Popular Posts

Sunday, September 20, 2009

எனதினிய ராகமே!

எனதினிய ராகமே!நீலாம்பரியே !என்னைத் தூங்கவைத்திடவே நீயும்வந்தாயோ?
எனதுயிரின் கீதமே!பூபாளமே !விழித்தெழ வைத்திட ஓடோடி நீயும் வந்தாயோ?
சோகத்திலும் முகாரியே!பாடிட நீயும் கானமழை பொழிந்திடவே நாடியே நீயும் வந்தாயோ?-மகுடியிலே ஊதும் ராகமே! புன்னாக வராளியே கேட்டிட நீயும் பறந்தோடி வந்தாயோ?
எந்த ராகம் ஆனால என்ன? வாழ்வினில் இரண்டறக் கலந்து இனிமை கூட்டும்
இசையின்பம் அல்லவா? அதை கேட்டு ரசிக்கும் உள்ளங்கள் நமதல்லவா?

No comments: