Popular Posts

Friday, October 23, 2009

கார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது?

கார்மேக மழைக்கும் கருக்கொண்டசூலுக்கும் காலம் ஏது?
கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு ?
களமிறங்கிப் பெய்யும்?
என்று எவருக்குமே தெரியாது
!கருவுற்ற தாய்க்கு கரு எப்போது சூல்கொண்டு
கருவுற்று தாயின் மடியில் சேய் தவழும்?என்று எவருக்குமே தெரியாது
அடை மழையோ? அடைத்த கதவு திறக்காத மழையோ?
ஐப்பசி மாதத்து அடைமழையோ?
கார்த்திகை மாதத்து கனமழையோ?
கோடைகாலத்தின் அந்திமழையோ இரவுமுழுவதும் பெய்யும் மழையோ?
பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் கண்ணம்மா!
இறங்குன மழை இருந்து பெய்யும்
ஏறுனமழை ஓடிப்போகுமடி பொன்னம்மா!
இப்போ காலத்தில் ஏன் மழையில்லை சின்னம்மா?

No comments: