Popular Posts

Tuesday, April 27, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம் மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?

விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம்
மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?
உழைக்கின்ற அளவிற்கு ஊதியம் வேண்டுவது இயற்கைவிதி ஆகுமடா!
அதிலும் வேறுவிதி உண்டோ? வீணர்களே!
விதிதனை எண்ணி வீழ்ந்து கிடக்கும் மனிதர்களே!- நம்
மதிதனை பகுத்தறிவினாலே எண்ணிட மறந்தது ஏனோ?
இல்லாமை இருப்பதையே எதிர்த்து போராடி வெல்லும் பொன்னுலகம் காணுமடா!
இருப்பவனே தந்திடவே மாட்டானே -அவனை
இல்லாதவனே விட்டிடவே மாட்டானே
ஓடப்பன் உயரப்பன் ஆயிடவே எல்லாமே ஒப்பப்பன் ஆயிடவே-மார்க்சீய
தத்துவமே மார்தட்டி வருகுதடா!சிரமேற்கொண்டு வாழ்வினில் உயர்ந்தோங்கடா!

No comments: