Popular Posts

Sunday, April 3, 2011

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/- தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஹைக்கூ/அரசியல்/அனுபவம்/-”எங்கள்ஈழத்தமிழ் மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!”

எங்கள் ஈழத்தமிழ்மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!-இன்னும்
எங்கள் ஈழத்தமிழ் மக்கள் கம்பிவேலிக்குள் விலங்குகளோடேயே!
இந்தியா இலங்கை போட்டி மூன்றாம் உலகப்போருக்குச் சமமென்றார்கள் கிரிக்கெட் ரசிகர்கள்!
சிங்கள இனவெறியரால் கொலைசெய்யப்பட்ட ஈழத் தமிழர்கள் எண்ணிறந்தவர்கள் உயிரினை விட்ட கோரமுடிவுகள் எத்தனை உலகப்போருக்குச் சமம்?!
கிரிக்கெட் போட்டியில் தோற்றது இலங்கை!
இனவெறி தாக்குதலில் தோற்றவர் ஈழத்தமிழ் மக்கள் அல்லவா?
எங்கள் ஈழத்தமிழ் மக்களின் குருதி இன்னும் ஆறவில்லையே!இன்னும்
எங்கள் ஈழத்தமிழ் மக்கள் கம்பிவேலிக்குள் விலங்குகளோடேயே!

No comments: