Popular Posts

Friday, October 30, 2009

மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள் என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!

மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!
அன்னம் பழித்தநடை நடைபயின்று வந்தாள் செங்கமலம் மின்னலை ,கயலை பழித்த விழி விழிப்பார்வை விழித்தொளி தந்தாள் ,அமுதம் பழித்த மொழிகள் தித்திக்க மொழிந்தாள்
இலவம் பஞ்சாய் பெருத்த நெஞ்சில் என்னைச் சாய்த்து அணைத்தாள் கன்னங் கறுத்த குழலாளே என்னை வளைத்துப் போட்டாள் சின்னஞ் சிறுத்த இடைப் பெண்ணே அவள் சிற்றிடையாலே என்னை சுருட்டிவிட்டாள் !
மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்!
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!
சின்னஞ் சிறுக்கியவள் சிங்கார சித்திரையாளே வில்லங்கம் என்ன செய்தாளோ?
வண்ணமலர் பொய்கையிலே பூத்த தாமரை இதழ்விரித்து புன்னகைமுத்தம் தந்தாளோ?
மெல்லியலாள் கண்ணும் வாயும் புதைத்தவள் வெண்முத்தென்றாள்
என் நெஞ்சு உருக்க அவள்தன் நெஞ்சு கற்றகலை என்என்று உரைப்பதினி நான்!

No comments: