Popular Posts

Thursday, April 15, 2010

தமிழ்பாலா-/காதல்/தத்துவம்/கவிதை/எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணும் தத்துவத்தை மறவாதே!

கற்றகல்வி அடுத்தவர்க்கு சொல்லித்தர மறவாதே!
காலத்தால் செய்த நன்றி ஒருசிறிதும் மறக்காதே!
கருதிய நூல் கல்லாது மூடனாக இருக்காதே!
கணக்கறிந்து பேசாத கசடனாக வாழாதே!
ஒரு தொழிலும் இல்லாது சோம்பேறி ஆகாதே!
ஒன்றுக்கும் உதவாது சுற்றிக்கொண்டு திரியாதே!
பெரியோர்கள் முன்னின்று மரத்தைப் போலும்!
பேசாமல் முட்டாளாய் இருக்காதே!பச்சோந்தியாகவே!
பரிவு சொலித் தழுவித்தான் பசப்பனாகாதே!
பகுத்துண்டு பல்லுயிரோம்பும் பண்புதனை மறக்காதே!
ஓடப்பரை உயரப்பர் ஆக்கும் தத்துவத்தை மறக்காதே!
பண்புள்ள நல்ல மனிதர்க்ள் துணையினை ஒதுக்காதே!
எல்லோரும் இன்புற்று இருக்க எண்ணும் தத்துவத்தை மறவாதே!

No comments: