Popular Posts

Wednesday, August 12, 2009

. காதல் காணாத வாழ்வொன்று இவ்வுலகினில் தேவையில்லையே!

சுகங்கள் காணட்டும் வாழ்வெல்லாமே
, துக்கங்கள் வ்ரும் போகும் கவலைவேண்டாமே பாதையெல்லாமே
. கோபங்கள்,பார்க்கும் இடமெல்லாமே மறந்திடவேண்டுமே
தாபங்கள் தவிக்கும் உள்ளங்கள் நிலைகொண்டு வெல்லவேண்டுமே
உடன்பாடுகள் காணவிழைகின்ற மனங்கள் தீர்வுக்குள் நுழையட்டுமே
முரண்பாடுகள் மோதி நிற்கும் போராட்டங்கள் முடிவுக்கு வரட்டுமே
ஒட்டுதல்கள் உருவாக்கும் மனிதர்கள் ஓங்கிவளரும் கனிமரமாகட்டுமெ
. விரிசல்கள் கொண்டு துடிக்கும் நாட்கள் வேதனை விலக துணிவுவேண்டுமே
. பிடிவாதங்கள் உறவுகளை சிதைத்திடுமே ஒரு நல்ல முடிவு காணவேண்டுமே
. விட்டுக்கொடுத்தல்கள் இருந்தாலே இன்பங்களே

. சுயநலங்கள் போய்விட்டால் இனிமைவந்து சேர்ந்துவிடுமே

. தியாகங்கள் எதிர்கால சந்ததிக்கு விதையாக ஆகிடுமே
1. எதிர்பார்ப்புக்கள் அளவோடு இருந்தால் நலமே அதிக எதிர்பார்ப்புகள் வேண்டாமே

. ஏமாற்றங்கள் கண்டு சோர்ந்து போகாத முயற்சி வேண்டுமே



துரோகங்கள் மன்னிக்கமுடியாது தூக்கி எறிந்திட வேண்டுமே

. காதல் காணாத வாழ்வொன்று இவ்வுலகினில் தேவையில்லையே

. காமம் களைந்தெடுக்க வேண்டிய களையாகுமே

. மன நெகிழ்ச்சிகள் ஏற்படுத்தும் சந்தர்ப்பங்கள் சுகமாக்கட்டுமே

மன எரிச்சல்கள் மனிதவாழ்வினில் தூக்கி எறியப்படவேண்டியவையே
புரட்சி செய்யாமல் நல்சமுதாய அமைப்பு அமைப்பது சாத்தியமில்லையே

No comments: