Popular Posts

Thursday, April 8, 2010

அருவி நீர்வீழ்ந்ததென்று யாரோ? சொன்னார்கள் அருவி வீழ்ந்துவிடவில்லை!

அருவி
நீர்வீழ்ந்ததென்று யாரோ? சொன்னார்கள்
அருவி வீழ்ந்துவிடவில்லை!
விழுந்து ,எழுந்து,ஓடி,
பல மேடு பள்ளங்களைக் கடந்து,
பல தேசங்களையெல்லாம் செழிக்கவைத்து,
எல்லா மக்களையும் சிரிக்கவைத்து,
உலகமெல்லாம் வலம்வந்து,
கடலாகி வெற்றிகொண்டு அலையடித்து வெண்ணுரைச் சிரிப்பினில் சிறகடிக்கவில்லையா?அது
ஆர்ப்பரிப்பது தெரியவில்லையா?

No comments: