Popular Posts

Sunday, October 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”என்னாளும் போராடி”

என்னெஞ்சமே உன்னிடமிருந்து மீண்டுவரவே ஒருவழியே இல்லையா?-என்று நானே சிந்திக்கும் முன்னே!
உன்னிலிருந்து மீண்டுவிட்டேன் என்றுஇறுமாந்து நானிருந்தேன் காதலியே!
ஆனாலும் மீண்டும்மீண்டும் உன்னில் நான்கலந்து என்னைஉனதாக்கி கொண்டேனே!
உன்னைஎனதாக்கி நான்கொண்ட அன்பினிலே கோடிக்கோடிக் காலங்கள் கண்டேனே!
உன்னெஞ்சம் கண்டதுவே நானும்கண்டேனே !என்னெஞ்சம் கொண்டதுவே நீயும் கொண்டாயே!
எண்ணித்தெளிவுற்றேன் ஏகாந்த தத்துவமே !என்னாளும் போராடி வெல்வோமே வாழ்வினிலே!

No comments: