Popular Posts

Wednesday, June 10, 2009

காதலின் அன்பு என்று சொன்னாலே!

யாது மனம் நினைத்ததோ?
அந்தமன நினைவுக்கு நினைவாகவே
உள் நின்று உணர்த்துகின்ற
உண்மை உள்ளொளியே-காதலி உன்
உள்ளத்தில் ஒளிந்திருப்பதையே
உன்காதலன் நானறிந்து கொண்டேனே!-அதுவே
காதலின் அன்பு என்று சொன்னாலே
அதுவும் மிகையாகுமோ? -என்றும் நமக்கு
புன்னகையாக்குமோ?- நட்பின்
துணையாக்குமோ?-வாழ்வின்
இணையாக்குமோ?-ஆசை
அணையாக்குமோ ? -சமூக
கனிவாக்குமோ?-தோழமை
உணர்வாக்குமோ?சமத்துவ உறவாக்குமோ?

No comments: