Popular Posts

Thursday, October 21, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/-”மூச்சுப் பயிற்சியிலே”

கற்பனையே! -உயர்ந்த
கற்பனையே! சிந்தனைக் கவிதையே,சீர்மிகு இலக்கியமே!-அது
இமைக்கும் பொழுதினிலே தோன்றும்!
இன்பத்தின் உச்சிக்கே கொண்டு செல்லும்!
கற்பனையே! - காவிய
கற்பனையே! இயற்கையின் ஒப்பனையே,இனிமையின் அரசாங்கமே!-அது
எப்படி வேண்டுமானாலும் சிறகினை விரித்துப் பறந்திடுமே!
எவ்வளவு உயரத்திற்கும் தொலைவிற்கும் சென்றிடுமே!
இப்பொழுது மூளைசரியில்லை என்று சொல்பவனே மூடனே!
எதையும் சரிவர செய்திட திராணியில்லாத முட்டாளே!
மூச்சுப் பயிற்சியிலே முன்னோர்கள் சொன்னபடியும்
யோகாசனங்கள் செயாதாலே எந்த சோர்வினையும் போக்கிடலாமே!

No comments: