Popular Posts

Wednesday, September 30, 2009

சுகம் துக்கம் சுழல்சக்கரம் நாமெல்லாமே சூழ் நிலைக் கைதிகளேஆன்லைன் வர்த்தகமே மக்களைக் கொல்கின்றதே! ஆன்லைன் வர்த்தகமே பெருமுதலாளிகள் நடத்துகின்ற சூதாட்டம

சுகம் துக்கம் சுழல்சக்கரம் நாமெல்லாமே
சூழ் நிலைக் கைதிகளே
சொந்தம் பந்தம் சுற்றம் உறவுகளே எல்லாமே
காசாலே நிர்ணயிக்கும் சந்தைப் பொருளாதாரமல்லவா?
முன்பேர வர்த்தகமாய், யூக வர்த்தகமாய்,ஆன்லைன் வர்த்தகமாய்,
மூடுமந்திரமாய் பொருளாதாரமே போனதாலே-வசந்தமே
வாழும் மக்களுக்கே எட்டாத கனியாக ஆனதாலே!
ஏறுதுவிலைகள் எல்லாமே வானத்தில் பறக்குது தன்னாலே!
ஆன்லைன் வர்த்தகமே மக்களைக் கொல்கின்றதே!
ஆன்லைன் வர்த்தகமே பெருமுதலாளிகள் நடத்துகின்ற சூதாட்டமே!
இந்த சூதாட்டத்தில் வாழ்வாதாரம் இழத்தவர் இந்திய தேச மக்களே!

No comments: