Popular Posts

Thursday, April 28, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-சீ”சீ” இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கதையாய் போய்விடுமோ? ”

கள்ளிக் காட்டிலும் நீ கால்மிதித்து போனபோது -கோடிக் கோடிக்
கனகாம்பர மலர்களும் மலர்ந்ததடி!என்வாழ்வின்
வசந்த காலமே!என்மனதினில் நீயும் போட்டுவிட்டாய் காதல் கோலமே!
எந்தன் தனிமைக்கு இனிமேல் விடுமுறைக் காலமே!
நமது இனிமைக்கு கொட்டட்டும் மங்கள மேளமே!

என் இரவுகளின் விடியலே
உன்னிரு ஓரப்பார்வையிலே தூங்குதடி!

என்னெதிர் வீட்டு சன்னலை மட்டுமல்ல
என்னிதயத்தின் கதவுகளையும் நீ திறந்தாயே!
உன்முதல் பார்வையிலேயே
என்னை நீயும் கைதுசெய்து
உன்னிதயத்திலேயே சிறைவைத்தாயே!.!

உனது கண்கள் ஏனடி மெளன மொழிமட்டும் பேசியது?
உன்னிதழின் புன்னகை முறுவல் மட்டும் ஏனடி மாயமானது?
கண்களில் மட்டும் சொல்லி இதழினில் வாராத காதலேனடி?எத்தனை நாட்கள் தான்
காதலை நெஞ்சினில் சுமந்து சொல்லாத காதலேனடி?



காதலின் உண்மை விளங்கவே காலங்கள் எத்தனை ஆகுமடி?- நானும்
காலமெல்லாம் எனது நெஞ்சம் ஊமையாக காத்திருக்கவோ?
காத்திருந்த காலமெல்லாம் கனவாகிப் போயிடுமோ>-இல்லை
சீ”சீ” இந்தப் பழம் புளிக்கும் என்ற நரிக்கதையாய் போய்விடுமோ?

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/”!இந்த உலகமுள்ள வரையிருக்கும் விஞ்ஞானக் காதலே!

உன்மனதினிலும்
என்மனதினிலும்!-என்றும்
கடலலையாய் ஓயாதிருக்கும்! பேரின்பக் காதலே!ஈர மணலாய்
காலமெல்லாம் காயாதிருக்கும் உனதன்புப் பார்வையே!
உடலில்லை உளமிருக்கும் மெய்ஞானக் காதலே!இந்த
உலகமுள்ள வரையிருக்கும் விஞ்ஞானக் காதலே!

பார்த்தவுடன் பரவசமிருக்கும் பக்குவக் காதலே-கண்ணில்
படித்தவுடன் சுகமிருக்கும் இலக்கியக் காதலே!!
நினைத்தவுடன் இதமிருக்கும் கவிதைக் காதலே!
அணைத்தவுடன் மயக்கமிருக்கும் பருவக் காதலே!

உடலுக்குள் அதிமோகமிருக்கும் வன்முறைக் காதலே!
இளவயதில் அறியாதிருக்கும் சிறுமைக் காதலே!
முதுமையிலும் தொடர்ந்துவரும் உண்மைக் காதலே!
மனைவிவிட்டு வேறுதொடரும் கள்ளக் காதலே!
மாற்றான் மனைவி நினைக்கும் அழிவுக் காதலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே! தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!

தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே!
தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த
திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று
தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!

காதலர்க்கு
காதல் என்றும் மனதினில் சலனமே!
காலம் முழுவதும் நெஞ்சின் கானமே!
காணும் வாழ்வதின் இன்பத் தியானமே!
கருத்தினில் தொடர்ந்திடும் அன்பு வானமே!


தங்கத் தாவணியிலே ஒரு லில்லிமலரே!
தாவிக் குதித்திடும் இளந்தென்றலிலே!-அந்த
திருவிழாவில் பார்த்த நந்தவனமே!இன்று
தேடி வந்தது அன்புப் பிருந்தாவனமே!அவளின்
அறிமுக நாளிலிருந்து என்றென்றுமே=கண்ணில்
ஆடிப் பார்த்திடும் குடைராட்டினமே!-காதலர்க்கு
காதல் என்றும் மனதினில் சலனமே!
காலம் முழுவதும் நெஞ்சின் கானமே!
காணும் வாழ்வதின் இன்பத் தியானமே!
கருத்தினில் தொடர்ந்திடும் அன்பு வானமே!

Sunday, April 24, 2011

தமிழ்பாலா/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-!தனியுடைமையே! கதியேன்பது ஒருசமூகத்தின் உயர்வில்லையே!

காதல் உறவுக்கு எதுவும் எதிரில்லை தானே -அதையே நானே
கடைக்கண்ணில் கண்டு கொண்டேனே!
வானின்று அழைக்கும் மழையினைப் போல்
தானின்று அழைத்தாள் எனதன்புக் காதலியே!மெய்யாலே
நானின்று அழைப்பது காதலன்புக் கருதியே!

கண்ணகத்து நின்று நானும் காதலித்தேனே!-சேர்ந்தே
பண்ணகத்து இசையாய் அவளும் காதலித்தாளே!-இருவரும்
விண்ணகத்து மீனாய் இணைந்து ஒளிர்ந்தோமே!
மண்ணகத்து பயிராய் சேர்ந்து அசைந்தோமே!

விதிவழி என்பது வாழ்வெல்லை இல்லையே!
விதியை எண்ணி வீழ்வதிலே இன்பமில்லையே!-பிறர்
துதிபாடும் வாழ்வு என்பது வாழ்வில்லையே!தனியுடைமையே!
கதியேன்பது ஒருசமூகத்தின் உயர்வில்லையே!

தமிழ்பாலா/காதல்/கவிதை/ஹைக்கூ/தத்துவம்/அரசியல் / அனுபவம்/-காதலியே என் தோழியே!

காதலியே என் தோழியே! என் துணையே என் வாழ்வின் இலக்கே!
கடைக்கண் காட்டியென் கண்ணெதிரில் எனைக் கடந்து சென்றாள்
அன்புமொழி பேசித் தினமும் எனைக் கடந்து சென்றாள்
நெஞ்சமெல்லாம் தானிறைந்து எனைக் கடந்து சென்றாள்
நினைவெல்லாம் அலைபாய்ந்து எனைக் கடந்து சென்றாள்

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/--புரட்சிக்கே வித்திடவே நல்லோர்கள் அணிவகுக்கும் காலமடி!

மலர்க்கூட்டம் அமர்ந்து இனிதே வண்டார்க்கும் காலமடி!
வரிக்குயில்கள் மாமரத்து இளந்தளிர் கோதிவிடும் காலமடி!-காதல்
இளையவர்க்கு எல்லாம் இளந்தென்றல் அமுதளிக்கும் காலமடி!
இளநிலவே புதுக்கனவில் எழுந்து மலர்ந்திருக்கும் காலமடி!
புதுக்கவிதை எழுதுகின்ற இளங்கவிஞன் அமர்ந்திருக்கும் காலமடி!
போராளி தன்மக்களுக்கு போராட நாள்பார்க்கும் காலமடி!
புரட்சிக்கே வித்திடவே நல்லோர்கள் அணிவகுக்கும் காலமடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/பேரெழிலாம்!-

உன்னழகை மயில்கண்டால் மயிலினுக்கே வருத்தமடி!பேரெழிலாம்!
உன்னெழிலை மான்கண்டால் மானினுக்கே துன்பமடி!- தேனிசையாம்
உன்குரலை குயில்கேட்டால் குயிலினுக்கே துயரமடி!-காதல்
அன்னமட மயிலாளை காதல் தலைவன் அறிவானோ?
அன்ன நடை ஒயிலாளை அன்பு துணைவன் புரிவானோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்காதலி நீயே!/-

காதலி நீயே!
அனைத்துலகின் பிறப்பானவளே!
அனைத்துயிரின் சிறப்பானவளே!
ஊழி நீயாகி கண்ணுக்குள் கலகம் செய்தாயே!காதல்
உலகும் நீயாகி நெஞ்சுக்குள் மயக்கம் தந்தாயே!அன்பு
உருவும் நீயாகி இன்பமழை முழக்கம் செய்தாயே!
ஆழியும் நீயாகி அலைக்கலைக்கும் அமுதம் ஆனாயே!
அழகும் நீயாகி நிலைகுலைய வைக்கும் நிலவும் ஆனாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/கொடுமைதனைக் கண்டு கொதித்து எழாதவன் முன்னே உரிமை,சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதும்!-

யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை
அறிவு நூலைக் கற்று ஒருபொருளும் அறியாதவன் சொல்லுகின்ற சொல்லும்-பாடலின்
இசைதனையே அறியாதவனே யாழிசைதனையே கேட்பதுவும்
யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை!
கொடுமைதனைக் கண்டு கொதித்து எழாதவன் முன்னே உரிமை,சுதந்திரத்தைப் பற்றிப் பேசுவதும்!
யாருக்கும் பயனில்லை-இந்த உலகத்தில்
யாருக்கும் பயனில்லை!











தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவதுன்பத்தில் நட்பினை அறிந்திடும் காலமும் வந்திடுமடா! ம்/

அவர்தம் கருத்துக்கு நீ இணங்கி நடந்த வேளையிலும்
துன்பம் செய்யும் பகைவரே பகைவர் பகைவர்தான் ஆவாரடா! பிளந்த கல்லுக்கு ஒப்பாவாரடா!
ஆனாலும்
வறுமையிலும் உதவுபவர் உறவினரே ஆவாரடா!
துன்பத்தில் நட்பினை அறிந்திடும் காலமும் வந்திடுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்!இல்லாமையை எதிர்த்துப் போராடாத நல்லவரின் காலைப் பொழுதும் நோயானதே! நோயானதே! /

!இல்லாமையை
எதிர்த்துப் போராடாத நல்லவரின் காலைப் பொழுதும் நோயானதே! நோயானதே!

நோயானதே~! நோயானதே!
விருந்தினர் இல்லாத பகற்பொழுதும் நோயானதே! காதல் மனைவி
இல்லாத இரவுப் பொழுதும் நோயானதே நோயானதே!இல்லாமையை
எதிர்த்துப் போராடாத நல்லவரின் காலைப் பொழுதும் நோயானதே! நோயானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/வாழ்வின் அடிப்படைத் தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே! -

வாழ்வின் அடிப்படைத்
தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே!


போற்றாதே போற்றாதே உன்னையே நீயும் வியந்துதான் போற்றாதே!-கோபம்
கொள்ளாதே கொள்ளாதே அடக்கமின்றி வீண்கோபம் கொள்ளாதே
!தேவையற்ற பொருளினை நீயும்
விரும்பாதே விரும்பாதே வேதனையில் வாடாதே!வாழ்வின் அடிப்படைத்
தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே!

வாழ்வின் அடிப்படைத்
தேவையினுக்கு நீயும் போராடாமலே தூங்காதே தூங்காதே!










-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்செகுவேரா போன்ற! மாமேதைகளின் புரட்சியினாலே!/

காசில்லாத போதினிலே நட்பின் எல்லையே தெரிந்ததடா!@- நல்ல மனிதர்களின்
மாசில்லாத செயல்களினாலே மனித நேயம் புரிந்ததடா!உண்மை
மாமனிதர்களின் மனத்தூய்மையினாலே வாழ்வின் இலக்கணம் அறிந்தேனடா!
செகுவேரா போன்ற!
மாமேதைகளின் புரட்சியினாலே இந்த சமூகவாழ்க்கையும் கூட செழித்ததடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்பகுத்தறிவினிலே இவ்வுலகினையே உயர்த்துகின்ற ஞானம்வேண்டும்! /

கடலின் அலையாய் எழுந்து நிலை தடுமாறாத அறிவுவேண்டும்!
அதி நுட்பமான நூல்களின் முடிவுதனையே கண்டிடவேண்டும்!
மனதின் கலக்கத்தினையே என்னாளும் விட்டிடவே வேண்டும்!
பகுத்தறிவினிலே இவ்வுலகினையே உயர்த்துகின்ற ஞானம்வேண்டும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்வாக்குக்கு காசுகொடுக்கும் காசுவாங்கும்!/

நரகம் ஆகுமடா-உலகினிலே
நரகம் ஆகுமடா!தூண்டில் மீனுக்கு
உணவாக வைக்கப் பட்ட தவளையும் !
காசுக்கு உறவுதரும் கணிகையரின் கடைக்கண்ணாம் பார்வையும்!எதிரிகளின்
கண்ணெதிரே கூழைக் கும்பிடு போடுகின்ற தன்மையுமே!வாக்குக்கு
காசுகொடுக்கும் காசுவாங்கும் மனிதர்களின் வாழ் நிலையுமே!
நரகம் ஆகுமடா-உலகினிலே
நரகம் ஆகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா! எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா !

என்றுமே!
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா!-என்றுமே!
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா!வாழ்வினிலே
உறுதியாகவே வருகின்ற முதுமைக்கும்-உலகினிலே
உளமாற நேசிக்கின்ற நட்பின் பிரிவினுக்கும்!என்றும்
உடலை உருக்கிக் கொல்கின்ற தீராத நோயினுக்கும் -என்றுமே
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா!
எச்சரிக்கை எச்சரிக்கை வேண்டுமடா

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்-பகுத்தறிவினை ஏற்காதவன் !/

அழைக்காத ஆட்டத்தை நீயும் பார்க்காதே!-மது
உண்டவன் சொல்லையும் நீயும் கேட்காதே!-உண்மைய
நம்பாதவன் வீட்டுக்கு நீயும் செல்லாதே!-பகுத்தறிவினை
ஏற்காதவன் மூடபேச்சையும் மதிக்காதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/பகுத்து உண்ணும் நல்ல மனிதர்களின்!-”

நன்மை தருவதுண்டோ?
நன்மை தருவதுண்டோ?
கல்விக் கூடம் இல்லாத ஊரினிலே குடியிருப்பதுவும்
அறிவுள்ளோர் சபைதனிலே இல்லாமல் இருப்பதுவும் -பகுத்து
உண்ணும் நல்ல மனிதர்களின் அருகினில் இல்லாமல் இருப்பதுவும் -ஒரு
மனிதருக்கு -என்றுமே
நன்மை தருவதுண்டோ?
நன்மை தருவதுண்டோ?

-பகுத்து
உண்ணும் நல்ல மனிதர்களின் அருகினில் இல்லாமல் இருப்பதுவும் -ஒரு
மனிதருக்கு -என்றுமே
நன்மை தருவதுண்டோ?
நன்மை தருவதுண்டோ









தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவஊமைகண்ட கனவாகுமே !ம்/-”

உள்ளான் பறவையே உள்ளான் பறவையே
ஒடி வாளை மீனையே பிடிக்கப் போகாதே-உன் கைக்குள்ளே!
வாளைமீனு ஒருபோதும் சிக்காதே!-அடியே
ஊமைகண்ட கனவாகுமே !
ஊமைகண்ட கனவாகுமே!
சொல்லவும் முடியாம மெல்லவும் முடியாம
அள்ளவும் முடியாம கொள்ளவும் முடியாம- நீ
மதில்மேல பூனையாகியே-இருதலைக் கொள்ளி
எறும்பாகவே துடிப்பதுவே எனக்குத் தெரியாதா?

Saturday, April 23, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-”சத்ய சாய்பாபாவே”--’

அன்பினைச் சொன்னவர்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!-சேவை மனப்பான்மை கொண்டவர் அதை எல்லோருக்கும்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!
அனைவரையும் நேசிக்கவேணும்,
அனைவருக்கும் சேவை செய்திடவேணும் ,
எல்லோருக்கும் உதவிடவேணும் ,எவரையும் வெறுத்திடவேண்டாம்
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.

அன்பு வழியில் ஆன்மீகத்தில்
ஆன்மீக பக்தியில் ஈடுபடவேணும்!
உண்மை அன்பினில் மனிதரையே நேசித்துவிட்டாலே-
. உங்கள் குழப்பம் யாவும் மறைந்து போய்விடும் -என்றே சொன்னவர் சாய்பாபாவே.

இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.
இதுவே ஆன்மீகர் சத்யபாபாவின் தாரக மந்திரமே!.


படிப்பில் மட்டும் நம்கவனத்தை செலுத்துதல் கூடாது-என்றும்
, நமது நாடு, மொழி, மக்களை பிரிக்காத மதம் மீதும்அன்புகொண்டும் - பற்றும்
மரியாதையும் கொள்வது அவசியமென்றும் .
இதுவே நமக்கு நம்பிக்கையை வளர்க்குமென்றும்.சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

சோதனைகளை மனிதன் விரும்பி ஏற்க வேண்டுமென்றும்.-போராட்டத்தை ஏற்க

தயாராக இருக்கும் மொட்டுகள்தான் மலருமென்றும் - மற்றவையெல்லாமே பொறுமையாக காத்திருக்க வேண்டுமென்றும் .சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

உண்மைவேண்டுமென்றும், தர்மம் கொள்ளவேண்டுமென்றும் , கருணைகொண்ட நெஞ்சங்கள் வேண்டுமென்றும், மன்னிக்கும் மனப்பான்மை வேண்டுமென்றும் , இவையாவையும் பெற வேண்டுமானால்-
ஒவ்வொரு தனி மனிதனும்
தனக்குள் தன்னையே தேடிக் கண்டுபிடிக்க வேண்டுமென்றும்..சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

மனதையே - தூய்மையாவே - முழுமையாகவே வைத்துக்கொள்ளவேண்டுமென்றும் அதிலும் நீ . வெற்றி பெறவேண்டுமென்றும் -..சொன்னவர்
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!

அன்பினைச் சொன்னவர்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!-சேவை மனப்பான்மை கொண்டவர் அதை எல்லோருக்கும்
.சொன்னவர் -சத்ய
சாய்பாபாவே-புட்டபூர்த்தி சத்ய
சாய்பாபாவே!













தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/ஆன்மீகம்/-’

Tuesday, April 19, 2011

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/இ இலக்கியம்:தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!ம்

அடி சங்கீதத்தை பாடக் கற்றுக் கொள்ளும் முன்னே!
நீயும் தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!
அறைக்குள்ளே பாடித் தானே அம்பலத்தில் ஏறவேண்டுமடி!
ஒத்திகை இல்லாத எந்த செயலும் அரைகுறை தானடி!
சிறுகுழந்தைகூட அம்மாவை ம்மா ம்மா என்றே சொல்லி சொல்லியே
அன்புமொழியை கற்றுக் கொள்வதும் உனக்குத் தெரியாதா?
அனுபவம் ஒரு பள்ளிக்கூடம் தானடி
அதை அறிந்துகொண்டால் எதுவும் நம்சொந்தம் ஆகிடுமே!
அடி நடந்துபார்த்தால் நாடே நமதாகுமடி!
அடிபடுத்துக் கிடந்தால் பாயும் நமக்கு பகையாகுமடி!
சும்மா இருப்பவனுக்கு தானடி ஜாதகமும் மூட நம்பிக்கையும் !
உழைத்து உயர்வோருக்கு பகுத்தறிவு தானடி ஞானமருந்து!

அடி சங்கீதத்தை பாட கற்றுக் கொள்ளும் முன்னே!
நீயும் தாய்மொழியை நன்றாய் பேசக் கற்றுக் கொள்ளடி!
அறைக்குள்ளே பாடித் தானே அம்பலத்தில் ஏறவேண்டுமடி!
ஒத்திகை இல்லாத எந்த செயலும் அரைகுறை தானடி!










ம்

தமிழ்பாலா/காதல்/க்விதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/இலக்கியம்/சொந்த நாட்டிலே அடிமையான ஈழத்தமிழரைபோலவே!

உன் நிழலாக காத்திருந்தேன் ? என்னுயிர் தேவதையே!

உன் இமையாக போர்த்திருந்தேன் அன்புள்ள தோழியே!

உன் கொலுசாக ஒலித்திருந்தேன் தமிழ்த்தேன் மொழியே!

உன் கனவாக நினைத்திருந்தேன் அந்திமாலைத் தென்றலே!

உன் தோழனாக காத்திருந்தேன் ? கடலலையின் சீண்டலிலே!

உன் துணையாக ஆகிடவே பொருளாதாரம் தேவையடி!
அதற்காகவே கடல்கடந்தேன் நீ அக்கரையிலே நான் இக்கரையிலே!
பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லையாமே!
அன்புள்ளங்கள் சேர்வதற்கே அதுவும் தொல்லையாமே!
சொந்த நாட்டிலே அடிமையான ஈழத்தமிழரைபோலவே!
காதலிருந்தும் கரைசேர முடியாமலே அன்புக் காதலியே
நீயும் அக்கரையிலே நானும் இக்கரையிலே காத்திருந்தோமே!









/

Sunday, April 17, 2011

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-” காதலும் அன்பும் ராஜ்யமடி’ /

தீயைக்கண்ட வெண்ணையும் மெழுகும் உருகுமடி!
நீரினில் கலந்த மண்ணும் உப்பும் கரையுமடி!
உன்னில் கலந்த என் கண்ணும் நெஞ்சும் பூஜ்யமடி!
நம்மில் இணந்த நம் காதலும் அன்பும் ராஜ்யமடி!

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்எல்லாம் அறிந்தவனும் இல்லையடா!/-/

எல்லாம் அறிந்தவனும் இல்லையடா!~வாழ் நாளெல்லாம் கற்றிடவே வேண்டுமடா!
ஏதுமே அறியாதவனும் இல்லையடா!கற்றவர் கற்றுத்தந்தால் கற்றிடுவான் உலகிலடா!
நல்லகுணமே இல்லாதவனும் இல்லையடா! நல்லோர் மெய்ஞானத்தை கற்றுத்தந்தால் கற்றிடுவான் உலகிலடா!
-ஒரு
குற்றமும் இல்லாதவனும் இல்லையடா!
குற்றத்தை சுட்டித் திருத்தி நல்லோர்வழிப் படுத்திடாலமடா!~
-எல்லா
நூல்தனையும் கற்றவன் இவ்வுலகினில் இல்லையடா!-ஆனாலும்
அனைத்தையும் கற்றிடவே நூலோர் முயன்றிடுவார் உலகிலடா!

தமிழ்பாலா/-காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-மக்களுக்கோ அழிவு தகுதியற்ற வேட்பாளனைத் தேர்ந்தெடுக்கும் குணமாகுடா! /

சிலந்திக்கு அழிவு அதன் முட்டைகளாளடா!
அஞ்சறிவு விலங்குக்கு அழிவு அதன் கொம்புகளாளடா!~
கவரிமானுக்கு அழிவு அதன் மயிர்களாடா!
நண்டுக்கு அழிவு அதன் குஞ்சுகளாளடா!
மனிதருக்கோ அழிவு அவனின் வசைபாடும் தேவையற்ற வார்த்தைகளடா!
மக்களுக்கோ அழிவு தகுதியற்ற வேட்பாளனைத் தேர்ந்தெடுக்கும் குணமாகுடா!

Sunday, April 3, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-சிங்கள இனவெறியில் எங்கள் ஈழத்தமிழினம் உரிமையற்று வாழ்வாதாரமற்று !”

இந்தியா-இலங்கை பைனல்”! வாசகர்கள் சுடச்சுட கமெண்ட்”

இந்திய அணியின் பீல்டிங்க்,பவுலிங்க்
அருமையோ அருமை .வெற்றி நமதே!

இந்திய பவுலிங்க் எழுச்சியால் எழுந்தது’ கல கல’
இலங்கை விக்கெட் வீழ்ச்சியால் தகர்ந்தது’ லக லக ‘

இலங்கை வென்றது’ ஒன்லி டாஸ் டாஸ்’
உலகக்கோப்பைக்கோ லவ்லி இந்தியாவோ;பாஸ் பாஸ்’

ஆஸ்கார் வென்றதைப் போலவே தோனி உலகக்கோப்பைதனை வென்றாரே!

இந்தியாவின் பிடியில் சிக்கி சிங்களர்கள் சின்னாபின்னம் ஒன்லி விளையாட்டில்தான்
நிஜத்தில் ராஜபக்சே ஈழத்தமிழர்களை கொன்று குவித்தது இன்னும் ஆறவில்லை!

ஜாஹிரின் பவுலிங்க் டாப்பு டாப்புதான்
இலங்கைக்கு வச்சாச்சு ஆப்பு ஆப்புதான் விளையாட்டிலதான்
உண்மையில் எப்ப வக்கப்போறீங்க ஆப்பு ஆப்புதான்?

சாம்பியன் ஆஸ்திரேலியாவை அதிரவைத்தது
பாகிஸ்தானைப் பந்தாடியது
இறுதியாக சிங்களத்தை சிதறடித்தது விளையாட்டில்தான்
நிஜத்தில் இன்னும் ஈழத்தமிழர்கள் கண்ணீரிலேதான்!

கிலானியைப் போல் ராஜபக்சேயும் தோற்றது கிரிக்கெட் விளையாட்டில்தான்
இன்னும் அவனின் சிங்கள இனவெறி ஆணவம் வீழவில்லையே!

இந்தியாவிற்கு உலகக்கோப்பைக் கைதனில் வந்தாலும்
ஈழத்தமிழர்கள் கைதனிலே சுதந்திர உரிமை அதிகாரம் வரவில்லையே!

இந்தியரன் வேட்டையில் சிங்கள அணி அழிந்தது
ஆனால் சிங்கள இனவெறியில் எங்கள் ஈழத்தமிழினம் உரிமையற்று வாழ்வாதாரமற்று நாடிழந்து வீடிழந்து உடைமையிழந்து வீதியிலே!அழிந்துகொண்டு இருப்பது தொடர்கின்றதே!

உலகக் கோப்பை வெல்வதே இந்தியாவின் தவம்!அது நடந்தது
வாழ உரிமை கோர்வதே ஈழத்தமிழரின் தவம்!இது எப்போது நடப்பது?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/- தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”எங்கள்ஈழத்தமிழ் மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!”

எங்கள் ஈழத்தமிழ்மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!-இன்னும்
எங்கள் ஈழத்தமிழ் மக்கள் கம்பிவேலிக்குள் விலங்குகளோடேயே!
இந்தியா இலங்கை போட்டி மூன்றாம் உலகப்போருக்குச் சமமென்றார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்!
சிங்கள இனவெறியரால் கொலைசெய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் எண்ணிறந்தவர்கள் உயிரினை விட்ட கோரமுடிவுகள் எத்தனை உலகப்போருக்குச் சமம்?!
கிரிக்கெட் போட்டியில் தோற்றது இலங்கை!
இனவெறி தாக்குதலில் தோற்றவர் ஈழத்தமிழ் மக்கள் அல்லவா?
எங்கள் ஈழத்தமிழ் மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!இன்னும்
எங்கள் ஈழத்தமிழ் மக்கள் கம்பிவேலிக்குள் விலங்குகளோடேயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!' ”

ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!'
ஆன்றோராம் நம்மருமை சித்தர்கள் சொல்லிவைத்த சித்தமருந்தினையே!
நாமெல்லாம் தேர்ந்தெடுத்தே வாழ் நாளினில் உண்டுவந்தாலே
நலமாக வாழ்கின்ற ஆரோக்கியமான வாழ்வுதனையே வாழ்ந்திடலாமே!

"காலையினில் இஞ்சிதனையே உணவினில் சேர்த்தே உண்டிடவே வேணும்
கடும்பகலினில் சுக்குதனை சேர்த்தே உண்டிடவே வேணும்-முறையாகவே!

மாலைதனில் கடுக்காய்தனையும் மருந்தாகவே மண்டலம் உண்டுவந்தாலே

ஆயுள்தனையே அதிகமாக்கியே முதுமையும் இளமையாகுமே!'

Saturday, April 2, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/அனுபவம்/ஹைக்கூ/-காதலுக்குள் கலந்துவிட மொழியிருக்கா?-

உன்மனசுதான் கரையலையோ?
உன்னுளந்தான் உருகலையோ?
மன்மதனின் மலரம்புதான்பட்டு
உன்னெஞ்சுதான் மயங்கலையோ?

புல்லாங்குழலும் பிறந்ததடி
பூங்காற்று மேடையிலே!
யாழிசையும் இசைத்ததடி!
உன்னிதழின் சாடையிலே!

சிங்காரப் பேச்சின் சொல்லழகியே!
மஞ்சலுனா மஞ்சளடியோ!-இது கொச்சி
மலையாளத்து மஞ்சளடியோ
நாழி நறுக்கு மஞ்சளடியோ?
நன்னாழி பச்சை மஞ்சளடியோ?
நானினைக்கும் போதினிலே
என்னெனப்பில் வந்து நிற்கும்
இளவாழை குறுத்தடியோ?
எளவட்டம் கிறுகிறுக்கவே
என்னசொக்குப் பொடிதான் போட்டாயோ?

மாலை மலந்துருச்சு
மந்தாரம் தளுத்துருச்சு
சோலைக் குயிலெல்லாம்-செவிச்
சுவையாக கூவிருச்சு

ஏழைகருத்து புரிஞ்சுருச்சா?
எம்மனசு விளங்கிருச்சா?
ஆலைக் கரும்பாக உன்பார்வையாலே என்ன
அரைச்சு அரைச்சு குளிச்சவளே!
ஒம்மனசுல இடமிருக்கா?
உறவாட வழியிருக்கா?-காதலுக்குள்
கலந்துவிட மொழியிருக்கா?