செயலாம் வினையே ஆடவர்க்கு உயிரென்று குறுந்தொகையும் கூறிடுமே!
எம்கடன் பணிசெய்து கிடப்பதே என்று அப்பரடிகளும் சொன்னாரே!செயல்தனையே!
கர்மயோகம் என்றே கீதையும் கூறிடுமே!
செயலையே வினையே வாழ்க்கை என்று புத்தனும் சொன்னானே!
உழைப்பினையே பெரிதாகவே எல்லாத் தத்துவ ஞானிகளும் சொன்னாரே!
உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றாரே பொதுவுடைமை ஆசானே!
உழைப்போரே ;உம்மிடத்து இழப்பதற்கு அடிமைவிலங்கு தவிர வேறொன்றுமில்லை என்றானே!
உழைப்போரே நாமெல்லாம் பெறுவதற்கொ ஒரு பொதுவுடைமைப் பொன்னுலகம் உண்டென்று!
மூலதன புத்தகத்தின் படைப்பாளனாம் காரல் மார்க்ஸ் அவனும் சொன்னானே!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment