Popular Posts

Sunday, September 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம் /-”ரவுடிப் பய நாட்டாமை ”

குமருன்னு இல்லாம வாக்கப்பட்டேன்- நானே
மலடுன்னு இல்லாம பிள்ளை பெத்தேன்
கொண்டவன் துணையுன்னு வாழவந்தேன் -ஆனா எனக்கு
வாச்சவனோ குடிகார நாயாச்சே!-எங்க திரும்பினாலும் -இங்க
டாஸ்மார்க் கடையாக ஆச்சே!இந்த குடிகாரனோ!
கூலிய எல்லாம் குடிச்சானே-இங்க
கும்பி பசியாலே வாடிப் போச்சே!-பள்ளிக்கூடத்து
பக்கத்துல சாராய கடையிருக்கே!
படிக்கவாற புள்ளைக்கு எல்லாம் இடைஞ்சலாச்சே!-ரவுடிப் பய
நாட்டாமை இங்க பெருத்துப் போச்சே!
நல்லவங்க கருத்து எளைச்சுப் போச்சே!-இங்க
நல்லது எப்போ? நடக்குமுனு கேள்வியாச்சே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இலக்கியமே! இலக்கியமே!”

தன் எழுத்தாலே!
முடிவில்லாமல் வாழ்கின்ற
இலக்கியமே! இலக்கியமே!

மனிதன் வாழ நினைத்த எதையுமே தன் படைப்பாகவே!
முடிந்து போகும் மனிதனின் வாழ்கின்ற
வாழ்க்கை பற்றியே பேசவந்தது -தன் எழுத்தாலே!
முடிவில்லாமல் வாழ்கின்ற
இலக்கியமே! இலக்கியமே!
மறுவாசிப்பினிலே!ஒருபுத்தகமே -தன்னையே தகர்த்துக்கொண்டே!
தன்னைத் தானே சுத்திகரித்து-உலகினிலே
எந்தக் கருத்தும் இறுதி அல்லவென்றே!
ஒவ்வொரு படைப்பிற்கும் ஒன்றுக்கும் மேற்பட்ட அர்த்தமாயிருக்கின்றதே!

தன் எழுத்தாலே!
முடிவில்லாமல் வாழ்கின்ற
இலக்கியமே! இலக்கியமே!

Saturday, September 25, 2010

தமிழ்பாலா-/காதல்/க்விதை/தத்துவம்/-”மெளனமே ” !

மெளனமே! நம்பிரிவாம் ஊடல் அமைதியானதோ?
மெளனமே !நம்காதலினை வேதமாக்கியதோ?
மெளனமே !நம்தவறினையே யோசிக்க வைத்ததோ?
மெளனமே ! நம்மிதய வலிதனுக்கே மாமருந்தானதோ?
மெளனமே !நம்சேரும் உள்ளங்களின் நம்பிக்கையானதோ?
மெளனமே !நம்வெட்டி வாதங்களையே அழிக்கவந்ததோ?
மெளனமே ! நாம்மீண்டும் உறவாடவே வழிசொன்னதோ?
மெளனமே ! நம்காதல் தியானத்திற்கே நிலையானதோ?
மெளனமே ! நம் நல்வாழ்வினிற்கே சம்மதமானதோ?






Friday, September 24, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்”காதலில்லாத உலகமில்லையே!”

What you Feel! What you See!What you hear!

காதலில்லையென்றால் அது உலகமில்லையே!
காதலில்லாத மனிதரும் மனிதரில்லையே!
காதலில்லாமலே எந்த ஜூவனும் இல்லையே!
காதலில்லாமலே எந்த பிரபஞசமும் இல்லையே!

நீயென்ன உணர்ந்தாயோ? நெஞ்சினிலே
நீயென்ன பார்த்தாயோ? கண்களிலே
நீயென்ன புரிந்தாயோ? நினைவினிலே!
நீயென்ன அனுபவித்தாயோ? காதல் அன்பினிலே
நீயென்ன கற்றாயோ? வாழ்வின் துணையினிலே!
காதலில்லாத உலகமில்லையே!
காதலிக்காதோர் உலகிலில்லையே!
காதலில்லையென்றால் அது உலகமில்லையே!
காதலில்லாத மனிதரும் மனிதரில்லையே!
காதலில்லாமலே எந்த ஜூவனும் இல்லையே!
காதலில்லாமலே எந்த பிரபஞசமும் இல்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”காதல்மொழியாலே!””

கதிரவனே கதிரவனே இன்னும் உதயமாகவில்லையே!-இன்ப
மோகனமான இருள் உன்னையே தழுவுகின்றதே!
காதலான திரைதான் உன்னை என்னுள் ஆக்குகின்றதோ?
உன்
வதனத்திலும் உன்கண்களிலும் உறக்கத்திலும் விழிப்பினிலும்
வந்து சேர்ந்த அன்பின் அமைதியிலும் என்னசாந்தி என்னசாந்தி?
இந்த வசந்தமான இளமையான அதிகாலையில் தடுமாறும் என்வார்த்தைகளில்
அந்த தென்றல் இழைந்தோடும் அருவி நீரின் சலசலப்பிலும் என்கவிதையே!

இளையவளே இனியவளே! அன்புக்கு உரியவளே! என் துணையானவளே!-உனக்கேற்ற
இளையவனே சிறந்தவனே நல்லவனே நான் தான் அல்லவா?
உன்னிதயத்தில் ஒலிக்கின்ற பருவத்தின் இலக்கியமல்லவா?
உனது கனிந்த குளுமையான பார்வையிலே அன்பே நீயும்
என்னையே ஒருபோது திரும்பி பார்த்திடவே மாட்டாயோ?
உலகமெங்கும் ஒரேமொழி உண்மைபேசும் காதல்மொழியாலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்!”காதல் பண்பினிலே தேடடி!”

காதலியே உந்தனுக்கே காதல்வரும்
நீயும் வந்து பாரடி!
நெஞ்சாரவே பாடடி!
நேசத்திலே கூடடி!
நெருக்கத்திலே ஊடடி!
பருவத்திலே நாடடி!-காதல்
பண்பினிலே தேடடி!

குளிர் நிலவும் வந்ததடி!
கோலமயிலும் ஆடுதடி!
நீலக்குயிலும் பாடுதடி!
தென்னங்கீற்றும் சலசலக்கவே! தென்றலிலே
தெம்மாங்கும் கலகலத்ததடி!காதலியே உந்தனுக்கே காதல்வரும்
நீயும் வந்து பாரடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”நல்லதொரு இலக்கியம்””

கவிஞனே காவியக் கவிஞனே! இலக்கியம் படைத்திடவே வந்தானே!
மொழிவேகங் கொண்டு
சொல்லின் நயங்கொண்டு-அன்பு
மனலயங் கொண்டு மக்கள் கலையின் பொருள்தான் கொண்டு
கவிஞனே காவியக் கவிஞனே! மக்களுக்கே! நல்லதொரு
இலக்கியம் படைத்திடவே வந்தானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”பகலும் இரவும்”

பகல்மீனைப் பிடித்திடவே இரவுவலை வீச வந்ததோ?-இல்லை
இரவுக் கதா நாயகனுக்குப் பயந்து பகல்வில்லனும் ஓடிவிட்டானோ?
பகலின் இன்பமே இருந்துவிட்டால் இரவின் துன்பம் அறியாதென்றே!
பகலும் போயிடவே இரவும் தன் ஆட்சிதனையே நடத்திடவே வந்ததோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/அன்பில்லாத

நிலவில்லாத வானில் இருள்கூட்டி மூழ்கும் கார்மேகமானேனே!
நீரில்லாத ஆற்றில் தரைதட்டி நிற்கும் கப்பாலானேனே!
நினைவில்லாத மனதினிலே அலைமோதிடும் எண்ணமாகினேனே!
நீயில்லாத உலகந்தன்னில் அன்பில்லாது ஏங்கினேனே!

Wednesday, September 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சன்னல் நிலவு”

காதலியவள் உருவினிலே!
அமாவசையன்றும் அழகிய நிலவினையே எதிர்வீட்டு சன்னலில் பார்க்கச் சொல்லியென்னை தொட்டுச் சென்று அணைத்து
ஆதரவாக அழைத்துச் சொன்னது இளந்தென்றல் காற்றே!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” காதலர்க்கு மட்டுமே”


காதலில் மட்டுமே
ஊடலும் , கூடலும்
வெற்றியானது!
கண்களில் மட்டுமே
நோயும் , மருந்தும்
விருந்தானது!
நெஞ்சினில் மட்டுமே
காத்திருப்பதும் ,காக்கவைப்பதும்
சுகமானது!
காதலர்க்கு மட்டுமே
காலமும்,பொழுதும்
மறைவானது!
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” திருவாசமோ?”


உனது அழகிய தாமரைச் செவ்விதழ்களிலே!-அமுத இன்பவார்த்தையாம் தேன்
வரிகளில் நீயும் எத்தனை எத்தனையோ அனுபவப் பாடங்கள் சொல்லிடத்தான் வந்தாயோ!
உனது அந்த தித்திக்கும் இதழ்கள் என்ன திருவாசகமோ?
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-” விளம்பரம்”


கோடிகோடியாய் செலவுசெய்து மாளிகை கட்டி அன்னைஇல்லம் என்று பெயர் வைப்பார்-அவரின் தாய் தந்தையரோ! முதியோர் இல்லத்தில் வசித்திருப்பார்-அவர்
தான் பெற்றுக்கொண்ட குழந்தைகளின் நல்வாழ்வில் அக்கறையின்றி நடந்துகொள்வார்-ஆனாலும்
அனாதை குழந்தையர்க்கு ஆயிரமாய் செலவுசெயகின்றோம் என்று
அனுதினமும் பத்திரிகையில் விளம்பரம் செய்திடுவாரே!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”
தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-: ”காதலாகி”

உனது நிழலை ஓவியமாக்கிடும் சூரியக் கதிராம் தூரிகையே!
உனது குழலைக் காவியமாக்கிடும் தென்றல் தாலாட்டியே!
உனது மழலைச் சொல்லினையும் தமிழிலக்கிய மாக்கிப் பார்த்திடுமே!
உனது பழகும் அன்பு நெஞ்சினிலும் காதலாகி கனிந்திடுமே!











தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”
அந்தியிலே அழுதவானம் எழுதிப் பார்த்திடும் ஆசை அந்தரங்ககளோ?
அமுத மழைச் சாரலிலே தூவுகின்ற தூவானச் சின்னஞ்சிறுத் துளிகளே!




தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:

Tuesday, September 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:தாடி வளர்த்ததாலே

சோகத்தின் அடையாளமா?
சிந்தனையின் அடையாளமா/
அழகின் அடையாளமா?-இல்லை
சோம்பேறிகளின் அடையாளமா?
எதுவென்று தெரியவில்லை!
ஆனால் தாடியோ!
புல்லைப் போலவே மண்டிக்கிடக்குது தாடியுள்ள முகத்தினிலே!
ஞானியும் தாடி வெச்சு இருக்காரு!-விரக்தி
ஆனவரும் தாடி வெச்சு இருக்காரு!-காதல் தோல்வி
ஆனவ்ரும் தாடி வெச்சு இருக்காரு- தீவிர
வாதிகளும் தாடி வெச்சு இருக்காங்க!முடிதனை
எடுத்திட மறந்தாரும் தாடி வெச்சி இருக்காங்க!
சங்க காலத்துல கருந்தாடி ஆண்மைக்கு அழகுனு சொன்னாங்க! நாகரீகமா
குறுந்தாடி வெச்சு சிலகாலம் சிலரும் அலட்டி இருந்தாங்க!
எது எப்படி இருந்த போதில்லும் தாடி வளர்த்ததாலே மழிக்கிற செலவு மிச்சமாச்சுதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:உண்மையான ஆண்மகனே!

ஆடிப் பாவையைப் போலவே துணைவி சொல்லும் சொல்லுக்கெல்லாம் ஆடுவான்!-அவள்
ஆடுவதற்கெல்லாம் அவள்சொல்லாமலும் கூட கணவனவன் ஆடுவான்!பெண்டாட்டி
அவள்தனக்கு கூஜா தூக்கியே அவளின் பின்னே செல்லும் அந்த ஆண்மகனே!
ஆணுக்குப் பெண்ணிங்கே சளைத்தவளில்லை சமமானவள் என்று சம உரிமையில்
தோள்கொடுத்து தோழமையோடு நாட்டின் நலத்திற்கு உழைப்பவனே உண்மையான ஆண்மகனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:யாதும் நம்மூரே!

காதல் தலைவா! உனது நாட்டினில்
கலங்கிய நீரும் இனிக்கிறது என்றால்!
கனிவாய் சுவைப்பது நீரா?இல்லை உனது அன்பா?
அன்பின் முதல்வா! ஆசை துணைவா!
யாதும் நம்மூரே! யாவரும் நம் சுற்றத்தவரே!
உலகம் நம்வீடே !உலகத்தோர் எல்லாம் நம்சொந்தங்களே!

Sunday, September 19, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நீயொரு விதிசெய்து

கரைதொடும் வரையினில்
கால்களே அணையாகவே!
தேடுது தேடுது கண்களே! எங்கே எங்கே கரையென்று?
துடுப்பில்லாத படகுக்கோ! அலைகளே மாலுமியானதோ?

விதியே முடியுமென்று?-
யார்சொன்னது?-மூட
விதிதனை எண்ணுதல் விட்டு-
அடியே புதிய
விதிதனை செய்திடுவோமே!
காற்றுத் துணையிருக்கும் வரையினில் [எந்த
கடலிலும் தொடரும் வாழ்க்கையடி!
சிலரோ!
விதியுண்டு ஒதுக்கிவிட்டு கடமையைசெய் என்பாரே!
சிலரோ!
விதிக்குள் அடங்கி அதன்வழி செல் என்றும் சொல்வாரே!
வேறு சிலரோ!-மூட
விதி என்பது இல்லையென்றாலும் இருந்தாலும் நீயொரு
விதிசெய்து அதன்வழி ஒழுங்கு வழுவாம்லே வாழச் சொல்வாரே!

கரைதொடும் வரையினில்
கால்களே அணையாகவே!
தேடுது தேடுது கண்களே! எங்கே எங்கே கரையென்று?
துடுப்பில்லாத படகுக்கோ! அலைகளே மாலுமியானதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நம்காதலுக்கு!

காதலியே என் தேவதையே !
கண் இல்லையோ கண்ணில்லையோ?- நம்
காதலுக்குக் கண்ணில்லையோ? நம்காதலுக்குக்

கண் இல்லை என்றாலே!கண்ணே
காலம் நம்மையே காதலிலே
உன்னை என்னிடமும் என்னை உன்னிடமும்
எப்படித்தான் சேர்த்திருக்குமோ?
இன்பக் கவிதைதான் எழுதி இருக்குமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் என்பது!

காதல் என்பது
கவிதை ஆனது கண்ணால் வாசித்து பார்த்தேனே!

காதல் என்பது
கணிதம் ஆனது வாழ்க்கைக் கணக்குபோட்டு சேர்ந்தேனே!
காதல் என்பது
கடும்பனி ஆனது ஒன்றுபட்டு வெற்றி கொண்டேனே

கண்ணீர் காதலின் வரவு என்றாரே
அதையும் போராடி நானும் ஆனந்த கண்ணீர் ஆக்கினேனே!
காதல் என்பது கானல் நீர் என்றாரே காதலில் தோல்வி கண்டோரே!
காதல் என்பது சோலைவனம் என்று நானும் காதலியை கைப்பிடித்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-மனிதத்தின் உண்மையாம்!

உன்விழியோடு என்விழிபேசும் காதல் மொழியினிலே!
என்முகம்காண சன்னலோரம் காத்திருக்கும் வழியினிலே!காதலியே
உனக்கு மட்டும் தானே தெரியும் உனக்கும் எனக்கும் தெரிந்த மனிதத்தின் உண்மையாம்!
காதலென்ற இனிமையது வாழும்
கவிதை என்று நம்மை
வாழ்த்தும் அன்பு என்று

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:பயணம்

பயணம் பயணம் பயணமடி-வாழ்க்கைப் பயணமடி
பிறப்புமுதல் இறப்புவரை வாழும் நாள்வரையில்
பயணம் பயணம் பயணமடி-வாழ்க்கைப் பயணமடி
பயணம்
துவங்கிய போதோ நினைவில் இல்லை-பயணம்
தொடரும் நாளிலோ வாழ்வும் புரியவில்லை-பயணம்
முடியும் இடம் தெரிந்தபோதும் இப்போதே போக முடியவில்லை
பயணத்தை இன்றே முடித்திட நானொன்றும் கோழையில்லை!

அனுதினமும் நடக்கின்ற பயணத்தில் இன்ப இலக்கினை அடையவில்லை-பயணத்தில்
அன்றாட தேவைக்குப் போராடும் பாதைக்கு இன்னும் குறைவில்லை!
அரசியல் வேடதாரிகளின் சொல்கேட்டு என் ஏமாற்றத்திற்கோ பஞ்சமில்லை-ஐந்து
ஆண்டுக்கு ஒருமுறை என் தலைமொட்டை அடிக்கப்படுவது இன்னும் நிற்கவில்லை
கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன் நானிதுவரை நல்லது கெட்டது தெரியாமலே
காலத்தை ஓட்டிய முட்டாள் தனத்தை எண்ணி நிமிர்ந்து விழித்து எழுந்து நிற்கின்றேன்!
பயணம்
எங்கே போகிறேன் என்று இப்போது நானே தெளிவாய் தெரிந்துகொண்டேன்
நல்லமனிதரின் துணையோடு புதியபாதை நானும் நடக்கின்றேன்

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்காதல் தேசத்து எனதினிய தேவதையே! உன்முகத்தை என்முகத்தில் பார்த்திடுவாயே!

உன்விழிகள் பேசும் காதலன்பு மொழியடி!
எந்தபள்ளியிலும் எந்த ஆசாணாலும் அதையே கற்றுத்தர முடியுமோடி!
என்காதல் தேசத்து எனதினிய தேவதையே!
உன்முகத்தை என்முகத்தில் பார்த்திடுவாயே!
உலகமொழிகள் அனைத்தும் எனக்குப் புரிகிறது
ஊரும் உலகும் பேசும் ஏச்சும் தெரிகிறது
ஆனாலோ?காதலியோ என்விழியோடு
உன் விழிகள் பேசும்-மெளனமான அந்த ஒருவேளையிலே உலகத்தை மறந்து விண்ணில் பறந்து நேசமந்திரத்தில் இணைந்த பொழுதினிலே!அது ஏனோ?
உன்விழிகள் சொன்ன அந்த
வார்த்தை மட்டும் புரியவில்லையே
உன்விழிகள் பேசும் காதலன்பு மொழியடி!
எந்தபள்ளியிலும் எந்த ஆசாணாலும் அதையே கற்றுத்தர முடியுமோடி!

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அந்தஒரு கடைக்கண் பார்வையே, காதல் இன்பத்தின் எல்லைதனையே தொட்டதே!

காதல் இன்பத்தின் எல்லைதனையே தொட்டதே!
கண்ணில் ஒருகாவியத்தையே படைத்து விட்டதே!
காதலிலே! காதலிலே!
காதலியே! உந்தன்
கள்ளத்தனமான
அந்தஒரு கடைக்கண் பார்வையே,
காதல் இன்பத்தின் எல்லைதனையே தொட்டதே!
கண்ணில் ஒருகாவியத்தையே படைத்து விட்டதே!







-:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்

கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்!
உண்டாலே மதுமயக்கமே!-காதலியே உன்னையே
கண்டாலே காதல் மயக்கமே!
சுவைத்தாலே தேன் தித்திப்பே!-காதலியே உன்னிதழைச்
சேர்த்தாலே அமுத தித்திப்பே!
கண்டாலே மயக்கம் தருவது காதல்தான்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: இயற்கையாகவே காதலின் அணிகலனாய் கொண்ட பேரழகியே! செயற்கையான ஒப்பனைகளே அலங்கார ஒப்பனைகளே! காதலி உனக்கு ஏதுக்கடி?

காதலி உனக்கு ஏதுக்கடி?
ஒப்பனைகளே அலங்கார ஒப்பனைகளே!
காதலி உனக்கு ஏதுக்கடி!
பெண்மானின் இளமை துள்ளும் பார்வையும்
இன்னும் , நாணத்தையும் இயற்கையாகவே காதலின்
அணிகலனாய் கொண்ட பேரழகியே!
செயற்கையான ஒப்பனைகளே அலங்கார ஒப்பனைகளே!
காதலி உனக்கு ஏதுக்கடி?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: காதலி அவளாலே! எனக்கோ! காதலன்புத் துன்பமில்லையே!`

காதலி இவளின் விழிப் புருவங்களே!
சாய்ந்து நெளிந்து குழைந்து மயக்கி
வளைந்து கோணாமல் நேராக இருந்து மறைக்குமானால்,- காதலி அவளாலே!
எனக்கோ! காதலன்புத் துன்பமில்லையே!`

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:பார்வையிலே மிச்சம் வைத்து காத்திருக்கும் ஊடல் பெருமூச்சோ?

என்னென்பேனோ? ஏதென்பேனோ?
என்காதலியின் காதல்கொண்ட பார்வையே!
உயிர்பறிக்கும் பிரளயமோ? நினைவினில்
உறவாடும் விழியோ? அன்பு மீறிய ஆசைக்குள்ளே!
அச்சம் கொண்ட பெண்மானின் விழிவீச்சோ? பார்வையிலே
மிச்சம் வைத்து காத்திருக்கும் ஊடல் பெருமூச்சோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: பெண்மையின் வார்ப்படமாகவே !அவளம்புப் பார்வையிலே!

பெண்மையின் வார்ப்படமாகவே !அவளம்புப் பார்வையிலே!காதலி
அந்தப் பேதையின் கண்கள் மட்டும் ஏனோ எந்தன் உயிரைப் பறித்ததே!
எந்தன் உயிரைப் பறித்த கண்கள் ஏனோ?திரும்ப திரும்ப
என்னையே பார்த்து பார்த்து பரவசமானதோ-காதலாம்
பேரின்பத்தில் என்றுதான் கொண்டுவந்து சேர்ப்பாளோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: எனை வாட்டும் அழகானாள்! என்னிலாடும் வண்ண மயிலானாள்!

எந்தன் நனவிலும் நனவானாள்!
எந்தன் நினைவினில் நினைவானாள்!
எந்தன் கனவிலும் நனவானாள்!
எந்தன் நனவிலும் கனவானாள்!
எந்தன் கனவிலும் கனவானாள்!
எனை வாட்டும் அழகானாள்!
என்னிலாடும் வண்ண மயிலானாள்!
எனதன்புக் காதலியை எனதினிய நெஞ்சமே!
என்னாளுமே ஏனோ? கண்டு மயங்கிடுதே எனதினிய நெஞ்சமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/தினமும் வானில் பறக்கும் பற்வைகளே! அந்தப் பறவைகளே! தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே! அடுத்தவர் நலனை

தன்கையில்
வரைபடமில்லை எரிபொருள் இல்லை -ஒரு
தேடுதல் மட்டும் கொண்டு-தினமும்
வானில் பறக்கும் பற்வைகளே!
அந்தப் பறவைகளே!
தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே!
அடுத்தவர் நலனையே என்றும் பறித்ததில்லையே!
அதிகாரத்தால் யாரையும் அடிமைப் படுத்துவதில்லையே
விலைவாசி ஏற்றத்தால் என்றும் அவை பாதித்ததில்லையே
வாக்குக்காக உறையில் காசு என்றும் வாங்கியதில்லையே-கிம்பளம்
வாங்கவேண்டிய அவசியம் அவற்றிற்கு என்றும் ஏற்பட்டதில்லையே!போலி அரசியல்
வாதிகளையே தேர்ந்தெடுத்துவிட்டு அவையென்றும் ஏமாந்ததில்லையே!
-தன்
தேடுதலில் அவையென்றும் அலைந்து திரிந்து சளிப்பதில்லையே!
வாழ்வினை ஒவ்வொரு நாளும் புதிதாய் சந்திப்பதிலே என்றும் பின்வாங்குவதில்லையே!
உலகமே!மனிதர்களுக்குள்ளே! அனுதினமும்
தன் தேவையற்ற காரணங்களாலே ஒருஅதிகார யுத்தம் நடத்தும் வேளையிலே
அந்த பறவைகளே எல்லாத் துன்பங்களையும் தாண்டி தங்களின் தேடலுக்காகவே!
தன்வாழ் நாளெல்லாமே தங்களின் பாதையிலே பறக்கின்றனவே!
தினமும்
வானில் பறக்கும் பற்வைகளே!
அந்தப் பறவைகளே!
தன் தேவைக்கு அதிகமாய் என்றும் சேர்த்து வைப்பதில்லையே!
அடுத்தவர் நலனையே என்றும் பறித்ததில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/காதல் பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்-அது தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!

காதல்
பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்!-அது
தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!
பார்வை
அணைப்பில் இருக்கும்போது சுகத்தினில் மயங்கும்!-அது
அன்பில் திளைக்கும் போது அகத்தினில் தயங்கும்!
காதல் !
பக்கத்தில் இருக்கும்போது இமைகளால் மூடும்!-அது
தொலைவினில் போகும்போது விழிகளால் தேடும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நானும் காதலி உன்னையே-எத்தனையோ? பூக்களுக்கு உவமைசொல்லித் தோற்றுவிட்டேன் எந்தப்பூவும் உனக்கு உவமை இல்லையடி!

ஆகாசத்தில் முகம்பார்க்கும் -மண்ணின்
கோடிகோடிப் பூக்களே!-பூமித்தாயே
தன்னை ஒவ்வொரு நாளும்
எத்தனை எத்தனை பூக்களாலே தன்னையே அலங்காரமே செய்து மகிழ்கின்றாளோ?
காதலி நீயே !
வேப்பம்பூவின் வாசமோ?
ஏ! நீயும்
எள்ளுப் பூவின் அழகோ?
அந்த
தும்பைப் பூவின் தேனோ?
மஞ்சள்
பூசனிப் பூவின் நிறமோ?
என்று ஏதேதோ! நானும் காதலி உன்னையே-எத்தனையோ?
பூக்களுக்கு உவமைசொல்லித் தோற்றுவிட்டேன்
எந்தப்பூவும் உனக்கு உவமை இல்லையடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_மழையே!உன்னில் எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும் ஏழுசுரத்தினையும் :

மழையே!தூவும் கலையே!
உன்சாரல் தூரல் தன்னிலே!- மழையே!உன்னில்
எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து
ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும்
ஏழுசுரத்தினையும் தான் மிஞ்சியதோ?
ஓர் தியானத்திலே
என்னையே ஏதோ ஓர் இன்பந்தன்னிலே!
அமிழ்ந்து போகச் செய்திடும் மழையே நீ ஒரு ஞானியே!-உன்
ஈரத்தின் நுண்கால்களிலே மென் உணர்வுகளிலே!உன்சாரல் தூரல் தன்னிலே
மழையே!உன்னில்
எனது கால்களும் தோய்ந்து தோய்ந்து நனைந்து நனைந்து
ஓர் சங்கீதம்தான் பாடியதோ?-அதுவும்
ஏழுசுரத்தினையும் தான் மிஞ்சியதோ?
சன்னல் கதவுகளையே மின்னல் வெளிச்சமே தட்டிப் பறித்திட துணிந்ததோ?- அந்தோ!
அந்த நீலவானத்தையும் மழையே நீயும் மறைத்திட விழைந்தாயோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_:-மழையே நீ செய்திடும் சேவைக்கெல்லாம் மக்கள் என்னகைமாறுதான் செய்திடுவாரோ?

ஓ!மழையே உவகையின் குழந்தையே!
ஒருபுள்ளியில் நீயும் தெரியாமலே!
நான் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த இன்ப வேளையிலே
ஓரிடத்தில் மையம் கொண்டு நீயும்
அங்கேயே சஞ்சாரம் செய்திடவே துணிந்து விட்டாயோ?
காற்றின் போக்கினிலே காலாற நடந்துதான் நீயும் போனாயோ?
கண்ணுக்கு எட்டிய தூரமெல்லாம் பார்வைக்கு தெரியாமலே
கண்ணான நீரினையே கொட்டிவிட்டு கொண்டாட்டம் தான் நீயும் போட்டாயோ?
மரத்தினையும் ஆட்டிவிட்டு காற்றோடு நீயும் ஆனந்த தாண்டவம் தான் போட்டாயோ?
மண்ணுக்கு வளஞ்சேர்க்கும் பொது நலனில் தோழமைதான் நீயும் கொண்டாயோ?-மழையே
நீ செய்திடும் சேவைக்கெல்லாம் மக்கள் என்னகைமாறுதான் செய்திடுவாரோ?அவரோ
மரந்தனையே வெட்டாமல் இருந்தாலே உனக்கும் உலகுக்கும் நன்மை ஆகிடுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_:வெயில் என்தோழன் என் தோளில் கைபோட்டு என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!

வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!
கரைகளற்ற நதியாகவே அவன் எல்லாத் திசைகளிலும்
கங்குகரையின்றி தங்குதடையின்றி
எங்கும் பறந்து பாய்ந்தோடினானே!
சிலவேளை அவனே சிறுமழலை போலவே
மெல்ல மெல்லவே சன்னல்வழியே எட்டிப் பார்ப்பானே!-மாலை
மறுவேளை இளந்தென்றலோடு சேர்ந்து என்னைஅணைத்தே தாலாட்டுவானே!
அவனென் உடலிலும் உள்ளத்திலும் வரைந்த சித்திரங்கள் என்றும் அழியாதவையே!
வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_தென்றலின் துணையோடு ஓராயிரமாம் கவிதைகளே!சொல்வது- என்வீட்டு சன்னல் அல்லவா?-:

தென்றலின் துணையோடு
ஓராயிரமாம் கவிதைகளே!சொல்வது-
என்வீட்டு சன்னல் அல்லவா?-இயற்கையிலே
உலகமே என்னோடு உவகையோடு அன்பாம் உறவு கொண்டதே!
என்னெஞ்சினில் என்றும் மாறாத பசுமையிலே!
வான்வெளியும் குளிர் நிலவும் விண்மீன்களும்
தேன்மழையும் உயர்மலையும் மகிழ் அருவிகளும் -இயற்கையிலே
உலகமே என்னோடு உவகையோடு அன்பாம் உறவு கொண்டதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:நீயும் வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே! ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ! ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே

ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே!
உன்னைப் பிரிந்த உன்சிறு இறகினாலே கூட நீயும்
வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே!
ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ?-உன்
அனுபவத்தையே மானுடமும் ஒரு படிப்பினையாய்
ஆக்கி முன்னேறும் வாழ்வினையே கொண்டதோ?
உன்சிறு இறகினாலே கூட நீயும்
வானமாம் சுவற்றினிலே தேடலாம் உன்வாழ்வினையே!
ஓர்கவிதையாகவே வடித்துச் சென்றாயோ!
ஓ! சின்னஞ்சிறு சிட்டுக் குருவியே!

Thursday, September 16, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:என் தேச நதிகளெல்லாம் எனக்கு ஒற்றுமை சொன்னதே!

இயற்கையான
காதலின்ப அன்பாம்
என்வார்த்தையின் வசீகரமே!- நம்
இனியவாழ்வின் விருட்சமே!

உலகின் தீராத நறுமணங்களின் காட்டுவனங்கள்
புதைந்து கிடப்பன எத்தனையோ?
எந்தத் திசையிலோ? யாரும் அறியாமலே
அரும்பி மணத்திடும் பூக்கள்தான் எத்தனையோ?

அந்த ஆலமரத்து நிழலும்
இந்த சிறிய புல்லின் நிழலும் சமமாகவே எந்தனுக்கே காதலியே
வியப்பானதே ஓர் இயற்கை அற்புதம் ஆனதோ?

வாழ்க்கைப் பயணம் முழுவதுமே கண்ணில் கொள்ளாத காட்சிகளே!-அன்பே என் உணர்வு
வான்கரையேறி எல்லையில்லாத இன்பந்தான் கொண்டே ததும்பிடுதே!

பூமிப் பந்தின் இயற்கைஅன்னை எனக்குள் ஏதேதோ சொன்னாளே!
என்பள்ளிக்கூடமும் எனக்குப் போதிமரம் ஆனதே!
என்புத்தகங்கள் எனக்குப் பகுத்தறிவினை தந்ததே!
என்வீட்டு பூவரசும் எனக்கு ஆசாணானதே!
என் தேச நதிகளெல்லாம் எனக்கு ஒற்றுமை சொன்னதே!
என்னூரின் மலையருவி கூட ஓர்கவிதை ஆனதே!அந்த
சின்னஞ்சிறு எறும்புகூட என்கூட தோள்கொடுக்கும் தோழனானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மனித நேயத்தில் நாள்தோறும்! தேடல் கொண்டு மனிதத்தை அறியத் துடிக்கும் மாமனிதர்களே!

சுதந்திரமான நல்லஅன்பு மனித நேயத்தில் நாள்தோறும்!
தேடல் கொண்டு மனிதத்தை அறியத் துடிக்கும் மாமனிதர்களே!
வானில் சிறகினை விரித்துப் பறக்கும் ராஜாளிப் பறவைகளே!
தானுண்டு தன்வேலையுண்டு என்பாரே!கிணற்றுத் தவளைகளாமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-உண்மை நெஞ்சில் தயங்காதே காதலினையே பார்வையில் சொல்லு சொல்லு!

ஆதியென்ற மணிவிளக்கே!
அகண்ட பரிபூரணமே!-அன்பாம்!
சோதியென்ற பெருவெளியே!=-உன்னையே!
சொந்தமென்று தேடிவந்தேனே!

காணாத காட்சியெல்லாம் கண்ணில் காணும்!
கலங்காதே மெய்மயக்கம் மெத்தவாகும்-காதலி கண்ணே!
மயங்காதே மெளனத்திலே நீயும் நில்லு நில்லு!-உண்மை நெஞ்சில்
தயங்காதே காதலினையே பார்வையில் சொல்லு சொல்லு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கெட்ட தனியுடைமை போரிடும் உலகினை எதிர்த்து என்றும் போராடுகின்ற துணிவிலும் வாழ்விருக்குது!-

படிக்கவும் நாவிருக்குது பாடவும் இதழிருக்குது!
பிடிக்கவும் கரமிருக்குது அணைக்கவும் நெஞ்சிருக்குது!
நடிக்கவும் இமையிருக்குது பார்வையில் கண்ணிருக்குது!
துடிக்கவும் ஊடலிருக்குது துஞ்சவும் மார்பிருக்குது!
அன்பிலும் துணையிருக்குது பகுத்தறியும் பண்பிருக்குது!கெட்ட தனியுடைமை போரிடும் உலகினை எதிர்த்து
என்றும் போராடுகின்ற துணிவிலும் வாழ்விருக்குது!-
நட்பிலும் நாடுகின்ற நலத்திலும் தோழமையிருக்குது!
நல்லவர் உறவினிலே பொதுவுடைமை நேயமிருக்குது!
எல்லாம் வாழுகின்ற சமதர்ம அரசு அமைந்திடும் போது!
இன்பம் என்கின்ற சொல்லுக்கே பஞ்சமில்லை இல்லையே!

Wednesday, September 8, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் கண்கொண்ட பேரின்பத்தையே !எப்போதும் என்னாலே மறைக்கவும் முடியவில்லையே!;

காதல் கண்கொண்ட பேரின்பத்தையே !எப்போதும்
என்னாலே மறைக்கவும் முடியவில்லையே!;
காதலுக்குக் காரணமான காதலரிடமே நான்கொண்ட நாணத்தால்
காதல் தனையே என்னாலே அவரிடமே உரைக்கவும் முடியவில்லையே!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-அரைக்க அரைக்க சந்தனமும் மணக்குமடியோ?-ஊடல் மெளனத்திலே உரைக்க உரைக்க காதலின்பமும் தழும்புமடியோ? .

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீரடியோ? பிறர் அறியாமலே
மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகுமடியோ?
அரைக்க அரைக்க சந்தனமும் மணக்குமடியோ?-ஊடல் மெளனத்திலே
உரைக்க உரைக்க காதலின்பமும் தழும்புமடியோ?
.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல் தொடாமல் சுடுகின்றதே -காதலே இது, பிரிவிலும் சுடுகின்றதே!

நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல்
தொடாமல் சுடுகின்றதே
-காதலே
இது, பிரிவிலும் சுடுகின்றதே!

ஒருவரையொருவர் காணாமலும் தொடாமலும் -காதலரே!
பிரிந்திருக்கும் போதினிலே!
காதல் நோய் உடலையும் உள்ளத்தையும் சுடுகின்றதே!
நெருப்பு தொட்டால் சுடுகின்றதே ;-காதல்
தொடாமல் சுடுகின்றதே
-காதலே
இது, பிரிவிலும் சுடுகின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட காதல் பிரிவே கொடுமையானதே !

பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட
காதல் பிரிவே கொடுமையானதே
காதலன் பிரிவே துயரமானதே!
நம்மை உணர்ந்து நம்மை மதித்து நம்மை போற்றி
அன்பு காட்டுபவர் இல்லாத ஊரில் வாழ்வது துன்பமானதே !; அதைவிடத் துன்பமானதே-என் அன்புக்கு இனிய காதலரைப் பிரிந்து வாழ்வதே!
பாலைவன வெம்மை கடுமையானதே-அதைவிட
காதல் பிரிவே கொடுமையானதே !
காதலர்ப் பிரிவே துயரமானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் தலைவரையே விடைபெறும் காலம் வந்து என்னைக் கொல்லுமோ?-என்ற அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!

அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!-காதல் தலைவரையே
விடைபெறும் காலம் வந்து என்னைக் கொல்லுமோ?-என்ற
அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!
முன்பு அன்புக் காதலர் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமானதே!ஆனால், இப்போதோ! மெய் தழுவிக் களிப்பதும் பிரிவை எண்ணுதே!ஏக்கம் தான் கொள்ளுதே!
எங்கே அன்புக் காதலரையே விட்டுப் பிரிந்திடுவோமோ?என்ற அச்சம் வந்து துன்பம்தந்து வருத்துகின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என்னைவிட்டு நீயும் பிரிந்து செல்வதில்லையென்றால்! அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்!

அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்
காதல் தலைவனே!
கண்ணின் மணியனே!
என்னைவிட்டு நீயும்
பிரிந்து செல்வதில்லையென்றால்!
அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடமே நீயும் சொல் சொல்!
அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் நீயும் சொல்.சொல்!இறுதியாக
நீ போவது உண்மையென்றாலே! நீ திரும்பி வரும்போது
யார் உயிரோடு இருப்பாரோ?அவரிடமே
இப்போதும் விடைபெற்று நீயும் செல் செல்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதல் நிலவினையே குரைக்கும் ஊர்நாயாலே விரட்டமுடியுமா? வானத்து விண்மீன்களையே மேகஅலையாலே விரட்டிடவே முடியுமா?

ஊரார் பழிச்சொல்லுக்குப் பயந்து காதல் உணர்வும் அடங்கிடுமோ?
எரிகின்ற தீயை நெய்யை ஊற்றி அணைத்திடவே முடியுமா?
காதல் நிலவினையே குரைக்கும் ஊர்நாயாலே விரட்டமுடியுமா?
வானத்து விண்மீன்களையே மேகஅலையாலே விரட்டிடவே முடியுமா?







/-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலர் ஒன்றாய் கருத்தொருமித்து ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலுக்கே!

காதலர் ஒன்றாய் கருத்தொருமித்து ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலுக்கே! ஊர்மக்கள் பேசும் ஏச்சுக்களே!எருவானதே!காதலி அவள்
அன்னையின் வசவுமொழியையும் காதல் பயிர் நீராகக் கொண்டு வளருமே அல்லாது என்றும் கருகிப் போய்விடாதே!.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-என்னை யாரும் வைய வைய வைரக்கல்லே!

நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-என்னை
யாரும் வைய வைய வைரக்கல்லே! நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-ஊரார்
அவரின் தூற்றுதல் எல்லாமே - நானும்
போற்றுதல் ஆக்கிக் கொண்டேனே!-அவ்வாறு
இல்லையென்றால் காதலர் எங்களின்
இக்காதல்கொடி வளமிழந்து வாடிப்போய் விடும்அல்லவா?.
நானும் திட்ட திட்ட திண்டுக்கல்லே!-என்னை
யாரும் வைய வைய வைரக்கல்லே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எவரும் எம்காதலையே பழிதூற்றி பேசுவதாலே!இன்றே எம்காதல் வளரும் மதியாய் ஆகிடுமே!

எம் காதலைப் பற்றி தூற்றுவார் தூற்றட்டும்
எம் அன்பினைப் பற்றி பொறுமுவார் பொறுமட்டும்!எவரும்
எம்காதலையே பழிதூற்றி பேசுவதாலே!இன்றே
எம்காதல் வளரும் மதியாய் ஆகிடுமே! நன்றே
எம்காதல் கைகூடும் நாளாய் ஆக்கிடுமே!காதல் வாழ்ந்திடும்
என்ற நம்பிக்கையில் எம் உயிர் போகாமல் இருக்கிறதே !
என்பதையே இந்த
ஊரார் அறிந்திட மாட்டாரே!-எம்காதலின்
உண்மை உறவினையே தெரிந்திட மாட்டாரே!







:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனித நேயமே ஆரறிவாரோ? ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனிதத்தையே! ஆரறிவாரோ?

ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- நீதிவழி
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- சித்திமுத்தி
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- அன்பனைத்தும்
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனித நேயமே
ஆரறிவாரோ?
ஆரறிவாரோ?ஆரறிவாரோ?- மனிதத்தையே!
ஆரறிவாரோ?

Tuesday, September 7, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-ஊடல் கால சிறிய இன்பமும் காதலுலகத்தின் பேரின்பமாகுமே !

ஊடல் கால சிறிய இன்பமும் காதலுலகத்தின் பேரின்பமாகுமே !
ஊடலுக்குப் பின்னே வரும் கூடலிலும் கோடி இன்பமே கொள்ளை கொள்ளுமே!
காதலன்பின் ஊற்றாகும் ஊடலை வரவேற்கும் விழியிரண்டும் வழிபார்த்தே!
காணாத உலகமெல்லாம் நெஞ்சுக்குள்ளே நேசம்கண்டு இனிமையாக்குமே!








-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-அந்த ஊடல்தானே என்னில் அன்பை வளர்க்குமோ இல்லை வம்பை வளர்க்குமோ?

என்மீது ஒருகுற்றமும் இல்லையே தோழி-ஆனாலும்
என்மீது ஊடல்கொண்டாளே தலைவி-அந்த
ஊடல்தானே என்னில் அன்பை வளர்க்குமோ இல்லை வம்பை வளர்க்குமோ?
ஏதும் நானறியேனே என் தலைவியின் அன்புத்தோழியே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ காதல் அன்போடு சிரித்தாளே!

காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ
காதல் அன்போடு சிரித்தாளே!மென்மையான அவளின்
மோகச் புன்முறுவல் தனிலே ஒருஇன்ப குறிப்புமுண்டே!-அந்த
ஆசைக் குறிப்பினிலே ஒருபேரின்பம் கண்டுகொண்டேன்!
காதல் தலைவியை நான் பார்த்திடவே!அவளோ
காதல் அன்போடு சிரித்தாளே!







:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இவளின் ஒருபார்வையே காதல் நோய்தந்தது! இவளின் மறுபார்வையே காதலின் நோய்தீர்த்ததே!

இவளின் மையுண்ட கண்களுக்கு
இரண்டு பார்வையுண்டு தோழி
இவளின் ஒருபார்வையே காதல் நோய்தந்தது!
இவளின் மறுபார்வையே காதலின் நோய்தீர்த்ததே!
இவளின் நினைவினுக்கே ஒரேகாதல் இன்பமானதே!
இவளின் நெஞ்சினிலே அன்புக் காதலன் உறவானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவள் தந்த காதல் நோய்க்கு அவளே மருந்தானாளே!

காதல் நோய் தீர்க்கும் மருந்தாய்-அந்தக் காதலியே ஆவாளே!.
அவள் தந்த காதல் நோய்க்கு அவளே மருந்தானாளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலர்கள் ஒன்றுசேர்ந்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்ட்னவே !:

காதலர்கள்
ஒன்றுசேர்ந்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்ட்னவே !அந்த மாலையில்
இன்பச் சோலையிலே!இனியென்ன?
வாய்ச்சொற்கள் தேவையில்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:இது காதலரின் குணந்தான்! இது காதலிலே சகஜந்தான்!

இது காதலரின் குணந்தான்! இது காதலிலே சகஜந்தான்!
இது காதலரின் குணந்தான்.இது காதலரின் குணந்தான்.வேறு எங்கோ?எதையோ பார்த்து பேசுவது போலவே!
பொதுவாக பார்த்துப் பேசுவது இது காதலரின் குணந்தான்.
முன்பின் தெரியாதவர் போல சாடையாலே மெளனமொழியில் பேசிக் கொள்வதுவே!
இது காதலரின் குணந்தான்!
இது காதலிலே சகஜந்தான்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவளின் மனத்திற்குள் மெல்ல சிரித்தாளே; அந்தச் சிரிப்பிலும் அவளுக்குள் ஏதோ இல்லை ஒரு காதல் குறிப்புதான்

அவளின் மனத்திற்குள் மெல்ல சிரித்தாளே; அந்தச் சிரிப்பிலும் அவளுக்குள் ஏதோ இல்லை ஒரு காதல் குறிப்புதான் தெரிகின்றதே!
அன்னியம் போல அவள் பேசிய பின்பும்
அதையும் நானும் மறந்து அன்பில் திளைத்து
நான் அவளைப் பார்த்திடும் போதினிலே, அவள் மனம் நெகிழ்ந்தாளே! அவளின் மனத்திற்குள் மெல்ல சிரித்தாளே; அந்தச் சிரிப்பிலும் அவளுக்குள் ஏதோ இல்லை! ஒரு காதல் குறிப்புதான் தெரிகின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலி அவளே! தனக்குள் தானே மகிழ்ந்தாளோ? என்னுள் தேனைக் குழைத்தாளோ?.:

அவளின் கண்கள்
நேரே பார்க்காமலே!ஒரு கண்ணை தானும் மூடாமலே!
மறு கண்ணை மட்டும் சுருக்கியே !-எந்தன் நெஞ்சில் இனிமைப் பெருக்கியே!
அவளின் கண்களாலே!
என்னைப் பார்த்துப் பார்த்துக்
கண்கள் பூத்துப் பூத்து அன்பாலே!-காதலி அவளே!
தனக்குள் தானே மகிழ்ந்தாளோ?
என்னுள் தேனைக் குழைத்தாளோ?.

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-: அவள் என்மீது கொண்ட காதல் அன்புப் பயிருக்கு நீரானதோ?

அவள் என்னைப் பார்த்தகடைக்கண் பார்வையில்தான்
ஆசை மிகுந்ததோ? அவள் என்மீது கொண்ட
காதல் அன்புப் பயிருக்கு நீரானதோ?
காதல் உலகம் மிகப்பெரிதோ?எங்கள்
காதலர் நினைவும் வானிலும் பெரிதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கண்ணால் என்னையே காதலாலே நோக்கிக் களவு கொண்டாள் காதலியே!=

கண்ணால் என்னையே காதலாலே நோக்கிக் களவு கொண்டாள் காதலியே!=
காதலன் எனக்குள் கனவு தந்தாளே!
அவளின் காதலாலே
சுருங்கிய பார்வைதனையே!
காதலின் நேர்பாதி என்பாரே சிலரே
அது ஒன்றும் உண்மையல்லவே,
அதுவே முழுமையென்றாலே மிகையாகுமோ?

Monday, September 6, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;பகுத்தறிவே நல்வாழ்வென்று உலகத்தில் நீயும் கொண்டாடடா!

மனிதனே!
சீவனே நீயடா! அறிவும் நீயடா! அன்பும் நீயடா!
சிவனும் நீயடா! மனிதா நீயே சக்தியடா! பரமும் நீயடா!-அன்பே
சிவமென்று கூத்தாடடா!-பகுத்தறிவே
நல்வாழ்வென்று உலகத்தில் நீயும் கொண்டாடடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;ஆண்பெண் சமத்துவத்தையே ஏற்றிடுவோம்!-தனியுடைமை ஆணாதிக்க சமூகத்தையே வீழ்த்திடுவோம்?

அஞ்சுகின்ற பெண்ணென்றும் ஆண்மையுள்ள ஆணென்றும்
அஞ்சு பஞ்ச பூதத்திற் பிரிந்ததுண்டா?அவற்றின்
நெஞ்சிலுள்ள வஞ்சகங்கள் வேறுமுண்டா?
நிறம்வேறோ? குணம்வேறோ? நேசம் வேறோ?
மிஞ்சுகின்ற உயிர் ஆண்பெண் என்றும்
மெய்கண்ட நூல்கள் தான்பிரித்தது தானுண்டா?
அறிவினிலே அன்பினிலே ஆணுக்குப் பெண்குறைவில்லையே!
திறமையிலே திட்டத்திலே ஆணுக்குப் பெண் தாழ்வில்லையே!
ஆண்பெண் சமத்துவத்தையே ஏற்றிடுவோம்!-தனியுடைமை
ஆணாதிக்க சமூகத்தையே வீழ்த்திடுவோம்?

ஆணுக்கும் பெண்ணுக்கும் அறிவொன்றே தானடா!
ஆனாலும் பேதைகுணம் என்று பித்தர்களும் பிதற்றுவாரே!
வீணுக்கு எடுத்த ஜென்மம் அனந்தக் கோடி!
விவேகமுத்தி பெற்றவர்கள் அவருளுமுண்டு
ஊணுக்கு தேடியுண்டே உறங்கியிருந்த
உலுத்தர்களும் உண்டு ஜூவராசிகளில் அனந்தக்கோடி
ஆணும் பெண்ணும் சமமென்றே
பகுத்தறிவாலே நாமும் அறிந்து நடப்போமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;வாழ்வே போராட்டமே போராட்டமே வாழ்வே! போராடாமல் வாழ்வில் மட்டுமல்ல சமுதாயத்திலும் விடியலில்லையே1

வாழ்வே போராட்டமே போராட்டமே வாழ்வே!
போராடாமல் வாழ்வில் மட்டுமல்ல சமுதாயத்திலும் விடியலில்லையே!

விடியாத காலத்தே இருளே ஆகிடுமே!
விடிந்த பின்னே கண்ணுக்கு வெளிச்சமாகிடுமே!
வாழ்வின் இருளே இருளலல்லவே!
வாழ்ந்து பார்ப்போம் மகிழ்வொளி வருமே!
வாழ்வே போராட்டமே போராட்டமே வாழ்வே!
போராடாமல் வாழ்வில் மட்டுமல்ல சமுதாயத்திலும் விடியலில்லையே1

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;ஒற்றுமையில் சந்தோசமான சமதர்மமான தேச உலகத்தில் -அன்பு சம்சார பந்தத்திலே நல்ல ஞானந்தன்னையே பெறுவோமே!

சன்யாசி ஆனவருள்ளும் அநேக மூடருமுண்டே!
சம்சாரங் கொண்டவருள்ளும் நூற்றுக்கு நூறு ஞானிகளுமுண்டே!
இல்லறமிருந்தே நல்ல பகுத்தறிவாலே ஞானத்தையே பெறலாமே!-தனிமையிலே!
துறவறமிருந்தே நாடுவிட்டு காடுமலைபோயே ஆவது தானென்ன?-துறவிகளின்
பெற்றோரே துறவியாய் போயிருந்தாலே இந்த துறவியும் பிறந்திருப்பாரோ?ஒற்றுமையில்
சந்தோசமான சமதர்மமான தேச உலகத்தில் -அன்பு
சம்சார பந்தத்திலே நல்ல ஞானந்தன்னையே பெறுவோமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;அன்பே மனிதரை மனிதர் சரி நிகர் சமானமாய் சந்தோசமாய் ஆக்கிடுமே!

அன்பே சித்தமதனையே சிவமாக்கும் சீவானந்த போதமெதோ?-அந்த மனித நேய
அன்பே எந்த சமயத்தையும் விஞ்சி நிற்கும் வாழும் தத்துவமாகிடுமே!
அன்பே மதமானால் மனிதரிடையே பேதங்கள் இல்லாமல் போய்விடுமே!
அன்பே மனிதரை மனிதர் சரி நிகர் சமானமாய் சந்தோசமாய் ஆக்கிடுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:பகுத்தறிவாயே! முந்தி முந்தி சேர்ந்தறி நீயும் ஆண்பெண் சமத்துவத்தில்

கண்ணாலே பார்த்து நீயும் சுகங்கண்டாயா?-காதலன்புத்
தொல்லைக்கே ஆளாகி நீயும் கருத்திழந்தாயா?
உந்தி உந்தி பார்த்தறிவாய் நீயே!எதையும் வாழ்வினில் பகுத்தறிவாயே!
முந்தி முந்தி சேர்ந்தறி நீயும் ஆண்பெண் சமத்துவத்தில்
வாழ்வில் மட்டுமல்ல சமூக உயர்விலும் நற்பாதை நீயும் செல்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:மனிதரிலும் மனித நேயமுண்டு! மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!

மனிதரிலும் மனித நேயமுண்டு!
மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!
மனிதரிலும் பறக்கும் பறவையுமுண்டு!
மனிதரிலும் காட்டு விலங்குமுண்டு!
மனிதரிலும் கல்லான குணங்களுண்டு!
மனிதரிலும் அசையாத மரங்களுமுண்டு!
மனிதரிலும் மனித நேயமுண்டு!
மனிதரிலும் அன்பான மனிதமும் உண்டு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கூரான பகுத்தறிவே!- நீயே பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலின்றி வாழ்வாயா?

காதலான நெஞ்சமே!- நீயே
இமைப் பொழுதாகிலும் அலைவதன்றி இருந்தாயா?
அன்பான நேசமே !- நீயே
அனுதினமும் என் நினைவின்றி இருந்தாயா?
மாறாத வாசமே!- நீயே
எப்போதும் என் துணையின்றி இருப்பாயா?
கூரான பகுத்தறிவே!- நீயே
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதலின்றி வாழ்வாயா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:முத்தம் முத்தம் முத்தமே!காதல் ஆண் பெண் உறவில் ஏங்கி நிற்கும் கனவாகவே இருக்கும் முத்தமே!

முத்தம் முத்தம் முத்தமே!காதல் ஆண்
பெண் உறவில் ஏங்கி நிற்கும் கனவாகவே இருக்கும் முத்தமே!
முத்தம் முத்தம் முத்தமே!பின்வாழ்வின்
மண் உறவில் வழக்கமாகிவிட்ட நனவாகவே சிரிக்கும் முத்தமே!
முத்தம் முத்தம் முத்தமே!-அதன் பின்னே கணவன்,மனைவி
இருவருக்கும் தேவை பரஸ்பர நினைவாகவே கலக்கும் முத்தமே!
முத்தம் முத்தம் முத்தமே!தன்பிள்ளை பெற்ற
மக்களாம் பேரன் பேத்திதரும் சுகமாகவே களிக்கும் முத்தமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அவளின் அழகு எல்லாமே சாதாரணம் தானே! அய்யோ! அய்யோ!அந்தக் கண்கள்!

அவளின் அழகு எல்லாமே சாதாரணம் தானே!
அய்யோ! அய்யோ!அந்தக் கண்கள்!
அவளின் பார்வை துள்ளிவரும் மீன் தானே!
அய்யோ!அய்யோ! அந்த நெஞ்சம்!
அவளின் காதல் கலந்துவிடும் உயிர் தானே!
அய்யோ!அய்யோ! அந்த காதலன்
அவளின் வாழ்வு காதலனோடு இணைந்து தானே!
அய்யோ!அய்யோ! பிரபஞ்ச பேரின்பம் !

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எங்களோடு வறுமையிலே ,விலைவாசி ஏற்றத்திலே!-வாழ்வினிலே சேர்ந்துவாட துணிவிருக்கா?அந்த சாமியக் கேளு !கண்ணாத்தா!

எங்களோடு வறுமையிலே ,விலைவாசி ஏற்றத்திலே!-வாழ்வினிலே
சேர்ந்துவாட துணிவிருக்கா?அந்த சாமியக் கேளு !கண்ணாத்தா!
எட்டி நின்னு வரங்கொடுக்கும் சாமியடி சாமியோ!
எங்களோடு வறுமையிலே ,விலைவாசி ஏற்றத்திலே!-வாழ்வினிலே
சேர்ந்துவாட துணிவிருக்கா?அந்த சாமியக் கேளு !கண்ணாத்தா!
எட்டி நின்னு வரங்கொடுக்கும் சாமியடி சாமியோ!-போலி
அரசியல் வாதிகளின் கொடுமைகளைக் கண்டு
கொதிக்காம இருப்பாரா?உங்க சாமியடி சாமியோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:உருட்டிய லட்டு லட்டு உதிர்ந்ததெல்லாமே எனக்கடியோ!உதிராம லட்டு லட்டு இருந்தாக்கா அதுஎல்லாம் உனக்கடியோ!

உருட்டிய
லட்டு லட்டு உதிர்ந்ததெல்லாமே எனக்கடியோ!உதிராம
லட்டு லட்டு இருந்தாக்கா அதுஎல்லாம் உனக்கடியோ!
அடிச் சின்னப் பெண்ணே !வண்ணக் கண்ணே!
அடி மண்ணின் பொன்னே !விண்ணின் விண்ணே!
லட்டு லட்டு லட்டடியோ!பிட்டு வைத்த தட்டடியோ!-உருட்டிய
லட்டு லட்டு உதிர்ந்ததெல்லாமே எனக்கடியோ!உதிராம
லட்டு லட்டு இருந்தாக்கா அதுஎல்லாம் உனக்கடியோ!

Sunday, September 5, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:என்காதல் தலைவனையே நானும் இனி காணும் வழியேது? என் தோழி

என்காதல் தலைவனையே நானும் இனி காணும் வழியேது? என் தோழி?அந்த என்காதல் தலைவனே!
பொய்யான புகழுரைகூறி என்னோடு இன்பம் துய்த்தவனே!
அன்று இங்குவந்து என் நலத்தையே நுகர்ந்தான்-
அவன் இன்று அதனை மறந்தான் போலும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்-:வாழ்க்கை வாழ பொருள்தேவை அந்தப் பொருளினைத் தேடியே சென்றான் என்காதல் தலைவனே அயல் நாடே!

சென்ற காதல் தலைவனே !விரைந்து வந்திடுவானே- நம்
இல்லக் கதவினைத் திறந்துவைப் போமா?
காதலன் பிரிந்த காரணம் அறிவாயா என் தோழி?
வாழ்க்கை வாழ பொருள்தேவை அந்தப் பொருளினைத்
தேடியே சென்றான் என்காதல் தலைவனே அயல் நாடே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வாழ்க்கைக்கான போராட்டமே !போராட்டமே வாழ்க்கையானதே!

என் நெஞ்சானது காதல்தலைவன் அவன் சென்ற கடல்வழியே போய்கொண்டிருக்கிறதே!
அவன்வேலைக் காகவே சென்றான் இருந்தும் எனக்கு இன்பவேதனையும் தந்தானே!
வாழ்க்கைக்கான போராட்டமே !போராட்டமே வாழ்க்கையானதே! என்னாட்டில்
வேலைகிடைத்து இருந்தாலே எதற்கு? வேறுதேசம் என்காதல் தலைவன் போகபோகின்றான்?








ம்/-:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதல் தலைவனே! சோற்றுக்கு சொந்த நாட்டினைவிட்டே அயல் நாடுசென்றான் தலைவியை பிரிந்தே!

காதல் தலைவியின் மாவடுவைப் பிளந்தாற்போன்ற இருகண்களிலிருந்து கண்ணீர் மென்அருவியாக கொட்டுகின்றதே!
வாழவேண்டி வெளி நாட்டில் வேலைதேடிச் சென்ற தலைவனின் துன்ப நிலை கேள்விப்பட்டே
காதல் தலைவனே!
சோற்றுக்கு சொந்த நாட்டினைவிட்டே அயல் நாடுசென்றான் தலைவியை பிரிந்தே!

Saturday, September 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதலன் அவன் தந்த காதலாலே என்மனமோ வருந்துகின்றதே-

காதலன் அவன் தந்த காதலாலே என்மனமோ வருந்துகின்றதே!
இயற்கைப் புணர்ச்சியாலே தேன்கலந்த சொல்லினாலே!
என்னைத் தெளிவித்து சேர்ந்துபின்னர் அந்த இன்பத்தை எண்ணாமலே!
என்னை மறக்கும் தன்மைகொண்ட மாமாயனோ?காதலன் அவன் தந்த
காதலாலே என்மனமோ வருந்துகின்றதே-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?

என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?
கருகிய காட்டுக்கு நறுமணமாகவே!அருவி வழியாகவே!
கள்ளத் தனமாகவே சந்தன கட்டைகளைக் கொண்டே!
காடெல்லாம் நறுமணம் கொள்ள வைத்தவனே!என்காதல் தலைவனே!
என்காதல் தலைவனே! இனிவருவானா? இனிவராது போவானா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:-காதலன் அவன் வரவினை எதிர்பார்த்தே என்விழிகளும் பூத்து விட்டதென்னடி என் தோழி!?

அங்கு அன்று!
மலைச் சாரலிலே என்னைச் சேர்ந்தான் என்காதல் தலைவனே!
இங்கு இன்று என்னை ஏன்பிரிந்து சென்றான் என்காதல் தலைவனே!
அவனின் பிரிவாலே என்னுடல் நிறமாறி பசலையானதே என் தோழி!-காதலன்
அவன் வரவினை எதிர்பார்த்தே என்விழிகளும் பூத்து விட்டதென்னடி என் தோழி!?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்அந்த மாலை நேர மோகனக் கனவு இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே! இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!

அந்த மாலை நேர மோகனக் கனவு
இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே!
இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!

மூங்கிற்காடே! மூங்கிற்காடே!
காற்று தாலாட்டிய போதெல்லாம்
வளைந்து வளைந்து அசைந்து அசைந்து
ஆடியதே மூங்கிற்காடே!
கண்ணுக்குத் தெரியாத மூடுபனி மூடுபனி-அதிகாலை முகம் பார்க்கமுடியாத
மூடுபனி இன்னும்
அந்த ஒத்தைக் குயில் தென்றல் காத்துல
அட்டா எழுதிவிட்டது இசைப் பொன்கடிதமோ?
அந்த மாலை நேர மோகனக் கனவு
இந்த கண்ணுக்குள் கவிதைசொல்லும்!அந்தியிலே!
இமைக்குள் குடியேறி இன்ப மயக்கமாகும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம் போதிக்கின்றனவே!போதிக்கின்றனவே!-கிளைகளே! போதிக்கின்றனவே!திசைகளில் விரிந்து நம் உறவையும் நட்பையும் போதிக்கின்றனவே!

தேடுகின்றனவே! தேடுகின்றனவே!-வேர்களே!
தேடுகின்றனவே! நம் பாரம்பரியத்தையே
தேடுகின்றனவே!
போதிக்கின்றனவே!போதிக்கின்றனவே!-கிளைகளே!
போதிக்கின்றனவே!திசைகளில் விரிந்து
நம் உறவையும் நட்பையும் போதிக்கின்றனவே!
விளக்கானவையே விளக்கானவையே -பூக்கள் ஒளிவிடும்
விளக்கானவையே!அன்பையே விளக்கிடுமே!
காய்கள் இளம்சேய்கள் அல்லவா!
கனிகள் வரும்தலைமுறையின் விதைகள் அல்லவா!
இலைகள் வரலாற்றின் தொலைதூரங்கள் அவை
ஆடை உணவு கூரையானது அல்லவா!
படர்ந்த கொடிகளின் மலர்ந்த பூக்கள்
ஆனந்த வாழ்வின் சிரிப்புதனையே அர்த்தப் படுத்தியனவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்வாழ்க்கை எல்லாம் ஒரு கோடுதானடா!-அந்த வாழ்க்கைதனை குறுக்கிப் பார்த்தால் -ஒரு சின்னஞ்சிறு புள்ளிதானடா!

வாழ்க்கை எல்லாம் ஒரு கோடுதானடா!-அந்த
வாழ்க்கைதனை குறுக்கிப் பார்த்தால் -ஒரு
சின்னஞ்சிறு புள்ளிதானடா!துன்பமும் இன்பமும்
நீட்டினால் நீளுமடா!சுருக்கினால் சுருங்குமடா! நல்லது கெட்டது
பூட்டினால் ;திறக்குமடா!திறந்தால் மூடுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:அழகு மாதுளைச் செடிகளே! தளுக்கி தளுக்கி குலுங்கி குலுங்கி சிரிக்குதடி! தென்றல் உரசிடும் மூங்கில் துளைதனிலே !

சின்னஞ்சிறு சிட்டுகுருவிகளே!
பேசிடும் துணுக்குமொழி தனையே கேட்டு!
அழகு
மாதுளைச் செடிகளே!
தளுக்கி தளுக்கி குலுங்கி குலுங்கி சிரிக்குதடி!
தென்றல் உரசிடும் மூங்கில் துளைதனிலே புல்லாங்குழல்
தேனிசை ஆகியே நெஞ்சை மயக்குதடி!








/-:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-அந்த ஆத்தோரம்,தென்னந்தோப்போரம்,தென்றல் காத்தோரம்,-காத்திருந்தது அன்பே காதலி உன் ஒரு ஞாபகம் மட்டும்!

எத்தனையோ?
இலையுதிர் காலங்கள் கடந்த பின்னும்
அந்த ஆத்தோரம்,தென்னந்தோப்போரம்,தென்றல் காத்தோரம்,-காத்திருந்தது
அன்பே காதலி உன் ஒரு ஞாபகம் மட்டும்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-முத்து மல்லிகைப் பூவே! முகையவிழ்ந்த பிச்சிப் பூவே! வாசமுள்ள செண்பகப் பூவே!-அந்த வாடாத செவந்திப் பூவே!

பூவே பூவே புளியம்பூவே!-இந்த
பொன்னாத்தா கொண்டைக்கு ஏத்த தாழம்பூவே!
சந்தைக்கு போகும் மச்சான்
காத்திருக்கும் இந்த ஆசைக் காதலிக்கு
கொண்டு வருவான் பரிசாகவே!பூவே பூவே பூவே!
முத்து மல்லிகைப் பூவே!
முகையவிழ்ந்த பிச்சிப் பூவே!
வாசமுள்ள செண்பகப் பூவே!-அந்த
வாடாத செவந்திப் பூவே!
பூவே பூவே புளியம்பூவே!-இந்த
பொன்னாத்தா கொண்டைக்கு ஏத்த தாழம்பூவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-ஆனாலும் என்னருகே நீயிருக்க எந்த பிரபஞ்சமும் எனக்குப் பெரிதல்லவே!

சிந்திய பன்னீர்ச் சிறுதுளியும் மணக்குமடி!-உன்
அல்லிமலர் நெஞ்சத்தில் ஆனந்ததேன் சுரந்ததடி!
அடிவானத்தில் புள்ளியாய் ஒளியாய்
அர்ந்தங்களைத் தேடியே ஓடினேன்!ஆனாலும்
என்னருகே நீயிருக்க எந்த பிரபஞ்சமும் எனக்குப் பெரிதல்லவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலன்பாலே என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சொல்லுவாள்! என்னைதினம் மெளனத்திலே கொல்லுவாள்!

ஒரு நாள்மாலை நேரம்!
அந்த புளியந்தோப்பு வேலியோரம்!
அவளைக் கூப்பிடுந்தூரம்- காதலி
அவளெனைப் பார்த்தாளே!
அவளைப் பார்க்கும் போதெல்லாம்- காதலன்பாலே
என்னைப் பார்த்து கண்ணைச் சிமிட்டி சொல்லுவாள்!
என்னைதினம் மெளனத்திலே கொல்லுவாள்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-என் தாவணித் தேவதையே! என்னை மயக்கிடும் மோகினியே!

என்காதல் பள்ளிக்கூட காதலியே,காதல் தலைவியே!
என் தாவணித் தேவதையே!
என்னை மயக்கிடும் மோகினியே!இந்த காதல்
பள்ளிக்கூட காதலனின்,காதல் தலைவனின் கேள்விக்கே உன் செல்லச் சிணுங்களிலே-அன்பாலே!
ஒருபதில்தான் சொல்லிடத்தான் கூடாதோ?
என்காதல் பள்ளிக்கூட காதலியே,காதல் தலைவியே!
என் தாவணித் தேவதையே!
என்னை மயக்கிடும் மோகினியே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உன் கண்களாம் கதவுகள் திறந்திருக்க -உனது அன்பு புன்னகை தென்றல் சாளரங்கள் மட்டும் பூட்டியே கிடப்பதேனோ?

உன்னைப் பற்றிச் செல்லும்
வார்த்தைக் குள்ளும் வாசமுண்டு!
உன் நினைவுக்குள்ளும் , நெஞ்சுக்குள்ளும்
நேசமுண்டு!
அன்புக் காதலியே!
அறிவு தேவதையே!
உன்னைப் பற்றிச் செல்லும்
வார்த்தைக் குள்ளும் வாசமுண்டு!
உன் நினைவுக்குள்ளும் , நெஞ்சுக்குள்ளும்
நேசமுண்டு!
உன்னைத் தொற்றிச் செல்லும் கனவுக்குள்ளும்
பாசமுண்டு!
உன் கண்களாம் கதவுகள் திறந்திருக்க
-உனது அன்பு
புன்னகை தென்றல் சாளரங்கள் மட்டும்
பூட்டியே கிடப்பதேனோ?உன் முறுவலை
மறைப்பதும் ஏனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-உன்செம்மொழி தேனிசைக் கேட்கும் என்கண்களோ? வியப்பாலே பூத்திருக்காதோ?

நழுவாதே நழுவாதே?-ஏழுசுர நாத உல்லாசமே!
போகாதே போகாதே! காதல் மெல்லிசை ராகமே!
காதலி நீ முணுமுணுக்கும் தெம்மாங்கிசைக்கு-அடியே
முத்தமிழ்தான் முந்திவிரிக்காதோ?
உன் இதழில்
மண்ணும் அதிரச்சுழலும் காதல் அலைகள்
மெளனத்தில் காத்திருக்காதோ?
உன்செம்மொழி
தேனிசைக் கேட்கும் என்கண்களோ?
வியப்பாலே பூத்திருக்காதோ?
காத்திருக்கும்
துன்பகாலம் தொலையாதோ?
கவலையெல்லாம் மறையாதோ?
காதலி
உன் காதல் தேனிசைக் கவிதையும் ஒலிக்காதோ?
நழுவாதே நழுவாதே?-ஏழுசுர நாத உல்லாசமே!
போகாதே போகாதே! காதல் மெல்லிசை ராகமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-வருகின்ற தேர்தலெல்லாம் இந்திய தேசக் குடிமகன்கள் நாங்கள் எல்லாம் ராஜாக்களே!-

வருகின்ற தேர்தலெல்லாம் இந்திய தேசக் குடிமகன்கள்
நாங்கள் எல்லாம் ராஜாக்களே!-தேர்தல்
வந்து போனபின்பு நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்களே!-அடுத்த தேர்தல் வரும்வரை
ஐந்து வருடமுழுவதும் எங்களுக்கு அடிமை சாசனமே!
வருகின்ற தேர்தலெல்லாம் இந்திய தேசக் குடிமகன்கள்
நாங்கள் எல்லாம் ராஜாக்களே!
தேர்தல்
வந்து போனபின்பு நாங்கள் எல்லாம் பிச்சைக்காரர்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-தான் நாணி மண்ணுக்குள் புதைந்தே! மயங்கினாள் அந்த சிற்றோடையாளே!

மழையே சின்ன மழலையைப் போல
ஆனந்தக் கூத்தாடுதே!-தான் நாணி
மண்ணுக்குள்
புதைந்தே!
மயங்கினாள்
அந்த சிற்றோடையாளே!
மெல்ல மெல்ல கண்விழிக்குதே மழைக் கனவுக் குமுழிகளே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலானது இலக்கியத்திலில்லை உன் நெஞ்சினிலே!

கவிதையானது !
உன்கடைக் கண்ணிலே!
காவியங்கள்!
மொழியிலில்லை
உன்முத்த இதழிலே!
காதலானது
இலக்கியத்திலில்லை
உன் நெஞ்சினிலே!
சிகரமென்பது
இமயமில்லை
உன் அஞ்சாத துணிவினிலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-தன்னை வென்றவன் துறவியில்லை-உண்மைத் துறவியே! பொதுவுடைமைத் தொண்டனாவானே!

மனித சிந்தனையே எல்லையற்றதாகுமே!
மனிதம் என்பது உயர்ந்ததாகுமே!
தன்னை வென்றவன் துறவியில்லை-உண்மைத் துறவியே!
பொதுவுடைமைத் தொண்டனாவானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காற்றுக்கு முத்தம் கொடுத்து-ஒரு ஆனந்த நடனம் ஆடிப்பார்க்கும் உந்தன் இதழலல்லவா?

ரோஜாவே!-என் வீட்டுத் தோட்ட ரோஜாவே!
காற்றுக்கு முத்தம் கொடுத்து-ஒரு
ஆனந்த நடனம் ஆடிப்பார்க்கும் உந்தன் இதழலல்லவா?
ராஜாவே!- உன்வீட்டுக்கு நீதான் கூஜாவே!-ஒரு நாள்
கூத்துக்கு மீசைவெச்சு வேசம் போடப் பார்க்காதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/- நான்வளர்க்கும் காட்டுரோஜா மலர்ச்செடியே! நாளெல்லாம் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையே!

நான்வளர்க்கும் காட்டுரோஜா மலர்ச்செடியே!
நாளெல்லாம் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையே!
அதிகாலையில் சன்னல்வழியில் உன்முகம்காட்டி
என்னலம் கேட்கும் விழியுந்தன் விழியல்லவா?
நான் உன்னிடமே விடைபெறும்போது
ஆனந்தப் புன்னகையில் முறுவலித்து
வழியனுப்பும் உந்தன் சிரித்தமுகம் சித்திரப் பூவல்லவா?
நான்வளர்க்கும் காட்டுரோஜா மலர்ச்செடியே!
நாளெல்லாம் தலையாட்டும் தஞ்சாவூர் பொம்மையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-மழலை நிலவிற்கே தன் தாய் பிரபஞ்சமே! விண்மீன்கள் அதன்சொந்தங்களே!

மழலை நிலவிற்கே தன் தாய் பிரபஞ்சமே!
விண்மீன்கள் அதன்சொந்தங்களே!
ஆதவனைச் சுற்றும் கோள்கள் எல்லாம் அதன் பந்தங்களே!
அண்டமெல்லாம் தோழமை உறவாய்கொள்ளும் நிலவல்லவா!
மழலை நிலவிற்கே தன் தாய் பிரபஞ்சமே!
விண்மீன்கள் அதன்சொந்தங்களே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-ஆயிரம் காலத்தின் பயிர்களோ? எத்தனை எத்தனை விருட்சங்களோ?

ஆயிரம் காலத்தின் பயிர்களோ?
எத்தனை எத்தனை விருட்சங்களோ?
ஏவாள் கொடுத்த ஆதாம் பெற்ற
ஆப்பிள் கனிவிதைகளிலே !
ஆயிரம் காலத்தின் பயிர்களோ?
எத்தனை எத்தனை விருட்சங்களோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:நானொரு சாமான்யனே! நானொரு கடைக்கோடி இந்தியக்குடிமகனே!

எனக்கொரு கொடியுமில்லை
எனக்கொரு படையுமில்லை
எனக்கொரு சிம்மாசனமில்லை
எனக்கொரு அரண்மனை இல்லை
நானொரு சாமான்யனே!
நானொரு கடைக்கோடி இந்தியக்குடிமகனே!
தேர்தல் வந்தாலே என்வாக்குக்கும் ஒரு விலையிருக்குது
நானே விற்கவில்லை என்றாலே போலி அரசியல்வாதியே-அவனே
தானே விலைவைத்து எனக்குக் காகித உறைதனிலே பணம்போட்டு
வீட்டு வாசலிலே கொண்டுவந்து போட்டிடுவாரே!-அவருக்கு வாக்காம்
ஓட்டுதனை போடசொல்லி நெருக்கிடுவாரே!
ஒரு நாள் ஓட்டுவாங்கவந்த புண்ணியவானே
ஓட்டுவாங்கிவிட்டாலோ ஐந்து வருடத்திற்கு
எங்க தொகுதிபக்கம் வரமாட்டாரே!

எனக்கொரு விலைவாசி ஏற்றமில்லாத தேசமில்லை
எனக்கொரு எல்லாத்தேவையும் பூர்த்தியாகவில்லை
எனக்கொரு சமதர்ம அரசு அரியணையிலில்லை
எனக்கொரு நிம்மதியான வாழ்க்கையில்லை
நானொரு சாமான்யனே!
நானொரு கடைக்கோடி இந்தியக்குடிமகனே!










:

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:காதலர் நாமே காதலன்பினாலே! இந்த மண்ணில் மனிதத்திலும் இயற்கையிலும் அன்புதனை விதைப்போமே!

காதலியே !
எனது அன்பும் நீயே!
எனது உயிரும் நீயே!
எனது சுவாசமும் நீயே!
எனது உயிர்ப்பும் நீயே!- காதலர் நாமே காதலன்பினாலே!
இந்த மண்ணில்
மனிதத்திலும் இயற்கையிலும்
அன்புதனை விதைப்போமே!
காதலியே !
எனது அன்பும் நீயே!
எனது உயிரும் நீயே!
எனது சுவாசமும் நீயே!
எனது உயிர்ப்பும் நீயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:கவிஞர்களே கவிஞர்களே! நிலவுக்குத் தெரியுமா? நிலவையே!

கவிஞர்களே கவிஞர்களே! நிலவுக்குத் தெரியுமா?
நிலவையே!காதலி
முகத்திற்கும் -அவளின்
முறுவலுக்கும்- அழகிய
கன்னத்திற்கும் - நீங்கள்
உங்களின் கவிதையிலே
உவமையாக சொன்னதே!
கவிஞர்களே கவிஞர்களே! நிலவுக்குத் தெரியுமா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:தாகமே சுகமான போது தண்ணீர் ஏதுக்கடி? மோகமே இன்பமானபோது முத்தங்கள் ஏதுக்கடி?

தாகமே சுகமான போது
தண்ணீர் ஏதுக்கடி?
மோகமே இன்பமானபோது
முத்தங்கள் ஏதுக்கடி?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:வேப்பமர நிழலே நிழலே!- நீயே மண்ணின் வெம்மைக்கே வேடந்தாங்கலே!

வேப்பமர நிழலே நிழலே!- நீயே மண்ணின்
வெம்மைக்கே வேடந்தாங்கலே!
வெயிலின் கொடுமை உன் நிழலின் அருமையில் கண்டுகொண்டோமே!-மரத்தை
வெட்டிடும் அரக்கர்கள் மத்தியிலே நீயும் எப்படி தப்பித்து வாழ்வாயோ!?
மழைக்கு ஜீவாதாரமே உன்னை நான் வாழ்த்திவணங்கிடவே வந்தேனே!
வேப்பமர நிழலே நிழலே!- நீயே மண்ணின்
வெம்மைக்கே வேடந்தாங்கலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-தேடுதல்களுக்கே திறந்தபடியே கதவுகள் இல்லாத பிரபஞ்சமே!-உன்னில் கோடிக்கோடி விண்மீன்களே!எத்தனை எத்தனை பூமிபந்துகளோ!:

தேடுதல்களுக்கே திறந்தபடியே கதவுகள் இல்லாத பிரபஞ்சமே!-உன்னில்
கோடிக்கோடி விண்மீன்களே!எத்தனை எத்தனை பூமிபந்துகளோ!
எத்தனை எத்தனை ஜூவராசிகளே அத்தனை ஜீவராசிகளிலும்
பகுத்தறிவு கொண்ட மனிதத்தை வாழ்த்திடுவோமே! உயர்த்திடுவோமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-காதலில்லாத பிரபஞ்சமே பிரபஞ்சமில்லையென்று கண்டுகொண்டேன்! மக்கள்ஜன நாயகபுரட்சியின்றி உலகிற்கே விடிவில்லையென்று அறிந்து:

கடல் நுரையில்லாத கரைதேடிதேடி ஓடினேன்!..!
மனமில்லா பூவைத்தேடித் தேடியே பார்த்தேன்.!
ருசியில்லா கனியில்லாத கனியிதழ் தேடித்தேடியே சுவைத்தேன்.!
வர்ணமில்லா வானவில்.தேடித்தேடியே கண்ணில் கண்டேன்.!
குழந்தைக்கான தொட்டில்.தேடிதேடியே தலைசாய்த்தேன்.!
மரமில்லா காடு.தேடித்தேடியே கூந்தலிலே முகம்புதைத்தேன்.!
காட்சியில்லா கனவு.காதலிலே தேடித்தேடியே கற்பனையில் பறந்தேன்.!
புன்னகையில்லா இதழுக்குள்ளே சிரிப்பைத் தேடிதேடியே அலைந்தேன்..!
பூக்களில்லா தோட்டம்.தேடித்தேடியே நெஞ்சத்தில் கண்டுகொண்டேன்.!
இசையில்லா பாட்டு.அவளின் மெளனத்தில் உணர்ந்து கொண்டேன்.!
உயிரில்லா உடலில்லை என்று உயிரினில் உயிராகி தழுவிக்கொண்டேன்!..!
அன்பில்லாத உலகம் உலகமே இல்லையென்று வாழ்வினை கண்டேன்!
அறிவில்லாத தேசம் தேசமே இல்லையென்று தெரிந்துகோண்டேன்!
காதலில்லாத பிரபஞ்சமே பிரபஞ்சமில்லையென்று கண்டுகொண்டேன்!
மக்கள்ஜன நாயகபுரட்சியின்றி உலகிற்கே விடிவில்லையென்று அறிந்துகொண்டேன்!




!

Friday, September 3, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:என்னோடு நீயும் உன்னோடு நானும் சேர்ந்து போராடும் மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளிகள் நாமல்லவா?

என்னோடு நீயும் உன்னோடு நானும்
சேர்ந்து போராடும்
மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளிகள் நாமல்லவா?

காதலித் தோழியே ! காதலின் துணையே -பகுத்தறிவே நீயும்
கரும்புதந்த தீஞ்சாறோ?- நீயும் பலாக்
கனிதந்த நறுஞ்சுவையோ?- நானும் என்றும்
விரும்பிப் பேசும் செம்மொழியோ?-காதல் அன்பில்
அரும்பும் பேரின்பமோ?- தினம் தித்தித்து
மகிழ்ந்திடும் நறுந்தேனோ? நான்மகிழ்ந்து
வரைந்திடும் சித்திரமோ?
வாழ் நாளெல்லாம் நமக்காகவும்
நாட்டில் வாழும் மக்களின் நலனுக்காகவும் -என்னோடு நீயும் உன்னோடு நானும்
சேர்ந்து போராடும்
மக்கள் ஜன நாயகப் புரட்சிப் போராளிகள் நாமல்லவா?

Thursday, September 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:போலி அரசியல்வாதி ஓணாய்களின் நாவில் வஞ்சம் வழிவதைப் பாராமலே!

போலி அரசியல்வாதி ஓணாய்களின் நாவில்
வஞ்சம் வழிவதைப் பாராமலே!அவரின் நெக்கு
உருகுவதையே பார்த்துத்தாம் பலியாகப் போவது தெரியாமலே!
தேர்தல் நாளில்
மஞ்சள் தண்ணீர் ஊற்றி,மலர்மாலை போட்டு!
வெட்டுவதற்குத் தயாராகவே!
ஏமாந்து நிற்கும் ஏமாளி மக்கள் ஆடுகள்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எம்! இந்திய தேசத்தில் கோப்புகள் நகரவேண்டும் என்றால் காசு பணங்கள் கைமாறிட வேண்டும்!

எம்!
இந்திய தேசத்தில்
கோப்புகள் நகரவேண்டும் என்றால்
காசு பணங்கள் கைமாறிட வேண்டும்!
அதிகார வர்க்கத்திற்கு
அன்பளிப்பா? எதிர்பார்ப்பா?
சிபாரிசா?கையூட்டா?
என்னென்று நாம் சொல்லவோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:ம்க்கள் ஜன் நாயகச் சுதந்திரத்திற்காக முதலாளித்துவக் கூட்டைவிட்டு வெளியேறினோம்? ஆனால் தனியுடைமை ஆளும்வர்க்கமோ!

ம்க்கள் ஜன் நாயகச் சுதந்திரத்திற்காக
முதலாளித்துவக் கூட்டைவிட்டு வெளியேறினோம்?
ஆனால்
தனியுடைமை ஆளும்வர்க்கமோ!
எங்களின்
சிறகுகளையல்லவா!
வெட்டிவிடப் பார்க்கிறது!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:தேர்தல் கால இலவசங்கள் எங்கள் தேச மக்களுக்கே தேவையில்லையே! எங்கள் தேசமக்களின்-அத்யாவிசிய அன்றாடத் தேவைப் பொருள்கள்-

தேர்தல் கால இலவசங்கள்
எங்கள் தேச மக்களுக்கே தேவையில்லையே!
எங்கள் தேசமக்களின்-அத்யாவிசிய
அன்றாடத் தேவைப் பொருள்கள்-விண்ணிற்கு
விலையேறாமல் இருந்தால் போதுமே!

தேர்தலையே சாதாரணத் திரு நாளாய்
எண்ணாமலே!உண்மையான
சுதந்திர நன்னாளாய் நாமெல்லாம்
எண்ணுகின்ற காலமென்றோ?

தேர்தல்வரும் நாள்தானே!
எங்களின்
திரையரங்குகளிலும் கோவிலகளிலும் ,
மறைந்துபோன ஜாதிகளையே திரும்ப
சந்திக்கு இழுத்துவரும்!

தேர்தலிலோ!
ஜன நாயக வாக்குசீட்டுகள்!
பண நாயக போலி அரசியல் தலைவர்களால்!
காசுக்கு சோரம் போகின்றன!

தேர்தல் கால இலவசங்கள்
எங்கள் தேச மக்களுக்கே தேவையில்லையே!
எங்கள் தேசமக்களின்-அத்யாவிசிய
அன்றாடத் தேவைப் பொருள்கள்-விண்ணிற்கு
விலையேறாமல் இருந்தால் போதுமே!

போலிஅரசியல் வாதிகளோ!
தேர்தலில் வாக்குவரம் கேட்டார்கள்!
அப்புறம்
எம்மக்களின்
த்லையினிலே கைவைத்தார்கள்!

தேர்தலன்று
எங்கள் மக்களின் கால்களில் விழுந்து
வாக்கினைக் கேட்டார்கள்!
தேர்தலில் வெற்றி பெற்றவுடனே!அவர்களோ?
எம்மக்களுக்கு நன்மை செய்யாமலே!
எம்மக்களை கால்களால் எட்டி உதைத்தார்கள்!

ஐந்துவருடத்திற்கு ஒருமுறை வாக்குச்சீட்டை-எம்மக்களோ!
போலி அரசியல் வாதிக்கு விற்றுவிட்டு
ஐந்துவருடம் முழுவதுமே தங்களைத் தாங்களே!
தொலைத்துக் கோண்டிருக்கிறார்க்ள்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:!இன்று மனிதத்தை மறந்த இலக்கியமென்றால்-அந்த இலக்கியத்தையே கனலேற்றுவோம்!

மனிதத்தையே பாடாமல் இலக்கியமா?
இலக்கியமின்றியே ஆதிகாலங்கள் இருந்திருக்கலாம்!
ஆனாலும்!இன்று
மனிதத்தை மறந்த இலக்கியமென்றால்-அந்த
இலக்கியத்தையே கனலேற்றுவோம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எம்உலக மக்களின் வாழ்க்கையின் அனுபவங்களைக் கற்று அதனையே எழுதுகின்றேன் நானும் மக்கள் இலக்கியமாகவே!

எனது வாழ்வின் ,எம்உலக மக்களின் வாழ்க்கையின் அனுபவங்களைக் கற்று அதனையே எழுதுகின்றேன் நானும்
மக்கள் இலக்கியமாகவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:எமக்கும் எம்தேசத்திற்கும் எம்தேசமக்களுக்கும் என்கவிதைக்கும் உண்மையானதொரு சுதந்திரம் வேண்டும்!

எமக்கும் எம்தேசத்திற்கும் எம்தேசமக்களுக்கும் என்கவிதைக்கும்
உண்மையான சுதந்திரம் வேண்டும்!
எந்தன் நல்லதமிழ்க் கவிதைக்கே - நான்
என்னையே தந்திடுவேன் தேன்மொழியே!
எந்த விமர்சனக் கணைகளும் வந்தால்தான் என்ன?
எம்தேச நலனிற்காய் ,என்மனதிற்குப் பட்ட சமூகவாழ்வியல் உண்மைகளை
க்விதை வடிவினில் இலக்கியமாக்குவதில் பின்வாங்கிடேன்!,