Popular Posts

Sunday, May 16, 2010

அன்புமழை பொழிகின்ற உன்னிதயத்தில் எனக்கு இடமுண்டோ?

எறும்புகளிடம் தான்கேட்டிடவேண்டும் சேமிப்பின் இலக்கணத்தையே!என்னருமைக் காதலியே
உன்னிடம்தான் கற்றிடவேண்டும் காதலின் தத்துவத்தையே!
அரும்புகளாய் குறும்புகள் செய்யும் வசந்த காலங்களே
அன்புமழை பொழிகின்ற உன்னிதயத்தில் எனக்கு இடமுண்டோ?

பூவாய் மலர்ந்தது தளிராய் மிளிர்ந்தது காதலடி
புன்னகை சிந்திடும் தாமரைக் குளத்தினில் மோதுமடி
கூழாங்கல்லிலும் குடியிருக்கும் அழகுக் காதலடி
கூடிப் பறந்திடும் வண்டுகள் இதயத்திலும் ஓடுமடி

No comments: