Popular Posts

Saturday, June 12, 2010

தமிழ்பாலா-/காதல்/கவிதை/தத்துவம்/ நானொரு கவிஞனே ! எனக்கு ஓடையின் சல சலப்பு உவகை தந்ததே!

நானொரு கவிஞனே !
எனக்கு ஓடையின் சல சலப்பு உவகை தந்ததே!
எனக்கு பறவையின் சிறகில் காணும் வியத்தகு வண்ணங்கள் கோடி கற்பனையானதே!இயற்கை
எனக்கு தனிக்கனவுலகினை தந்து மகிழ்வானதே!
எனக்கு ஓர் ஒடிந்த கிளையும் கவிதையானதே!-எனக்கு
ஓர் சிதைந்த மலரும் கருவானதே!-எனக்கு
ஒரு பழுத்த இலையும் படைப்பானதே--எனக்கு
ஒருவாடின முகமும் கலையானதே--எனக்கு
ஒரு தேய்ந்த குரலும் ரசனையானதே!--எனக்கு
ஒருசோக ஓலமும் தத்துவமானதே!--எனக்கு
ஒருபெருமூச்சும் பிரளயமானதே!--எனக்கு
ஒருபுன்முறுவலும் காதலானதே!--எனக்கு
ஒரு கண்சிமிட்டலும் கவிதையானதே!
நானொரு கவிஞனே !
எனக்கு ஓடையின் சல சலப்பு உவகை தந்ததே!
எனக்கு பறவையின் சிறகில் காணும் வியத்தகு வண்ணங்கள் கோடி கற்பனையானதே!இயற்கை
எனக்கு தனிக்கனவுலகினை தந்து மகிழ்வானதே!

No comments: