Popular Posts

Saturday, October 31, 2009

கனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்! கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே காலையில் பாடிடும் பூபாளமே! பொன் எழிலே!

மதன காமவல்லியே! மன்மதனின் அழகு தேவதையே! =அடியுந்தன்
வண்டு மொய்த்த அழகுக்கூந்தலடி! =-உந்தன்
வார்குழலினில் ரீங்காரமிடும் வண்டுகளடி
மதன காமவல்லி இன்பத்தின் பேரூற்றே! -ஆற்றின்
கெண்டைபோன்ற கண்ணாளே! கிளிமொழியாளே! உன்செவ்விதழ்
வாயில் ஊறிடும் அன்பு நீரே! அதுவென்ன?=கற்
கண்டு சர்க்கரையோ? தேனோ ?கனியோடு கலந்த தேன்பாகோ?
கனவினில் கூட காதலின்பம் பேரருவியாய் வீழ்ந்திடும்!
கட்டுரைக்கு எட்டாத காவியமே இன்ப ஓவியமே புத்திலக்கியமே
காலையில் பாடிடும் பூபாளமே! பொன் எழிலே! பூரணமே! பொன்மாலையே!

No comments: