Popular Posts

Sunday, October 25, 2009

நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில் நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!

நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில்
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!
நீ பிரிந்து போனால் நான் எங்கு போவேனோ?
அலையில் மிதக்கும் துரும்பாய் நானும் ஆனேனே!-கண்
வலையில் என்னை சிக்கிடவைத்தாயே என் துணையே!
மலையில் இருந்து வீழும் அருவியாயே நானும் வீழ்கின்றேனே!
ஊடலென்றால் சரிதாண்டி கூடலுக்கு அதுவும் துணைதாண்டி-அன்புத்
தேடலிலே சுகந்தாண்டி தேடலிலே இன்பமும் சுவைதாண்டி
ஓடிவந்தேன் உனைத்தேடி ஒதுங்கி நீயும் போகாதேடி!-காதலினிமை
பாடிவந்தேன் நினை நாடி பதுங்கும் புலியாய் ஆகாதேடி
நிலையில் பிரியேனே! என்காதலியே என்னில்
நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லையடி!

.

No comments: