Wednesday, May 26, 2010
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உண்மைக் காதல் அன்புபோலவே உனது அன்புள்ளம் என்ன?எங்களுக்கு ஒன்றும் புரியாததா?
தென்மேற்குப் பருவக்காற்றே! தென்மேற்குப் பருவக்காற்றே!-எங்களையே
தேடிவந்து உன்வரவினைச் சொல்லியே!-சன்னலின் கதவுகளையே நீயும்
ஓடிவந்து அன்புடனே தட்டுவதேனோ?
உன்வரவு எங்களுக்கு நல்வரவானதே!
உண்மைக் காதல் அன்புபோலவே உனது அன்புள்ளம்
என்ன?எங்களுக்கு ஒன்றும் புரியாததா?
தேடிவந்து உன்வரவினைச் சொல்லியே!-சன்னலின் கதவுகளையே நீயும்
ஓடிவந்து அன்புடனே தட்டுவதேனோ?
உன்வரவு எங்களுக்கு நல்வரவானதே!
உண்மைக் காதல் அன்புபோலவே உனது அன்புள்ளம்
என்ன?எங்களுக்கு ஒன்றும் புரியாததா?
தமிழ்பாலா-காதல்/கவிதை’தத்துவம்/தோழமை துணையிருக்கும் என்பதினாலே!
பார்த்துவா பார்த்துவா இளந்தென்றலே- நீவரும்
பாதையெங்கும் முட்காடுகளாய் இருப்பதினாலே!
சேர்ந்துவா சேர்ந்துவா என் தோழனோடு-
வரும்பாதை தோறும் உந்தனுக்கு எந்தன்
தோழமை துணையிருக்கும் என்பதினாலே!
பார்த்துவா பார்த்துவா இளந்தென்றலே- நீவரும்
பாதையெங்கும் முட்காடுகளாய் இருப்பதினாலே!
பாதையெங்கும் முட்காடுகளாய் இருப்பதினாலே!
சேர்ந்துவா சேர்ந்துவா என் தோழனோடு-
வரும்பாதை தோறும் உந்தனுக்கு எந்தன்
தோழமை துணையிருக்கும் என்பதினாலே!
பார்த்துவா பார்த்துவா இளந்தென்றலே- நீவரும்
பாதையெங்கும் முட்காடுகளாய் இருப்பதினாலே!
Sunday, May 16, 2010
அன்புமழை பொழிகின்ற உன்னிதயத்தில் எனக்கு இடமுண்டோ?
எறும்புகளிடம் தான்கேட்டிடவேண்டும் சேமிப்பின் இலக்கணத்தையே!என்னருமைக் காதலியே
உன்னிடம்தான் கற்றிடவேண்டும் காதலின் தத்துவத்தையே!
அரும்புகளாய் குறும்புகள் செய்யும் வசந்த காலங்களே
அன்புமழை பொழிகின்ற உன்னிதயத்தில் எனக்கு இடமுண்டோ?
பூவாய் மலர்ந்தது தளிராய் மிளிர்ந்தது காதலடி
புன்னகை சிந்திடும் தாமரைக் குளத்தினில் மோதுமடி
கூழாங்கல்லிலும் குடியிருக்கும் அழகுக் காதலடி
கூடிப் பறந்திடும் வண்டுகள் இதயத்திலும் ஓடுமடி
உன்னிடம்தான் கற்றிடவேண்டும் காதலின் தத்துவத்தையே!
அரும்புகளாய் குறும்புகள் செய்யும் வசந்த காலங்களே
அன்புமழை பொழிகின்ற உன்னிதயத்தில் எனக்கு இடமுண்டோ?
பூவாய் மலர்ந்தது தளிராய் மிளிர்ந்தது காதலடி
புன்னகை சிந்திடும் தாமரைக் குளத்தினில் மோதுமடி
கூழாங்கல்லிலும் குடியிருக்கும் அழகுக் காதலடி
கூடிப் பறந்திடும் வண்டுகள் இதயத்திலும் ஓடுமடி
Subscribe to:
Posts (Atom)