Popular Posts

Friday, April 9, 2010

விண்பார்க்கும் மனிதெரெல்லாம் மண்பார்த்துப் போராட எழுந்தால் ஓர்மாற்றம் உருவாகுமன்றோ?

காண்பதெல் லாங்கண் மயக்கமென் றேமனங் கண்டிருந்தும் காதலிலே களித்திருந்தோமே!
உயிரோடு உயிராகவே
கண்பார்த்து கருத்துபார்த்து மெய்பார்த்து ஓர்யோக நிலையில் மிதந்திருந்தோமே!
பண்பார்த்த துன்னைஇணைவதென் றோ காதல் பேரின்ப எல்லையின் விளக்கமன்றோ!
விண்பார்க்கும் மனிதெரெல்லாம் மண்பார்த்துப் போராட எழுந்தால் ஓர்மாற்றம் உருவாகுமன்றோ?-சோற்றினை மட்டும்
உண்பார்க்கு சொரணையில்லை பகுத்தறிவு உணர்வுடைய மாந்தர்க்கே பூலோகசுவர்க்கம் ஆகிடுமே!

No comments: