Popular Posts

Thursday, December 11, 2008

என்னை காப்பாத்துங்க!


நான் யார்? என்னை நீங்க ஏன் காப்பத்தணும்? என்னை காப்பத்தலைனா நீங்க எப்படி வாழ முடியும்? நான் நான் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு எனும் பஞ்ச பூதங்களை கொண்ட இயற்கை.

நான் இப்போது மிகவும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறேன். என்னை உடனே காப்பாற்றவில்லை என்றால் நீங்களும் என்னோட அழிய வேண்டியது தான். நான் உங்களுக்கு என்ன குறை வைத்தேன்? உங்களுக்கு என்ன கொடுக்கவில்லை? உங்கள் அனைவரையும் ஏன் உங்கள் பாட்டன் முப்பாட்டன், முப்பாட்டனுக்கு முப்பாட்டன், பாட்டி, முதல் உயிரினம் முதல் இன்று இப்போது பிறந்த பிறக்கும் உயிர்களுக்கும் என்னை விட்டால் யார் அவர்களை காக்க முடியும்?

ஏன் இப்படி பேசுகிறேன் என்று நினைக்காதீர்கள் நான் ஆரம்ப காலத்தில் இருந்ததை போல இப்போது இல்லை, என்னால் தூய்மையாக இருக்க முடியவில்லை, காரணம் நீங்கள் தான் என்னை பாழ்படுத்தியதே நீங்கள் தான். என்னால் உங்களுக்கு அளிக்கப்பட்ட கொடை, பரிசு எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள் நீர், தண்ணீர், ஆறாக உருவெடுத்து உங்களுக்கு தாகத்தை தீர்ப்பதற்கும், விவசாயம் பார்த்து உணவு கொடுக்கவும் எது இருந்தால் முடியும் தண்ணீர். என்னுள் ஒரு பகுதியான ஆற்று தண்ணீர் இப்போது உங்களால் கழிவுகள் கலக்கப்பட்டு, வேதியியல் மாற்றங்களால் உங்களுக்கே நஞ்சாக போகிறது.

புதுவிதமான மாற்றங்கள் என்னுள் நான் அழிந்து கொண்டு இருக்கிறேன். இதனால் என்னை பருகும் நீங்கள் புதுவிதமான நோய்களுக்கு ஆட்படுகிறீர்கள். நானா என்னுள் கழிவுகளை போட்டுக்கொண்டேன்.

யாராவது தாகத்திற்கு தண்ணீர் கொடுத்தவரை கொன்று புதைப்பானா? நீங்கள் என்னை புதைக்க குழி தோண்டி கொண்டிருக்கிறீர்கள். நான் அழியப்போகிறேன். என்னுள் ஏற்பட்ட இந்த பல வேதியியல் மாற்றங்களால் நான் உங்களையும் சேர்த்து அழிக்கபோகிறேன்.

என்னுள் மற்றொரு பகுதியான நிலம் அய்யோ சொல்லவே மிகவும் வருத்தமாக இருக்கிறது. நான் மரங்களால் நிறைந்து காணப்பட்டால் உங்களுக்கும் நல்லது எனக்கும் நல்லது. நான் என்னால் தூய்மையான காற்று தருவேன். நீங்கள் நிம்மதியாக சுவாசிக்கலாம். ஆனால்,

நான் காங்கிரீட் மரங்களாக (கட்டிடங்கள்) உருமாறினால் எங்கே நான் மரங்களை கொண்டிருப்பது. என்னால் நிலத்தடி நீரை இனியும் உங்களுக்கு தர முடியுமா?

நான் உங்களை தான் கேட்கிறேன். என்னுடைய மற்றொரு பகுதி ஆகாயம் என்னுள் உங்களை காப்பதற்காக அமைந்திருந்த ஓசோன் படலத்தில் நீங்கள் தான் ஓட்டை போட்டீர்கள். மாசடைந்த காற்றால் நான் நாசமடைந்தேன். வாக புகை, தொழிற்சாலை புகை, இன்னும் எவ்வாறெல்லாமோ என்னுள் ஒரு பகுதி காற்று மாசடைந்து சீர் கெட்டு போய்விட்டது. காற்று இல்லாமல் நீங்கள் ஒரு ஐந்து நிமிடம் உயிர் வாழ முடியுமா? ஏன், ஒரு நிமிடம் இருக்க முடியுமா?

நான் தூய்மையிழந்து போய்விட்டேன். காப்பாற்றுங்கள்!

உங்களால் என்னுள் ஒரு பகுதி மட்டும் விஸ்வரூபம் எடுத்து கொண்டு இருக்கிறது நெருப்பு! ஆ! ஆ! ஆ! ......

எனக்கு எரிகிறது நான் சூடாகிறேன். என்னால் தாங்க முடியவில்லை, என்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய உங்களை சும்மா விடமாட்டேன்.

வருகிறேன்! உங்களை அழிக்க வெள்ளம், வறட்சி, பூகம்பம், சுனாமியாக வருகிறேன்! வந்து கொண்டே இருக்கிறேன்!

ஒரு வாய்ப்பு நான் இறுதி கட்டத்தில் இருக்கிறேன். இப்படி இந்த என் நிலைக்கு நானா காரணம்? சரி போகட்டும் கடைசி வாய்ப்பு என்னை காப்பாற்று! என்னால் உன்னை காப்பாற்ற முடியாதா என்ன? நான் பழைய தாய்மை நிலைக்கு வந்தால் நானும் வாழ்வேன் என்னால் நீயும் வாழ்வாய்! என்னை காப்பாற்றுவாய் என்று நினைக்கிறேன்?!?

பூ விமர்சனம்


அழகான ஓவியத்தை மேலும் அழகு படுத்தி தந்த இயக்குனர் சசி அவர்களுக்கு ஒரு பூ என்ன? ஒரு பூந்தோட்டமே கொடுக்கலாம்.
இப்படியும் ஒரு பெண்ணா? என வியக்கிறோம். நாம் படத்தை பார்த்து விட்டு வந்தாலும் மாரி (பார்வதி)யின் முகம் நம் உள்ளத்தை விட்டு அகல சில நாட்கள் வேண்டும். மாரியாக நடித்த பெண் புது முகமா? இல்லை ஷோபா பிறந்து வந்து விட்டாரா? என வியக்க தோன்றுகிறது. நாம் அனைவரும் ஒரு காவியத்தை குறை சொல்லி அதன் சின்ன சின்ன குறைகளை பெரிது படுத்தாமல் அதன் நிறைகளை பார்த்து அந்த கலைஞர்களுக்கு ஊக்கம் கொடுத்தாலே இது போன்ற படைப்புகள் நம் தமிழ் சினிமாவை உயர்த்தும். பூ படத்தின் அனைத்து அறிமுக கலைஞர்களுக்கும் பாராட்டுகள். கதையை நான் சொல்வதைவிட நீங்களே படத்தை பார்த்து எனக்கு பதில் சொல்லுங்கள். படத்தின் கதாநாயகன் கதையும் கதாநாயகியும் ஆகும்.

வாழ்க நம் தேசம்! ஒழிக தீவிரவாதம்!


நம் இந்திய திருநாட்டில் தீவிரவாதத்தை ஓழிக்கவும் நம் தேசத்தை காக்கவும் நாம் அனைவரும் ஒன்று படுவோமாக!
தீவிரவாதி எப்படி உருவாகிறான். தவறான கொள்கைகள் கொண்ட சிலரால் (பலரால்?) மூளைசலவை செய்யப்பட்டு உருவெடுக்கிறான்.
தீவிரவாதிகளை நம்மால் ஒழிக்க முடியுமா? நம் தேசம் எதிர்காலத்தில் பயமில்லாமல் இருக்க முடியுமா? நாம் வேற்றுமையில் ஒற்றுமை கண்ட இந்திய திருநாடு என்றும் நிம்மதி அடைய என்ன வழி?