Popular Posts

Thursday, December 11, 2008

என்னை காப்பாத்துங்க!


நான் யார்? என்னை நீங்க ஏன் காப்பத்தணும்? என்னை காப்பத்தலைனா நீங்க எப்படி வாழ முடியும்? நான் நான் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்ச பூதங்களை கொண்ட இயற்கை.

நான் இப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறேன். என்னை உடனே காப்பாற்றவில்லை என்றால் நீங்களும் என்னோட அழிய வேண்டியது தான். நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன்? உங்களுக்கு என்ன கொடுக்கவில்லை? உங்கள் அனைவரையும் ஏன் உங்கள் பாட்டன் முப்பாட்டன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன், பாட்டி, முதல் உயிரினம் முதல் இன்று இப்போது பிறந்த பிறக்கும் உயிர்களுக்கும் என்னை விட்டால் யார் அவர்களை காக்க முடியும்?

ஏன் இப்படி பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள் நான் ஆரம்ப காலத்தில் இருந்ததை போல இப்போது இல்லை, என்னால் தூய்மையாக இருக்க முடியவில்லை, காரணம் நீங்கள் தான் என்னை பாழ்படுத்தியதே நீங்கள் தான். என்னால் உங்களுக்கு அளிக்கப்பட்ட கொடை, பரிசு எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் நீர், தண்ணீர், ஆறாக உருவெடுத்து உங்களுக்கு தாகத்தை தீர்ப்பதற்கும், விவசாயம் பார்த்து உணவு கொடுக்கவும் எது இருந்தால் முடியும் தண்ணீர். என்னுள் ஒரு பகுதியான ஆற்று தண்ணீர் இப்போது உங்களால் கழிவுகள் கலக்கப்பட்டு, வேதியியல் மாற்றங்களால் உங்களுக்கே நஞ்சாக போகிறது.

புதுவிதமான மாற்றங்கள் என்னுள் நான் அழிந்து கொண்டு இருக்கிறேன். இதனால் என்னை பருகும் நீங்கள் புதுவிதமான நோய்களுக்கு ஆட்படுகிறீர்கள். நானா என்னுள் கழிவுகளை போட்டுக்கொண்டேன்.

யாராவது தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவரை கொன்று புதைப்பானா? நீங்கள் என்னை புதைக்க குழி தோண்டி கொண்டிருக்கிறீர்கள். நான் அழியப்போகிறேன். என்னுள் ஏற்பட்ட இந்த பல வேதியியல் மாற்றங்களால் நான் உங்களையும் சேர்த்து அழிக்கபோகிறேன்.

என்னுள் மற்றொரு பகுதியான நிலம் அய்யோ சொல்லவே மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் மரங்களால் நிறைந்து காணப்பட்டால் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. நான் என்னால் தூய்மையான காற்று தருவேன். நீங்கள் நிம்மதியாக சுவாசிக்கலாம். ஆனால்,

நான் காங்கிரீட் மரங்களாக (கட்டிடங்கள்) உருமாறினால் எங்கே நான் மரங்களை கொண்டிருப்பது. என்னால் நிலத்தடி நீரை இனியும் உங்களுக்கு தர முடியுமா?

நான் உங்களை தான் கேட்கிறேன். என்னுடைய மற்றொரு பகுதி ஆகாயம் என்னுள் உங்களை காப்பதற்காக அமைந்திருந்த ஓசோன் படலத்தில் நீங்கள் தான் ஓட்டை போட்டீர்கள். மாசடைந்த காற்றால் நான் நாசமடைந்தேன். வாக புகை, தொழிற்சாலை புகை, இன்னும் எவ்வாறெல்லாமோ என்னுள் ஒரு பகுதி காற்று மாசடைந்து சீர் கெட்டு போய்விட்டது. காற்று இல்லாமல் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் உயிர் வாழ முடியுமா? ஏன், ஒரு நிமிடம் இருக்க முடியுமா?

நான் தூய்மையிழந்து போய்விட்டேன். காப்பாற்றுங்கள்!

உங்களால் என்னுள் ஒரு பகுதி மட்டும் விஸ்வரூபம் எடுத்து கொண்டு இருக்கிறது நெருப்பு! ஆ! ஆ! ஆ! ......

எனக்கு எரிகிறது நான் சூடாகிறேன். என்னால் தாங்க முடியவில்லை, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய உங்களை சும்மா விடமாட்டேன்.

வருகிறேன்! உங்களை அழிக்க வெள்ளம், வறட்சி, பூகம்பம், சுனாமியாக வருகிறேன்! வந்து கொண்டே இருக்கிறேன்!

ஒரு வாய்ப்பு நான் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். இப்படி இந்த என் நிலைக்கு நானா காரணம்? சரி போகட்டும் கடைசி வாய்ப்பு என்னை காப்பாற்று! என்னால் உன்னை காப்பாற்ற முடியாதா என்ன? நான் பழைய தாய்மை நிலைக்கு வந்தால் நானும் வாழ்வேன் என்னால் நீயும் வாழ்வாய்! என்னை காப்பாற்றுவாய் என்று நினைக்கிறேன்?!?

பூ விமர்சனம்


அழகான ஓவியத்தை மேலும் அழகு படுத்தி தந்த இயக்குனர் சசி அவர்களுக்கு ஒரு பூ என்ன? ஒரு பூந்தோட்டமே கொடுக்கலாம்.
இப்படியும் ஒரு பெண்ணா? என வியக்கிறோம். நாம் படத்தை பார்த்து விட்டு வந்தாலும் மாரி (பார்வதி)யின் முகம் நம் உள்ளத்தை விட்டு அகல சில நாட்கள் வேண்டும். மாரியாக நடித்த பெண் புது முகமா? இல்லை ஷோபா பிறந்து வந்து விட்டாரா? என வியக்க தோன்றுகிறது. நாம் அனைவரும் ஒரு காவியத்தை குறை சொல்லி அதன் சின்ன சின்ன குறைகளை பெரிது படுத்தாமல் அதன் நிறைகளை பார்த்து அந்த கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தாலே இது போன்ற படைப்புகள் நம் தமிழ் சினிமாவை உயர்த்தும். பூ படத்தின் அனைத்து அறிமுக கலைஞர்களுக்கும் பாராட்டுகள். கதையை நான் சொல்வதைவிட நீங்களே படத்தை பார்த்து எனக்கு பதில் சொல்லுங்கள். படத்தின் கதாநாயகன் கதையும் கதாநாயகியும் ஆகும்.

வாழ்க நம் தேசம்! ஒழிக தீவிரவாதம்!


நம் இந்திய திருநாட்டில் தீவிரவாதத்தை ஓழிக்கவும் நம் தேசத்தை காக்கவும் நாம் அனைவரும் ஒன்று படுவோமாக!
தீவிரவாதி எப்படி உருவாகிறான். தவறான கொள்கைகள் கொண்ட சிலரால் (பலரால்?) மூளைசலவை செய்யப்பட்டு உருவெடுக்கிறான்.
தீவிரவாதிகளை நம்மால் ஒழிக்க முடியுமா? நம் தேசம் எதிர்காலத்தில் பயமில்லாமல் இருக்க முடியுமா? நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய திருநாடு என்றும் நிம்மதி அடைய என்ன வழி?

Saturday, July 19, 2008

நிலையில்லாத உலகம்!


8 வயதில் புரியாத உலகம்!
18 வயதில் புதிய உலகம்!
28 வயதில் இனிய உலகம்!
38 வயதில் வேக உலகம்!
48 வயதில் கடமை உலகம்!
58 வயதில் சுமையான உலகம்!
68 வயதில் பேரன்,பேத்தி உலகம்!
78 வயதில் ஓய்வு உலகம்!

பிறப்பு முதல் ஜீவன் உள்ள வரை
நிலையில்லாத உலகம்!

Wednesday, June 25, 2008

புதுக்குறள்


அன்புடைமை

1. பூவிற் சிறந்த பூ அன்பு
அப்பூ மானிட பண்பு.
2. அன்பு இல்லதவன் மனிதனே யானாலும்
அவன் மிருக ஜாதி.
3. சிறப்பாக வாழ அன்பு செலுத்து
இன்பம் உன் தலையெழுத்து.
4. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்பாள்
மனம்போட்ட பூட்டிற்கு பிறகு.
5. கண்ணில் கருணை காட்டு காட்டிற்
கடவுள் உன் காலடியில்.
6. அன்பு உன் குண மானால்
என்றும் நீ ஒன்று.
7. நீயுண்டு உன் வேலையுண்டு என்றிலாமல்
உயிர்களிடம் அன்பு காட்டு.
8. அன்பால் உயர்ந்தோர் சிலர் அன்புசெலுத்து
நீயுமொரு அன்னை தெரசா.
9. அன்பிலார் அன்பை ஏளனம் செய்வார்
இழிநிலை அடையும் பொருட்டு.
10. அன்பை அன்பால் அன்பின்பால் அன்பால்
அன்பு காட்டுதல் மாண்பு.

மணற்சிற்பத்தின் சிரிப்பு!


மணற்சிற்பமே நீ எப்போதெல்லாம் சிரிப்பாய்?


தூய்மையான காற்று உலகில்


உலவக் கண்டால் சிரிப்பேன்....


காடுகள் அழிக்கா மனிதன்


உலகில் கண்டால் சிரிப்பேன்...


வீட்டிற்கொரு மரம் வளர்க்கும்


குடும்பம் கண்டால் சிரிப்பேன்...


அசுத்தமில்லா நீரை மக்கள்


குடிக்கக் கண்டால் சிரிப்பேன்...


பாரில் மாதம் மும்மாரி


மழை பொழிந்தால் சிரிப்பேன்...


நிலத்தடி நீர் உயர மக்கள்


மழை நீரை சேமித்தால் சிரிப்பேன்...


இயற்கையான உரத்தை உழவன்


பயன்படுத்த கண்டால் சிரிப்பேன்....


தொழிற்சாலைகள் கழிவுகள் கலக்காத


ஆற்றை கண்டால் சிரிப்பேன்...


மாசுக்காற்றால் ஓசோனில் ஓட்டை பூமியில் வெப்பம்


அதிகரிக்காமல் இருந்தால் சிரிப்பேன்...


பனிப்பாறைகள் உருகாமல் கடல்நீர்


கூடாமல் இருந்தால் சிரிப்பேன்...


சுற்றுச்சூழல் பாதுகாக்கும் மக்கள்


தனை கண்டால் சிரிப்பேன்...


போரால் அணுகுண்டு வீசாத


வளர்ந்தநாடு தனை கண்டால் சிரிப்பேன்...


ஹிரோசிமா, நாகசாஹி நிலை


இனி நிகலாதென்றால் சிரிப்பேன்...


இயற்கையை செயற்கையால் அழிக்கும்


மக்கள் இல்லையென்றால் சிரிப்பேன்...


அத்துமீறி நுழையும் பெரியநாடு


இல்லா பூமி இருந்தால் சிரிப்பேன்...


எல்லை பிரச்சனையில்லா காஷ்மீரை (நிம்மதியை)


பாக்., கொடுத்தால் சிரிப்பேன்...


நாட்டின் எல்லைவாழ் மக்களின்


சுதந்திரம் கிடைத்தால் சிரிப்பேன்...


பலகட்சியில்லா பாரதம் கண்டால்


என்றென்றும் எப்போதும் சிரிப்பேன்...


அமைதியான உலகம் அழகான இயற்கை


கிடைக்குமென்றால் தொடர்ச்சியாக சிரிப்பேன்...


சற்றுபொறு.... ஆ... ஓடு... ஓடு...


இயற்கை என்னை


அழிக்க வருகிறது சுனாமி!


நான் அழுகிறேன்!


மணற்சிற்பம் மணலாக மாறியது.

பாரில் சிறந்த பாரத நாடே!


பார் உந்தன் அழுக்கதனை
பாரத நாடே!
பண்பு கெட்ட மனிதர் சிலர் பார்
பாரத நாடே!
லஞ்சம் வாங்கும் அதிகாரி தனை பார்
பாரத நாடே!
குடிமக்கள் இரத்தம் குடிக்கும் அதிகாரி, அரசியல்வாதி தனை பார்
பாரத நாடே!
கருப்பு பணமாக மாறும் பணம் தனை பார்
பாரத நாடே!
வரி ஏய்ப்பு செய்யும் செல்வந்தன் தனை பார்
பாரத நாடே!
இந்நிலை எப்போது மாறும் உன் வண்ணம் என்று பொழிவு பெறும்?

Thursday, June 5, 2008

சுற்றுச்சூழல் பாதுகாப்பு




  • சுற்றுச்சூழலை பாதுகாப்பது தற்காலத்தில் மிக மிக அவசியம். ஆனால் பெரும்பாலான மக்களும், அரசும் சுற்றுச்சூழலை பாதுக்காப்பதில் அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.


  • மனிதன் தன் தேவைக்காக மரங்களை அளவுக்கு அதிகமாகவே அழித்துவிட்டான். தற்போதைய சூழலில் நகரங்களில் மட்டுமல்ல கிராமங்களிலும் தூய காற்று மக்களுக்கு கிடைப்பதில்லை. காரணம் எல்லா இடங்களிலும் மரங்கள் அதிகமாக வெட்டப்படுவதால், நம் இந்திய திருநாட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்க அதிகரிக்க காற்றுமாசு ஏற்படுகிறது அதோடு கூட இரைச்சல் என்றும் எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கறது.


  • போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாகவும், காற்றுமாசுக்கு முக்கிய காரணமாகவும் அமைவது தனிநபர்கள் (பணக்கார, நடுத்தர)பலர் இருசக்கர, நான்குசக்கர வாகனங்களை அதிகமாக பயன் படுத்தி வருவதாகும். இதனால் ரோட்டில் நடந்தும், மிதிவண்டியிலும் செல்லும் ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.


  • நம்நாட்டில் பணக்கார, நடுத்தர வர்கத்தினர்களை விட அதிகமாக இருப்பவர்கள் ஏழை மக்கள் தான் என்பதை நாம் மறுக்க முடியுமா? டாட்டாவின் நானோ காரை பற்றி கேள்விபடுகிறோம். இந்தக்கார் நடுத்தர மக்கள் பலரும் வாங்கி அவர்கள் அனைவரும் ஒரே சமயத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு கார் என்று பயணம் செய்தால் ரோட்டில் அந்த கார்கள் செல்ல இடம் இருக்குமா? அல்லது நெரிசல் தான் தவிர்கப்படுமா? அல்லது காற்று தான் மாசுபடாமல் இருக்குமா? அல்லது இரைச்சல் தான் கேட்காமல் இருக்குமா? அல்லது பயணம் செய்வது எதற்கோ அந்த வேலையை தான் உரியநேரத்தில் முடிக்கமுடியுமா? இப்போதே சென்னை போன்ற நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியால் ஒருமணி நேரத்தில் செல்லவேண்டிய இடத்திற்கு அதிகபட்சம் போக்குவரத்து நெருக்கடி அதிகமாக இருக்கும் நேரத்தில் இரண்டு மணிநேரத்திற்கு மேல் கூட ஆகலாம்.


  • நாம் இந்த நிலையை போக்குவது எப்படி? சுற்றுச்சூழல் பாதிப்பால் இயற்கை அதன் தன்மையை மாற்றிக்கொண்டு வருவதால் வெள்ளம், போன்ற பல்வேறு இயற்கை பாதிப்புகள் ஏற்படுகின்றது.


  • ஓசோனில் ஓட்டை ஏற்பட்டுவிட்டது அதை அடைக்க முடியாது என்றாலும் இனிமேலும் ஓட்டை அதிகமாக ஏற்படா வண்ணம் முயற்சி மேற்கொள்வது ஒவ்வொரு தனிமனிதனின் கடமை.


  • மரம் வளர்போம்! காற்று மாசுபாட்டை தடுக்க முயற்சி மேற்கொள்ளோம்!

Tuesday, May 6, 2008

புதுக்குறள்


அன்னை மனம் அமைவ தெலாம்


ஆதிபகவன் முதற்றே உலகு.


கற்றதனால் ஆய பயன் அவ்வறிவை


பயன் படுத்தும் விதம்.