Popular Posts

Friday, September 17, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/_:வெயில் என்தோழன் என் தோளில் கைபோட்டு என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!

வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!
கரைகளற்ற நதியாகவே அவன் எல்லாத் திசைகளிலும்
கங்குகரையின்றி தங்குதடையின்றி
எங்கும் பறந்து பாய்ந்தோடினானே!
சிலவேளை அவனே சிறுமழலை போலவே
மெல்ல மெல்லவே சன்னல்வழியே எட்டிப் பார்ப்பானே!-மாலை
மறுவேளை இளந்தென்றலோடு சேர்ந்து என்னைஅணைத்தே தாலாட்டுவானே!
அவனென் உடலிலும் உள்ளத்திலும் வரைந்த சித்திரங்கள் என்றும் அழியாதவையே!
வெயில் என்தோழன்
என் தோளில் கைபோட்டு
என்னோடு உலகெல்லாம் சுற்றிவர துணைநின்றானே!

No comments: