Popular Posts

Wednesday, June 25, 2008

புதுக்குறள்


அன்புடைமை

1. பூவிற் சிறந்த பூ அன்பு
அப்பூ மானிட பண்பு.
2. அன்பு இல்லதவன் மனிதனே யானாலும்
அவன் மிருக ஜாதி.
3. சிறப்பாக வாழ அன்பு செலுத்து
இன்பம் உன் தலையெழுத்து.
4. அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்பாள்
மனம்போட்ட பூட்டிற்கு பிறகு.
5. கண்ணில் கருணை காட்டு காட்டிற்
கடவுள் உன் காலடியில்.
6. அன்பு உன் குண மானால்
என்றும் நீ ஒன்று.
7. நீயுண்டு உன் வேலையுண்டு என்றிலாமல்
உயிர்களிடம் அன்பு காட்டு.
8. அன்பால் உயர்ந்தோர் சிலர் அன்புசெலுத்து
நீயுமொரு அன்னை தெரசா.
9. அன்பிலார் அன்பை ஏளனம் செய்வார்
இழிநிலை அடையும் பொருட்டு.
10. அன்பை அன்பால் அன்பின்பால் அன்பால்
அன்பு காட்டுதல் மாண்பு.

No comments: