Popular Posts

Friday, October 30, 2009

மார்க்சிய போராளியாகிய மோகனின் மார்க்சிய தத்துவத்தின் அடிச்சுவட்டில் நாம் அணிவகுப்போம் !

தமிழ்பாலாவாகிய - நானும், தோழர்.மோகனும் 78,79 களில் மார்க்சீய அனைத்து இயக்கங்களிலும்,சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி என்று அமைப்பு இருந்தபோது ’வேலை கொடு இல்லை நிவாரணம் கொடு என்று மறியல் செய்து மதுரை ம்த்திய சிறையினில் சுமார் ஒருமாத காலம் அரசியல் கைதியாக இருந்தபோது இருந்த அந்த அரசியல் போராட்டத்தின் மலரும் நினைவுகள் என்கண்ணில் ஒளியாகிறது,அவரது கம்பீரமான பேச்சு,சுறுசுறுப்பு ,திறமை, நேர்மை, எளிமை அர்சியல் தெளிவு,திட்டமிட்ட அரசியல் இலக்கு,மார்க்சீயத்தின் மீது மாறாத காதல் இவையெல்லாம் வரும் தலைமுறை கற்றுத் தேர்ந்து மார்க்சீயத்தை இந்திய மண்ணிற்கேற்றவாறு நிர்மாணிக்க கவனமாக அடியெடுத்து வெல்ல வேண்டிய போராட்ட காலமிது! அவர் விட்டுசெனற பணியை நாமெல்லாம் முன்னெடுத்துசெல்வோம்! இங்குலாப் ஜிந்தா பாத்!

No comments: