Popular Posts

Thursday, October 29, 2009

வாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே

அவளே!
ஒழுக்க
நெறிநின்றாள் நீடுவாழ்வாள்!. நாமும்
அவ்வழியே பண்போடு பழகிடவே வேண்டுமே!
கற்பு நெறி என்றால் இருவருக்கும் பொதுவென்றுரைப்போமே!
தோழமை உணர்வினிலே உறவாடும் பக்குவத்தினிலே!
அவளின்
சொற்கேட்டேன் இன்பம் செவிக்கு வீணை இசையும் இனிதில்லையே!
குழலும் இனிதில்லையே யாழும் இனிதில்லையே!
குமரியவள் சொல்லினிதே -புன்னகையவளின்
குவளைமலர் சிரிப்பினிதே!
வாழ்வுக்கு மடடுமல்ல சமுதாயத்திற்கும் துணைகொண்டு வென்றிடுவோமே!

No comments: