Popular Posts

Tuesday, October 20, 2009

மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே!-பகுத்தறிவே! அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !

எண்ணுதற்கு எட்டாத எழிலும் ஆனவளே என்காதலியே!எனதினிய தோழியே துணையே இணையே !அணையே !மனையே! மாண்பான நல்லறத்தின் விடிவிளக்கே!
விண் பறந்தும் மண் நிறைந்தும் வாழும் மனிதம் போற்றும் அன்பாலே!,
எண் இறந்த எல்லை கடந்தும் கோடிக்கோடி ஆண்டுகள் வாழும் காதலின்பமே!
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே!-பகுத்தறிவே!
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே !

No comments: