Popular Posts

Wednesday, June 10, 2009

மனதின் உண்மை தன்மை மெய்ஞானமே-அதை தினமும் தேடிதேடி அலைந்தேனே!!

காலத்தின் கோலமோ?
கற்பனை இந்திரஜால
மாயா பஜார் வித்தையோ?
மனதின் உண்மை தன்மை மெய்ஞானமே-அதை
தினமும் தேடிதேடி அலைந்தேனே!

உதைபடும் பந்தானேன் - நான்
சின்னஞ்சிறியோர் செய்திட்ட
காற்றாடியாய் அலைபாய்ந்தேனே
கடல் அலையின் துரும்பானேனே
காற்றில் பறக்கும் பஞ்சானேன்--மத்தளம்
போடுகின்ற தாளத்து அடியானேனே-தறி
ஆட்டுகின்ற பாவைப் போலவே-படாத
பாடுகளே பட்டு வாடுகின்றேனே!
காலத்தின் கோலமோ?
கற்பனை இந்திரஜால
மாயா பஜார் வித்தையோ?
மனதின் உண்மை தன்மை மெய்ஞானமே-அதை
தினமும் தேடிதேடி அலைந்தேனே!

No comments: