Popular Posts

Friday, April 2, 2010

நீ எனக்கு ஒரு சத்தியம் செய்திட வேணுமடி! இந்த உலகத்தினிலே தனியுடைமை கொடுமைதனை அழித்திடவே என்னோடு துணையாகவே என்னோடு என்றென்றும் நீயே நிற்பாய் என்று!

கனவிலும் உனைமறவேன் எனதினிமைக் காதலியே!
நினைவிலும் நனவிலும் மறவாத துணை நீயே!-தோழியே
என்னுடல்,பொருள் ,ஆவிதனைக் கொடுப்பேன் உனக்காகவே1`
அதற்குமுன்னே நீ எனக்கு ஒரு சத்தியம் செய்திட வேணுமடி!
இந்த உலகத்தினிலே தனியுடைமை கொடுமைதனை அழித்திடவே
என்னோடு துணையாகவே என்னோடு என்றென்றும் நீயே நிற்பாய் என்று!
அந்த சூளுரையின் செயல்பாட்டினில்-போராடி வெல்ல
நீயும் என்னுடன் இருந்தாலே போதுமடி!
என்னாளும் நன்னாளுக்கு போராடும் நல்லோரின் வழியினிலே!
இவ்வுலகினையே இல்லாமை இல்லாத பொன்னுலகாய் ஆக்கிடுவோம்!

No comments: