Popular Posts

Wednesday, August 26, 2009

பிறப்பது ஒருமுறை இறப்பது ஒருமுறை பிறப்புமுதல் இறப்புவரை இடையினில் இருக்கும் வாழ்வினில் வாழ்ந்துபார்த்திடுவோம் இந்த மானுடதையே உடம்பை ஓட்டைத் துருத்தியெ

பிறப்பது ஒருமுறை இறப்பது ஒருமுறை
பிறப்புமுதல் இறப்புவரை இடையினில்
இருக்கும் வாழ்வினில் வாழ்ந்துபார்த்திடுவோம்
இந்த மானுடதையே
உடம்பை ஓட்டைத் துருத்தியென்பார்
உடையும் புழுக்கூடு என்பார்-வாழ்வுதன்னை
நீர்மேல் குமுழி என்பார்-இன்னும்
நீர்மேல் எழுத்து என்பார்-தாழ்வு மனப்பான்மையில்
வாழ்வினை வாழத்தெரியாதவர்களின்
சோம்பேறித் தனமான உரைகள் அல்லவா?
பிறப்பும் இறப்பும் இயற்கைதானே -இதை
பேதைமையோடு விரக்தியிலே புலம்புவதாலே
பயனென்ன?வாழ்கின்ற பூமியிலே!

No comments: