Popular Posts

Saturday, October 3, 2009

வாழும் கலையெழுத்தாய் ஆகிடுமன்றோ?

நிலையின்றி தவிக்கும் உள்ளங்களே!
நிம்மதியில்லாத மனிதர்களே!
அமைதியிழந்த மானுடமே!- நீயும்
தலையெழுத்து இது தானென்று தனக்குள்ளே முடிவெடுத்து
நிலை தடுமாறி வாழ்க்கை வாழ்ந்து
விரக்தியிலே வெந்துபோகாமலே -வாழ்வுதனை
வெறுத்து வழிதெரியாமல் வாடுகின்ற நிலைவிட்டு
தன்னம்பிக்கைகு மறுபெயர்தான் வாழும் தலையெழுத்தென்று
தனக்குத் தானே தானும் உணர்ந்துவிட்டாலே நீசொல்லும்
தலையெழுத்தே வாழும் கலையெழுத்தாய் ஆகிடுமன்றோ?

No comments: