Popular Posts

Saturday, March 14, 2009

தேர்தல்திருவிழா


ஐந்தாண்டுக்கு ஒருமுறை வருகிற
தேர்தல் திருவிழா-இப்போதும்
வந்துவிட்டது
கரண்ஸி நோட்டுகள்
கதவைததட்டுகிற காலமிது
கை நீட்டிக் காசு வாங்கிவிட்டால்- நீங்கள்
கை நீட்டிக் கேள்விகேட்க முடியாதே
ஜன நாயகம் பண நாயகம் ஆகின்ற
அசிங்கமான வெட்கக்கேடான அவலமிது
ஓட்டுவஙகி நீங்களாக இருக்கும்வரையில்
உங்களுக்கு ராஜம்ரியாதைதான்
காரில் பவனி வந்த எம்பிக்கள்
கால்கடுக்க நடந்துவ்ருவதெல்லாம்
எதற்காக? உங்களுக்காக நாளெல்லாம்
சேவகம் புரிவதற்காகவா? இல்லை
உங்களின் ஜன் நாயக் உரிமையை
அபகரிக்கத்தானே?
ஓட்டுபோடும் உரிமைதனை
கரண்ஸியாலே களவாடும்
களவாணிகளை நீங்கள் புரியாத்வரையில்
உங்களின் இன்பவாழ்வு
கானல் நீர்தானே-தேர்தல்களத்தில்
நல்லவரும் இருக்கும்போது
நல்லவரை இனங்கண்டு
ஓட்டினைப் போடாதவரையினில்
உங்களின் ஓட்டால்
உங்களுக்கு எந்தபயனும்
விளைந்து விடப்போவதில்லை

No comments: