Popular Posts

Tuesday, August 31, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/விழவேண்டிய மழையினையே வேரொடு சாய்த்தது வெட்டியமரங்களே!

விழவேண்டிய மழையினையே
வேரொடு சாய்த்தது
வெட்டியமரங்களே!
சுள்ளிகளை சுமந்தோமே
வெயிலினை மறைத்திடவே!
சுள்ளிச் சுமையும் கூட நிழலானதோ?
மண்வெடிப்புகளோ?
சூரிய வெயில் போட்ட சூடோ?
மண்ணில் அழகின்றி தெரிகிறதே!
வறுமைரேகையே
மண்ணின் வெடிப்புகளிலே!
மண்ணின் வாய்திறந்தனவோ?
மண்வெடிப்புகள் ஆயினவோ?-மனிதர்களோ?
இன்னும் மரம்வளர்க்கும் திராணியின்றியே!

No comments: