Popular Posts

Monday, April 26, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/உயர்வென்ன? தாழ்வென்ன? ஒன்றுமில்லையே!- நாமே! வேறுபட்டால் உறவுமில்லை பிரிவுமில்லையே!

அன்பினில் ஆழ்ந்தது என்மனமே
சிறகினை விரித்து உறவினை அணைக்கும்
காதலின்ப வேளையடி-இது இனிமை
கவிதைபாடும் காலமடி!
உயர்வென்ன? தாழ்வென்ன? ஒன்றுமில்லையே!- நாமே!
வேறுபட்டால் உறவுமில்லை பிரிவுமில்லையே!

கவிதைபாடும் காலமடி!
அடியென் காதலியே அன்புத் தோழியே!
அடிமண் நீக்கிய குளமாகவே!=காதல்
அன்பினில் ஆழ்ந்தது என்மனமே
சிறகினை விரித்து உறவினை அணைக்கும்
காதலின்ப வேளையடி-இது இனிமை
கவிதைபாடும் காலமடி!
காதல் அமுதே கருத்துச் செறிவே- நமது உள்ளம்
கலந்த பின்னே இந்த உலகினில்
உயர்வென்ன? தாழ்வென்ன? ஒன்றுமில்லையே!- நாமே!
வேறுபட்டால் உறவுமில்லை பிரிவுமில்லையே!

No comments: