Popular Posts

Wednesday, August 19, 2009

வாதா மரத்தடியில வார மச்சான் வந்திடவே காணேனே காத்திருக்கும் பூமனச காளைமகன் நினைக்கலையோ?

நாத்தரிச்சு நானறியேன்
நடவு நட்டு நானறியேன்
சேத்துக்குள்ள இறங்கிக்கிட்டு
செல்லமுகம் வாடுறனே
வாக்கப்பட்டு போன இடம்
வளமான மண்ணுமில்ல
சோத்துக்கே சிங்கியடிக்கும்
சோதாப்பய ஊரடியோ?
வாதா மரத்தடியில
வார மச்சான் வந்திடவே காணேனே
காத்திருக்கும் பூமனச
காளைமகன் நினைக்கலையோ?

No comments: