Popular Posts

Monday, October 19, 2009

பிறப்பும் இறப்பும் மெய்யாம்! மறுபிறப்பு என்பது பொய்யாம்! இம்மை என்பது உண்மை!மறுமை என்பது பொய்மை!

உள்ளது சொல்வேன் உணர்வுடை யோருக்கே!
முன்னம் வந்தனர் எல்லாம் முடிந்தனர்
இன்று இருப்பவருக்கென்ன நிரந்தரம்?
பின்னை வருபவர்க்கென்ன நிச்சயம்?
எண்ணறுங்கோடி வந்தனர் போயினர் !
என்ன மாயம் வந்தவரெல்லாம் எங்கே போயினர்?
பிறப்பும் இறப்பும் மெய்யாம்! மறுபிறப்பு என்பது பொய்யாம்!
இம்மை என்பது உண்மை!மறுமை என்பது பொய்மை!
இருந்தவர் பற்றிய நினைவுகளே! போனவர் பற்றிய கனவுகளே!
இறப்பவர் பற்றிய பீதிகளே! இனி இறப்பவர் பற்றிய யூகங்களே!
இருந்திடும் நாளில் எல்லோரும் ஒற்றுமையில் உயர்ந்திருப்போமே!
எல்லோரும் இன்புற்று வாழும் தத்துவத்தில் உய்ந்திருப்போமே!

No comments: