Popular Posts

Tuesday, September 8, 2009

கோடி ஒரு சலவைக்கா? குமரி ஒரு புள்ளைக்கா? அழகப் பாத்து ஆசைவெச்சா வாழ்க்கை ஆகுமோ? அன்புக் குள்ளே மனசுவெச்சா இன்பம் ஆகுமே! பொன்ன பாத்து மணமுடிப்பார் வாழு

கோடி ஒரு சலவைக்கா?
குமரி ஒரு புள்ளைக்கா?என்ற கேள்விகள் கேட்கின்ற சமுதாயமே!
அழகப் பாத்து ஆசைவெச்சா வாழ்க்கை ஆகுமோ?
அன்புக் குள்ளே மனசுவெச்சா இன்பம் ஆகுமே!
பொன்ன பாத்து மணமுடிப்பார் வாழும் உலகிலே!- வாழும்
பண்பைப் பாத்து கைபிடிப்பார் மலரவேண்டுமே!
பணத்தையே கணக்குப் பார்க்கும் கயவர் மத்தியிலே-சுயமரியாதைத் திரு
மணங்கள் முடிக்கின்ற பண்பாளர் பெருகிட வேண்டுமே!
ஆணும் பெண்ணும் சமமென்று உணர்வு வேண்டுமே!
ஆண்பெண் தோழமை உணர்வு மேலோங்கிட வேண்டுமே!

No comments: