Popular Posts

Sunday, April 11, 2010

தமிழ்பாலா--/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/காதலாய் விளைந்தாய் நீ!,-அன்புள்ளக் கருத்துமாய் பொழிந்தாய் நீ!,- நெஞ்சினில் ராகமா யிருந்தாய் நீ!.-உலகெல்லாம்

காரணமாய் இருந்தாய் நீ!
பூரணமாய் நிறைந்தாய் நீ!
ஓவியமாய் வரைந்தாய் நீ!
காவியாமாய் நடந்தாய் நீ!
காதலாய் விளைந்தாய் நீ!,-அன்புள்ளக்
கருத்துமாய் பொழிந்தாய் நீ!,- நெஞ்சினில்

ராகமா யிருந்தாய் நீ!.-உலகெல்லாம்
ஏகமா யிருந்தாய் நீ.!,.- என்வாழ் நாளெல்லாம்
எண்ணிறந்து நின்றாய் நீ.!-அறிவினில்
ஆகமமாய் இருந்தாய் நீ!
காதல்
வானும் நீயல்லவோ,-பேரன்பின்
நிலமும் நீயல்லவோ!-தேயாத
மதியும் நீயல்லவோ! -வளரும்
கதிரும் நீயல்லவோ !-எந்தன்
ஊனும் நீயல்லவோ! -உயிரினில் உயிரான
உயிரும் நீயல்லவோ!-கண்ணின் மணியாய்
உளதும் நீயல்லவோ!-இவ்வுலகினில்
எல்லாம் நீயல்லவோ!- வாழும் நாளே
எல்லாம் துணையும் நீயல்லவோ!
தமிழ்பாலா--/காதல்/கவிதை/தத்துவம்/அரசியல்/

No comments: