Popular Posts

Wednesday, August 19, 2009

பாசிப்பயறா பழகிப்புட்டு அட நீயும் என்னைய தட்டப்பயறா தட்டழிய விடலாமா? பாவிமகனே பார்வையாலெ கொன்னுட்டியே-உம் பழக்கத்த மாத்தவழி ஏதும் தெரியலியே=கண்ணுப் பக

பாசிப்பயறா பழகிப்புட்டு அட நீயும் என்னைய
தட்டப்பயறா தட்டழிய விடலாமா?
பாவிமகனே பார்வையாலெ கொன்னுட்டியே-உம்
பழக்கத்த மாத்தவழி ஏதும் தெரியலியே=கண்ணுப்
பக்கத்துல வந்துவந்து கலகமேதும் செய்யாதேடா?
கெனாவில நின்னு நின்னு சிறுக்கிமனச கெடுக்காதடா?
தாலிக்கட்ட திராணியில்லேனா
நீயேண்டா என்ன சுத்திசுத்திவந்து பூவாசம்புடிச்சடா?

3 comments:

Muruganandan M.K. said...

நன்றாக இருக்கிறது.
உங்கள் படைப்பா?
நாட்டார் பாடலா?
எதுவானாலும் பகிர்விற்கு பாராட்டுக்கள்

தமிழ்பாலா said...

நன்றி நண்பரே நல்ல தேடலில் நல்ல இலக்கியங்கள் நல்ல மாற்றத்தில் உருவாகுவது நல்லிலக்கியமாகிடும்.சில பழமொழிகள் கூட பல நேரங்களில் பல கவிஞ்ர்களின் படைப்பினையே செழுமைப் படுத்தி இருக்கின்றன்வே!
இலக்கியத்தேடலின் புதியன பழையதில் இருந்து உருவாகிடுவது காலத்தின் கட்டாயமல்லவா!

தமிழ்பாலா said...

நன்றி நண்பரே உங்களது வாழ்த்துக்கு எனது கோடி வணக்கங்கள்!