Popular Posts

Sunday, August 30, 2009

பூமரத்தின் பட்டுக் கூந்தல் மண்ணினுள் அழுதுகொண்டிருக்கும் கண்கள் விளைகின்ற தானியத்தை ஏற்றிவிடும் ஏணி விதையின் குழந்தை மண்ணுக்குள் ஓவியம் எழுதிடும் மரங்

பூமரத்தின் பட்டுக் கூந்தல்
மண்ணினுள் அழுதுகொண்டிருக்கும் கண்கள்
விளைகின்ற தானியத்தை ஏற்றிவிடும் ஏணி
விதையின் குழந்தை
மண்ணுக்குள் ஓவியம்
எழுதிடும் மரங்களின் தூரிகை
பூமிவயிற்றினில் வளர்ந்த வைரம்
மரங்களின் நங்கூரம்
சுவாசம் மேலே
இதயம் கீழே
என்றெல்லாம் படித்தேன்
இருந்தும் வேர்பற்றி நான் என்னசொல்லவோ!

No comments: