Popular Posts

Saturday, November 7, 2009

உன்னாலே சின்னவளே சிரித்தவளே ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவுகளடி!உன்பார்வையாலே சித்திரமே சிவந்தவளே என்றும் மனதில் தோன்றும் நனவுகளடி!

என்னவளே இனியவளே உன்புருவவில்லை நீயும் வளைத்ததாலே!காதலாம் பேரின்பம்
என்னெஞ்சினிலே தோன்றுதடி நினைவுகளைத் தோணியாக்கியே காமப் பெருங்கடலலையையும் எதிர்த்து நின்றாயே!அன்பாலே இதழசைவினாலே மவுனத்தில் அழைத்தவளே-உன்னாலே
சின்னவளே சிரித்தவளே ஒன்றா இரண்டா ஓராயிரம் கனவுகளடி!உன்பார்வையாலே
சித்திரமே சிவந்தவளே என்றும் மனதில் தோன்றும் நனவுகளடி!

No comments: