Popular Posts

Monday, June 29, 2009

நாணயமே !இல்லாரே இல்லாத பொதுவுடைமை தேசத்தை நன்மக்கள் ஜன நாயகபுரட்சியை உருவாக்கட்டும்

நாணயமே
பொருளில்லார்க்கு இவ்வுலகமில்லையென்று
வள்ளுவரும் சொன்னாரே!
பொருள்தனை போற்றிவாழ அவ்வையும் சொன்னாரே!
நாணயமே
மனிதர்க்கு வேண்டும்
பண்டமாற்று முறையாலே
பயன்படுத்திய காலம்மாறி-பண நாணயமே
பல்வேறு வகைதனில் மதிப்பிற்கேற்றபடி
உருவானாயே
நாணயமே!
துவக்கத்தில் நீ
பொன்னாகிப்பின் வெள்ளியாகி அடுத்து
செம்பு, நிக்கல் ,கலப்பு உலோகமானாயே!
துக்ளக் காலத்தில் நீயும் தோலாக இருந்தாய்
நாணயமே!
இப்போதோ நீ காகிதத்தில் உலாவருகிறாயே!
உன்னை அச்சிடும் அளவிற்கு தங்கமும்,வெள்ளியும்
இல்லையென்றாலோ தரிங்கனத்தம் தானே

பொருளை அளவிடவும் மதிப்பிடவும்
நீ உதவுகின்றாயே நாணயமே
அவரவர் தேவைக்கு வாங்கும் சக்திக்கு
அனுசரித்து உதவியாக நீயும் ஆனாயே!
நாணயமே ! உன்னை கள்ளத்தனமாய் அச்சடித்து
பணவீக்கம் ஆக்கிடுவார் கயவரே
பணவீக்கமானால் நீ இளைத்து உன்மதிப்பும் குறைகிறதே
நாணயமே !உனை மனிதர்கள் நேர்வழியில் பெறட்டும்
நாணயமே !இல்லாரே இல்லாத பொதுவுடைமை தேசத்தை
நன்மக்கள் ஜன நாயகபுரட்சியை உருவாக்கட்டும்

No comments: