Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எல்லோரும் வாழுகின்ற தத்துவத்தைப் பாடலாமோ?”

கோடிக் கோடி யோசனையே செய்கின்றேன் தலைவி நானே-அன்புக்
காதலனே வந்துவிட்டானே!-ஆசை
தோழனே வந்துவிட்டானே!
கூடலாமோ? ஊடலாமோ?-இளமையிலே இனிமையினையே!
தேடலாமோ?-உண்மை அன்பினையே
நாடலாமோ?-இந்த பிரபஞ்ச வெளியினிலே ஓடலாமோ?- நல்லோரின் வழியினிலே அவர்தம் துணையினிலே!
காலமெல்லாம் எல்லோரும் வாழுகின்ற தத்துவத்தைப் பாடலாமோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இன்பத் தேடலில் கலந்தான்!”

கூடலில் குளிர்ந்தான் -பொய்ப்பிரிவாம்
ஊடலில் எரிந்தான் காதல் தலைவனே!-அன்புப்
பாடலில் மலர்ந்தான் இன்பத் தேடலில் கலந்தான்!
நேசத் துணைவனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உன்மேனி தாங்கிடுமோ இலவம்பஞ்சே!”

உன்மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?காம்புடனே கூடிய
அனிச்சம்பூவினையே சூடாதே ! அன்புக்காதலியே!
உன்மெல்லிய இடைதான் ஒடிந்துதான் போகாதோ?
உன்கூந்தலுக்கு நீயும் மல்லிகை மலரினையே சூடாதே!
அதன்சுமையாலே உன்மேனி தாங்கிடுமோ இலவம்பஞ்சே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல்தருவார் வருவார் ”

கார்வந்தால் தேர்வரும் தேர்வந்தால் காதல்தருவார் வருவார் என்று
காதலி என்னிடமே!
காதல்தலைவன் அன்றுசொன்ன அறிகுறிகள் தோன்றுதடி!
ஆனாலும் எனதினிய தோழியே! காதலனாம்
அவனின் இனியவரவினைத்தான் காணலியே!
எனது விழியிமைகளோ! விசிறியாகவே படபடப்பதென்னவோ?
என்கண்களுமே உறங்கிடவே இமைமூட மறுப்பதென்னவோ?
மாலைக்காலமும் வந்ததடி கூடவே -
காதல் தலைவனின் நினைவும் கூடவே வந்ததடி!
ஆண்மானும் தன்பிணையையே தழுவியதடி!களிற்று
ஆனையுமே தன்பிடியினைத் தழுவி நின்றதடி!
மாலைவந்ததே காதலினையே அதிகமாக்கிடவே தானோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நான்குகண்களும் ஓர் நேர்கோட்டினிலே !”

நிலவும் நெருப்பானதோ?
மலரும் முள்ளானதோ?
காதல் தலைவன் அவனே அருகில்லை என்றபோதே!காதலனோ! அன்றே!சொன்னானே!
காதலியே !
உன்னைமணம் செய்யாமலே - நானும் இந்த
உலகினை விட்டுப் போவதில்லையே என்றே!
சோலைக்கும் நன்றிசொல்லி என்ன?-மலர்
மாலைக்கும் நன்றிசொல்லி என்ன?-கனி
மர நிழலுக்கும் நன்றிசொல்லி என்ன?அன்று
பிரிந்து சென்ற தலைவனே மீண்டும் வருவான் என்றேமுன்
அறிவிப்பாயே குயிலும் கூவியென்ன?காதலி எனது
இடக்கண்ணும்,இடத்தோளும் துடித்தென்ன?தலைவனின் வலத்தோளும் வலக்கண்ணும் துடித்தென்ன!அன்புக் காதலிலே அவனின் ,எந்தன்
நான்குகண்களும் ஓர் நேர்கோட்டினிலே !சந்திக்கும் நாளினை எண்ணியே!
காத்திருக்கும் காலங்களே கனலானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தென்றலே துன்புறுத்தாதே!”

தென்றலே துன்புறுத்தாதே!
தேனிலவே துயரந்தராதே!-வாடைக்
காற்றதுவும் வஞ்சனைதான் செய்கின்றதே!
காதலனே அவனருகினில் இல்லாத பொல்லாத காலந்தானோ!-காதல் தலைவனே!அவனே
காதலியே நான் துடிக்கும் வேதனைதான் அவனும் அறிந்தானோ?
காதல் தலைவியின் உயிர்துடிப்பில் அவனிருந்தால் உடனே வந்திடுவானே!
காதலுக்கு மரியாதை செய்து அன்பினிலே கலந்திருப்பானே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காண்டேகரும் சொன்னாரடி!”

உன் அழகிய மலரிதழ்களே!
நான்பார்க்கும் இடமெல்லாமே வந்துதோன்றி-அன்பே
என் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ!
அன்று மலர்ந்த செந்தாமரையோ!
இன்று சிரித்த மல்லிகைபூவோ!
என்னுயிரின் உள்ளே!
ஏற்றிய ஒளிமிகுந்த விளக்கே!
உன் அழகிய கண்களே!
அமுத மொழிபேசி கோடிக் கவிதைகள் சொல்லுதடி!
உன்கோவைப் பழமாய் சிவந்த இதழ்களே!
எங்கெங்கு நோக்கினும் அங்கெல்லாமே வந்து வந்து-அன்பே
என் இனிய உயிரினையே கொள்ளை கொண்டதோ!-உன்
அழகிய புருவவில்லே!மன்மதன் கையுள்ள கரும்புவில்லோ!அன்பே
எப்போதும் என்னுயிர்மேல் வந்துபொருந்தி துன்புறுத்துதடி!
உன்புன்முறுவலோ செஞ்சுடர் வீசுகின்ற வெண்ணிற மின்னலாகியே
என்னையே நித்தம் நித்தம் கொல்லுதடி!அவையென்ன?
என்னுயிரையே துன்புறுத்தும் முத்துக்களோ? நானும்
அறிந்தும் அறியாமலே அனுதினமும் வருந்துகின்றேனடி!
அவளின் சோதிவட்டத் திருமுகமே!
என்னெஞ்சத்தையே பிழிகின்றதே!
உந்தன் தேன் நிறைந்த கண்களுக்குள் என்னைத்தினம் நனைப்பதென்னவோ?- நீயே
உன்கண்ணில் என்னைக்காட்டி காதலியே என்னையே
உன்னிடத்து அழைத்துக் கொள்ளவேண்டுமடி
முதுமை அடைந்துவிட்டாலும் முதல்காதல்-என்றும்
இளமை கொண்டு வாழும் என்று காண்டேகரும் சொன்னாரடி!
அந்த செம்மண் நன்னீர் போலவே =- நம்
அன்புடைய நெஞ்சங்களும் கலந்ததடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”என்னாளும் போராடி”

என்னெஞ்சமே உன்னிடமிருந்து மீண்டுவரவே ஒருவழியே இல்லையா?-என்று நானே சிந்திக்கும் முன்னே!
உன்னிலிருந்து மீண்டுவிட்டேன் என்றுஇறுமாந்து நானிருந்தேன் காதலியே!
ஆனாலும் மீண்டும்மீண்டும் உன்னில் நான்கலந்து என்னைஉனதாக்கி கொண்டேனே!
உன்னைஎனதாக்கி நான்கொண்ட அன்பினிலே கோடிக்கோடிக் காலங்கள் கண்டேனே!
உன்னெஞ்சம் கண்டதுவே நானும்கண்டேனே !என்னெஞ்சம் கொண்டதுவே நீயும் கொண்டாயே!
எண்ணித்தெளிவுற்றேன் ஏகாந்த தத்துவமே !என்னாளும் போராடி வெல்வோமே வாழ்வினிலே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதலென்ற அன்பினில் ”

எனக்காகவே நீயே எனக்கு ஒருசொல் சொல்லிடவேண்டுமே!~
அதுவும் காதலென்ற அன்பினில் கூடுகின்ற இன்பமாக வேண்டுமே!
நமக்காகவே நாமவாழ்கின்ற நல்லெண்ணம் இனிமையாக வேண்டுமே!
நாளெல்லாம் நல்லோர்கள் வாழ்த்துகின்ற பொன்னாளாக வேண்டுமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”உண்மையான தீபாவளி என்று?

உண்மையான தீபாவளி என்று?-இல்லாமை இன்றி
எல்லோருக்கும் அத்யாவசிய எல்லாத் தேவைகளும் பெற்று -எல்லோரும் சுதந்திர சுவாசத்திலே!
மக்கள் ஜனநாயகத்திலே!
இன்புற்று வாழ்கின்ற இன்னாள் தான் அன்று
அதுவே பூலோக சுவர்க்கத்தை கொண்ட பொன்னாள் அன்றோ!

Tuesday, October 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒரு வினோதமே!”

மனதில் ஒரு பெருமிதம் எட்டிப் பார்த்ததே!
அடியே
உன்னதம் உன்னதமே வாழ்க்கை ஒரு உன்னதமே!
ஒவ்வொரு நாளும் நமக்குள் நடப்பதெல்லாமே!
ஒரு வினோதமே!
என்றென்றும் வாழ்ந்து பார்த்திடுவோம் சந்தோசமே!










Saturday, October 23, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!”

அ” வையே ஆன்னா” என்றுமே!
ஆ” வையே ஆவன்னா” என்றுமே!
இசையோடு கற்றாரே எம்தமிழரே!!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே

லு”லு”லு” லு”லு” ரீ” ரீ” ரீ” ரீ”
எனும் மழலை இசையினில் துவங்கி வாழ்வின் இறுதியிலும் பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே
தாலாட்டாய் தத்துவமாய் காதலாய் கொண்டாட்டமாய்
தனிமையாய் ஒற்றுமையாய் உழைப்பாய் உறுதியாய் பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!


நடவுப்பாட்டுக்கே
தனன் னான னானே- ஏ
நானே நானே ந்ன்னே

தெம்மாங்குப் பாட்டுக்கே
அடடா! தன்ன் ந்ன்னே நானே
நானே ந்ன்னே நானே நன்னே!

கும்மிப் பாட்டுக்கே!
தன்னனா நானன நானானே!
தன்னனா நானன நானானே!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

தாலாட்டுப் பாட்டுக்கே!
ஆராரோ ஆரிரரோ ராரோ ராரிரரோ!
ஆராரோ ஆரிரரோ ராரோ ராரிரரோ! பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

நெல்லிடிக்கும் உலக்கைப் பாட்டுக்கே!
ஏலேல குயிலே லல்லோ!
ஏலேல குயிலே லல்லோ!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!

தெம்மாங்குப் பாட்டுக்கே!
ஏலங்கிடி லேலோ!
ஏலங்கிடி லேலோ!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே!


வையே ஆன்னாஎன்றுமே!
வையே ஆவன்னாஎன்றுமே!
இசையோடு கற்றாரே எம்தமிழரே!!பாடி
இசைத்திடும் நாட்டுப்புறப் பாடலே

Friday, October 22, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”கம்பன் தமிழோ-”

கானாப் பாட்டினுக்கோ!
கம்பன் தமிழ்தேவை இல்லை என்பாரே!=ஆனாலும்
கம்பன் தமிழோ--எம்
கன்னித்தமிழ் மண்ணுக்குத் தேவையாய் இருக்கின்றதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சினிமா”

ஏற்கனவே ஆட்டுரலாம் குடைகல்லில்
ஆட்டியமாவு-இப்போதோ
கிரைண்டரில் ஆட்டப் படுகின்றது!









தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”சினிமா வாய்ப்பு தேவதையோ!”

சினிமா வாய்ப்பு தேவதையோ!
சிலருக்கோ வாய்க்கின்றாள் மாலைபோட்டு வாய்ப்பினைத் தருகின்றாள்!
பலரையோ ஏய்க்கின்றாள் !பம்பரமாய் சுற்றவிட்டு ஏமாற்றுகின்றாள்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இந்த சினிமாத் தொழிலினிலே ”

இந்த சினிமாத் தொழிலினிலே அஞ்சுபத்து என்பதற்கு
அஞ்சுகோடி பத்துகோடி என்று அர்த்தமானதடா!
மூலதனம் எல்லாமே ஒன்றாகக் கூடி சினிமா உலகத்துல
மா நாடு போடுதடா! சூதாட்டம் என்று சொல்லவா?இல்லை
ஓடாத குதிரை ரேஸ் என்று சொல்லவா!
வைராஜா வை வெச்சது மேலே வை என்று
சாஞ்சா சாயுறபக்கம் சாயுர செம்மறி ஆட்டுக் கூட்டமடா!வென்ற
சினிமா பாணியில ஓடோடி படமெடுக்கும் பிலிம்சுருள் பாம்படா!
படமெடுக்க ஆசைபட்டு பரிதாப நிலையில இருப்பவங்க கோடியுங்க!
படமெடுத்து வெற்றிபெற்ற மனிதருங்க விரல்விட்டு எண்ணிவிடலாமுங்க!
நடிக்க ஆசைபட்டு கோடம்பாக்கவீதியில வாய்ப்புத் தேடும்
நடிக்க வாய்ப்பின்றி நடுரோட்டில் இருப்பவங்க ஏராளம்
நடிக்கவந்த நடிகையில் ஒருசில வெற்றிபெற்ற நடிகைதவிர-மற்ற
நடிக்கவந்த நடிகைகள் எல்லாம் துணை நடிகை ஆனவங்க ஏராளம்
நடிக்க வந்த சில பெண்களின் கற்பினையே சூறையாடிய கயவரும் இங்க இரும்புத்திரையாகவும் இருப்பதுண்டு!
நல்லவங்க கெட்டவங்க வஞ்சகர்கள் கயவர்கள் என்று எவரையும் நாம்தரம்பிரித்து பார்க்கின்ற விஷயத்தையே சினிமா உலகம் படமெடுத்துக் காட்டிடுமே!
என்ன எப்படி இருந்தாலுமே சினிமா ஆசை என்ற பேராசை இல்லாத மாந்தரில்லையே
சினிமா ஒரு மாயாஜாலம் இதில் எத்தனை விட்டில்கள் சென்று தோற்று வீழ்ந்தாலும் வெல்லும் முயற்சியில் மீண்டும் புதிது புதிதாய் புற்றீசலகளாய்
ஓடிவெல்லப் பார்த்திடும் சினிமா ஆர்வலர் பெருகி நிற்கும் உலகமுங்க

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எனதினிய சினிமா தேவதையே!”

எனது இனிய சினிமா தேவதையே!- நீயோ
இன்றைக்கும் வனப்பாகவே வலம்வருகின்றாயே!-உன்
வசீகரமும் வாடாமலே!
வண்ணக் கலவையாகவே!-ஊடக
சிற்றிடைதான் கொண்டு சிலிர்க்கின்றாயே!-மக்களின் உண்மைமுகத்தினை
சிறு நடை பயின்று சிரிக்கின்றாயே!
பேசும் நிலவாக திரைவானிலே உலவுகின்றாயே!எம்முலகத்தின்
இனியவளே இனிப்பவளே!காதில் தேனாகவே
இசையாகி சுவைப்பவளே!-என்
மனதுக்கு உகந்த மலரானவளே!-எந்தன்
மானசீக வண்ணத்திரை காதலியே!-எனது
சிந்தனைகளையே செழிக்கச் செய்தவளே!
தமிழர் எங்களது வாழ்வினையே!
சீரும் சிறப்பும் பேரும் புகழும் ஆக்கியவளே!-திரைக்
கதா நாயகன் , நாயகிகளையே முதுமையாக்கிவிட்டு நீயோ!
இன்றும் இளமை குன்றாமல் இருக்கின்றாயே எனதினிய சினிமா தேவதையே!

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மூடவிதியை நம்பிடும் மூடர்கள் ”

அதிஷ்டத்தை மட்டுமே நம்பாதே!-பகுத்தறிவினையும்
உனது உன்னதமான உழைப்பினையும் அவ நம்பிக்கையோடு பார்க்காதே!
துரதிஷ்டம் என்பது மூடவிதியை நம்பிடும் மூடர்கள் சொன்ன சோம்பேறிகளின் தத்துவமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஆரூர்தாஸ் அவர்கள் சொன்னது---”

”நடிகர்திலகம் சிவாஜிகணேசனிடம் கின்னஸ் போன்ற சாதனையாளர் திரைக்கதை வசன கர்த்தா ஆரூர்தாஸ் அவர்கள் சொன்னது---”
”காட்டில் காற்று வேகத்தில் பாய்ந்து கலைமான்களை வேட்டையாடி அவற்றின் செங்குருதியைக் குடிக்கும் இந்த சிங்கத்திற்கு நான் என்றும் அழுகிய மாமிசத்தை வீசியது இல்லை”

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எல்லா மனிதருக்கும் உணவு,உடை,வீடு,சுதந்திரம் !”

குருவித் தலையில பனங்காய வைக்கவும் கூடாது-யானைப்
பசிக்கு சோளப்பொரியும் போட்டிடவும் கூடாது!
அவரவர் தேவைக்கு ஏற்றாற்போல் உழைப்பினைக் கொடுத்திட வேணும்!
அவரவர் திறமைக்கு ஏற்றாற்போல் வாய்ப்பினைத் தந்திடவேணும்!
அறிவினை அறிந்து அறிவியல் கற்று உலகினில் உயர்ந்திட வேணும்!
உண்மையை புரிந்து நன்மையை செய்து வாழ்ந்திட வேணும்- நல்லோர்
அடிச்சுவட்டில் நாம் நடந்து இம்மண்ணின் மேன்மையாக்கிட வேணும்!
தனிமனிதன் இடத்து தேவையன்றி சொத்துக்களும் இருந்திடவே கூடாது!-எல்லா
மனிதருக்கும் உணவு,உடை,வீடு,சுதந்திரம் இல்லாமலிருக்கவே கூடாது!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மூச்சுப் பயிற்சியிலே”

கற்பனையே! -உயர்ந்த
கற்பனையே! சிந்தனைக் கவிதையே,சீர்மிகு இலக்கியமே!-அது
இமைக்கும் பொழுதினிலே தோன்றும்!
இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும்!
கற்பனையே! - காவிய
கற்பனையே! இயற்கையின் ஒப்பனையே,இனிமையின் அரசாங்கமே!-அது
எப்படி வேண்டுமானாலும் சிறகினை விரித்துப் பறந்திடுமே!
எவ்வளவு உயரத்திற்கும் தொலைவிற்கும் சென்றிடுமே!
இப்பொழுது மூளைசரியில்லை என்று சொல்பவனே மூடனே!
எதையும் சரிவர செய்திட திராணியில்லாத முட்டாளே!
மூச்சுப் பயிற்சியிலே முன்னோர்கள் சொன்னபடியும்
யோகாசனங்கள் செயாதாலே எந்த சோர்வினையும் போக்கிடலாமே!

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”ஒரு மக்கள் இலக்கியப் படைப்பாளன்!”

எழுத்தாளனாகிய நான்!
விதையாகவே மண்ணில் விழுந்து
முளையாகவே முளைத்து எழுந்து வேர்விட்டுப் பதிந்து!
விருட்சமாகவே கிளைகள் விரித்து கனிகொடுத்து மக்களைக் காத்து
யுகயுகமாகவே ப்ரவித் தழைக்கின்றவன்!
நான்
சிறுகாற்றுக்கு ஒடிந்து விழும் ஒதியமரமல்ல!
சிறுசலசலப்பில் முறிந்து வீழஒன்றும் முருங்கை மரமும் அல்ல!
நான்
காலத்தைக் கடந்து நிற்கும் பிரபஞ்ச ஆலமரம்
காலத்தின் கண்ணீரையும் துடைத்து நிற்கும் ஒரு மக்கள் இலக்கியப்
படைப்பாளன்!
எனக்கு இறப்பு என்பது என்றைக்கும் இல்லை இல்லையே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”எமதுதிரை ஆசாணே சார்லிசாப்ளினே!”

சார்லிசாப்ளினே !பொதுவுடைமை தத்துவத்தையே
தைரியமாகவே திரையினில் அரங்கேற்றிய
சரித்திரப் புகழ்பெற்ற எமது திரைஆசாணே!
மெளனப் படக்காலத்திலேயே!
மக்களை மகுடிஓசை கேட்ட நாகமாகவே மயக்கிய !
மட்டற்ற மகிழ்ச்சிக் கடலிலே மக்களையே வசப்படுத்திய!
சிரிக்கவைத்தும் ,சிந்திக்கவைத்தும் நடித்த சிறந்த ஆற்றல்பெற்ற சாதனையாளனே!
சீர்மிகு சிந்தனையாளனே!
எமதுதிரை ஆசாணே சார்லிசாப்ளினே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”இமயத்தின் உச்சிக்கும் போவதுண்டே!”

ஒரு நல்ல மூலக்கதையே!
ஒரு திறமையறற திரைக்கதை எழுத்தாளராலே!
ஒன்றுக்கும் உதவாமல் சிதைக்கப்பட்ட பூவாகிப் போய்விடுமே!
ஒரு சாதாரண மூலக்கதையே!
ஒருதிறமையுள்ள எழுத்தாளராலே! இமயத்தின் உச்சிக்கும் போவதுண்டே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”வள்ளலாளரின் ,காரல்மார்க்சின் கோள்கைவழி”

நல்லதமிழில் நானும் எழுதிட் வந்தேனே
நல்லதையே சொல்லிடவே விளைந்தேனே!
ஏடெடுத்தேனே! -தேனே
எழுதுகோலைத் தொட்டேனே!-மானே !!நீதிகேட்டு கெட்ட உலகத்தில்
நேர்மை அம்பைத் தொடுத்தேனே! பொதுத் தொண்டு ஆற்றிடவே
வள்ளலாளரின் ,காரல்மார்க்சின் கோள்கைவழி நானும் நடந்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நியாயமானதொரு தேர்தலும் இல்லை ”

இனியொரு தஞ்சைக் கோவிலுமில்லை
இனியொரு ராஜராஜனும் இல்லை இல்லை
இனியொரு கல்லணையும் இல்லை இல்லை
இனியொரு க்ரிகால்சோழனும் இல்லை இல்லை
இனியொரு தாஜ்மஹாலும் இல்லை இல்லை
இனியொரு ஷாஜஹானும் இல்லை இல்லை
இனியொரு குதுப்மினாரும் இல்லை இல்லை
இனியொரு குத்புதீனும் இல்லை இல்லை
இனியொரு கோகினூர் வைரமும் இல்லை இல்லை
இனியொரு எலிஸபத்ராணியின் மகுடமும் இல்லை
இனியொரு நியாயமானதொரு தேர்தலும் இல்லை இல்லை

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தில்லுமுல்லு அரசியல் வாதிகளே”

தோப்புக் கரணம் தோப்புக் கரணமே!எம்தமிழ் மக்களே!
போடுவது பிள்ளையாரிடத்தும் வாத்தியாரிடத்துமே!-ஆனாலும்
வாக்குரிமை பறிக்கின்ற தில்லுமுல்லு அரசியல் வாதிகளே
ஐந்தாண்டுக்கு ஒருமுறை அவர்கள் மக்களிடத்து
தோப்புக் க்ரணம் போட்டுவிட்டு ஐந்தாண்டு முழுவதுமே- மக்களையே
தோப்புக்கரணம் போடவைப்ப்து எந்த விதத்தில் நியாயமாகிவிட்டதோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஓர் நிலையில் நின்று ”

நடக்குமோ நடக்காதோ என்ற சந்தேகம் ஏதுக்கடி?
கூடுமோ கூடாதோ என்ற விரக்தி ஏதுக்கடி?
தேறுமோ தேறாதோ என்ற அவ நம்பிக்கை ஏதுக்கடி?
ஆகுமோ ஆகாதோ என்ற சஞ்சலமும் ஏதுக்கடி?
எந்த உறுதி இல்லாத மன நிலையும் நமக்கேதுக்கடி?
ஓர் நிலையில் நின்று விடாமுயற்சி செய்துபார்த்தால்
இந்த மண்ணிலே ஆகாததும் உண்டோ தேன்மொழியே!

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”-போலிஅரசியல்வாதி சண்டாளர்கள்”

குப்பைக் கூந்தலுடன் சேர்த்து பின்னப்பட்டு-சடங்குமுடிந்து
போனபின் அவிழ்த்து வைக்கப்பட்டு விடும்-அந்த
சவரியுடன் கூடிய நீள்கூந்தல் ஒன்றும் நிரந்தர மானதல்லவே!அதுபோல
சம்பரதாயத்திற்கு நம்மைத் தேர்தலன்று இமயத்தில் நிறுத்தி
சாஷ்டாங்கமாய் நம்காலினில் விழுந்து ஓட்டினை வாங்கிவிட்டு -போலிஅரசியல்வாதி
சண்டாளர்கள் நம்மை வீதியில் தூக்கி எறிந்துவிடுகிறார்களே!








தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”வெறும் கிளிஞ்சல்கள் தானே!”

தனியுடைமைக் கோலோச்சும் ஒருசிலருக்கு மட்டும் வஜ்ரமீன்கள் கிடைத்திடும் போதினில்- மறைமுகமாய் வாங்கும் சக்தியின்றி!
அடிமைப்பட்டு வாழும் சுதந்திரமின்றி வாடுகின்ற இந்தியமக்களுக்கோ
கிடைப்பதென்னவோ! வெறும் கிளிஞ்சல்கள் தானே!







தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”வாக்குரிமை விற்றுத் தாழ்வாச்சு!”

பொய்யொன்றே எண்ணுகின்ற பொய்யர்களின் தலைமை நம்தலையில் ஏறி
உண்மையின்றி பொய்யாகி உலகந்தான் கெட்டுத்தான் போச்சு!
உரிமையின்றி அடிமைத்தனத்தில் ஊறிப்போன நிலைகெட்ட மண்ணாகவே!
இம்மண்ணும் சூடுசுரணைதான் கெட்டுவாக்குரிமை விற்றுத் தாழ்வாச்சு!







தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-” சுதந்திரக்காற்றின் ”

அன்பு ஊடினதோர் இடமெங்கே?-காதல் தேனிசை
ஒலிதான் கேட்பதெங்கே?-கண்ணில்
ஒன்றாக காணுகின்ற ஆசைக்களி நடனமெங்கே!?
இன்பத்தில் இணைக்கின்ற இல்லறவாழ்வின் தத்துவமெங்கே?

விட்டுக்கொடுத்து வாழ்கின்ற வாழ்வினிலே துன்பமென்றும் இல்லையடா!
வீண் தர்க்கம் செய்து விதண்டாவாதம் சமூகவாழ்வினிலும் தொல்லையடா!
அன்புகொண்ட மனங்களின் ஒற்றுமையே உன்னதமாக்கிடும் இம்மண்ணிலே!
உறுதிகொண்ட சுதந்திரக்காற்றின் உரிமைவேட்கை என்றும் வென்றிடுமடா!









தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”அன்புப் பூவுதிர்ந்து ”

படுத்தாலே பல நினைவு வந்ததடி!
பாயெல்லாம் கண்ணீரு வெள்ளமடி!
உண்டாலே உறக்கமில்லை தேன்மயிலே!
உறங்கினாலும் தூக்கமில்லை செம்மொழியே!

சேர்ந்தோமடி சேர்ந்தோமடி கண்ணுக்குள்ளே!-காதலாலே!
செடியிலிட்ட பூப்போல பூத்தோமடி!-காதல்
செடியறுந்து -அன்புப்
பூவுதிர்ந்து போயிவிட்டாலே!-இந்த
சென்மத்திலே சேர்வதுவே எக்காலமடி?










தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”புரிஞ்சிகிட்டா துன்பமில்ல!”

குணமயிலே உன் தடத்தை
குச்சிகட்டிக் காத்திடவா?
ஆத்தாடி கண்ணாத்தா!
அடிமடியில கட்டட்டா?
கள்ளியம்பூச் சாரலிலே!
அள்ளட்டா முள்ளட்டா?
ஆதரவு சொல்லாத்தா!
அன்புக்குள்ள நில்லத்தா!
ஆசைவெள்ளம் கொள்ளத்தா!
ஏழைமனம் வெள்ளைதான்!
பாவிமனம் படும்பாடுதான்
வாயாலே சொல்லமுடியாத
வார்த்தைகள கண்ணாலே
காதகியே சொல்லுறயே!
கண்ணுக்குள்ள காரணத்த
காலமெல்லாம் சொல்லாம
பூட்டிவெச்ச மன்சுக்கு
பூலோகம் சொந்தமில்ல!- நீயும்
புரிஞ்சிகிட்டா துன்பமில்ல!

தமிழ்பாலா-காதல்/கவிதை/தத்துவம்/-”காத்திருந்த கோலமென்ன ?”

கையோடு கைசேர்த்து! - காதலாம் கனவினில்!
கானல்வழி நடக்கையிலே!-அன்பினில் அன்பே!
மெய்சோர்ந்து விழுந்ததென்ன?
மென்குயிலே கண்ணாட்டி!
காலமென்னும் நதியினிலே!
கன்னிஓடம் ஓடையிலே!
காளைக்கரை சேராமலே!
காத்திருந்த கோலமென்ன ?கண்ணாட்டி!
கையோடு கைசேர்த்து! - காதலாம் கனவினில்!
கானல்வழி நடக்கையிலே!-அன்பினில் அன்பே!
மெய்சோர்ந்து விழுந்ததென்ன?
மென்குயிலே கண்ணாட்டி!

Tuesday, October 19, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-: ”மனைவி என்பவளே! ”

மனைவி என்பவளே!
ஒரு கம்பளிப் போர்வை யாவாளே! -அவளை நட்புடன்
போர்த்திக் கொண்டாள் கதகதப்பு!
அவளைப் பகையுடன்
தூக்கி எறிந்துவிட்டாலோ !வாழ்க்கைப் பிரிவாம்
குளிர்தனையே தாங்கவே முடியாதே!

சொந்த மனைவி தரும் சுகம் அமுதமாகிடுமே!. படிதாண்டிவரும் காதலால் பெறும் சுகமே!
நஞ்சின்மேல் தடவப்பட்ட இனிப்பாகிடுமே!

அன்புக் காதலியோ! ஒரு முடிவடையாத புத்தகமாவாளே! மனைவியோ ரசித்துபடித்து முடித்த முழுப் புத்தகமாவாளே!
வரைமுறை தாண்டிய ,ஒழுக்கக் கேடான காதலே கறையான் புற்றாகிடுமே!.


கற்பினை நீ விரும்புவது போலவே உன்னை விரும்பும் மனைவியும் உன்னிடம் கற்பினையே எதிர்பார்ப்பாள் என்பதையே நீயும் மறக்காதே!

மனைவி உனக்கோ! சின்னஞ்சிறு வயதில் அன்பினைப் பகிரும் துணைவி!
நடுவயதில் கூட்டாளி, தள்ளாத வயதில் ஒரு தோழியாவாளே!



உன் மனைவியின் மனதை புரிந்துக்கொள்ளாமல் அவள் எப்படி உனது மனதை புரிய முன்வருவாள்?.

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/-?:வாழ்வுயர்த்தும் தத்துவமாகு!”

மோகத்தினையே முனித்துவிடு!-அன்புக்
காதலையே உயர்த்திவிடு!= தோழமையில்
வாழ்த்துகின்ற நட்போடு!-ஒற்றுமையில்
வாழ்வுயர்த்தும் தத்துவமாகு!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/”-:நெஞ்சம் நிமிரவேணும்!”

நேர்பட ஒழுகவேணும்!
நெஞ்சம் நிமிரவேணும்!
ஒற்றுமை கொள்ளவேணும்!
உரிமை வெல்லவேணும்!
சுதந்திரம் காக்கவேணும்!-உழைப்புச்
சொந்தங்கள் வாழவேணும்!
பாருயர உழைக்கவேணும்!
பாட்டாளி அரசு வேணும்!
தனியுடைமை மாற்றவேணும்!
தன்னலத்தை அகற்றவேணும்!-இங்கு
தரித்திரத்தை அழிக்கவேணும்!-பூலோக
சுவர்க்கத்தை படைக்கவேணும்!

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/”-இம்மையிலே சுவர்க்கம் ”

ஒப்புரவு ஒழுகடா!
உழைப்பினை மதியடா!~
உழைப்பவர் அதிகாரம் அரியணையில் ஏறிடும் வரையினிலே!
உந்தனுக்கே உறக்கம் ஏதடா?
உழைக்கின்ற பேர்களுக்கும் உழைப்பினையே சுரண்டுகின்ற் அரக்கருக்கும்
ஒருபோர் நடக்குதிங்கே உழைப்பவரே வெல்லும்காலம் தூரத்தில் இல்லையே!
இரண்டுவர்க்கம் இல்லாத பொதுவுடைமைச் சமுதாயமே உருவாக்கிட ஓடிவாடா!
ஒருவர்க்கம் அடிமைப் படுத்திடும் த்னியுடைமை ஆளும்வர்க்கம்
ஆடுகின்ற ஆட்டத்திற்கே நீயும் முற்றுபுள்ளி வைக்காமலே
இந்த உலகினில் இம்மையிலே சுவர்க்கம் என்பது இல்லையடா!

ஒப்புரவு ஒழுகடா!
உழைப்பினை மதியடா!~
உழைப்பவர் அதிகாரம் அரியணையில் ஏறிடும் வரையினிலே!
உந்தனுக்கே உறக்கம் ஏதடா?

Monday, October 11, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/”;காட்டுமிராண்டிக் காலத்திலேயே -”

காட்டுமிராண்டிக் காலத்திலேயே -மனிதன் ராகத்தோடு’ ஓ” வென்றே!
பாடத்துவங்கி விட்டானே!-இசையில்
பயணிக்கத் துவங்கி விட்டானே!-மொழிக்கும் முன்னாலே
பாடகனாய் ஆகிவிட்டானே!-சங்கீதத்தை
படித்திடவே நடந்துவிட்டானே!

ஆதிமனிதன் அவன் கத்தியதுமே! பாடலானதே!-அவனின்
உள்ளக் கிளர்ச்சி தோன்றிய போதே- மனிதன் அவனே
பாடத் துவங்கி விட்டானே!

கதைகளும் சொன்னானே!-விடு
கதைகளும் போட்டானே!-தன்
அனுபவ மொழிகளையே
அவன் தன் பாடலாலே அறிவித்தானே!

பேச்சுமொழி தோன்றுமுன்னே-ஆதிமனிதன்
பேசினானே!

சைகை மொழியானது ஒருகாலமே!
பேச்சு மொழியானது பின்னொரு காலமே!
எழுத்து மொழியானது வளர்ந்த காலமே!
சைகை பேச்சான போது போனது-பின்
பேச்சு எழுத்தான போது அறிவாய் பதிவானது
எழுத்தும் பரிணாமத்தில் மனிதனின் நாகரீக பகுத்தறிவானதே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”இலக்கியமே இலக்கியமே!”

இலக்கியமே இலக்கியமே!
மனிதன் தன் எழுச்சிதனையே வெளியிடவே!
மட்டற்ற விருப்பம் கொண்டதுதான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
மனிதகுல வாழ்விலும் செயலிலும்
மனித நேயம் கொண்டதுதான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!- ந்ல்லோர் கூறும்
மனிதத்தின் உள்ள ஆசையிலே
மனிதக் க்ற்பனை உலகினைப் படைத்திட வேண்டும் என்ற
மனித ஆசையிலே பிறந்தது தான் இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
இசையிலான ஒலிகளுக்கும் , நல்லசொற்களுக்கும்
ஓர் அழகிய உருவத்தையே உண்மையின் உயிர்ப்பினிலே
அமைத்திட வேண்டும் என்ற உந்துதலே இலக்கியமே!
இலக்கியமே இலக்கியமே!
மனிதனின் சிந்தனை ஓட்டமே இலக்கியமே!








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நாட்டுப்புறப் பாடல்களே!”

உள்ளத்தையே திறந்து காட்டும் வெள்ளை இலக்கியங்களே!
எம்கிராம மக்கள் வாய்மொழியாலே பாடும் நாட்டுப்புறப் பாடல்களே!
காட்டுப் பூக்களாகவே!
காண்பாரற்று கிடக்கின்ற
கண்ணான இலக்கிய படைப்பாளர்களே எத்தனைக் கோடிப் பேர்களோ?







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”தேசத் தந்தையாம் ”

நான் மீண்டும் இந்தியாவிலே பிறப்பேன் என்றாலே
நான் தமிழகத்திலேயே -ஒரு
தமிழனாகவே! பிறப்பேனென்றே -எம்
தேசத் தந்தையாம் காந்திமகானும் சொன்னாரே!-அவரையே
தேன்மொழியாம் தமிழே அமுதமாய் தித்திக்கச் செய்திருந்ததோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”;கண்களுக்கு நன்றிசொல்லி”

எனது
உள்ளங்கனிந்த நன்றியை நானுனக்கு உரித்தாக்குமுன்னே
என்காதலியே
எனது
கண்கள் உனது கண்களுக்கு நன்றிசொல்லி கலந்துவிட்டதே!
எனது
முகத்தையே நானுன் மனக்கண்ணாடியிலே பார்க்குமுன்னே!
எனது
முகத்தையே உனது கண்களே பிரதிபலித்தனவே!-இனி
எனதென்பதும் உனதென்பதும் வேறு வேறு இல்லையடி
நமதென்பதே நாமானதாலே நாள்தோறும் சந்தோசமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”;மூளையில் நான் சிந்தித்தையே”

எனது,உனது உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்த
அந்த காரணி காதல் அல்லவா!
நான் பார்த்ததையே நீ நீயும்பார்த்தாயா?-கண்ணில்
நான் படித்ததையே நீ நீயும்படித்தாயா?- நெஞ்சில்
நான் உணர்ந்ததையே நீ நீயும்உணர்ந்தாயா?-மூளையில்
நான் சிந்தித்தையே நீ நீயும் சிந்தித்தாயா?
எனது ,உனது உள்ளத்தை கிளர்ந்தெழச் செய்த
அந்த காரணி காதல் அல்லவா!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”செம்மொழி வாசமாகுமே”

மண்ணின் வாசனை தானோ?
மணக்கும் தாலாட்டின் இசையே தேனோ?
கண்ணாம் தமிழினையே வாய்மொழியாலே!
காலங்காலமாகவே பாடிமகிழ்ந்திடும் தமிழ்மண்ணே!
நாட்டுப்புற பாடலாலே நாள்தோறும் சுவைகூட்டுமே!
நல்லதமிழ் கிராமமெல்லாம் செம்மொழி வாசமாகுமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”தமிழ் இசைதனுக்கே ”

இலக்கணம் அறியாதவனே!
இலக்கியம் புரியாதவனே!- நாட்டார்
இசைபாடும் உழவனே!- தமிழ்
இசைதனுக்கே மெருகூட்டும் பாடகனே!-தமிழ்
இசைதனுக்கே மெருகூட்டும் பாடகனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-;”சுதந்திரத்தையே ”

கல்வி அறிவு இல்லாத பேரினையே ஞானமில்லா மனிதரென்றே!
காலமெல்லாம் அடிமையாக்கி கோலோச்சிடுமே தனியுடைமையே!
கல்விகற்று பகுத்தறிவால நல்ல நூல்களையே தேடி படித்திடவேண்டுமே!
கண்ணான சுதந்திரத்தையே அடகுவைக்காமலே தலை நிமிரவேண்டுமே!

Sunday, October 10, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”புதுத்தண்ணி வந்தாச்சு ”

தவளையே குலவை இட்டாச்சு
தாமரையும் தடாகத்துல பூத்தாச்சு!
பொன்னான செவ்வல்லி பூத்தாச்சு பொய்கையிலே!
புதுத்தண்ணி வந்தாச்சு ஆசைமச்சான் மட்டும் வரவில்லையே!
அவனோட அன்பு நெஞ்சை இன்னும் ஏனோ தரவில்லையே!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”துரோகிகளின் கோட்டைகளும் கொடிகளும்”

துரோகிகளின்
கோட்டைகளும் கொடிகளும்
ஒரு நொடிக்குள் மாறிவிடும்- கண்ணே உன் செங்கொடி இடை சேர்ந்தே இரட்டைஇலைவிழி நிமிர்ந்தே-உன் அன்பின் ஆட்சியிலே
உன்கொடி பறந்திடும் ஆகாசமே!
அதுகோட்டை தனையே அலங்கரிக்குமே!
அந்நாள் வெகுதொலைவினில் இல்லை இல்லையே!
அந்நாள் ஏழைக்கு பொன்னாளாய் ஆக்கிடும் நன்னாளாம்!








தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”போரெடுத்த களம்போல”

காதல்
கண்ணான கண்ணனுக்கு கண்ணேராம்
சுண்ணாம்பு மஞ்சலுமாய் சுற்றியெறி கண்ணனுக்கு
ஆனாலும் அவன்குசும்பு போகலையே ராக்கம்மா!
காலையில் பூத்ததாமரைப் பூ நானிருக்க
காடுசுத்தி அத்தைமகன் காடுமேடாய் சுத்துறானே!
உச்சியிலே பூத்த்பூவு குண்டு மல்லி நானிருக்க
ஊருசுத்தி மச்சானே ஊரு ஊரா சுத்துறானே!
உன்னோடு நான்கூடி உலகெல்லாம் பேரெடுத்தேனே!
போரெடுத்த களம்போல பொங்குதடி எம்மனசு!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல் வழக்கம் என்பது ”

கண்ணின் பழக்கம் என்பது காதலில் புதிதாய்
கண்பாவையிலே பழகிவந்தது-காதல்
வழக்கம் என்பது ஆதிகாலந்தொட்டு,சங்ககாலம் தொடர்ந்து-அன்பாலே
வழங்கி வாழ்த்தி போற்றிவந்தது







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”காதல் கவிதைக்கு விழிகள் உண்டு’

கதைக்குக் கால்கள் இல்லை இல்லை -ஆனாலும்
கதைக்கு சிறகுகள் உண்டு உண்டு-காதல்
கவிதைக்கு மொழிகள் இல்லை இல்லை- ஆனாலும் காதல்
கவிதைக்கு விழிகள் உண்டு உண்டு

கதைக்கு கால் அல்லது இல்லை இல்லை என்பாரே!
கதைக்கு கால்பாகம் உண்மை உண்மை
கதைக்கு முக்கால்பாகம் கற்பனைதானே!-கதைக்கும் ,கவிதைக்கும்
கற்பனை இருந்தால் சிறகினை விரிக்கும் வானிலும் பறந்திடுமே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”நெலா மொட்டையாண்டி”

எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!
எங்க நாம போனாலும் பின்னாலேயே வாறானே!
ஒளிகொடுத்து வழிசொன்னான் போகும் பாதையெல்லாமே!
அந்திவேளையிலே இளந்தென்றல் தாலாட்டவே
வந்து வந்து காதல் காவியமாய் சிரித்து நின்னானே!
எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!
போடானு சொன்னாலும் போகவே மாட்டேனுறானே!ஆனாலும்
காலையது வந்துபுட்டா காணாமத்தான் போயிடுறானே!
கருமிருட்டையே மிரட்டி அடிபணியவெச்சு ஒருராஜாங்கம் நடத்துறானே!
எங்காத்து உங்காத்து கொல்லையிலே ராமையா! நெலா மொட்டையாண்டி
அங்கயும் இங்கயும் தலையத்தூக்கி எட்டிஎட்டிப் பார்க்குறானே!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”ஒருதேன்கூடாம்!”

ஆகாச உசரத்துல ஒருதேன்கூடாம்!
இருட்டுப் பாதையிலே
இடிவிழுந்த பாறையிலே!
நான்வைத்த காதல் தேன்கூட்டுக் கட்டுச்சோறு
நனையாமல் இருக்கின்றதா?
நான்கேட்டு சுவைக்கின்றதா?
நலமாகவே திளைக்கின்றதா?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:எங்க இளைய கொழுந்தன்”

ங்க இளைய கொழுந்தன் உப்பில்லாமலே!
என்னகறி வைப்பேனோ?அதுல
என்னசுவைதான் சேர்ப்பேனோ?


கடுகு,மிளகு.சீரகம்
காருகுறிச்சி வெங்காயம் கொடைரோடு முட்டைக்கோஸ்,
காட்ரோடு காரட் எல்லாமே இருந்தாலுமே!

எங்க இளைய கொழுந்தன் உப்பில்லாமலே!
என்னகறி வைப்பேனோ?அதுல
என்னசுவைதான் சேர்ப்பேனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!-”

மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!-காளான்
மாப்பிள்ளையாம் மாப்பிள்ளையாம்!
அர்த்த ராத்திரியிலே ஆருமில்லா வேளையிலே
அத்துவானக் காட்டுக்குள்ளே மழையில்லா வேளையிலும்
கூடி நின்னு குடைபிடிப்பாராம்!
ஆரு என்ன சொல்லிதூற்றினாலும்
அவரு அசிங்கப் படமாட்டாராம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”என்சாபம் உன்னைவிடாது!”

பருத்தி இளம்பருத்தி!
பாங்கான செம்பருத்தி!
வருத்தமும் ஏனடியோ?
வாய்விட்டுச் சொல்லாயோ?

ஆத்துக்கு அக்கரையில்
அத்தைமகன் நீயே காத்திருக்க
வாய்திறந்து பாடுகின்றேன்!-எந்த இசையும்
வார்த்தைக்குள்ளே அடங்கவில்லையே!

ஆசை பெருகுதடி உனக்குள் அழகுதுரை என்னாலே!
எனக்குள்ளே நீயாக என்ன பதில் வைத்துள்ளாய்
ஆசைமச்சான் வார்த்தைக்குள் நானிருப்பேன்!
அன்பான சம்மத்தையே நான் தருவேன்!

ஆசை பெருகினாலும் அழகுதுரை மன்மதனே!
என்னைவெச்சு ஆதரிக்க என்னதான் நீதருவாயோ?
என்ன தருவேன் என்று ஏந்திழையே கேட்டுவிட்டாய்-என்
ஆவிதனைக் கேட்டாலும் அன்னமே நானுனக்கு தருவேனே!

ஆத்திரந்தான் தீருமட்டும் ஆயிரபொய் கூறிவிட்டு
சுகத்தை அனுபவித்தால் என்சாபம் உன்னைவிடாது!
என்மேலே ஏனுனக்கு சந்தேகம் தீராதோ?
என்னுயிர் உள்ளவரையினில் நானுன்னுயிராய் இருப்பேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”கற்பனைக் காட்டாறே!”

கன்னி இளந்தேனே!
கற்பனைக் காட்டாறே!-காதல்
கற்கண்டுக்கே எந்தப்பக்கம் இனிப்பென்றே!
சந்தேகத்தோடு கேள்விகளே ஏதுக்கடி?காதலி உன்
கடைக்கண்ணில் ஒருகாவியத்தையே சுவைத்தேனே!
காலமெல்லாம் பேரின்பத்திலே நானும் திளைத்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-””அழிப்பான் கதையா?-அடி நொடிக்கதையா?பிசியா?”


அழிப்பான் கதையா?-அடி நொடிக்கதையா?பிசியா?

வெடிக்கதையா? அவிழ்க்கும் கதையா?
விடுகதையா?புதிர்ச் சொலவடையா?- நானும்
சொல்லாலே முடிச்சுப் போடவாரேன்!-அடியே துணிவிருக்கா?
சொல்முடிச்ச அவிழ்ப்பதுதான் யாரு?

சின்ன பையனும் சின்னப் பொண்ணும்
சிரித்துக் கட்டுன மாலை -இதை சிக்கலில்லாம அவிழ்த்தவர்க்கே திருவருட்பா புத்தகமே தாரேன்!
அது என்ன?குருவிகளே!
நடை நடையா நடந்து பறந்து பறந்து
சின்ன சின்ன சுள்ளிகளை பொறுக்கி
வண்ண வண்ண கூடுகட்டும் தூக்கணாங்குருவிக் கூடு அதுதானடி!

தன்னைத் தானே பலிகொடுத்து
தான் மற்றவர்க்கே ஒளிகொடுப்பது யாரு?
தன்னைக் கொடுத்து தன் தேசத்தை பாதுகாத்திடும் போராளியைப் போன்ற
மெழுகுவர்த்தி தானடி!

காவி உடை அணிந்து கள்ளத் தவசியைப் போலவே!
கரை ஓரத்திலே கடுந்தவம் செய்வதுதான் யாரு?
கடவுள் நம்பிக்கை கொண்டவரை பக்தி என்ற போர்வையிலே
காலமெல்லாம் ஏமாற்றிவரும் போலி சாமியாரைப் போலவே!
கரையோரத்தில் ஏமாந்த மீன்களையே இரையாக்க துடித்திடும் கொக்குதானடி!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/::”கற்பனைச் சிறகினை விரித்து ”

வயல்வெளியே !
வாய்க்கால் ஓரமே!
காட்டு வழியே!
காலையிளம் தென்றலிலே!
கவின்மிகு சோலையினிலே!
செந்தமிழ் பரப்பவந்த தென்பாங்கே! தெம்மாங்கே! தேனிசையே!-
எங்கள் கிராமத்து இதய ஒடையில்
எழுந்த எண்ண அலைகளின் சின்னங்களே!
தென்பாங்கே ! தெம்மாங்கே! தேனிசையே!-
வாழ்வின் எல்லைகளையே தொட்டுப் பாடிடும்!
வட்டமிடு ம் தொல்லைகளையே சீண்டிப் பார்த்திடும்!
கனவுகளை பறக்கவிட்டு பாடி நின்றிடும்
கற்பனைச் சிறகினை விரித்து வானில் பறந்திடும்
தென்பாங்கே ! தெம்மாங்கே! தேனிசையே!-

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:”காதல் மெட்டு ஒன்று தானடி! ”

தேனொடு கலந்த தெள்ளமுதே! தெம்மாங்கே! தென்பாங்கே! தேன்பாகே!
காதல் மெட்டு ஒன்று தானடி! காணும் இன்னிசையோ கோடியாகுமடி!
தேங்கிளியே! பாசுரமே ! திருவாசகமே!-பாடிடும் காதலர் மட்டுமே
மாற்றி மாற்றி வேறு வேறு இன்னிசையில் பாடிட வந்தோமே!-காதலினையே
போற்றி போற்றி நெஞ்சினில் இருத்தி மகிழ்வினில் வாழ்வோமே!

காதல் மெட்டு ஒன்று தானடி!
தேங்கிளியே! பாசுரமே ! திருவாசகமே!-
காணும் இன்னிசையோ கோடியாகுமடி!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:”உன் நினைவில்லாத இந்த பிரபஞ்சம்”

நீ இல்லாத இந்த மண்ணில்
நான்
நிலவில்லாத வானம்
நீரில்லாத பூமி
உன்
நினைவில்லாத இந்த பிரபஞ்சம்
எனக்கு மகிழ்வில்லாத பாலைவனம்!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/:-கையூட்டாம் வைட்டமின் “ப”

-கையூட்டாம்
வைட்டமின் “ப” கேட்கும்
தேசம் எங்கள் தேசமடா!
காசிருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற தவறான தத்துவத்தையே
கையிலெடுத்த தட்டுக்கெட்ட தேசம் எங்கள் தேசமடா!-இது
தன்வாக்கினையே காசுக்கு விற்கும் மானங்கெட்ட தேசமடா!

காசுள்ள கனவான்களின் கைக்குள்ளே சிக்கி நாறும் தேசமடா!- நல்ல
கடமையுள்ள மனிதர்கள் நாணிக்குறுகி நிற்கும் தேசமடா!

பிறப்பு,இறப்பு சான்றிதழ்களுக்கு கூட -கையூட்டாம்
வைட்டமின் “ப” கேட்கும்
தேசம் எங்கள் தேசமடா!-தங்கள்
கடைமைதனைச் செய்வதற்கே காசுதனை எதிர்பார்க்கின்ற
கடைந்தெடுத்த கேடுகெட்ட நாசாமாக போயிவிட்ட தேசமடா!
இப்படிப்பட்ட லஞ்சமாம் பேர்களுக்கே!~
நாமெல்லாம் சரியான கடிவாளம் போடவேணுமே!
சாட்டைதனைச் சுழற்றிடுவோம்! தவறினையே மாற்றியே!- நாட்டினையே
சரியான பாதைதனுக்கே திருப்பிடுவோமே!

Monday, October 4, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மனிதத்தையே”

காணடா! மனிதா!
சாதிமத இனமொழி நாடு உலகம் என்னடா? எதுவும் நமக்கில்லையடா!
இந்த பிரபஞ்சமும் நமக்கில்லையடா!
மனித நேய நட்புதான் நமக்கு எல்லையடா!
மனிதத்தையே உயர்த்துவது தான் நமதுமுதல் வேலையடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”பகுத்தறிவில் ”

வெளியேதடா? வெளிக்குள்ளே வெளியங்கேதடா?
வேதாந்த வெளிகடந்த ஒளியங்கேதடா?
காற்றுக் கடந்த அண்டமும் ஏதடா?-அப்புறத்தே
தோன்றுகின்ற சோதியும் ஏதடா?
நினைவும் ஏதடா? மறப்பும் ஏதடா?
நித்தியம் ஏதடா? நிர்குணமும் ஏதடா?
நேரான பூரணத்தின் நாதமும் ஏதடா?
சுழியேதடா? சுழியடக்கும் சூட்சுமமும் ஏதடா?
எல்லாமே பகுத்தறியும் பகுத்தறிவில் அறிந்துவிடும் மெய்ஞானமே ஆகுமடா!

மண்ணேதடா? விண்ணேதடா?
கண்ணேதடா?கருத்தேதடா?
எல்லாமே பகுத்தறியும் பகுத்தறிவில் அறிந்துவிடும் மெய்ஞானமே ஆகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:பகுத்தறிவாலே”

மோகமென்ற உரலுக்குள்ளே உன்மனதும் சிக்காமலே!-உண்மை
காதலன்புக்குள்ளே நீயும் உறவு கொள்வாயே!
காலத்தச்சன் வருமுன்னே காணும் நாளெல்லாமே- நல்லோரின்
கால்சுவட்டில் அடியெடுத்து பகுத்தறிவாலே நல்லனவே செய்திடுவாயே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:பகுத்தறிவினாலே”

காதல் மருந்தறிந்தேனே !-பார்வையாலே
கண்ணின் மணியறிந்தேனே!-பருவத்தாலே!
மோக மந்திரம் அறிந்தேனே!களவாலே!
முத்த சூத்திரம் அறிந்தேனே!

நல்லோரின் உறவாலே!
நல்லமதி அறிந்தேனே!பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பலிலே!
அன்புவிதி புரிந்தேனே!-பகுத்தறிவினாலே
வாழ்க்கை உண்மை நிலை நானறிந்தேனே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-::::;;”மனிதத்தையே ”

ஆனந்தத் தேனே ஆனந்தத் தேனே!
அறிவாம் அமுதே அறிவாம் அமுதே!
மதிமுக அமுதே சுக அக அழகே! இளங்குயிலே!
அஞ்சித ரஞ்சித குஞ்சித மாதே!
இம்மையிலேயே நன்மைசெய்யும் பாங்குகொண்டு
இவ்வுலகினில் மனிதத்தையே உயர்த்திடுவோமே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”பகுத்தறிவுதான் ”

நின்ற நிலை பேராமல் நினைவில் தீயன ஒன்றும் சாராமல்-ஆய்ந்தறிந்து
சென்ற நிலை பகுத்தறிவுதான் என்பேனே!
சோம்பலிலே நிற்காமல் சுறுசுறுப்பில் அனுதினமும் - நற்கடமை ஆற்றி
நாடெல்லாம் நல்லோரின் கூடாரம் ஆக்கிடுவேனே!

Saturday, October 2, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:’பால்வெளியே”

விண்ணிலிருந்து மண்ணிற்கே பால்வெளியே வெண்மழையாகவே பொழிந்தது போலவே!
இமயமாம் மலையினில் பனியும் வெண்ணுரையினில் சிரிக்கின்றதே !
அந்தக் குளிரினில் அமுத சுகத்தினில் பேரின்ப வெள்ளமானதே!
ஆகாயமே வெண்ணிறத்தினில் நீலமும்மறைந்து தூயமையானதோ?

Friday, October 1, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”மறையாத ஞாபகங்களே!!”

என் மனதில் என்றும் மறையாத ஞாபகங்களே!!
காதலி அவளின் கடைக்கண் பார்வையின் வீச்சுகளாகவே!

நீங்காத நினைவுகளே!

நின்றாடும் கனவுகளே!
நிழலாடும் புதுமைகளே!
நீந்துகின்ற உறவுகளே!
அன்றன்று எழுதுகின்ற புதுக்கவிதைகளாகவே!
அதிகாலை மலர்கின்ற மலர்களாகவே!
அந்திமாலை தழுவுகின்ற தென்றலாகவே!
என் மனதில் என்றும்
ஆர்ப்பரித்திடும் அலைகளாகவே!


என் மனதில் என்றும் மறையாத ஞாபகங்களே!!
காதலி அவளின் கடைக்கண் பார்வையின் வீச்சுகளாகவே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”காதலியே! என் தோழியே! ”

காதலியே! என் தோழியே! என் துணையே!என்னுயிரே!
நீயருகினில் இருந்த போது உனது அருமை எனக்குத் தெரியவில்லைய்டி!
உனது அருமை தெரிந்தபோதோ நீயோ என்னருகினில் இல்லையடி!
நெஞ்சினில் நீயும் வந்தபோதே என் காதலையே சொல்லவில்லையே!-காதலினையே
சொல்லவேண்டும் என்ற நினைவுவந்தபோதோ நீயென்னருகே இல்லையடி!
தூரத்திலே நீயும் சென்ற போதிலுமே நம்காதல் அன்பதுவும் மாறித்தான் போயிடுமோ?
அருகினிலென்ன? தூரத்திலென்ன?எங்கிருந்த போதிலுமே நம்காதலே!
உலகம் , நாடு, சாதிமத,இனமொழி கடந்து வாழும் பேரின்பமில்லையா?

காதலியே! என் தோழியே! என் துணையே!என்னுயிரே!
நீயருகினில் இருந்த போது உனது அருமை எனக்குத் தெரியவில்லைய்டி!
உனது அருமை தெரிந்தபோதோ நீயோ என்னருகினில் இல்லையடி!






தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”ஓர் கடைக்கண் பார்வையிலே !”

உன்குளிர்ந்த ஓர் கடைக்கண் பார்வையிலே !பூத்துக் குலுங்கும்
அன்புமலர் என்று ஒன்று இருப்பது தெரியாமலே!உன்விழியழகைப்
பாராமலே உன்காதலனும் பாராமுகமாகவே
தூரத்திலே செல்வதும் ஏனோ!-காதல்
பேரின்பம் கொள்ளாததும் ஏனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:கொடுமையான வில்லனாய் ”

ஆதவனே ! நீயும்
புல்லின் மீது பனிகொண்ட காதலை உன் வெம்மையாலே எரித்தே!
உண்மைக் காதலை விரும்பாத கெட்ட பெற்றோரைப் போலவே அதிகாலையிலேயே!
கொடுமையான வில்லனாய் மாறிப் போனதும் ஏனோ?

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:அன்பின் வழியது ”

அன்பின் வழியது உயிர் நிலை ஆகுமடா!
அதுவே மனிதத்தின் உயர் நிலையும் ஆகுமடா!
அன்பின் மொழியே வாழ் நிலை ஆகுமடா!
அதுவே உலகின் உன்னத நிலையும் ஆகுமடா!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”அன்பின் தோழமையால் ”

அன்பின் பெயரால் உண்ணுகின்றேன்!
அன்பின் சுவாசத்தால் வாழுகின்றேன்!!
அன்பின் உறவால் மகிழ்கின்றேன்!
அன்பின் தோழமையால் உயர்கின்றேன்!
அன்பின் ஆட்சியால் புன்னகைக்கின்றேன்!
அன்பின் மாட்சியால் புளங்காகிதம் அடைகின்றேன்!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-:”அன்பே மிகப்பெரிதாமே!”

அன்பே மிகப்பெரிதாமே!
அன்பினைப் போற்றுபவரே மிகப்பெரியவராமே!
அன்பே! நன்மையுமே!
அன்பே! உன் நன்மை அல்லாது வேறில்லையே!
அன்பே!
உன்னையன்றி வேறு ஏற்றப் படுதலும் இல்லையே!
எந்த அன்பிற்கே!
நல்லோரை நீங்களும் நேசித்தீரோ?
அந்த அன்பினை
எல்லோரும் நேசிக்க வைப்பீரே!
அன்பே மிகப்பெரிதாமே!







தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”:எல்லாப் புகழும் அன்பினுக்கே!”

எல்லாப் புகழும் அன்பினுக்கே!
எல்லா உறவும் மனிதத்துக்கே!
அன்பினுக்கே மதமொன்று இல்லையடி!
அன்பில்லாத நெஞ்சினிலே மகிழ்வென்பது இல்லையடி!
வணங்கப் படுவது அன்பன்றி வேறு இல்லையடி!
ஆட்சியும் அனபினுக்கு உரியதே!
எல்லாப் புகழும் அன்பினுக்கே!

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-::”அன்பைத் தவிர ”

வணக்கத்துக்கு உரியது அன்பைத் தவிர வேறொன்றுமில்லையடா?
வாழ்த்துக்கு உரியது மனித நேயமன்றி வேறொன்றும் இல்லையடா?
வாழ்வதற்குரியது மக்கள்ஜன நாயக மன்றி வேறொன்றும் இல்லையடா?
வணங்குவதற்குரியது பொதுவுடைமை அன்றி வேறொன்றும் இல்லையடா?