Popular Posts

Tuesday, April 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ஒண்ணுசேந்த நெஞ்சுக்குள்ளே காதல் வந்து சிரிக்குதடா-சமுதாய வாழ்விலுமே ஒண்ணுசேந்து நின்னா நாடும் செழிக்குமடா!

சாயச் சருகைச் சேலை உடுத்திவந்த என்மாமன் மகளே!உனக்கே
சாத்தாங்குடி கம்பிச் சேலை எடுப்பா இருக்குமடி-
உருகி நானே உடுத்திவந்த
ஊதா கருப்புச் சேலை உனக்கே பிடிக்கலையோ? என் அத்தை மகனே!-
நீயும்
அன்ன நடை நடந்து ஆசாரக் கைவீசி கண்சிமிட்டி நடக்கையிலே!
உன்ன பார்த்த நாள்முதலாய் என் ஜீவன் உன் ஜீவன் ஆனதடி-பருவப்
பச்சை மணக்குதடி பாதகத்தி உன்மேலே நானே
இச்சை கொண்ட காலமெல்லாம் ஏங்கிமனம் வாடுறண்டி!
ஒண்ணுசேந்த நெஞ்சுக்குள்ளே காதல் வந்து சிரிக்குதடா-சமுதாய
வாழ்விலுமே ஒண்ணுசேந்து நின்னா நாடும் செழிக்குமடா!

No comments: