Popular Posts

Saturday, March 21, 2009

இகத்தில் பரம்


இகத்தில் பரம்‘

என்பார் வள்ளலார்.

‘செத்த பிறகு என்னடா சிவலோகம்?, வைகுந்தம்?

இத்தரை மீதினில், இதே நாளில், இப்பொழுதே முக்தியை நாடி

சுத்த அறிவு நிலையில் களிப்போம்.’

என்று சங்கினை முழங்குவார் பாரதி.

'தன்னையறிந்து இன்பமுற' வேண்டும் என்பாரே வள்ளலாரே

ஏழ்கடலில் பெரிதன்றோ நான் அடைந்த சுகம்?"

என்று தலைவி அவள் வியப்பது

வள்ளலாரின் தமிழன்றோ!

செத்த பிறகு சிவலோகமா?

வைகுந்தமா? சேர்ந்திட லாமென்றே

எண்ணியிருப்பார்பித்த மனித ரவர்

சொலுஞ் சாத்திரம் பேயுரை யாமென்றிங் கூதேடா சங்கம்

இத்தரை மீதினி லேயிந்த நாளினில்

இப்பொழு தேமுத்தி சேர்ந்திட

நாடிச்சுத்த அறிவு நிலையிற் களிப்பவர்

தூயர ராமென்றிங் கூதேடா சங்கம்-என்று

கூறிடுவாரே பாரதி

No comments: