
ஆனந்தத்தின் வசமா னேனனே!
ஓடையின் ஓரமே! உயர்மாமலர்ச் சோலைக்குள் நிழல்தேடியே என்னைக்
கோடையும் துரத்திடுதே!-ஆனாலும் வான ஊர்தி ஏறி இந்த வான்மீதில் பறந்திடவே
வளரும் அறிவியல் உண்டே!காதலி அவளின்
சின்ன இடுப்பு நெளிவ தென்ன
சித்திரப் புழுப் போலவே
அவள்
கண்ணில் கண்ட இந்த அத்தானுக்குக்
கலங்கியதோ அவளின் சிந்தை தானே! அவளின்
இதழில் மொய்த்ததுவே எண்ணிலா வண்டுகளே!

Sunday, December 27, 2009

எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோரே! அப்பொருளினையே நம்வாழ்க்கை மெய்ப்பொருள் ஆக்கிடுவோமே!

எப்பொருள் மெய்ப்பொரு ளென்பர் மெய்கண்டோரே!
அப்பொருளினையே நம்வாழ்க்கை மெய்ப்பொருள் ஆக்கிடுவோமே!

நீரினில் நீரே கலந்தது போலவே ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி இருவ ரெனும்தோற்ற மின்றி தென்றலில் தென்றலே தழுவியது போலவே!

நீரினில் நீரே கலந்தது போலவே
ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றி
தென்றலில் தென்றலே தழுவியது போலவே!
தலைவன் அவனும் தலைவி நானும்
தழுவிக் கொண்டது காதல் பேரின்பமே!

காதலன் வருகையின்றி காதல் பிரிவினாலே!காதலி நானும் தின்னும் இரையோ இரவுக்கு நான்?

காதலன் வருகையின்றி
காதல் பிரிவினாலே!காதலி நானும்
தின்னும்
இரையோ இரவுக்கு நான்?
ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே இன்றையப் பொழுது.
- பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் நானே மற்றவரைக் காணநின்று
ஊசலாடுகின்ற உளமாகி வாடி நின்றேனே!

முல்லையெனும் மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே பொன்மாலை யந்திப் பொழுதே!

தேன்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்துமே !
தென்மதுரைத் தென்றல் தழுவவரும் இளமாலைப் பொழுதே!
முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே பொன்மாலை யந்திப் பொழுதே!

Saturday, December 26, 2009

காதல் மலராம் அன்பின் வாசம் அறியாத மனிதரே மனிதவடிவில் திரியும் விலங்குகளே!

மலரினும் மெல்லியது காதல் சிலர்அதன்
இதழினையே கசக்கிடவே முனைவார் -காதல் மலராம்
அன்பின் வாசம் அறியாத மனிதரே மனிதவடிவில் திரியும் விலங்குகளே!
காதலினை வாழ்த்தாமல் இருந்தாலும் பரவாயில்லை -அந்த
காதலினை வீழ்த்தாமல் இருந்தாலே போதுமடா!இவ்வுலகினிலே!

காலமெல்லாம் உவகை கொள்ளுதலும் துணையில் கொண்டாடுவதும் -இவ்வுலகினில் எதுவுமில்லை காதல் ஒன்றினைத் தவிர வேறொன்றுமில்லையே!

உள்ளம் களித்தலும் கண்ணால் காண மகிழ்தலும்!
மதுவிற்கில்லை காதலுக்கு உண்டு என் தோழி!காலமெல்லாம்
உவகை கொள்ளுதலும் துணையில் கொண்டாடுவதும் -இவ்வுலகினில்
எதுவுமில்லை காதல் ஒன்றினைத் தவிர வேறொன்றுமில்லையே!

நினைத்தொன்று சொல்லாயோநெஞ்சே ! நீயும் என்னெஞ்சில் நீயிருக்கும் காரணத்தை நினைத்தோறும் இனிக்கின்ற காதலென்று சொல்லாயோ? நெஞ்சே!

நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே ! நீயும் என்னெஞ்சில் நீயிருக்கும் காரணத்தை
நினைத்தோறும் இனிக்கின்ற காதலென்று சொல்லாயோ? நெஞ்சே!

மாலைசெய்யும் மாயமென்ன காதலனின் பிரிவினிலே காதலி நான் வாடுகையில் மாலையென்னை மயங்கவிட்டு என்னை கொல்வதென்ன? நியாயமா? என் தோழி?

காலைக்கு நான் என்ன? நல்லது செய்தேன் தோழி
மாலைக்கு நான் என்ன? கெட்டது செய்தேன் தோழி?
தென்றலை தழுவவிட்டு காதல்தீயை மூட்டிவிட்டு
தேனிலவை உலவவிட்டு விரகதாபம் சீண்டிவிட்டு
மாலைசெய்யும் மாயமென்ன காதலனின் பிரிவினிலே காதலி நான் வாடுகையில்
மாலையென்னை மயங்கவிட்டு என்னை கொல்வதென்ன? நியாயமா? என் தோழி?

காதலனின் தூதொடு வந்த கனவினுக்கே!-காதலி நானென்ன?விருந்து கொடுத்திடுவேனோ? கனவெல்லாம் நனவாகும் காதலிலே கன்னிமனதினையே பரிசாக தந்திடுவேனோ?

காதலனின் தூதொடு வந்த கனவினுக்கே!-காதலி
நானென்ன?விருந்து கொடுத்திடுவேனோ?
கனவெல்லாம் நனவாகும் காதலிலே
கன்னிமனதினையே பரிசாக தந்திடுவேனோ?

காதல்நோய் செய்தஎன் கண்ணே எந்தனுக்கு பகையாகுமோ?-காதலி எந்தன் காதல் நோய்க்கு மருந்தாகும் காதலனின் கண்சேரும் காலம் வெகுதூரமில்லையே!

காதல்நோய் செய்தஎன் கண்ணே எந்தனுக்கு பகையாகுமோ?-காதலி எந்தன்
காதல் நோய்க்கு மருந்தாகும் காதலனின் கண்சேரும் காலம் வெகுதூரமில்லையே!

காதல் பெருங்கடல் நீந்திக் கரைகாணேன் காதலனே! ஊரும் உறங்கும் வேளையிலே உனக்காக நான்மட்டும் தூங்காமல் யாமத்தும் விழித்துள்ளேன் தெரியவில்லையா?

காதல் பெருங்கடல் நீந்திக் கரைகாணேன் காதலனே!
ஊரும் உறங்கும் வேளையிலே உனக்காக நான்மட்டும் தூங்காமல்
யாமத்தும் விழித்துள்ளேன் தெரியவில்லையா?-இல்லை நீயும்
காதலினை அறிந்தும் அறியாது நீயின்னும் வாராது என்னோடு சேராது -பிரிவாம்
மோதலிலே காலத்தை கழிப்பதென்ன நியாயமா? கூறிடுவாய் என் தோழனே!

பாலொடு தேன்கலந்ததோ! மணிமொழியே என்காதலியே நீ என்னில் கலந்து முத்தமழை தந்தது தானடியே!-அதுவும் தேனடியோ?

பாலொடு தேன்கலந்ததோ! மணிமொழியே என்காதலியே
நீ என்னில் கலந்து முத்தமழை தந்தது தானடியே!-அதுவும் தேனடியோ?

காதலியே !இன்னுயிரே !பெண்ணிலவே !பேரழகே! அனிச்சம்பூவும் அன்னத்தின் சிறகும் கூட உந்தன் பாதத்திற்கே நெருஞ்சிப் பழமாகுமே!

காதலியே !இன்னுயிரே !பெண்ணிலவே !பேரழகே!
அனிச்சம்பூவும் அன்னத்தின் சிறகும் கூட உந்தன் பாதத்திற்கே
நெருஞ்சிப் பழமாகுமே! என் துணையே !விண்மீனே !மண்வாசமே! மனித நேசமே!

இவள்கண் பலர்காணும் பூவாகும் என்று- அந்திமாலையில் அந்த மலர்ச்சோலையில் யாரோ ஒரு கவிஞரே சொன்னார் நெஞ்சே!

இவள்கண்
பலர்காணும் பூவாகும் என்று-
அந்திமாலையில்
அந்த
மலர்ச்சோலையில் யாரோ ஒரு கவிஞரே சொன்னார் நெஞ்சே!
இவள்கண்
பலர்காணும் பூவாகும் என்று-அந்திமாலையில்
அந்த
மலர்ச்சோலையில்
யாரோ ஒரு கவிஞரே சொன்னார் நெஞ்சே!

தன்நோய்க்குத் தானே மருந்தாகும காதல் அன்பே-காதலியே ஊடினாள் உணர்ந்தாள் புணர்ந்தாள் இதனால் காதலையே கூட்டினாள் காதலியே !

தன்நோய்க்குத் தானே மருந்தாகும காதல் அன்பே-காதலியே
ஊடினாள் உணர்ந்தாள் புணர்ந்தாள் இதனால் காதலையே
கூட்டினாள் காதலியே !

அழகுதேவதையே! உன்னிலே!தோழமைப் பெண்ணிலே! கண்ணாலே கண்டுகேட்டேன் நெஞ்சாலே உண்டுயிர்த்தேன் உலகெல்லாமே என்காதலியே! உந்தன் கண்ணதிலே உள்ளதே!

என் ஆருயுரே!
அன்பானவளே !அழகானவளே !அறிவானவளே! பேரின்பமே !அழகுதேவதையே! உன்னிலே!தோழமைப் பெண்ணிலே!
கண்ணாலே
கண்டுகேட்டேன்
நெஞ்சாலே உண்டுயிர்த்தேன் உலகெல்லாமே என்காதலியே! உந்தன்
கண்ணதிலே உள்ளதே!

காதலரின் மவுனத்தின் முன்னே மாபிரபஞ்சமும் கூட மண்டியிடுமே!

காதலாலே தன்வயப்பட்ட காதலரின் காதலன்புக்குள்ளே!
கண்ணொடு கண்களே !நோக்கியபின்னே!வாய்ச்சொற்கள்
என்னடா? ஒரு பயனும் இல்லையடா?-காதலரின்
மவுனத்தின் முன்னே மாபிரபஞ்சமும் கூட மண்டியிடுமே!

காலத்திலே சொல்லாத காதலே கைக்கு வாராது கானல் நீராகுமே

அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!-என்றுமே
காலத்திலே சொல்லாத காதலே
கைக்கு வாராது கானல் நீராகுமே!-அதனாலே
அன்புக் காதலியே!அழகுதேவதையே!
உன்கண்ணாலே அழைப்புதந்து நெஞ்சினிலே நீயும்
செய்யாமல் செய்த அன்பினுக்கே-அன்புக் காதலியே!
வையகமும்
வானகமும் வாழ்த்துக் கூறிடுமே!

அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!

அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு
அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!
அன்பிற்கும் இல்லையடி அடைக்குந்தாழே !
அன்பில்லாதவரோ எல்லாம் தமதென்று கூறிடுவாரே! அன்புடையாரோ
தமதெல்லாம் பிறர்க்கென்று கொடுத்திடுவாரே!
தம்முயிரையும் கூட பிறர்க்கு ஈந்திடுவாரே!மனித நேயமே
தம்வாழ்வென்று வாழ் நாளெல்லாமே வாழ்ந்திடுவாரே!
அன்பின் வழியது உயிர் நிலையாகுமே!அன்புடையார்க்கு
அதுவே வாழ்வின் உயர் நிலையாகுமே!

Friday, December 25, 2009

மழலைச்சொல்லே இனிமை சொல்லே இளமைச் சொல்லே -அந்த தேனினிமை அளாவிய சொற்கேட்டல் -எதனினும் இன்பம் செவிக்கு

இனிய சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.-தத்திப்பேசும் தவழ்ந்து பேசும்

மழலைச்சொல்லே இனிமை சொல்லே இளமைச் சொல்லே -அந்த
தேனினிமை அளாவிய சொற்கேட்டல் -எதனினும்
இன்பம் செவிக்கு

நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே! தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே

வான்நின்று உலகம் வழங்கி வருதலினாலே!
தான்அமிழ்தம் ஆனதடி தேன்மொழியே!
நீ இருந்து அன்பினையே காதலாக வழங்குதலாலே!
தேன் அமுதினையும் விஞ்சி நிற்கும் முத்தமழையானாயே!

Tuesday, December 15, 2009

நின் அறிவின் அறிதலினாலே பகுத்தறிந்தேன்-உன்னிலே! புரிந்தேன் வாழும் மனித நேய வாச மனிதத்தையே!

அறிந்தேன், எவரும் அறியாத காதலையே !,உன்னையே அறிந்துகொண்டு!
சேர்ந்தேன், நினது நெஞ்சினிலே ,அன்பே மனப்புரிதலாலே!
தெரிந்தேன், நின் அறிவின் அறிதலினாலே பகுத்தறிந்தேன்-உன்னிலே!
புரிந்தேன் வாழும் மனித நேய வாச மனிதத்தையே!

மனித நேய உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கமே , மாதுளம்மொட்டே பொன்மாலைப்பொழுதே!, புலர் இளந்தென்றலே! புன்னகைகொஞ்சிடும் பொதுவுடைமைதேசமே !

எப்போதும் எந்தன் சிந்தையுள்ளே-
உதிக்கின்ற செங்கதிரே,உயிரே உயிரின் உள்ளுணர்வே
உச்சித் திலகமே மெச்சும் எந்தன் இன்னிசைத் தமிழே,
மனித நேய உணர்வுடையோர்
மதிக்கின்ற மாணிக்கமே , மாதுளம்மொட்டே பொன்மாலைப்பொழுதே!,
புலர் இளந்தென்றலே! புன்னகைகொஞ்சிடும் பொதுவுடைமைதேசமே !