Popular Posts

Saturday, March 21, 2009

போராலே


ரெண்டுபட்ட ஊருக்குள்ள-அடி

குரங்குகூட குடியிருக்காது

ஒன்றுபட்ட இதயத்தையே-எந்த

அணுகுண்டாலும் தகர்க்கமுடியாது-ஊரு

ரெண்டுபட்டாலே வஞ்சகனுக்கே

கொண்டாட்டந்தானே-அன்பே

வேறுபட்டு நிற்கவேணாம்-மனசே

கூறுகெட்டுப் போகவேணாம்-போராலே

மண்ணாகிப் போயிவிட்ட-இலங்கை அரசின்

வரலாறு தெரியலியா?

துண்டுபட்டால் திண்டாடும்-ஈழமக்கள் படும்

துயரக்கதை அறியவில்லையா?


No comments: