Popular Posts

Saturday, September 12, 2009

கண்ணான கண்ணுறங்கு என் கண்மணியே! கானமயிலுறங்கு என் பூமணியே! பொன்னான பொழுதுறங்கு என் வெண்மணியே! பூமரத்து வண்டுறங்கு என் விண் நிலவே! செண்டாட பூமலரும் வண்

கண்ணான கண்ணுறங்கு என் கண்மணியே!
கானமயிலுறங்கு என் பூமணியே!
பொன்னான பொழுதுறங்கு என் வெண்மணியே!
பூமரத்து வண்டுறங்கு என் விண் நிலவே!
செண்டாட பூமலரும் வண்டாட தேன்வடியும்!
வண்டாடும் பொய்கையினில் !
வந்தாடும் அன்ன ஊஞ்சல்!
அன்ன ஊஞ்சல் போலிருக்கும் என் மண் ஒளியே!
அருங்கிளியே தேன்மழையே திருவாசகமே நீயுறங்கு!

No comments: